
[கரிகால
சோழன்]
முற்காலச் சோழர்களில் மிக முக்கியமான மன்னர்களில் ஒருவர் கரிகால சோழர். இவர்
மௌரியப் பேரரசின் விரிவாக்கலை தென் இந்தியாவில் தடுத்து நிறுத்திய மன்னர்
இளஞ்செட்சென்னியின் மகன் ஆவார். மன்னர் கரிகால சோழனுக்கு திருமாவளவன், மற்றும்
பெருவளத்தான் என்னும் பெயர்களும் உண்டு. சோழ அரசை ஒரு குறுநில அரசிலிருந்து காஞ்சி
முதல் காவிரி வரை கொண்ட பேரரசாக மாற்றிய பெருமை மன்னர் கரிகாலனையே சேரும்.
சங்ககால இலக்கியங்களில் மற்றும் கல்வெட்டுக்கள்...