தேவையே இல்லாமல் அரசியலில் மூக்கை நுழைத்து பஞ்சராக்கிக்கொண்டவர் வடிவேலு. தமிழில் எந்த காமெடியனும் வாங்காத அளவுக்கு அதிகமான சம்பளம் வாங்கியவர் இவராகத்தான் இருக்கக்கூடும். முன்னணி ஹீரோக்களுக்கு உள்ள சகல மரியாதைகளையும் வடிவேலுக்கு கொடுத்து வந்தது சினிமா உலகம். இந்த நிலையில்தான், விஜயகாந்துடனான பிரச்னை, அரசியல் பிரவேசம் என்று ட்ராக் மாறிப்போய் ஒன்வேயில் சிக்கிக்கொண்டார் வடிவேலு. ஆக, இரண்டு வருடம் சினிமாவை விட்டு விலகியிருந்த அவர், தற்போது கஜபுஜகஜ...
மகிழ்ச்சியான நாடு அவுஸ்ரேலியா - ஆய்வில் தகவல்!
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு என்ற சர்வதேச நிறுவனம் சிறந்த வாழ்க்கை நிலை பற்றிய ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது. இன்று பாரிஸ் நகரில் இது வெளியிடப்பட்டது. வீட்டுவசதி, வருமானம், வேலை, வாழ்க்கையில் திருப்தி உள்ளிட்ட 11 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 34 வளர்ந்த நாடுகள் மற்றும் சில வளரும் நாடுகளில் ஆய்வு நடந்தது. இதில் பல பிரிவுகளில் அதிக புள்ளிகள் பெற்று அவுஸ்ரேலியா முதல் இடத்தில் உள்ளது. அவுஸ்ரேலியாவில் உள்ளவர்களில்...
உங்கள் திருமணத்திற்கு இரத்தப்பொருத்தம் பார்த்தீர்களா?
கல்யாணத்தில் இணைகிற இருவருக்கு வேறு எந்தப் பொருத்தங்கள் அவசியமோ, இல்லையோ ரத்தப் பொருத்தம் கட்டாயம் பார்க்கப் பட வேண்டும்.
பெண்ணின் ரத்தப் பிரிவு ஆர்.ஹெச் நெகட்டிவாகவும், ஆணுக்கு ஆர்.ஹெச் பாசிட்டிவாகவும் இருக்கும் பட்சத்தில், அவர்கள் திருமண பந்தத்தில் இணைவதன் மூலம் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்” என்கிறார்கள் மருத்துவர்கள்.
இந்த ரத்தப் பொருத்தத்தைப் பற்றித் திருமூலர் கூடத் தன் திருமந்திரத்தில் கூறியிருக்கிறார். அநேகமாய் எல்லாருடைய ரத்த வகையும், A, B, O என்ற வகையைச் சேர்ந்திருந்தாலும் அதில் + அல்லது – உண்டு. இந்த...
புற்றுநோய்(Cancer).... அறிந்துகொள்ளுங்கள்
1) ஒவ்வொரு மனிதனின் உடம்பிலும் கேன்சர் செல்கள் உள்ளது, அது சாதாரண டெஸ்டில் தெரிய வராது, அவை சில பில்லியன் செல்களாக பெருக்கம் ஆன பின்புதான் தெரிய வரும்.
கேன்சர் சிகிச்சைக்குப் பின், டாக்டர் நோயாளியின் உடம்பில் கேன்சர் இல்லை என்று சொன்னால், இதற்க்கு உண்மையான அர்த்தம் சோதனையால் அந்த உடம்பில் உள்ள கேன்சர் செல்லை கண்டுபிடிக்கும் படியான எண்ணிக்கையில் இல்லை என்று மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
2) ஒரு மனிதனின் வாழ்நாளில் 6 முதல் 10 க்கு மேற்பட்ட...
இது இனப் படு கொலை!!!
கவி ஒளி
[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
மனதில் உறுதி கொண்ட மக்களை
சினந்து குருதி கொள்ள நினைப்பதும்
ஈனமாய் எள்ளி நகை ஆடுவதும்
மானமாய் வாழ விடாது தடுப்பதும்
தானமாய் பிச்சை போட்டு அடைப்பதும்
வனமாய் பசும் நிலத்தை மாற்றுவதும்
ஊனமாய் அவனை அடித்து முறிப்பதும்
இனப் படுகொலை! இனப் படுகொலை!!
