குரலோன் பாரதி...+ செழிப்பில்லை...-கவி

 

"அடிமை ஒழிக்கும் குரலோன் பாரதி"

 

"அடிமை ஒழிக்கும் குரலோன் பாரதி

விடிவை நோக்கி வரிகள் முழங்கும்!

இடித்து உரைப்பான் காரணம் சொல்வான்

அடித்துப் பொய்யை தூர விரட்டுவான்!!"

 

"தமிழின் அரவணைப்பில் வரிகள் மலரும்

பூமி எங்கும் பரந்து விரியும்!

திமிர் பிடித்த கொள்கை வெறியன்

அமிர்தம் தோற்கும் கவிதை தருவான்!!"

 ⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

 

"உழைப்பின்றிச் செழிப்பில்லை....!"

 

"வியர்வை மற்றும் உழைப்பின் பயனில்

செழிப்பின் விதை மனிதத்தை வளமாக்கும்!

உழைக்கும் கை இல்லை என்றால்

செல்வம் பூக்காது வறுமை தாண்டவமாடும்!"

 

"கடினமான வயல்களின் வழியாக நடந்து

முயற்சியின் பலன்களை அறுவடை செய்!

கும்பிட்டு பூசை செய்வதால் ஒன்றுமில்லை

குனித்து நிமிர்ந்து வாழ்வை செழிப்பாக்கு!"

 

"இதயங்கள் சேராத உழைப்பு ஒன்றில் 

அரண்மனை உயராது கோபுரங்கள் ஏறாது!

செழிப்பின் அறுவடையே நமக்குச் சொந்தம்

மனிதா கடும் உழைப்பின்றிச் செழிப்பில்லை!"

 ⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]  

0 comments:

Post a Comment