திருக்குறள் தொடர்கிறது…
101.
நன்றியில் செல்வம்
👉குறள்
1001:
வைத்தான்வாய்
சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்செத்தான் செயக்கிடந்த தில்.
மு.வ உரை:
ஒருவன் இடமெல்லாம் நிறைந்த
பெரும் பொருளைச் சேர்த்து வைத்து அதை உண்டு நூகராமல் இறந்து போனால் அவன் அந்த பொருளால்
செய்ய முடிந்தது ஒன்றுமில்லை.
சாலமன் பாப்பையா
உரை:
தன் வீடு நிறையப் பெரும்பொருள்
சேர்த்து வைத்திருந்தும், கஞ்சத்தனத்தால் அதை அனுபவிக்காதவனுக்கு அப்பொருளால் பயன்
இல்லை. ஆதலால் அவன் இருந்தாலும் இறந்தவனே.
கலைஞர் உரை:
அடங்காத ஆசையினால் வீடு கொள்ளாத
அளவுக்குச் செல்வத்தைச் சேர்த்து வைத்து அதனை அனுபவிக்காமல் செத்துப் போகிறவனுக்கு,
அப்படிச் சேர்க்கப்பட்ட செல்வத்தினால் என்ன பயன்?
English
Explanation:
He who does not enjoy
the immense riches he has heaped up in his house, is (to be reckoned as) dead,
(for) there is nothing achieved (by him).
👉குறள்
1002:
பொருளானாம்
எல்லாமென் றீயா திவறும்
மருளானாம்
மாணாப் பிறப்பு.
மு.வ உரை:
பொருளால் எல்லாம் ஆகும் என்று
பிறர்க்கு ஒன்றும் கொடுக்காமல் இறுகப்பற்றிய மயக்கத்தால் சிறப்பில்லாத பிறவி உண்டாம்.
சாலமன் பாப்பையா
உரை:
பொருளால் எல்லாவற்றையும்
சாதிக்கலாம் என்று எண்ணி அதைத் தேடிய பின் தானும் அனுபவிக்காமல், பிறர் தேவைக்கும்
அதைத் தராமல் கஞ்சனாக வாழ்பவனின் மயக்கத்தால் அவனுக்கு முழுமையற்ற பேய்ப்பிறப்பு உண்டாகும்.
கலைஞர் உரை:
யாருக்கும் எதுவும் கொடுக்காமல்,
தன்னிடமுள்ள பொருளால் எல்லாம் ஆகுமென்று, அதனைவிடாமல் பற்றிக் கொண்டிருப்பவன் எந்தச்
சிறப்புமில்லாத இழி பிறவியாவான்.
English
Explanation:
He who knows that
wealth yields every pleasure and yet is so blind as to lead miserly life will
be born a demon.
👉குறள்
1003:
ஈட்டம் இவறி
இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப்
பொறை.
மு.வ உரை:
சேர்த்து வைப்பதையே விரும்பிப்
பற்றுள்ளம் கொண்டு புகழை விரும்பாத மக்கள் பிறந்து வாழ்தல் நிலத்திற்கு பாரமே ஆகும்.
சாலமன் பாப்பையா
உரை:
மற்றவரைவிட நாம் அதிகம் பொருள்
சேர்க்க வேண்டும் என்று பொருள் சேர்ப்பதையே விரும்பிப் புகழை விரும்பாத மனிதரின் பிறப்பு
இப்பூமிக்குப் பாரமே.
கலைஞர் உரை:
புகழை விரும்பாமல் பொருள்
சேர்ப்பது ஒன்றிலேயே குறியாக இருப்பவர்கள் பிறந்து வாழ்வதே இந்தப் பூமிக்குப் பெரும்
சுமையாகும்.
English
Explanation:
A burden to the earth
are men bent on the acquisition of riches and not (true) fame.
👉குறள்
1004:
எச்சமென் றென்னெண்ணுங்
கொல்லோ ஒருவரால்நச்சப் படாஅ தவன்.
