திருக்குறள் தொடர்கிறது…
94.
சூது
👉குறள் 931:
வேண்டற்க வென்றிடினும்
சூதினை வென்றதூஉம்தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.
மு.வ உரை:
வெற்றியே பெறுவதாலும் சூதாட்டத்தை விரும்பக்கூடாது,
வென்ற வெற்றியும் தூண்டில் இரும்பை இரை என்று மயங்கி மீன் விழுகினாற் போன்றது.
சாலமன் பாப்பையா உரை:
வெற்றி பெறும் ஆற்றல் இருந்தாலும் சூதாடுவதை
விரும்ப வேண்டா. அதில் பெறும் வெற்றி, தூண்டிலின் முள்ளில் இருக்கும் உணவை மீன் விழுங்கியது
போன்றதாம்.
கலைஞர் உரை:
வெற்றியே பெறுவதாயினும் சூதாடும் இடத்தை
நாடக்கூடாது அந்த வெற்றி, தூண்டிலின் இரும்பு முள்ளில் கோத்த இரையை மட்டும் விழுங்குவதாக
நினைத்து மீன்கள் இரும்பு முள்ளையே கௌவிக் கொண்டது போலாகிவிடும்.
English Explanation:
Though able to win, let not one
desire gambling; (for) even what is won is like a fish swallowing the iron in
fish-hook.
👉குறள் 932:
ஒன்றெய்தி நூறிழக்கும்
சூதர்க்கும் உண்டாங்கொல்நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.
மு.வ உரை:
ஒரு பொருள் பெற்று நூறு மடங்கு பொருளை
இழந்து விடும் சூதாடிகளுக்கும், நன்மை பெற்று வாழும் ஒரு வழி உண்டோ.
சாலமன் பாப்பையா உரை:
ஒன்றைப் பெற்று, நூற்றினை இழந்துபோகும்
சூதாடுபவர்க்கும் நல்லதைப் பெற்று வாழம் ஒரு வழி உண்டாகுமோ?
கலைஞர் உரை:
ஒரு வெற்றியைப் பெற்ற மகிழ்ச்சியில் தொடர்ந்து
ஆடி நூறு தோல்விகளைத் தழுவிக்கொள்ளும் சூதாடிகளின் வாழ்க்கையில் நலம் ஏற்பட வழி ஏது?
English Explanation:
That they may good obtain, and see
a prosperous day? Is there indeed a means of livelihood that can bestow
happiness on gamblers who gain one and lose a hundred?
👉குறள் 933:
உருளாயம் ஓவாது கூறிற்
பொருளாயம்
போஒய்ப் புறமே படும்.
மு.வ உரை:
ஒருவன் உருளுகின்ற கருவியால் வரும் ஒரு
பொருளை இடைவிடாமல் கூறி சூதாடினால், பொருள் வருவாய் அவனை விட்டு நீங்கிப் பகைவரிடத்தில்
சேரும்.
சாலமன் பாப்பையா உரை:
சூதாட்டத்தில் பெற்ற லாபத்தை ஓயாமல் சொல்லிச்
சூதாடினால் உள்ள பொருளும், அதனால் வரும் லாபமும் அடுத்தவர் வசம் அகப்பட்டுவிடும்.
கலைஞர் உரை:
பணையம் வைத்து இடைவிடாமல் சூதாடுவதை ஒருவன்
பழக்கமாகவே கொள்வானேயானால் அவன் செல்வமும் அந்தச் செல்வத்தை ஈட்டும் வழிமுறையும் அவனைவிட்டு
நீங்கிவிடும்.
English Explanation:
If the king is incessantly addicted
to the rolling dice in the hope of gain, his wealth and the resources thereof
will take their departure and fall into other's hands.
👉குறள் 934:
சிறுமை பலசெய்து சீரழிக்கும்
சூதின்
வறுமை தருவதொன் றில்.
மு.வ உரை:
ஒருவனுக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி
அவனுடைய புகழைக் கெடுக்கின்ற சூதைபோல் வறுமை தருவது வேறொன்றும் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
துன்பங்கள் பல தந்த,நம் புகழையும் அழிக்கும்
சூதைப் போல் நமக்கு வறுமை தருவது வேறு ஒன்றும் இல்லை.
கலைஞர் உரை:
பல துன்பங்களுக்கு ஆளாக்கி, புகழைப் கெடுத்த,
வறுமையிலும் ஆழ்த்துவதற்குச் சூதாட்டத்தைப் போன்ற தீமையான செயல் வேறொன்றும் இல்லை.
English Explanation:
There is nothing else that brings
(us) poverty like gambling which causes many a misery and destroys (one's)
reputation.
👉குறள் 935:
கவறும் கழகமும் கையும்
தருக்கி
இவறியார் இல்லாகி யார்.
மு.வ உரை:
சூதாடு கருவியும், ஆடும் இடமும், கைத்திறமையும்
மதித்துக் கைவிடாதவர், (எல்லாப் பொருள் உடையவராக இருந்தும்) இல்லாதவர் ஆகிவிடுவார்.
சாலமன் பாப்பையா உரை:
சூதாட்டத்தையும் சூதாடும் இடத்தையும்
சூதாடும் திறம் படைத்த கையையும் பெருமையாக எண்ணிச் சூதாட்டத்தை இறுகப் பிடித்துக் கொண்டவர்
பொருளால் இல்லாதவராகிப் போனது முன்பும் உண்டு.
கலைஞர் உரை:
சூதாடும் இடம், அதற்கான கருவி, அதற்குரிய
முயற்சி ஆகியவற்றைக் கைவிட மனமில்லாதவர்கள் எதுவும் இல்லாதவர்களாகவே ஆகிவிடுவார்கள்.
