இன்னமும் கூடிய கடினமான உழைப்புதான் இந்தியா என்ற நாட்டை உருவாக்குவதற்கு வெள்ளையர்கள் செய்யவேண்டி இருந்தது. அவர்கள், போர் புரிந்து, உயிர் இழந்து சேர்த்து வைத்த ஒரு நிலப்பரப்பை இந்தியா என்ற பெயரில் நாம் அவர்களிடமிருந்து இலகுவாகப் பெற்றுக்கொண்டுவிட்டோம்.
17 ஆம் நூற்றாண்டில் தென்னிந்திய மராட்டிய மன்னர்களிடம் மொகலாயர் படிப்படியாகத் தங்கள் பிரதேசங்களை இழக்கத் தொடங்கி, 19 ஆம் நூற்றாண்டு நடுப்பகுதியில் முற்றாகச் செயல் இழந்தனர்.
முதலில், 1617 இல் முகலாய மன்னனால் பிரித்தானிய கிழகிந்தியக் கம்பனிக்கு இந்தியாவில் வியாபாரம் செய்துகொள்ள உரிமை அளிக்கப் பட்டது. அதன் பின்னால், படிப்படியாக பிரித்தானியா தன்னுடைய வர்த்தக உரிமை என்ற போர்வையில், இன்னொரு நாட்டுக்கும், இராச்சியத்திற்கும் எதிராகச் சண்டையிட உதவிப் பல இராச்சியங்களைத் தன கைவசம் போட்டுக் கொண்டது.
இந்திய மன்னர்களிடம் எந்தவித நவீன ஆயுதங்கள் இருக்கவில்லை. அவர்களின் வில்லும், வாளும் ஐரோப்பியர்களின் பீரங்கிக் குண்டுகளுக்கு முன் நீண்ட காலம் நிற்க முடிய வில்லை. இதன் காரணமாய், பிரித்தானியர்களுக்கு பல இராச்சியங்களையும் இலகுவாகக் கைப்பற்றக் கூடியதாக இருந்தது.
அவர்கள் தாங்கள் பிடித்த எல்லா இடங்களையும், தங்கள் நிர்வாக வசதிக்காக ஒரு குடையின் கீழ் வைத்திருந்தார்கள். அதுமட்டுமல்ல, எங்கோ 1500 கி.மீ. தூரத்தில் இருக்கும் அந்தமான் முதலிய தீவுகளையும் கைப்பற்றித் தங்கள் வசம் கொண்டுவந்து இந்தியாவோடு இணைத்தார்கள். (அந்தமான் தீவுகள் முன்னர் சோழர் ஆதிக்கத்திலும், பின்னர் மராட்டியர்களிடமும் இருந்துள்ளது). இவர்கள் இப்படி பல நாடுகளையும் ஒன்றாகச் சேர்த்து வைக்காது விட்டிருந்தால், 'இந்தியா' என்று அழைக்கப்படும் இந்த நிலப்பரப்பபினுள் நூற்றுக்கணக்கான நாடுகள் இன்னமும் ஒன்றோடொன்று போர் புரிந்து கொண்டுதான் இருந்திருக்கும்.
ஆதலால், 'இந்தியா', 'இந்தியா' வாகக் கிடைத்தது எந்தவொரு இந்திய மன்னனாலோ அல்லது குடிமகனாலோ அல்ல; அது உண்மையில் ஆங்கிலேயரர்களால் தான்!
இது இலங்கை மற்றும் பல நாடுகளுக்கும் பொருந்தும். வல்லவன் ஒருவன் தன் படைபலத்தால் வெவ்வேறு மொழி, கலாச்சாரம் கொண்ட இராச்சியங்களைப் பிடித்து ஒன்றாக்கிப் பெரும்பான்மை சமூகத்திடம் விட்டுச் சென்றுவிட்டான்! ஒன்றாக்கப்பட்ட இந்த நாடுகளைப் பழைய நிலைக்குப் பிரிக்க முயல்வது ஒரு சர்வதேச குற்றச் செயலாகக் கணிக்கப்படுகிறது.
ஆக்கம்:
செல்வத்துரை
சந்திரகாசன்
பல நாடுகளை ஒன்றாய் இணைக்கவும், அல்லது ஒரு நாட்டைத் துண்டு போட்டுப் பிரிக்கவும் ஆயுத பலம் கொண்ட பெரும் நாடுகளால்தான் முடியும். அப்படிச் செய்துதான் அன்று அவன் நாடுகளை உருவாக்கி, தமிழ் இனத்தை வேறு இனங்களின்கீழ் நிரந்தர அடிமையாய் இருக்கும்படி ஜனநாயக அரசியல் முறையை ஏற்படுத்திவிட்டுச் சென்று விட்டான்.
ReplyDeleteதுர் அதிஷ்டவசமாக, செழிப்பான பிரதேசங்களில் இருந்தெல்லாம் வரண்டு, காய்ந்துபோன இடங்களுக்குள் ஒதுக்கப்பட்டு, தொடர்ந்து பெரும்பான்மைகளின் இரக்கத்தை எதிர்பார்த்து வாழும் நிலைமைதான் தற்போது எங்கும் காணக்கூடியதாக இருக்கின்றது!