மு.வ உரை:
பிறர்க்கு உதவியாக வாழாதக்
காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவன் , தான் இறந்த பிறகு எஞ்சி நிற்பது என்று எதனை
எண்ணுவானே.
சாலமன் பாப்பையா
உரை:
பிறர்க்கு ஏதும் வழங்காதவன்
ஆதலால் எவராலும் விரும்பப்படாத அவன், தன் காலத்திற்குப் பின் தன்னை நினைவுபடுத்தி நிற்கப்போவது
என்று எதை எண்ணுவான்?
கலைஞர் உரை:
யாராலும் விரும்பப்படாத ஒருவன்,
தன் மரணத்திற்குப் பிறகு எஞ்சி நிற்கப் போவது என்று எதனை நினைத்திட முடியும்?
English
Explanation:
What will the miser who
is not liked (by any one) regard as his own (in the world to come)?
👉குறள்
1005:
கொடுப்பதூஉம்
துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கியகோடியுண் டாயினும் இல்.
மு.வ உரை:
பிறர்க்கு கொடுத்து உதவுவதும்
தான் நுகர்வதும் இல்லாதவர்க்கு மேன் மேலும் பெருகிய பல கோடிப் பொருள் உண்டானாலும் பயன்
இல்லை.
சாலமன் பாப்பையா
உரை:
தேவைப்படுவோர்க்குக் கொடுப்பதும்,
தேவை கண்டு தாம் அனுபவிப்பதும் இல்லாதவர்க்குப்பல மடங்காக அடுக்கிய கோடிப் பொருள் இருந்தாலும்
இல்லாததே ஆகும்.
கலைஞர் உரை:
கொடுத்து உதவும் பண்பினால்
இன்பமுறும் இயல்பு இல்லாதவரிடம், கோடி கோடியாகச் செல்வம் குவிந்தாலும் அதனால் பயன்
எதுவுமில்லை.
English
Explanation:
Those who neither give
(to others) nor enjoy (their property) are (truly) destitute, though possessing
immense riches.
👉குறள்
1006:
ஏதம் பெருஞ்செல்வம்
தான்துவ்வான் தக்கார்க்கொன்றீத லியல்பிலா தான்.
மு.வ உரை:
தானும் நுகராமல் தக்கவற்க்கு
ஒன்று கொடுத்து உதவும் இயல்பும் இல்லாமல் வாழ்கின்றவன், தன்னிடமுள்ள பெருஞ் செல்வத்திற்கு
ஒரு நோய் ஆவான்.
சாலமன் பாப்பையா
உரை:
தானும் அனுபவிக்காமல், தகுதியானவர்க்குத்
தரும் மனப்பாங்கும் இல்லாமல் வாழ்பவனிடம் இருக்கும் பெரும் செல்வம் ஒரு நோயே.
கலைஞர் உரை:
தானும் அனுபவிக்காமல் தக்கவர்களுக்கு
உதவிடும் இயல்பும் இல்லாமல் வாழ்கிறவன், தன்னிடமுள்ள பெருஞ்செல்வத்தைத் தொற்றிக்கொண்ட
நோயாவான்.
English
Explanation:
He who enjoys not (his
riches) nor relieves the wants of the worthy is a disease to his wealth.
👉குறள்
1007:
அற்றார்க்கொன்
றாற்றாதான் செல்வம் மிகநலம்பெற்றாள் தமியள்மூத் தற்று.
மு.வ உரை:
பொருள் இல்லாத வறியவர்க்கு
ஒரு பொருள் கொடுத்து உதவாதவனுடையச் செல்வம், மிக்க அழகு பெற்றவள் தனியாக வாழ்ந்து முதுமையுற்றாற்
போன்றது.
சாலமன் பாப்பையா
உரை:
ஏதும் இல்லாதவர்க்கு ஏதாவது
ஒன்றைக் கொடுத்து உதவாதவன் செல்வம், மிகுந்த அழகு பெற்ற பெண், திருமணமாகாமலே முதுமை
அடைந்தது போலாம்.
