திருக்குறள் தொடர்கிறது…
103.
குடிசெயல் வகை.
குறள் 1021:
கருமம் செயவொருவன் கைதூவேன்
என்னும்பெருமையிற் பீடுடைய தில்.
மு.வ உரை:
குடிப் பெருமைக்கு உரிய கடமையைச் செய்வதற்குச்
சோர்வடைய மாட்டேன் என்று ஒருவன் முயலும் பெருமையைப் போல மேம்பாடானது வேறொன்றும் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச்
செயல் செய்யாமல் விடமாட்டேன் என மன உறுதிகொள்ளும் பெருமையைக் காட்டிலும் மேலான பெருமை
வேறு இல்லை.
கலைஞர் உரை:
உரிய கடமையைச் செய்வதில் சோர்வு காணாமல்
எவனொருவன் முயற்சிகளை விடாமல் மேற்கொள்கிறானோ அந்தப் பெருமைக்கு மேலாக வேறொரு பெருமை
கிடையாது.
English Explanation:
There is no higher greatness than
that of one saying I will not cease in my effort (to raise my family).
குறள் 1022:
ஆள்வினையும் ஆன்ற அறிவும்
எனவிரண்டின்நீள்வினையான் நீளும் குடி.
மு.வ உரை:
முயற்சி நிறைந்த அறிவு என்று சொல்லப்படும்
இரண்டினையும் உடைய இடைவிடாத செயலால் ஒருவனுடைய குடி உயர்ந்து விளங்கும்.
சாலமன் பாப்பையா உரை:
முயற்சி, நிறைந்த அறிவு என்னும் இரண்டுடன்
இடைவிடாத செயல் செய்யக் குடும்பமும் நாடும் உயரும்.
கலைஞர் உரை:
ஆழ்ந்த அறிவும், விடாமுயற்சியும் கொண்டு
ஒருவன் அயராது பாடுபட்டால், அவனைச் சேர்ந்துள்ள குடிமக்களின் பெருமை உயரும்.
English Explanation:
One's family is raised by untiring
perseverance in both effort and wise contrivances.
குறள் 1023:
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத்
தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்.
மு.வ உரை:
என் குடியை உயரச் செய்வேன் என்று முயலும்
ஒருவனுக்கு ஊழ், ஆடையைக் கட்டிக் கொண்டு தானே முன் வந்து துணை செய்யும்.
சாலமன் பாப்பையா உரை:
என் குடியையும் நாட்டையும் மேனமை அடையச்
செய்வேன் என்று செயல் செய்யும் ஒருவனுக்கு தெய்வம் தன் ஆடையை இறுக உடுத்திக்கொண்டு
உதவ முன்வந்து நிற்கும்.
கலைஞர் உரை:
தன்னைச் சேர்ந்த குடிமக்களை உயர்வடையச்
செய்திட ஓயாது உழைப்பவனுக்குத் தெய்வச் செயல் எனக்கூறப்படும் இயற்கையின் ஆற்றல் கூட
வரிந்து கட்டிக்கொண்டு வந்து துணைபுரியும்.
English Explanation:
The Deity will clothe itself and
appear before him who resolves on raising his family.
குறள் 1024:
சூழாமல் தானே முடிவெய்தும்
தங்குடியைத்
தாழா துஞற்று பவர்க்கு.
மு.வ உரை:
தம் குடி உயர்வதற்கான செயலை விரைந்து
முயன்று செய்வோர்க்கு அவர் ஆராயமலே அச் செயல் தானே நிறைவேறும்.
சாலமன் பாப்பையா உரை:
தன் வீட்டிற்கும் நாட்டிற்கும் ஆக வேண்டிய
செயலை விரைந்து செய்பவருக்கு அச்செயலைச் செய்து முடிக்கும் திறம் அவர் நினைக்காமலே
கிடைக்கும்.
கலைஞர் உரை:
தம்மைச் சார்ந்த குடிகளை உயர்த்தும் செயல்களில்
காலம் தாழ்த்தாமல் ஈடுபட்டு முயலுகிறவர்களுக்குத் தாமாகவே வெற்றிகள் வந்து குவிந்துவிடும்.
English Explanation:
Those who are prompt in their
efforts (to better their family) need no deliberation, such efforts will of
themselves succeed.
குறள் 1025:
குற்றம் இலனாய்க் குடிசெய்து
வாழ்வானைச்சுற்றமாச் சுற்றும் உலகு.
மு.வ உரை:
குற்றம் இல்லாதவனாய்க் குடி உயர்வதற்கான
செயல் செய்து வாழ்கின்றவனை உலகத்தார் சுற்றமாக விரும்பிச் சூழ்ந்து கொள்வர்.
சாலமன் பாப்பையா உரை:
தவறானவற்றைச் செய்யாமல் தன் வீட்டையும்
நாட்டையும் மேன்மை அடையச் செய்து வாழ்பவனை உயர்ந்தோர் தம் சுற்றமாக ஏற்பர்.
கலைஞர் உரை:
குற்றமற்றவனாகவும், குடிமக்களின் நலத்திற்குப்
பாடுபடுபவனாகவும் இருப்பவனைத் தமது உறவினனாகக் கருதி, மக்கள் சூழ்ந்து கொள்வார்கள்.
English Explanation:
People will eagerly seek the
friendship of the prosperous soul who has raised his family without foul means.
குறள் 1026:
நல்லாண்மை என்ப தொருவற்குத்
தான்பிறந்தஇல்லாண்மை ஆக்கிக் கொளல்.
