திருக்குறள் தொடர்கிறது…
102.
நாணுடைமை
குறள் 1011:
கருமத்தால் நாணுதல் நாணுத்
திருநுதல்
நல்லவர் நாணுப் பிற.
மு.வ உரை:
தகாத செயல் காரணமாக நாணுவதே நாணமாகும்,
பெண்களுக்கு இயல்பான மற்ற நாணங்கள் வேறு வகையானவை.
சாலமன் பாப்பையா உரை:
இழிவான செயல்களுக்கு வெட்கப்படுவதே அனைவர்க்கும்
பொதுவான நாணம்; மற்றொன்று அழகிய நெற்றி கொண்ட பெண்களின் இயல்பான வெட்கம் ஆகும்.
கலைஞர் உரை:
ஒருவர் தமது தகாத நடத்தையின் காரணமாக
நாணுவதற்கும், நல்ல பெண்களுக்கு இயல்பாக ஏற்படும் நாணத்துக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு.
English Explanation:
True modesty is the fear of (evil)
deeds; all other modesty is (simply) the bashfulness of virtuous maids.
குறள் 1012:
ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம்
வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு.
மு.வ உரை:
உணவும், உடையும் எஞ்சி நிற்கும் மற்றவையும்,
எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை, மக்களின் சிறப்பியல்பாக விளங்குவது நாணுடைமையே ஆகும்.
சாலமன் பாப்பையா உரை:
உணவு, உடை இன்னும் பிற சிறப்புகள், எல்லா
மனிதர்க்கும் ஒன்றே; நல்ல மனிதர்க்குச் சிறப்பாவது நாண் உடைமையே.
கலைஞர் உரை:
உணவு, உடை போன்ற அனைத்தும் எல்லோருக்கும்
பொதுவான தேவைகளாக அமைகின்றன; ஆனால் சிறப்புக்குரிய தேவையாக இருப்பது, பிறரால் பழிக்கப்படும்
செயல்களைத் தவிர்த்து வாழும் நாணுடைமைதான்.
English Explanation:
Food, clothing and the like are
common to all men but modesty is peculiar to the good.
குறள் 1013:
ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாணென்னும்நன்மை
குறித்தது சால்பு.
மு.வ உரை:
எல்லா உயிர்களும் ஊனாலாகிய உடம்பை இருப்பிடமாகக்
கொண்டவை, சால்பு என்பது நாணம் என்று சொல்லப்படும் நல்லப் பண்பை இருப்பிடமாகக் கொண்டது.
சாலமன் பாப்பையா உரை:
எல்லா உயிர்களும் உடம்பை இடமாகக் கொண்டுள்ளன;
அதுபோல், சான்றாண்மையும், நாணம் என்னும் நல்ல குணத்தை இடமாகக் கொண்டுள்ளது.
கலைஞர் உரை:
உடலுடன் இணைந்தே உயிர் இருப்பது போல்,
மாண்பு என்பது நாண உணர்வுடன் இணைந்து இருப்பதேயாகும்.
English Explanation:
As the body is the abode of the
spirit, so the excellence of modesty is the abode of perfection.
குறள் 1014:
அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்
கஃதின்றேற்பிணியன்றோ பீடு நடை.
மு.வ உரை:
சான்றோர்க்கு நாணுடைமை அணிகலம் அன்றோ,
அந்த அணிகலம் இல்லையானால் பெருமிதமாக நடக்கும் நடை ஒரு நோய் அன்றோ.
சாலமன் பாப்பையா உரை:
நாணம் இருப்பது சான்றோர்க்கு ஆபரணம்;
அது மட்டும் இல்லை என்றால் அவர்கள் நடக்கும் பெருமித நடை பார்ப்பவர்க்கு நோயாம்.
கலைஞர் உரை:
நடந்த தவறு காரணமாகத் தமக்குள் வருந்துகிற
நாணம் எனும் உணர்வு, பெரியவர்களுக்கு அணிகலன் ஆக விளங்கும் அந்த அணிகலன் இல்லாமல் என்னதான்
பெருமிதமாக நடைபோட்டாலும், அந்த நடையை ஒரு நோய்க்கு ஒப்பானதாகவே கருத முடியும்.
English Explanation:
Is not the modesty ornament of the
noble ? Without it, their haughtiness would be a pain (to others).
குறள் 1015:
பிறர்பழியும் தம்பழியும்
நாணுவார் நாணுக்
குறைபதி என்னும் உலகு.
மு.வ உரை:
பிறர்க்கு வரும் பழிக்காகவும், தமக்கு
வரும் பழிக்காகவும் நாணுகின்றவர் நாணத்திற்கு உறைவிட மானவர் என்று உலகம் சொல்லும்.
சாலமன் பாப்பையா உரை:
தமக்கு வரும் பழிக்கு மட்டும் அன்றி,
பிறர்க்கு வரும் பழிக்கும் வெட்கப்படுவோர், நாணம் வாழும் இடம் என்று உலகத்தவர் கூறுவர்.
கலைஞர் உரை:
தமக்கு வரும் பழிக்காக மட்டுமின்றிப்
பிறர்க்கு வரும் பழிக்காகவும் வருந்தி நாணுகின்றவர், நாணம் எனும் பண்பிற்கான உறைவிடமாவார்.
English Explanation:
The world regards as the abode of
modesty him who fear his own and other's guilt.