கலைஞர் உரை:
வறியவர்க்கு எதுவும் வழங்கி
உதவாதவனுடைய செல்வம், மிகுந்த அழகியொருத்தி, தன்னந்தனியாகவே இருந்து முதுமையடைவதைப்
போன்றது.
English
Explanation:
The wealth of him who
never bestows anything on the destitute is like a woman of beauty growing old
without a husband.
👉குறள்
1008:
நச்சுப் படாதவன்
செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத்
தற்று.
மு.வ உரை:
பிறர்க்கு உதவாத காரணத்தால்
ஒருவராலும் விரும்பப்படாதவனுடைய செல்வம், ஊர் நடுவில் நச்சு மரம் பழுத்தாற் போன்றது.
சாலமன் பாப்பையா
உரை:
எவராலும் விரும்பப்படாதவனின்
செல்வம் ஊரின் நடுவே நின்ற நச்சு மரம் பழுத்தது போலாம்.
கலைஞர் உரை:
வெறுக்கப்படுகிறவரிடம் குவிந்துள்ள
செல்வமும், ஊர் நடுவே நச்சு மரத்தில் காய்த்துக் குலுங்குகின்ற பழமும் வெவ்வேறானவையல்ல!
English
Explanation:
The wealth of him who
is disliked (by all) is like the fruit-bearing of the etty tree in the midst of
a town.
👉குறள்
1009:
அன்பொரீஇத்
தற்செற் றறநோக்கா தீட்டிய
ஒண்பொருள்
கொள்வார் பிறர்.
மு.வ உரை:
பிறரிடம் செலுத்தும் அன்பையும்
விட்டுத் தன்னையும் வருத்தி அறத்தையும் போற்றாமல் சேர்த்து வைத்தப் பெரும் பொருளைப்
பெற்று நுகர்பவர் மற்றவரே.
சாலமன் பாப்பையா
உரை:
பிறர்க்கு ஈயாமல் அன்பை விட்டு
விலகி, எதையும் அனுபவிக்காமல் தன்னை வருத்தி, அறத்தை எண்ணாது சேர்த்த பொருளை மற்றவர்
அனுபவிப்பர்.
கலைஞர் உரை:
அன்பெனும் பண்பை அறவே நீக்கி,
தன்னையும் வருத்திக் கொண்டு, அறவழிக்குப் புறம்பாகச் சேர்த்துக் குவித்திடும் செல்வத்தைப்
பிறர் கொள்ளை கொண்டு போய் விடுவர்.
English
Explanation:
To heap up glittering
wealth, their hoards shall others take.
👉குறள்
1010:
சீருடைச் செல்வர்
சிறுதுனி மாரி
வறங்கூர்ந்
தனைய துடைத்து.
மு.வ உரை:
புகழ் பொருந்திய செல்வர்
உற்ற சிறிய வறுமை உலகத்தைக் காக்க வல்ல மேகம் வறுமை மிகுந்தாற் போன்ற தன்மை உடையது.
சாலமன் பாப்பையா
உரை:
பிறர்க்குக் கொடுத்துப் புகழ்மிக்கவர்
ஆகிய செல்வர்கள் சிறிது காலம் வறுமைப்பட நேர்ந்தால், அது மழை தரம் மேகமே வறுமைப்பட்டது
போலாம்.
கலைஞர் உரை:
சிறந்த உள்ளம் கொண்ட செல்வர்களுக்கேற்படும்
சிறிதளவு வறுமையின் நிழல்கூட, மழை பொய்த்து விட்டதற்கு ஒப்பானதாகும்.
English
Explanation:
The short-lived poverty
of those who are noble and rich is like the clouds becoming poor (for a while).
திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்….
✬✬✬அடுத்த பகுதியை வாசிக்க
... அழுத்துக...
✬✬✬ஆரம்பத்திலிருந்து வாசிக்க...அழுத்துக
0 comments:
Post a Comment