செய்தி:-“தமிழில் தேசியகீதம் இசைக்கப்படுகின்றமை நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்”-ஹெல உறுமய

செய்தி:ஸிகா வைரஸ் :- இந்த அறிகுறிகள் இருந்தால் வைத்தியரை நாடுங்கள் -விசேட வைத்திய நிபுணர்
சண்டியன் சரவணை:-கடவுளே!வைத்திய மாருக்கு 'ஸிகா' வராம இருந்தா சரி!
செய்தி:-பலமான ஆட்சியை உருவாக்க சிறுபான்மை மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்-மஹிந்த அமரவீர
சண்டியன் சரவணை:-ஓமோம்,அதுக்குமட்டுமே சிறுபான்மை மக்களை தேவைப்படுமாக்கும்.
செய்தி:-யாழ். திருநெல்வேலிப் பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சண்டியன் சரவணை:-இதுதானே இங்கு வழமையான கதையாகிவிட்டது. புதினம் அத்தோட சரி.இவற்றினைத் தடுக்க ,யோசிக்க அங்கு யாருமில்லை.
செய்தி:-மகனைக் காட்டிக் கொடுத்தவர்களைக் கண்டு பிடித்தார் மகிந்த.
சண்டியன் சரவணை:- அட! காட்டிக் கொடுத்தவனை காட்டிக்கொடுக்கவும் காட்டிகள் இருக்கிறாங்களோ?
0 comments:
Post a Comment