[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.
Compiled by: Kandiah Thillaivinayagalingam]
பயணம்[Trip or journey ]:


ஆனால் ஒரு பூனை ,ஒரு துறவி,ஒரு தனி பிரமணன்,ஒரு அம்பட்டன்[முடி வெட்டுனர்],ஒரு விதவை [கைம்பெண்] அல்லது ஒரு குழவி ஈனாத பெண் [மலடி] குறுக்கே போனால்,பயணம் வெற்றி தராது.ஆகவே வீடு திரும்பி,நீர் பருகி விட்டு,சிறிது நேரத்தின் பின் மீண்டும் பயணத்தை தொடரலாம்.இப்படி பல நம்பிக்கைகள் உண்டு.
அது மட்டும் அல்ல ராகு காலத்தில் நீண்ட பயணம் செய்ய மாட்டார்கள்.அது போல நீண்ட பயணம் போய் சில காலத்தின் பின்பே திரும்ப
உள்ளவர்கள்,வெள்ளி கிழமை தமது பயணத்தை ஆரம்பிக்க மாட்டார்கள்.அப்படி போனால் எப்பவும் திரும்பாமல் விட சந்தர்ப்பம் கூடவாம்.அதனால் தான்,புதிதாக கல்யாணம் செய்த மண மக்கள்,தமது கல்யாண விழாவிற்கு பின் முதல் முறை வெள்ளி கிழமை வீட்டை விட்டு வெளிச்செல்ல மாட்டார்கள்.அது மட்டும் அல்ல இறந்த உடலை [பிணத்தை] கூட தகனம் செய்ய,வெள்ளி கிழமை எடுக்க மாட்டார்கள்
நிமித்தம்[சகுனம்],செல்வவளம்[அதிருஷ்டம்] இவைகளின் காட்சியே உள்ளங்கை/பாதம் அரித்தல் எனவும் நம்புகிறார்கள். உங்கள் பாதம் ஓயாமல் அரித்து கொண்டு இருந்தால்,தோல் வறண்டு[உலர்ந்தது] போய் இருக்கலாம்?அது சிவப்பாய் மாறி இருக்கலாம் அல்லது சினமூட்டுவதாக [எரிச்சற்படுத்துவதாக] வும் இருக்கும்.ஆகவே மருத்துவர் ஒருவரை நாடுவது நல்லது.ஆனாலும் நீங்கள் மூட நம்பிக்கையில் மூழ்கியிருந்தால் இது,இந்த பாத அரிப்பு,நீங்கள்,இன்பம் தரக்கூடிய நீண்ட பயணம் ஒன்று போக போவதை குறிக்கும்.இது வலது உள்ளங்காலாக இருந்தால்,உங்களை வரவேற்கக் கூடிய நாடாக அது இருக்கும் அல்லது அங்கு ஒரு முயற்சி செய்து,அதில் பெரு வெற்றி அடைய கூடியதாக இருக்கும்
பகுதி/Part 06"B":"நல்லநாள்" அடுத்தவாரம் தொடரும்
0 comments:
Post a Comment