திருக்குறள் தொடர்கிறது…
95.
மருந்து
👉குறள் 941:
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்வளிமுதலா எண்ணிய மூன்று.
மு.வ உரை:
மருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலேத்துமம்
என எண்ணிய மூன்று அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.
சாலமன் பாப்பையா உரை:
மருத்துவ நூலோர் சொல்லும் வாதம், பித்தம்,
சிலேட்டுமம் என்னும் மூன்றாம் ஒருவனின் உணவாலும், செயலாலும் அவற்றுக்கு ஒத்து இல்லாது.
மிகுந்தோ, குறைந்தோ இருந்தால் நோய் உண்டாகும்.
கலைஞர் உரை:
வாதம், பித்தம், சிலேத்துமம் என்று மருத்துவ
நூலோர் கணித்துள்ள மூன்றில் ஒன்று அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.
English Explanation:
If (food and work are either)
excessive or deficient, the three things enumerated by (medical) writers,
flatulence, biliousness, and phlegm, will cause (one) disease.
👉குறள் 942:
மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்தியதற்றது
போற்றி உணின்.
மு.வ உரை:
முன் உண்ட உணவு செரித்த தன்மை ஆராய்ந்து
போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் முதலில் உண்டது சீரணமாகிவிட்டதை
நன்கு அறிந்து அதன் பிறகு உண்டால், அவன் உடம்புக்க மருந்து என்று ஒன்று வேண்டியது இல்லை.
கலைஞர் உரை:
உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி
தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை.
English Explanation:
No medicine is necessary for him
who eats after assuring (himself) that what he has (already) eaten has been
digested.
👉குறள் 943:
அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு
பொற்றான் நெடிதுய்க்கும் ஆறு.
மு.வ உரை:
முன் உண்ட உணவு செரித்துவிட்டால், பின்
வேண்டிய அளவு அறிந்து உண்ணவேண்டும், அதுவே உடம்பு பெற்றவன் அதை நெடுங்காலம் செலுத்தும்
வழியாகும்.
சாலமன் பாப்பையா உரை:
முன்பு உண்டது சீரணமாகிவிட்டது தெரிந்தால்,
அடுத்து உண்பதைத் தேவையான அளவு அறிந்து உண்க; அப்படி அளவாக உண்பதே இந்த உடம்பைப் பெற்றவன்
அதை நெடுங்காலம் கொண்டு செல்லும் வழி.
கலைஞர் உரை:
உண்ட உணவு செரித்ததையும், உண்ணும் உணவின்
அளவையும் அறிந்து உண்பது நீண்ட நாள் வாழ்வதற்கு வழியாகும்.
English Explanation:
If (one's food has been) digested
let one eat with moderation; (for) that is the way to prolong the life of an
embodied soul.
👉குறள் 944:
அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.
மு.வ உரை:
முன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து
மாறுபாடில்லாத உணவுகளைக் கடைபிடித்து அவற்றையும் பசித்த பிறகு உண்ண வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
முன்பு உண்டது சீரணமாகிவிட்டதை அறிந்து
நன்கு பசிக்கும்போது உடம்பிற்கும் காலத்திற்கும் ஒவ்வாத உணவினை விலக்கி, வேண்டியவற்றை
உண்க.
கலைஞர் உரை:
உண்டது செரித்ததா என்பதை உணர்ந்து, நன்கு
பசியெடுத்த பிறகு உடலுக்கு ஒத்து வரக்கூடிய உணவை அருந்த வேண்டும்.
English Explanation:
(First) assure yourself that your
food has been digested and never fail to eat, when very hungry, whatever is not
disagreeable (to you).
👉குறள் 945:
மாறுபா டில்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபா டில்லை உயிர்க்கு.
மு.வ உரை:
மாறுபாடில்லாதா உணவை அளவு மீறாமல் மறுத்து
அளவோடு உண்டால், உயிர் உடம்பில் வாழ்வதற்கு இடையூறான நோய் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் உடம்பிற்கு ஒவ்வொத உணவுகளை விலக்கி
உண்டால், அவன் உயிர்க்கு நோயால் வரும் துன்பம் இல்லை.
கலைஞர் உரை:
உடலுக்கு ஒத்துவரக்கூடிய உணவைக்கூட அதிகமாகும்போது
மறுத்து அளவுடன் உண்டால், உயிர் வாழ்வதற்குத் தொல்லை எதுவுமில்லை.
English Explanation:
There will be no disaster to one's
life if one eats with moderation, food that is not disagreeable.
👉குறள் 946:
இழிவறிந் துண்பான்கண் இன்பம்போல் நிற்கும்கழிபேர்
இரையான்கண் நோய்.