மு.வ உரை:
ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று சொல்லப்படுவது
தான் பிறந்த குடியை ஆளும் சிறப்பைத் தனக்கு உண்டாக்கி கொள்வதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்பது அவன் பிறந்த
வீட்டையும் நாட்டையும் ஆளும் தன்மையைத் தனக்கு உரியதாக ஆக்கிக் கொள்வதோ.
கலைஞர் உரை:
நல்ல முறையில் ஆளும் திறமை பெற்றவர்,
தான் பிறந்த குடிக்கே பெருமை சேர்ப்பவராவார்.
English Explanation:
A man's true manliness consists in
making himself the head and benefactor of his family.
குறள் 1027:
அமரகத்து வன்கண்ணர் போலத்
தமரகத்தும்ஆற்றுவார் மேற்றே பொறை.
மு.வ உரை:
போர்க்களத்தில் பலரிடையே பொறுப்பை ஏற்றுக்
கொள்ளும் அஞ்சாத வீரரைப் போல் குடியில் பிறந்தவரிடையிலும் தாங்க வல்லவர் மேல் தான்
பொறுப்பு உள்ளது.
சாலமன் பாப்பையா உரை:
போர்க்களத்திலே எதிர்த்து நின்று சண்டை
செய்வது அஞ்சாத வீரர்க்கே ஆவது போல, ஒரு குடும்பத்திலும் நாட்டிலும் அவற்றை உயரச் செய்பவரே,
அவற்றின் சுமையைத் தாங்கவும் முடியும்.
கலைஞர் உரை:
போர்க்களத்தில் எதிர்ப்புகளைத் தாங்கிப்
படை நடத்தும் பொறுப்பு அதற்கான ஆற்றல் படைத்தவர்களிடம் இருப்பது போலத்தான் குடிமக்களைக்
காப்பாற்றி உயர்வடையச் செய்யும் பொறுப்பும் அவர்களைச் சேர்ந்த ஆற்றலாளர்களுக்கே உண்டு.
English Explanation:
Amid his kindred so the burthen
rests upon the strong.
குறள் 1028:
குடிசெய்வார்க் கில்லை
பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும்.
மு.வ உரை:
குடி உயர்வதற்கான செயல் செய்கின்றவர்க்கு
உரிய காலம் என்று ஒன்று இல்லை, சோம்பல் கொண்டு தம் மானத்தைக் கருதுவாரானால் குடிப்பெருமைக்
கெடும்.
சாலமன் பாப்பையா உரை:
தன் வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச்
செய்ய ஆசைப்படுவர் சோம்பி, தம் பெருமையை எண்ணி இருந்தால் எல்லாம் கெட்டுப் போகும்.
அதனால் அவர்க்குக் கால நேரம் என்று இல்லை.
கலைஞர் உரை:
தன்மீது நடத்தப்படும் இழிவான தாக்குதலைக்
கண்டு கலங்கினாலோ, பணியாற்றக் காலம் வரட்டும் என்று சோர்வுடன் தயக்கம் காட்டினாலோ குடிமக்களின்
நலன் சீர்குலைத்துவிடும்.
English Explanation:
As
a family suffers by (one's) indolence and false dignity there is to be so
season (good or bad) to those who strive to raise their family.
குறள் 1029:
இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ
குடும்பத்தைக்குற்ற மறைப்பான் உடம்பு.
மு.வ உரை:
தன் குடிக்கு வரக்குடிய குற்றத்தை வராமல்
நீக்க முயல்கின்ற ஒருவனுடைய உடம்பு துன்பத்திற்கே இருப்பிடமானதோ.
சாலமன் பாப்பையா உரை:
தன்னால், விலங்குளால், பருவ மாற்றங்களால்
துன்பப்படும் வீட்டையும், நாட்டையும் அத்துன்பங்களில் இருந்து காக்க முயல்பவனின் உடம்பு,
துன்பத்திற்கு மட்டுமே கொள்கலமோ? இன்பத்திற்கும் இல்லையோ?
கலைஞர் உரை:
தன்னைச் சார்ந்துள்ள குடிகளுக்குத் துன்பம்
வராமல் தடுத்துத் தொடர்ந்து அக்குடிகளைக் காப்பாற்ற முயலுகிற ஒருவன், துன்பத்தைத் தாங்கி
கொள்ளவே பிறந்தவனாகப் போற்றப்படுவான்.
English Explanation:
Is it only to suffering that his
body is exposed who undertakes to preserve his family from evil?
குறள் 1030:
இடுக்கண்கால் கொன்றிட வீழும்
அடுத்தூன்றும்நல்லாள் இலாத குடி.
மு.வ உரை:
துன்பம் வந்த போது உடனிருந்து தாங்க வல்ல
நல்ல ஆள் இல்லாத குடி, துன்பமாகிய கோடாரி அடியில் வெட்டி வீழ்த்த விழுந்துவிடும்.
சாலமன் பாப்பையா உரை:
துன்பம் வரும் போது முட்டுக் கொடுத்துத்
தாங்கும் நல்ல பிள்ளைகள் இல்லாத வீடும், நாடும் துன்பமாகிய கோடாரி அடிப்பகுதியை வெட்டச்
சாயும் மரம் போல் விழுந்து விடும்.
கலைஞர் உரை:
வரும் துன்பத்தை எதிர் நின்று தாங்கக்
கூடிய ஆற்றலுடையவர் இல்லாத குடியை அத்துன்பம், வென்று வீழ்த்திவிடும்.
English Explanation:
If there are none to prop up and
maintain a family (in distress), it will fall at the stroke of the axe of
misfortune.
திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்….
✬✬✬அடுத்த பகுதியை வாசிக்க
... அழுத்துக...
✬✬✬ஆரம்பத்திலிருந்து வாசிக்க...அழுத்துக
0 comments:
Post a Comment