ஒளிர்வு:47 -தமிழ் இணைய இதழ் :புரட்டாதி,2014:-எமது கருத்து

 வணக்கம், மீண்டும் புதிய இடுகைகளுடன் தீபம் வாசகர்களை சந்திப்பதில் மகிழ்வடைகிறோம்.தாய் நாட்டின் சுற்றுலா தந்த அனுபவங்கள் மேலும் பல பயனுள்ள கட்டுரைகளை தர வல்லமையினை தீபம் பெற்றுள்ளமை வாசகர்கள் தந்த உற்சாகத்தின் பிரதிபலிபென்றே கூறவேண்டும்.   இலக்கிய உலகில் உங்களுடன் எமது பயணம் தொடர உங்கள் நட்பு வளர வாழ்த்துகிறோம். ...

நான் தாண்டா….நல்லசாதி

இந்த இரண்டு சொற்களை சொல்லவோ அல்லது மனதார நினைக்வோ மனிதன் பல முயற்சிகளை செய்து வருகிறான். அதன் முதல் மற்றும் ஒரே வழி… “நான் உன்னை விட உயர்ந்தவன்” எனச் சொல்லி அடுத்தவன் அனைவரையும் மட்டப்படுத்துவது. இது இல்லாத இடம் இல்லவே இல்லை.  இந்தியாவில் இருக்கும் ஒரு உயர்ந்த சாதி மனிதனையும், கீழ் சாதி என நீங்கள் சொல்லும் ஒருவனையும் அழைத்துக் கொண்டு அமெரிக்கா சென்றால்… உங்கள் இருவரின் ஒரே பெயர் “Indians”.  உங்களுக்கு மரியாதை கொஞ்சம் மட்டமாகத்தான் இருக்கும். அதே அமெரிக்கன்.. இங்கிலாந்து சென்றால்….. அங்கே உள்ள வெள்ளையன் அமெரிக்கனை மதிப்பதில்லை. வெள்ளையன் சீனா சென்றால் சீனர்கள் அவர்களை மதிப்பதில்லை… சீனன் ஜப்பான் சென்றால் சப்பான் நாடுக்காரன் சீன மனிதனை மதிக்க மறுக்கிறான். கறுப்பன் வெள்ளையனை மதிப்பதில்லை, வெள்ளையன் எவரையும் மதிப்பதில்லை. அட… அவன் அவன் சாதிக்குள் பெண்களை மதிப்பதில்லை… வீட்டு வேளையில் கூட… பூஜை செய்வதை அளபபறையாகச் செய்யும் குடும்பத் தலைவர் எவரும் வீடு பெருக்கவோ துணி துவைக்கவோ உதவுவதில்லை. ஏன் என்றால் அதெல்லாம் பொம்பள செய்யுற வேலையாம்…. ஏதாவது ஒரு காரணம் வேண்டும்.. நான் உன்னை விடப் பெரியவன் என காட்ட…. ...

அடிக்கடி கோபப்படுபவர்களுக்கு இந்த நோய்கள் வரும் அபாயம் அதிகரிக்கிறது

ஒருவர் தன் நிதானத்தை இழப்பதால் மாரடைப்பு அல்லது பக்கவாதத்தால் பாதிக்கப்படும் ஆபாயம் அதிகரிக்கும் என்று அமெரிக்காவின் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஒருவருக்கு பெருங்கோபம் வந்த இரண்டு மணி நேரத்திற்குள் அவருக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு ஐந்து மடங்கு அதிகமாக உள்ளதாகவும், பக்கவாதம் ஏற்ப்படும் வாய்ப்பு மூன்று மடங்கு அதிகரிப்பதாகவும் ஹார்வர்ட் பல்கலைகழகத்தின் பொது சுகாதார பிரிவின் ஆராய்ச்சிக் குழு கண்டறிந்துள்ளது.ஆயிரக்கணக்கான நோயாளிகளிடம்...

தமிழகமும் மதுஒழிப்பும்

மதுவை எதிர்ப்பது நமது உரிமை!   “கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ?” -என்று பாடுவார் மகாகவி பாரதி,  ‘சுதந்திரப் பெருமை’ என்ற பாடலில். சுதந்திரத்தின் மகிமையை விளக்க அவர் எழுதிய இவ்வரிகள், மதுபோதையில் தள்ளாடும் தற்போதைய தமிழகத்தின் அவலநிலைக்கும் பொருந்துவதாக உள்ளன. நாட்டிலேயே தமிழகத்தில் தான் மாநில அரசே மதுவிற்பனையை ஊக்குவித்து மக்களைக் கொன்று குவிக்கிறது. குஜராத் தவிர வேறெந்த மாநிலத்திலும் மதுவிலக்கு...