English Explanation:
Penniless are those who by reason
of their attachment would never forsake gambling, the gamblingplace and the
handling (of dice).
👉குறள் 936:
அகடாரார் அல்லல் உழப்பர்சூ
தென்னும்
முகடியான் மூடப்பட் டார்.
மு.வ உரை:
சூது என்று சொல்லப்படும் மூதேவியால் விழுங்கப்பட்டவர்,
வயிறு நிறைய உணவும் உண்ணாதவராகிப் பல துன்பப்பட்டு வருந்துவர்.
சாலமன் பாப்பையா உரை:
சூதாட்டம் என்னும் மூதேவியால் மூடப்பட்டவர்
வயிறும் நிறையாமல், துன்பத்தையும் அனுபவிப்பர்.
கலைஞர் உரை:
சூது எனப்படும் தீமையின் வலையில் விழுந்தவர்கள்
வயிறார உண்ணவும் விரும்பாமல் துன்பத்திலும் உழன்று வருந்துவார்கள்.
English Explanation:
Those who are swallowed by the
goddess called "gambling" will never have their hunger satisfied, but
suffer the pangs of hell in the next world.
👉குறள் 937:
பழகிய செல்வமும் பண்பும்
கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்.
மு.வ உரை:
சூதாடுமிடத்தில் ஒருவனுடைய காலம் கழியுமானால்
அது அவனுடைய பழைமையாய் வந்த செல்வத்தையும் இயல்பான நற்பண்பையும் கெடுக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
சூதாடு களத்துக்குள் காலம் கழிக்கப் புகுந்தால்,
அது பழஞ்செல்வத்தையும் அழிக்கும். நல்ல குணங்களையும் கெடுக்கும்.
கலைஞர் உரை:
சூதாடும் இடத்திலேயே ஒருவர் தமது காலத்தைக்
கழிப்பாரேயானால், அது அவருடைய மூதாதையர் தேடிவைத்த சொத்துகளையும் நற்பண்பையும் நாசமாக்கிவிடும்.
English Explanation:
To waste time at the place of
gambling will destroy inherited wealth and goodness of character.
👉குறள் 938:
பொருள்கெடுத்துப் பொய்மேற்
கொளீஇ அருள்கெடுத்தல்லல் உழப்பிக்கும் சூது.
மு.வ உரை:
சூது உள்ள பொருளை அழித்துப் பொய்யை மேற்கொள்ளச்
செய்து அருளையும் கெடுத்துப் பலவகையிலும் துன்பமுற்று வருந்தச் செய்யும்.
சாலமன் பாப்பையா உரை:
சூதாட்டம் பொருளை அழிக்கும். பொய்யைச்
சொல்லச் செய்யும்; மன இரக்கத்தைக் கெடுக்கும்; துன்பத்தையும் தரும்.
கலைஞர் உரை:
பொருளைப் பறித்துப் பொய்யனாக ஆக்கி, அருள்
நெஞ்சத்தையும் மாற்றித், துன்ப இருளில் ஒருவனை உழலச் செய்வது சூது.
English Explanation:
Gambling destroys property, teaches
falsehood, puts an end to benevolence, and brings in misery (here and
hereafter).
👉குறள் 939:
உடைசெல்வம் ஊணொளி கல்வியென்
றைந்தும்அடையாவாம் ஆயங் கொளின்.
மு.வ உரை:
சூதாடுதலை ஒருவன் மேற்கொண்டால், புகழ்,
கல்வி, செல்வம், உணவு, உடை ஆகிய ஐந்தும் அவனைச் சேராமல் ஒதுங்கும்.
சாலமன் பாப்பையா உரை:
சூதாட்டத்தை விரும்பினால் மரியாதை, கல்வி,
செல்வம், உணவு, உடை என்ற ஐந்தும் சேரமாட்டா.
கலைஞர் உரை:
சூதாட்டத்திற்கு அடிமையாகி விட்டவர்களை
விட்டுப் புகழும், கல்வியும், செல்வமும், உணவும், உடையும் அகன்று ஒதுங்கி விடும்.
English Explanation:
The habit of gambling prevents the
attainment of these five: clothing, wealth, food, fame and learning.
👉குறள் 940:
இழத்தொறூஉம் காதலிக்கும்
சூதேபோல் துன்பம்உழத்தொறூஉம் காதற் றுயிர்.
மு.வ உரை:
பொருள் வைத்து இழக்க இழக்க மேன்மேலும்
விருப்பத்தை வளர்க்கும் சூதாட்டம் போல், உடல் துன்பப்பட்டு வருந்ந வருந்த உயிர் மேன்மேலும்
காதல் உடையதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
துன்பத்தை அனுபவிக்கும் போதெல்லாம் இந்த
உடம்பின் மேல் உயிருக்குக் காதல் பெருகுவது போல, சூதாடிப் பொருளை இழந்து துன்பப்படும்
போதெல்லாம் சூதாட்டத்தின் மேல் ஆசை பெருகும்.
கலைஞர் உரை:
பொருளை இழக்க இழக்கச் சூதாட்டத்தின் மீது
ஏற்படுகிற ஆசையும், உடலுக்குத் துன்பம் தொடர்ந்து வரவர உயிர்மீது கொள்ளுகிற ஆசையும்
ஒன்றேதான்.
English Explanation:
As the gambler loves (his vice) the
more he loses by it, so does the soul love (the body) the more it suffers
through it.
திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்….
✬✬✬அடுத்த பகுதியை வாசிக்க
... அழுத்துக...
✬✬✬ஆரம்பத்திலிருந்து வாசிக்க...அழுத்துக
0 comments:
Post a Comment