அனைவருக்கும் வணக்கம்,
தீபம் சஞ்சிகையின் வாசகர்களை நோக்கிய பணலாப நோக்கமற்ற கலைப் பணி தொடரும் வேளையில், யாம் பெற்ற இன்பம் இவ் வையகமும் பெறுக எனும் எண்ணத்துடன் யாம் செயற்பட ஊக்கம் அளித்துக்கொண்டிருக்கும் அனைவரினையும் நன்றியுடன் நோக்குகிறோம்.
பொறாமை என்பதனை நாம் என்றும் எதிரியாகவே எண்ணுகிறோம்.அதன் பாதகமான விளைவுகளை அவ்வப்போது எமது சஞ்சிகையில் வெளியிட்டும் வந்திருக்கிறோம்.ஆளும் வளரணும், அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்த்தி எனும் கவியரசின் சிந்தனை கொண்டு அனைவரும் இணைந்து வளர அனைத்து ஊடகங்களுடனும் கைகோர்த்து நிற்கிறோம்.முதலில்,
சிந்தனைஒளி
நன்மையையும்...
உயிரே உயிரே (ஆங்கிலச்சிறுகதை)- அமரர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள்

1902ம் ஆண்டில் W.W.Jacobs என்பவரால் எழுதப்பட்ட சிறுகதை Monkey;s Paw( குரங்கு நகம்) என்பதாகும். இது பின்னர் ஓரங்க நாடகமாகவும், பல தடவை திரைப்படங்களாகவும் உருவாக்கப்பட்டது.
ஒரு சிறிய அன்பான குடும்பம். தந்தை, தாய், ஒரு அன்பான மகன். மூவர் மாத்திரமே. தொலைதூரமெல்லம் போய்வரும் ஒரு நண்பர், இந்தியாவில் கிடைத்ததென்று ஒரு குரங்கு நகத்தை அவர்களுக்கு கொடுக்கிறார். மூன்று விருப்பங்களைக் கேட்டால் அது தரும் என்று சொல்கிறார். மனைவி பணத்தேவை வர பணம்...
பாடுபட்டுத் தேடிப் பணத்தை. . . . . . . .
பாடுபட்டுத் தேடிப் பணத்தைச் சேகரித்து, சேர்த்து வைத்துக் காத்திருக்கும் மானிடரே கேளுங்கள்!
வயதோ போகின்றது! உயிரோ இன்றும் போகலாம், நாளையும் போகலாம், என்றும் போகலாம்! ஆனால், நீங்கள் நாயோட்டம் ஓடி, இரவும், பகலும் சளைக்காது உழைத்துக்கொண்டு இருப்பதுதான் ஏன்? நீங்கள் சேமித்த பணத்தை, நீங்கள் அனுபவிக்க நேரமே இல்லாமல் வேறு யாருக்காக இந்த ஆக்கிரோஷமான நாயோட்டம்? ஓடி, உழைத்து, ஆனால் செலவு செய்யாது கடைசியில் நீங்கள் ஓயும்போது,...
Subscribe to:
Posts (Atom)