குறள் 1016:
நாண்வேலி கொள்ளாது மன்னோ
வியன்ஞாலம்பேணலர் மேலா யவர்.
மு.வ உரை:
நாணமாகிய வேலியை தமக்கு காவலாகச் செய்து
கொள்ளாமல், மேலோர் பரந்த உலகில் வாழும் வாழ்க்கை விரும்பி மேற்கொள்ள மாட்டார்.
சாலமன் பாப்பையா உரை:
பெரியவர்கள் தனக்குப் பாதுகாப்பாக நாணத்தைக்
கொள்வாரே அல்லாமல், இந்தப் பெரிய உலகத்தைக் கொள்ள விரும்ப மாட்டார்கள்.
கலைஞர் உரை:
பரந்த இந்த உலகில் பாதுகாப்பையும்விட,
நாணம் எனும் வேலியைத்தான் உயர்ந்த மனிதர்கள், தங்களின் பாதுகாப்பாகக் கொள்வார்கள்.
English Explanation:
The great make modesty their
barrier (of defence) and not the wide world.
குறள் 1017:
நாணால் உயிரைத் துறப்பர்
உயிர்ப்பொருட்டால்நாண்துறவார் நாணாள் பவர்.
மு.வ உரை:
நாணத்தை தமக்கரிய பண்பாகக் கொள்பவர் நாணத்தால்
உயிரை விடுவர், உயிரைக் காக்கும் பொருட்டாக நாணத்தை விட மாட்டார்.
சாலமன் பாப்பையா உரை:
நாணத்தின் சிறப்பை அறிந்து அதன் வழி நடப்பவர்
நாணமா, உயிரா,என்ற நெருக்கடி வரும்போது உயிரையே விடுவர்; உயிரைக் காக்க நாணத்தை விடமாட்டார்.
கலைஞர் உரை:
நாண உணர்வுடையவர்கள், மானத்தைக் காப்பாற்றிக்
கொள்ள உயிரையும் விடுவார்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மானத்தை விடமாட்டார்கள்.
English Explanation:
The modest would rather lose their
life for the sake of modesty than lose modesty for the sake of life.
குறள் 1018:
பிறர்நாணத் தக்கது தானாணா
னாயின்
அறநாணத் தக்க துடைத்து.
மு.வ உரை:
ஒருவன் மற்றவர் நாணத்தக்க பழிக்குக் காரணமாக
இருந்தும் தான் நாணாமலிருப்பானானால், அறம் நாணி அவனைக் கைவிடும் தன்மையுடையதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
மற்றவர் வெட்கப்படும் ஒன்றிற்கு ஒருவன்
வெட்கப்படாமல் அதைச் செய்வான் என்றால், அறம் வெட்கப்படும் குற்றம் அவனிடம் இருக்கிறது.
கலைஞர் உரை:
வெட்கப்படவேண்டிய அளவுக்குப் பழிக்கு
ஆளானவர்கள் அதற்காக வெட்கப்படாமல் இருந்தால் அவர்களை விட்டு அறநெறி வெட்கப்பட்டு அகன்று
விட்டதாகக் கருத வேண்டும்.
English Explanation:
Virtue is likely to forsake him who
shamelessly does what others are ashamed of.
குறள் 1019:
குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின்
நலஞ்சுடும்நாணின்மை நின்றக் கடை.
மு.வ உரை:
ஒருவன் கொள்கை தவறினால் , அத் தவறு அவனுடையக்
குடிப் பிறப்பைத் கெடுக்கும், நாணில்லாத தன்மை நிலைப் பெற்றால் நன்மை எல்லாவற்றையும்
கெடுக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் ஒழுக்கம் கெட்டால் அவன் குடும்பப்
பிறப்பு கெடும்; அவனே நாணம் இல்லாது நின்றால் அவன் நலம் எல்லாம் கெடும்.
கலைஞர் உரை:
கொண்ட கொள்கையில் தவறினால் குலத்துக்கு
இழுக்கு நேரும் அதற்கு நாணாமல் பிறர் பழிக்கும் செயல் புரிந்தால் நலமனைத்தும் கெடும்.
English Explanation:
Want of manners injures one's
family; but want of modesty injures one's character.
குறள் 1020:
நாணகத் தில்லார் இயக்கம்
மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று.
மு.வ உரை:
மனத்தில் நாணம் இல்லாதவர் உலகத்தில் இயங்குதல்,
மரத்தால் செய்த பாவையைக் கயிறு கொண்டு ஆட்டி உயிருள்ளதாக மயக்கினாற் போன்றது.
சாலமன் பாப்பையா உரை:
மனத்துள் வெட்கம் இல்லாதவர்களின் நடமாட்டம்,
மரத்தால் செய்த பொம்மைக்கு உயிர் ஊட்டியிருப்பதாகக் காட்டி மயக்கியது போலாம்.
கலைஞர் உரை:
உயிர் இருப்பது போலக் கயிறுகொண்டு ஆட்டி
வைக்கப்படும் மரப்பொம்மைக்கும், மனத்தில் நாணமெனும் ஓர் உணர்வு இல்லாமல் உலகில் நடமாடுபவருக்கும்
வேறுபாடு இல்லை.
English Explanation:
The actions of those who are
without modesty at heart are like those of puppet moved by a string.
திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்….
✬✬✬அடுத்த பகுதியை வாசிக்க
... அழுத்துக...
✬✬✬ஆரம்பத்திலிருந்து வாசிக்க...அழுத்துக
0 comments:
Post a Comment