மு.வ உரை:
குறைந்த அளவு இன்னதென்று அறிந்து உண்பவனிடத்தில்
இன்பம் நிலைநிற்பது போல, மிகப்பெரிதும் உண்பவனிடத்தில் நோய் நிற்க்கும்.
சாலமன் பாப்பையா உரை:
குறைவாக உண்பதே நல்லது என்று அறிந்து
உண்பவனிடம் இன்பம் விலகாமல் இருப்பது போல் மிக அதிகமாக விழுங்குபவனிடம் நோய் விலகாமல்
இருக்கும்.
கலைஞர் உரை:
அளவோடு உண்பவர் உடல் நலமுடன் வாழ்வதும்
அதிகம் உண்பவர் நோய்க்கு ஆளாவதம் இயற்கை.
English Explanation:
As pleasure dwells with him who
eats moderately, so disease (dwells) with the glutton who eats voraciously.
👉குறள் 947:
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்.
மு.வ உரை:
பசித்தீயின் அளவின் படி அல்லாமல், அதை
ஆராயாமல் மிகுதியாக உண்டால் , அதனால் நோய்கள் அளவில்லாமல் ஏற்பட்டு விடும்.
சாலமன் பாப்பையா உரை:
தன் வயிற்றுப் பசி அளவு தெரியாமல் மிக
அதிகமாக உண்டால் அவன் உடம்பில் நோய்கள் அளவு இல்லாமல் வளரும்.
கலைஞர் உரை:
பசியின் அளவு அறியாமலும், ஆராயாமலும்
அதிகம் உண்டால் நோய்களும் அளவின்றி வரும்.
English Explanation:
He will be afflicted with
numberless diseases, who eats immoderately, ignorant (of the rules of health).
👉குறள் 948:
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
மு.வ உரை:
நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம்
ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
நோயாளியின் உடல்மாற்றங்களால் வந்துள்ள
நோயை இன்னது என்று அறிந்து அந்த நோய் வருவதற்கான மூல காரணத்தையும் அதைத் தீர்க்கும்
வழியையும் அறிந்து அதைப் போக்குவதில் தவறு வந்துவிடாமல் மருத்துவர் செயல்பட வேண்டும்.
கலைஞர் உரை:
நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய்
தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும் (உடல் நோய்க்கு
மட்டுமின்றிச் சமுதாய நோய்க்கும் இது பொருந்தும்).
English Explanation:
Let the physician enquire into the
(nature of the) disease, its cause and its method of cure and treat it
faithfully according to (medical rule).
👉குறள் 949:
உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்.
மு.வ உரை:
மருத்துவ நூலைக் கற்றவன், நோயுற்றவனுடைய
வயது முதலியவற்றையும், நோயின் அளவையும், காலத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
மருத்துவ நூலை நன்கு கற்ற மருத்துவர்,
நோயாளியின் நோயைப் போக்க முயலும்போது, நோயாளியின் வயது, அந்நோய் வந்திருக்கும் காலம்,
நோயைப் போக்கத் தனக்குத் தேவையாகும் காலம் ஆகியவற்றை எண்ணிச் செயல்பட வேண்டும்.
கலைஞர் உரை:
நோயாளியின் வயது, நோயின் தன்மை, மருத்துவம்
செய்வதற்குரிய நேரம் என்பனவற்றை எல்லாம் மருத்துவம் கற்றவர் எண்ணிப் பார்த்தே செயல்பட
வேண்டும்.
English Explanation:
The learned (physician) should
ascertain the condition of his patient; the nature of his disease, and the
season (of the year) and (then) proceed (with his treatment).
👉குறள் 950:
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்றப்பானாற்
கூற்றே மருந்து.
மு.வ உரை:
நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன்,
மருந்து, மருந்தை அங்கிருந்து கொடுப்பவன் என்று மருத்துவ முறை அந்த நான்குவகைப் பாகுபாடு
உடையது.
சாலமன் பாப்பையா உரை:
நோயாளி, மருத்துவர், மருந்து, அதைத் தயாரிப்பவர்
என மருந்து நான்கு வகைப்படும்.
கலைஞர் உரை:
நோயாளி, மருத்துவர், மருந்து, அருகிருந்து
துணைபுரிபவர் என மருத்துவமுறை நான்கு வகையாக அமைந்துள்ளது.
English Explanation:
Medical science
consists of four parts, viz, patient, physician, medicine and compounder; and
each of these (again) contains four sub-divisions.
திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்….
✬✬✬அடுத்த பகுதியை வாசிக்க
... அழுத்துக...
✬✬✬ஆரம்பத்திலிருந்து வாசிக்க...அழுத்துக
0 comments:
Post a Comment