"வரமாக வந்தவளே" & வலிமை காண் -கவி

"வரமாக வந்தவளே"

"வரமாக வந்தவளே துணையாய் நின்றவளே

உரமாக வாழ்வுக்கு பண்பாடு தந்தவளே  

தரமான சொற்களால் உள்ளம் கவர்ந்தவளே

ஈரமான கருணையால் மனிதம் வளர்த்தவளே

கரங்கள் இரண்டாலும் உழைத்து காப்பேனே!"

 

"தோரணம் வாசலில் மாவிலையுடன் தொங்க

சரமாலை கொண்டையில் அழகாக ஆட 

ஓரக்கண்ணாலே ஒரு ஓரமாய் பார்த்து

காரணம் சொல்லாமல் அருகில் வந்தவளே 

மரணம் பிரித்தாலும் மறவேன் உன்னை!"

 

 

வலிமை காண்

 

"வலியோருக்கு எதிரான கோபம் வீணே

புயலால் தளராத மலைகள் அவர்களே!

எளியோருக்கும் காட்டும் சினமும் மோசமே

அவர்கள் பாயும் மென்மையான நீரோடைகளே!

குரலைக் உயர்த்தியோ சபித்தோ ஒன்றும்மில்லை!"

 

"சினம் மறந்தால் நன்மை பயக்குமே

மகிழ்வைக் கொண்டாட்டத்தை அது அழிக்குமே!

சீற்றம் துறந்தால் இனபம் மலருமே

சீறிப் பாய்வதால் இழப்பே அதிகமே!

அறிவிலும் மௌனத்திலும் வலிமையை காண்பாயே!"

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

0 comments:

Post a Comment