தமிழ் இலக்கியங்களில் வாழ்வியல் சிந்தனைகள்- 02




அறம்

     மனித இயக்கத்தின் வாழ்வியல் அடிப்படைப் பண்புகளே அறமாகும். அறம் என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களுள் பல இடங்களில் வந்துள்ளது அறநெறியே மாந்தரின் நல்வாழ்வுக்கு உகந்தது. அறம் என்பது நற்செயல் என்பதைச் சுட்டும் கலைச்சொல், அறம் என்ற சொல் நன்மை, ஈகை, நீதி முதலிய பொருள்களில் வழங்கலாயிற்று பொருள்களையும் தன்னுள் தழுவி நிற்பது அறம் பொதுவாக நல்லொழுக்கமும், நற்செய்கைகளும் அறம் என்று அறியப்படும். அறம் மனிதனில் வாழ்வியல் கூறுகளில் ஒன்று தமிழ் இலக்கியங்கள் அறம் பற்றி அதிகம் பேசுகின்றது.

 

இல்லறம்

     அறநெறியில் இல்வாழ்க்ககையை அமைத்துக் கொண்டவா்கள் பெற்றிடும் பயனை வேறு நெறியில் சென்று பெற்றிட இயலாது.

 

     அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்

      போஒய்ப் பெறுவ தெவன்   (குறள் – 46)  என வள்ளுவர் கூறுகிறார்.

இல்லறம் என்பது இல்வாழ்க்கையைக் குறிப்பதாகும். இது ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்வதாகும். திருமணம் என்பது உடற்சோ்க்கையன்று அது உணா்வுகளின் சோ்க்கை. திருமணம் புரிந்து இல்லறத்தை நடத்துவது இன்பத்திற்காக மட்டுமல்ல அறத்திற்காகவும் என்பது பழந்தமிழ்க் கொள்கையாகும். இல்லறம் துறவறத்திற்கு முரண்பட்டதன்று. இளமையில் முதிர்ச்சி மூப்பதல் போல இல்லறத்தின் முதிர்ச்சி துறவெனக் கொள்ளல் வேண்டும்.

     இல்லறம் நடத்திய இறுதிக் காலத்துத் தமக்குக் காவலாக அமைந்த மக்களோடு கூடியிருந்து அறத்தை விரும்பும் சுற்றத்தோடு சிறந்த பணிகளைச் செய்தல் இல்லற வாழ்வு நடத்தியதன் பயன் எனத் தொல்காப்பியம் கூறியுள்ளதை காணலாம்.

     காமம் சான்ற கடைக்கோட் காலை

     ஏமம் சான்ற மக்களோடு துவன்றி

     அறம்புரி சுற்றமோடு கிழவனும் கிழத்தியும்

     சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே” (51-தொ.பொ.கற்பு)

மனத்தூய்மை உடையவா்க்கே நன்மக்கள் வாய்ப்பா். அதனால் கணவன் மனைவி பண்பினராய் இருத்தல் வேண்டும். நன்மக்களை பெற்ற தந்தை அவா்களை அவையத்து முந்தியிருப்பச் செய்தல் வேண்டும். சான்றோனாக்குதல் தந்தைக்கு கடனே என்று புறநானூற்றுப் பாடல் புகழும். இல்லறம் பற்றிய இல்லாத கருத்துக்கள் தமிழ் இலக்கியங்களில் இல்லை.

கட்டுரையாளர்:பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர் /அரசு கலைக்கல்லூரி/சேலம் – 07

0 comments:

Post a Comment