ஒளிர்வு-(40)- மாசி,2014 எம்மைப்பற்றி....,

வணக்கம்,முதலில்- சிந்தனைஒளி “வெற்றிபெற- காது கொடுத்து கேளுங்கள்;குறைவாக பேசுங்கள்; நிறைய நேரம் செயல்படுங்கள்”. -ஏ.வான்பர்ன் ”இறைவன் மனிதர்களுக்குச் சிறிதும் அநீதி இழைப்பதில்லை. ஆனால் மனிதர்கள்தான் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொள்கிறார்கள்.” -நபிகள் நாயகம் நாளாந்தம் அதிகரித்து வரும் வாசகர் தொகையானது தீபத்தின் வளர்ச்சிக்கு பெரும் உச்சாகத்தினை வழங்குகிறது.  அனைவருக்கும் இப்புதிய ஆண்டில்அனைவரும் நலம் வாழ  மீண்டும் வாழ்த்துக்களைக் கூறிக்கொண்டு தொடர்வோம்....

நீ நல்லவனா?ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...!

விஞ்ஞானியாக மாறுவதற்கு வழியிருக்கிறது விமானியாக ஆவதற்கும் மார்க்கம் இருக்கிறது கணிப்பொறி வல்லுனராக கட்டிட பொறியாளராக மாறுவதற்கும் வழியிருக்கிறது அந்த வழி எது என எல்லோருக்கும் தெரியும் ஆனால் நல்லவனாக நாடு போற்றும் உத்தமனாக மனிதர்களில் மாணிக்கமாக வாழ்வதற்கு வழியிருக்கிறதா? அப்படி இருந்தால் அது நிறைய பேருக்கு தெரியவில்லையே ஏன்? நிறைய பேர் அதை விரும்பி தேடவில்லையே ஏன்? காரணம் இருக்கிறது ஒரு நீதிபதியாக தொழில் செய்வது வெகு சுலபம் ஆனால் நீதிபதிய...