ஒளிர்வு-(12) ஐப்பசித்திங்கள்...................... ............................ சிந்தனை ஒளி:

Ø  ஒருவர் சுமையை இன்னொருவர் வாங்கிக்கொள்கிற மனப்பக்குவம்தான் மணவாழ்க்கையின் உயிர்நாடி.Ø  மனிதவாழ்க்கை மலருவது ஒரே முறைதான், அந்த ஒரே வாழ்க்கையை, ஒரே உயிருக்கே, கொடுத்து வாழ வேண்டும்..Ø  பேய்க்கு வாழ்க்கைப்பட்டபின் "புளியமரத்தில் ஏறு", என்றால் ஏறித்தான் ஆகவேண்டும்.Ø  காதல் என்பது பூவைப் போன்றது, ஒரு மரத்தில் பூக்கின்ற எல்லாப் பூக்களும் காய்ப்பதில்லை, ஏராளமானவை பூவாகவே உதிர்ந்துவிடும்.Ø  நினைத்தவுடன் திரும்பக்கூடிய இடமென்றால், யோசிக்காமல் கால் வைக்கலாம் -ஆனால் போனால் திரும்பவே முடியாத இடமென்றால், நன்றாக யோசித்துத்தான் முடிவெடுக்க...

நாம் தமிழர் மத்தியில் நடப்பது என்ன?......(02)

ஐரோப்பாவிலிருந்து கடந்த கோடை காலத்தினை டொரோண்டோ-கனடாவில் நம் உறவுகளோடும்,நண்பர்களோடும் ஒரு மாதம் உல்லாசமாக கழித்து வந்தேன்.அங்கு தங்கி இருக்கும் வேளையில் ஒருநாள் பஸ்சுக்காக தரிப்பு ஒன்றில் என் நண்பியுடன் காத்துநின்றேன்.அவ்வேளையில் நடைபாதையில் நான்கு இளம் பெண்கள் நடந்து வந்துகொண்டிருந்தனர்.அவர்களுள் ஒருத்தி தமிழ் போல் தோன்றவே எனது சந்தேகத்தினை என் நண்பியிடம்  தெரிவித்தேன்.அவளும் என்னிடம் "கொஞ்சம் பொறு.அவர்கள் நால்வரும் எம்மை விலத்திச் சென்றபின்,அவள் எம்மை திரும்பிப் பார்த்தாளாயின் நிச்சயமாக அவள் தமிழ்தான்"என்று  கூறினாள்.என்ன ஆச்சரியம்!அவள்...

தன்னம்பிக்கை

ஒருவர் என்னால் கோபத்தை அடக்க முடியவில்லை. அதை நான் எப்படி அடக்கி சரி செய்வதென்று ஞானியிடம் கேட்டார். அவர், “உன்னிடம் இருக்கின்ற அந்த கோபத்தை என்னிடம் காட்டு பார்க்கலாம்” என்றார். “இப்பொழுது என்னால் அதை காட்ட முடியாது”“சரி, எப்பொழுது என்னிடம் காட்ட முடியும்”“அது தானே எதிர்பாராமல் வருகிறது”“அது இயல்பானது, உண்மையானது என்றால், அதை எந்தச் சமயத்திலும் என்னிடம் உன்னால் காட்ட முடியும். நீ பிறந்த போது இல்லாததது பெற்றோர்களும் உன்னிடம் கொடுக்காதது எப்படி உன்னிடம் வந்தது நன்றாக யோசனை பண்ணிப்பார்” என்றார் ஞானி.எதிர்பார்ப்பானது ஏமாற்றத்தில் முடியும் போதுதான்...

சீனாவின் அவித்த முட்டை

சிறுவர்களின் சிறுநீரில் அவிக்கப்பட்ட முட்டைகளை உலகம் பூராவும் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டு உள்ளது சீனா. சீனாவில் வசந்த கால பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகின்றமை வழக்கம். ஆனால் செஜிஆங் மாகாணத்தின் டொங்யாங் நகரத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக இப்பண்டிகை மிகவும் வித்தியாசமான முறையில் இவ் முட்டைகளை சாப்பிட்டுக்  கொண்டாடப்படுகின்றது.முட்டைகளை பத்து வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் சிறுநீரில் அவித்து உண்கின்றார்கள். பாடசாலைகள் தோறும் பாத்திரங்கள், வாளிகள் போன்றவற்றில் சிறுவர்களின் சிறுநீர் சேகரிக்கப்படுகின்றது. சிறுவர்களின் சிறுநீரில் அவிக்கப்படுகின்ற...

விஞ்ஞானம்

`தூக்கத்தில் நடக்கும் வியாதி’க்குக் காரணம் என்ன? விஞ்ஞானிகள் விளக்கம்.!ஒரு விந்தையான வியாதி- `சோம்னாம்புலிஸம்’ எனப்படும் தூக்கத்தில் நடக்கும் நோய். `குரோமோசோம்’ குறைபாடே இந்நோய்க்குக் காரணம் என்று விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்திருக்கிறார்கள். சிலரை தூக்கத்தில் நடக்க வைக்கும் `மரபணு சங்கேதக் குறியீட்டை’ அவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.அந்த சர்வதேச ஆய்வுக் குழு, தூக்கத்தின்போது ஒருவரின் இதுபோன்ற நடத்தைக்கு குரோமோசோமில் ஏற்பட்டிருக்கும் பிழையே காரணம் என்று உறுதியாகக் கூறு கிறது. ஒரே குடும்பத்தின் நான்கு தலைமுறையினரை அவர்கள் ஆய்வு செய்திருக்கின்றனர்....

கணணி நுட்பம்

கண்ணாடியில்லாமல் வாசிக்கப் பழக்கும் அரிய மென்பொருள்!iPhone மற்றும் கணினியைப் பார்ப்பதில் அதிக நேரம் செலவழிப்பது ஒருவரது கண்களைப்  பழுதாக்குகின்றன என்று தான் பொதுவாகக் கூறப்படும். ஆனால் அவை ஒருவரது கண்களின் பார்வையை முன்னேற்றுகின்றன என்று கூறப்படுவது புதிய விடயந்தான். நடுத்தர வயதானவர்களின் பார்வையை இன்னும் 10 வயது குறைத்து நன்றாகத் தோற்றமளிக்கச் செய்யும் ஒரு மூளைப்பயிற்சி மென்பொருளாக இது இருக்கும் என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே கண்ணாடி பயன்படுத்தி வாசிப்பவர்களால் அதன் பாவனையைக் குறைக்க முடியும் என்று கூறுகின்றனர். GlassesOff என்ற மென்பொருளின்...