விடுதலை வேண்டி வீறுகொண்ட இனத்தை
படுகொலை செய்து குழியில் புதைப்பதும்
நடுநிலை அற்று அடிமை ஆக்குவதும்
ஏடுகளை ...
நீண்ட நேரம் உட்காருவதால் உயிருக்கு ஆபத்து
ஒரு நாளில் 11 மணி நேரம் வரை உட்கார்ந்து இருப்பவர்களில் 40 சதவீதத்தினர் அடுத்த 3 ஆண்டுகளில் உயிரை விடும் ஆபத்து அதிகம் என்று ஒரு ஆய்வு மிரட்டுகிறது.
அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழக பொதுநல மருத்துவ பிரிவு பேராசிரியர் ஹைட் வான் டெர் பிளாஜ் தலைமையில் ஒரு குழு நடத்திய ஆய்வில் 2 லட்சம் பேர் பங்கேற்றனர். அதன் அறிக்கை ஏஐஎம் என்ற மருத்துவ இதழில் வெளியானது.
அதில் இடம்பெற்ற விபரங்கள்:
நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதே பல்வேறு உடல் பாதிப்புகளை ஏற்படுத்தக்...
ஒளிர்வு-(30) -சித்திரை ,-2013
.உண்மைகள்உரைக்கப்படும்தளம்தீபம்,மூடநம்பிக்கைகளின்முடிவிடம் ...................
வேப்பெண்ணெய் அதன் மறுபக்கம்
வேம்பு எமது வாழ்வோடு ஒன்றியது.
வேப்பம் இலை கிருமி நீக்கியாக,
வேப்பம் பூ வடகமாக,வேப்பம் கொட்டை நுளம்புத் திரி இல்லாத காலங்களில் புகை போடுவதற்காக,வேப்பம் பிசின் ஒட்டும் பசையாக,வேப்பம் பலகை கதவு, நிலை, தளபாடங்கள் செய்யவென நினைந்து ஏங்கவே முடிகிறது.
வேப்பெண்ணையை மறந்து விட்டேன் என எண்ணாதீர்கள்.
தொண்டை நோ வந்தால் வீட்டுச் சிகிச்சையாக வெளிப்பக்கமாகப் பூசுவதாக பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
சுகம் கிடைக்காவிட்டால் கூட அடுத்த முறையும் அதைப் பூசுவதில்...
இப்படியும் ஒரு...கடவுள்

ரோட்டோர எல்லை கல்லை சிலர் கடவுளாக சித்தரித்து விட்டு செல்ல, பலரும் அதை வழிபட்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் எட்டிவயல் அருகே மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் எல்லை கல் ஒன்று உள்ளது.
சில நாட்களுக்கு முன், அந்த கல் மீது சிலர் மாலை போட்டு, பூஜை நடந்ததற்கான அடையாளங்களுடன் விட்டு சென்றனர். அதை அவ்வழியாக வந்தவர்கள் பார்த்து, வழிபட துவங்கினர். சில நாட்களில் எல்லை கல் வழிபாடு பிரபலமானது.
வெளியூர் வாசிகள் இதை பொருட்படுத்தவில்லை...
கோயிலும் கடவுளும்
அந்நாட்களில்
ஏழைகளின்
கூடாரமாயிருந்தது
கோயில்
கடவுள்
காவலாயிருந்தார்.
கதிரவனாய் ஒளிர்ந்தது
கடவுளின் முகம்
அப்பாவும்
அப்பாவின் அப்பாவும்
அவரின் அப்பாவும்
அவரின் சமூகம் கூட
அவ்வாறே இருந்தார்கள்
நடிப்புச் சுதேசிகளாய்
நாங்கள் வளர்ந்தபோது
காலத்தால் இடிந்திருந்தது
கோவில்
கடவுள் அங்கேயே
காவலாயிருந்தார்.
தன்னை
நியாயப்படுத்த
எல்லாவற்றையும்
கற்றுத் தந்திருந்தது மதம்
மேலானவர்களைத் துதித்தோம்
கீழானவர்களைத் துவம்சித்தோம்
தோற்றம் மாறியிருந்தார்
கடவுள்
தூண்களைக்...
Subscribe to:
Posts (Atom)