தீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய ஆவணி மாத வணக்கம்.
நேரம் பொன்னானது பழம் பழமொழி..அதுவும் மாறிவரும் இவ் இயந்திர உலகில் பொன்னுக்குமேல் நேரம் மதிப்பாகியுள்ளது.இப்படியான காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டு தேவையற்ற அலட்டல்களை விடுத்து வாசகர்கள் விருப்பினை பயனுள்ள தகவல்களுடன் நேரத்தினை செலவழிக்க கூடிய விதத்தில் படைப்புகளை வழங்குவதில் என்றும் கவனமாக இருக்கிறோம்.வாசகர்களின் தொகையான வரவுகள் எமது வளர்ச்சிக்கு மேலும் உரம் சேர்ப்பதுடன் புதிய சிந்தனைகளுக்கு வழிவகுத்துள்ளமை குறித்து வாசகர்களை தீபம் நன்றியுடன் எதிர்கொள்கிறது.
வாழ்க உங்கள் நட்பு,தமிழுடன்...
அறிவைத் தருவது கல்வியே என்று அடக்கமாய் நம்பிய எம் செல்வங்கள் அழிவைத் தரும் போதைப் பொருளுக்கு அடிமையானது ஏனோ?

நாம் பிறந்த மண்ணில் தொழிற்சாலைகளோ அன்றி பெருந்தோட்டங்களோ
இருக்கவில்லை. ஒரு பக்கம் இயற்கையின் கொடுமை. மறுபக்கம் தென்னிலங்கை ஆட்சியாளர்களின்
கழுகுப் பார்வை. தரப்படுத்தல் என்னும் கொடிதான அளவீட்டு முறையை அமுல் செய்து கல்வியிலும்
தொழில் வாய்ப்பிலும் ஏமாற்றப்பட்ட இனமாக வாழ்ந்தனர் எம் தமிழ் மக்கள். வரண்ட பிரதேசம். ஆறுகள் பாயாத அந்த மண் வளமின்றி குறுகி நின்றது. வானம் பார்த்து பூமியில் விதைகளைத் தூவிய எம் விவசாயப் பெருங்குடிகள் வியர்வை சிந்தி பயிர்களைக்...
Subscribe to:
Posts (Atom)