ஒளிர்வு:66- - தமிழ் இணைய சஞ்சிகை [சித்திரை ,2016]

தீபம் வாசகர்கள் அனைவருக்கும்  சக மனிதனை நேசிக்கத் தெரியாதவர், எத்தனை ஜெபமாலை உருட்டினாலும்--- காலமெல்லாம் கண்ணை மூடிக் கொண்டு காயத்ரி மந்திரம் ஜெபித்தாலும்--- ஐந்து வேளை அல்ல-- ஐம்பது வேளை தொழுது மண்டியிட்டாலும்--- ஒரு பயனும் விளையாது! இது கவிஞர் கங்கை மணிமாறன் அவர்களின் கருத்து.நேசித்தல் அற்ற நிலையானது  இன்று குடும்ப அங்கத்தவர்களிடையே மட்டுமல்ல அது ஆன்மீக வாதிகளாக தம்மை காட்டிக்கொள்வோரினையும் கடந்து அரசியல் வாதிகள்...

வீரனும் அறவழி போரும்:

உலகில் எந்த ஒரு பெண்ணும்/தாயும் ஒரு கோழையைப் பெற ஒருபோதும், எப்போதும் எந்த நிலையிலும் எந்த காலத்திலும் விரும்ப மாட்டாள்,உதாரணமாக கி மு 1700 க்கும் 1100 க்கும் இடைப்பட்ட காலத்தில் தொகுக்கப்பட்ட ரிக் வேதத்தில் கூட,விவாஹ சுக்தம்-மண்டலம் 10,சுக்தம் 85 பாடல் 44 இல்"Not evileyed-,no slayer of thy husband,bring weal to cattle,radiant, gentle hearted;Loving the Gods, delightful,bearing heroes,bring blessing to our quadrupeds and bipeds."இப்படி கூறுகிறது.அதாவது...

இனவாதிகளிடமும் சந்தர்ப்ப வாதிகளிடமும் சிக்கித் தவிக்கும் சமஷ்டி

நன்றி;விளம்பரம்  :தமிழர் பிரச்னைக்கு சமஷ்டி முறையிலான தீர்வு திட்டத்தினை சிறிலங்கா அரசு எதிப்பதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கும், அமைதிக்கும் பங்கம் விளைவிப்பதனை உணராது தங்கள் அரசியல் எதிர்காலத்தினை தக்க வைத்துக் கொள்வதற்காக இனவாத ரீதியில் பெரும்பான்மை இனத்தவரை இட்டுச் சென்று  தொடர்ந்து நாட்டினை குட்டிச் சுவராக்கி வருகின்றனர...

ஒளி பெறுமா என் வாழ்வு.

என் இதயம் உன் பிரிவை தாங்க  ஒன்றும்  வலி தாங்கும் சுவர் இல்லை பெண்ணே! நீ இல்லாத இந்த நேரம்  என் விழி இரண்டும் சோர்வடைந்து  உன் எண்ணங்களை சுமந்து நான்   படும் பாடு  உனக்கு எப்படிப் புரியும்! வாசம் இன்றி மலர்  உயிர்  பெறாது  பெண்ணே!  உன் சுவாசம்  இன்றி நானும்  உயிர் வாழ்வது முடியாது கண்ணே! நீ மீண்டும் வந்து சேர்ந்து விட்டால் வையகம்  என் வசம் ஆகும்.  இல்லை...

காசேதான் கடவுளடா!

திருப்பதி கோயில் பொம்மைக்குப் புதிய துணி அணிவிப்பது "வஸ்த்ரம்" எனும் சடங்கு. சிறீவாரி வஸ்த்ரம் என்று கூறப்படுவது. அது போல சிறீவாரி அபிசேகம் என்பது ஒரு சடங்கு. அதன்படி பொம்மையைக் கழுவிக் குளிப்பாட்டித் துணி கட்டுவது இந்த இரண்டு சடங்குகளும். இந்தச் சடங்குகளைச் செய்திட இப்போது முடியாதாம். குளிப்பாட்டும் சடங்குக்குக் கட்டணம் 750 ரூபாய். இது 2028 ஆண்டு  முடிய புக் ஆகிவிட்டதாம்! துணி கட்டும் சடங்குக்கு 12 ஆயிரத்து 250 ரூபாய் கட்டணம். இது 2042 ஆண்டு வரை...

உங்கள் உடலை நோய்க்கிருமிகளின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க...

உங்கள் உடலை நோய்க்கிருமிகளின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது நோயெதிர்ப்பு மண்டலம் தான். இத்தகைய நோயெதிர்ப்பு மண்டலம் நமது ஒருசில செயல்களால் பாதிக்கப்பட்டு அழிவிற்குள்ளாகிறது. இச்செயல்கள் அப்படியே நீடித்தால், பின் கடுமையான நோய்க்கிருமிகளால் உடல் பாதிக்கப்பட்டு, அதனால் அபாயத்தை சந்திக்க நேரிடும். ஆகவே ஒவ்வொருவரும் தங்களின் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு அழிவை ஏற்படுத்தும் செயல்கள் என்னவென்று தெரிந்து கொண்டு, அவற்றைத் தவிர்க்க வேண்டியது அவசியம்....

எம் இனம் சுமந்த வலிகள் [தொடர் 2]

மனம் உடைந்து போய் இருந்த மதிக்கும் வெண்ணிலாவிடம் மனம் விட்டுப் பேசியதில் சிறு ஆறுதல் கிடைத்தது. வாடி வதங்கிய மரம் துளிர்ப்பது போல ,அவளும் சற்றுப் புன்னகை கொண்டு மனம் நிம்மதி அடைந்து இருந்தாள். மதியின் கதையைக் கேட்ட வெண்ணிலாவோ , “கடவுளே உனக்கு இரக்கமே இல்லையா , வெந்த புண்ணிலேயே மீண்டும் வேலைப் பாச்சுகிறாயோ, நாங்கள் என்ன பாவம் செய்தோம்” என்று முணுமுணுத்தபடி, மனதில் வெறுப்பு வர அதை மனதில் அடக்கிக் கொண்டு” மதி ,நீ ஒன்றுக்கும் கவலைப்படாத,கடவுள்...