"பெண் எனும் பிரபஞ்சம்"
"பெண் எனும் பிரபஞ்சம்
மண் வாழ்வின் இறைவி!
கண்ணின் இமையும் அவளே
உண்மைத் துணையும் இவளே!"
"திண்ணையில் அரட்டையும் செய்வாள்
வண்ணத்தில் அழகும் காட்டுவாள்!
எண்ணம் என்றும் குடும்பமே
கண்ணாய் காப்பாள் என்றுமே!"
"உண்ண உணவும் தருவாள்
வீண் வம்புக்கு இழுக்காள்!
ஊண் உறக்கம் பார்க்காள்
ஆண்களின் சொர்க்கமும் அவளே!"
...............................................
"எல்லாமாய் அவளே"
"எல்லாமாய் அவளே இறைவியும் அவளே!
சொல்ல முடியா அழகில் வந்து
வெல்ல முடியா நெஞ்சைக் கவர்ந்து
நல்லாய் வாழ தன்னைத் தருபவளே!"
"கள்ளம் இல்லா நெஞ்சம் கொண்டவளே!
உள்ளம் தேடும் அன்பு தந்து
அள்ள அள்ள இன்பம் சொரிந்து
உள்ளது எல்லாம் எனக்கும் கொடுப்பவளே!"
"ஆழ் கடலில் மலர்ந்த முத்தே!
வாழ்வு தர உன்னையே கொடுத்து
தாழ்வு மனப்பான்மை என்னிடம் அகற்றி
சூழ்ச்சி சூது அறியா மனையாளே!"
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
0 comments:
Post a Comment