ஒளிர்வு-(43)- வைகாசி ,2014 .,

மதிப்புக்குரிய தீபம் வாசகர்கள் அனைவருக்கும்  வணக்கம், நாளாந்தம் அதிகரித்து வரும் வாசகர்களின் தொகை எமக்கு பெரும் ஊக்கத்தினை கொடுப்பதுடன் எமது வாசகர்கள்  இன்னும் பெரும் பயன் அடையும் வகையில் சஞ்சிகையினை வளம்படுத்த எண்ணியுள்ளது.''ஆளும் வளரனும், அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்த்தி ''என்ற கவிஞனின் வரிகள் பல  அறிஞர்கள் ஏற்றுக்கொண்ட கருத்து.வாசிப்பதினால் மனிதன் பூரணம் அடைகிறான் என்பது பயனடைந்த அனுபவசாலிகள் கூறும் கூற்று. எழுத்தாளரினது படைப்புக்களுடன், யாம் படித்து சுவைத்தவைகளையும் தீபம் வாசகர்கள் பயன் பெரும் வகையில் அவ்வப்போது வெளியிட்டு...

உங்கள் டொக்டர் பாவிக்கும் ஸ்டெதாஸ் கோப் உருவானது எப்படி?

கழுத்தில் ஸ்டெதாஸ்கோப்பை மாட்டிக் கொண்டு வலம் வருகின்ற டாக்டர்களை இன்னும் கொஞ்ச காலம்தான் பார்க்க முடியும். அது மட்டுமல்ல... ஸ்டெதாஸ்கோப்பையே வருங்காலத்தில் மியூசியத்தில்தான் பார்க்க வேண்டியிருக்கும். இது மருத்துவ அறிவியல் நிகழ்த்தப் போகும் மாயாஜாலம்! கால் நூற்றாண்டுக்கு முன்பு கிராமபோனில்தான் பாட்டுக் கேட்டோம். பிறகு ஆடியோ கேசட் வந்தது; அது போய் சி.டி. வந்தது; இப்போது எம்.பி. 3, எம்.பி.4 என தொழில்நுட்பம் எகிறிக் கொண்டிருக்கிறது. அது மாதிரியே மருத்துவ உபகரணங்களிலும் அப்டேட் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. குழாய் வடிவத்தில் இருக்கின்ற ஸ்டெதாஸ்கோப்புக்குப் பதிலாக, ஸ்மார்ட் போன் மாடலில் ஒரு நவீன ஸ்டெதாஸ்கோப்பை இங்கிலாந்தில் உருவாக்கி இருக்கிறார்கள். இதைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்பு இன்றைய ஸ்டெதாஸ்கோப்பின் ஹிஸ்டரியைப் பார்த்து விடலாம். 1816ல் 'ரெனே லென்னக்' என்கிற பிரான்ஸ் டாக்டர் ஸ்டெதாஸ்கோப்பைக் கண்டுபிடித்ததே ஒரு சுவாரஸ்யம். இவர் காலத்தில் நோயாளியின் இதயத் துடிப்புகளைத் தெரிந்து கொள்ள டாக்டர்கள் தங்கள் காதுகளை நோயாளியின் மார்பில் நேரடியாக வைத்துக் கேட்க வேண்டும். ஆண் நோயாளிகளுக்கு இது ஓகே; பெண்கள் சங்கடத்துக்கு உள்ளானார்கள். ஒருமுறை பருமனான ஒரு பெண் நோயாளியின் இதயத் துடிப்பைக் கேட்டே ஆக வேண்டிய கட்டாயம் லென்னக்குக்கு ஏற்பட்டது. அவரின் நெஞ்சின் மீது லென்னக் தன்னுடைய காதை என்னதான் அழுத்தி வைத்துக் கேட்டாலும் இதயத் துடிப்பு பிடிபடவில்லை. அப்போதுதான் இதற்கு ஒரு மாற்று வழியைக் கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்று தீர்மானித்தார் லென்னக். 1816...