
நேர்மறைச் சிந்தனை
`என்னமோ, என்
வாழ்க்கையிலே மகிழ்ச்சியே இல்லே,’ என்று
அலுத்துக்கொள்கிறவர்கள் அவர்களுடைய சிந்தனையை மாற்றிக்கொள்ள வேண்டும்.
ஏனெனில், மகிழ்ச்சி
பிறரால் வருவதல்ல. ஒருவரது எண்ணத்தைப் பொறுத்தது.
கோயில் ஒன்றில் இலவச நாட்டிய வகுப்பு நடத்தப்படுவதாகக் கேள்விப்பட்டு, அதை நடத்தும்
ஆசிரியையிடம் சென்றார் ஒருவர். அவருடைய மகளை அந்த வகுப்பில் சேர்ப்பதற்காக இல்லை.
முகத்தில் வருத்தத்தைத் தேக்கிக்கொண்டு, “இருக்கிறவங்க குடுக்கலாம். எங்களைமாதிரி
இல்லாதவங்க...