"கரை கடந்த புயல்" - சிறுகதை -



நவம்பர் 27, 2024 அன்று காலை கடற்கரை நகரமான திருகோணமலை அபாய எச்சரிக்கையுடன் விழ்த்தெழுந்தது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், பின்னர் புயலாக வலுப்பெற்ற, பெஞ்சல் புயலாக [Fengal Cyclone] வலுவடைந்து வருகிறது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. செல்வராஜா குடும்பத்தினருக்கு இந்தப் புயல் இயற்கைப் பேரிடரை விட அதிகம்; இது அவர்களின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நாளை சீர்குலைக்கும் அச்சுறுத்தலாக இருந்தது.

மீன்பிடி தொழிலாளியான செல்வராஜாவுக்கும், மீனா என்ற அவரின் மனைவிக்கும் மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்களது மூத்தவரான 18 வயது கவிதா, தனது குழந்தைப் பருவ காதலியான அரவிந்துடன் நவம்பர் 29ஆம் தேதி திருமணத்தை பதிவு செய்யவிருந்தார். அரவிந்த் அடுத்த வாரம் உயர் படிப்பைத் தொடர லண்டனுக்குப் புறப்பட இருப்பதால், அவன் புறப்படுவதற்கு முன்பு அவர்கள் தங்கள் காதலை, திருமணப் பதிவாக, அதை இரு குடும்பத்தார்களின் மத்தியில் உறுதிப்படுத்த முடிவு செய்தனர். ஆனால், அவன் திரும்பி வந்த பின்புதான், குடும்ப மரபின்படி [சம்பிரதாய முறைப்படி]  திருமணம் செய்வதென்றும் முடிவெடுத்தனர்.  

இலங்கையில், நவம்பர் 27 2024 புதன்­கி­ழமை மாலை வரை, நிலவும் சீரற்ற கால­நி­லையால் பாதிக்­கப்­பட்டோர் எண்­ணிக்கை இரண்டு இலட்­சத்தைத் தாண்­டி­யுள்­ளதுடன் நால்வர் உயி­ரி­ழந்­துள்ளதோடு, 8 பேர் காணாமல் போயுள்­ளனர். இது தவிர 9 பேர் காய­ம­டைந்­துள்­ளனர். அத்துடன் 8 வீடுகள் முழு­மை­யா­கவும், 620 வீடுகள் பகு­தி­ய­ள­விலும் சேத­ம­டைந்­துள்­ளன என அரசு அறிவித்தது. இவைகளில், திரு­கோ­ண­ம­லையில் 1537 குடும்­பங்­களைச் சேர்ந்த 4385 பேரும் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். அதே­வேளை இது கிழக்கு கடலின் ஊடாக நகர்­வதால் அப்­ப­கு­தி­களில் காற்றின் வேகம் மணித்­தி­யா­லத்­துக்கு 40 – 50 கிலோ மீற்­ற­ராகக் காணப்­படும் எனவும்  ஆழ்­கடல் பகு­தி­களில் 80 – 90 கிலோ மீற்றர் வரை காற்றின் வேகம் அதி­க­ரிக்கும் என்­பதால் கடற்­றொ­ழி­லா­ளர்கள் கட­லுக்கு செல்­வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அரசு தெரி­வித்தது.

செல்வராஜாவும் மீனாவும் தங்கள் வீட்டில் இருந்து கடலை நோக்கினார்கள். அங்கே, அவசர அவசரமாக கரைக்கு திரும்பிக்கொண்டு இருக்கும் மீன்பிடி படகு ஒன்று, புயல் காற்றினால்  கவிழ்வதைக் கண்டனர்.  

"கால் ஏமுற்ற பைதரு காலைக்
கடல்மரம் கவிழ்ந்தெனக் கலங்கி உடன் வீழ்பு"

'கடிய புயற்காற்று வீசிச் சுழற்றுதலாலே துன்புற்று கடலிலே தாம் ஏறியிருக்கும் மரக்கலங் கவிழ்ந்து விட, கலக்கமுற்றுத் தாமும் ஒருசேர வீழ்ந்து' என நற்றிணை (30: 7-8) கூறுவதை செல்வராஜா ஒப்பிட்டுப் பார்த்தான். அவன் கண்களில் கண்ணீர் சிந்தியது.
 
இந்த பெஞ்சல் புயல் மேகங்கள் மெல்ல மெல்ல பெரிதாக திரண்டதால், செல்வராஜா குடும்பத்தின் கவலைகளும் அதிகரித்தன. அவர்களின் சாதாரண வீட்டிற்கு மேலும் பலமான காற்றுடன் மழை பெய்தது, அந்தக் கடலோரக் காற்று அச்சுறுத்தலாக வளர்ந்தது. எனவே திருமண பதிவை ஒத்திவைக்கலாமா என்று செல்வராஜாவும் மீனாவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பதிவாளர் அலுவலகம் கூட அருகில் இல்லை, சில கிலோமீட்டர் தொலைவில் தான் இருந்தது.

அதேவேளை இலங்கை வானொலி, எச்சரிக்கை அறிவித்தல்களை தொடர்ந்து அவசரம் அவசரமாக அறிவித்துக்கொண்டு இருந்தது. மரங்கள் வேரோடு சாய்ந்தன .கூரைகள் பறந்தன. ஆடு மாடுகள் அடித்துச் செல்லப்பட்டன. பெரியோரும் குழந்தைகளும் உணவின்றி தவித்தனர் என ஒரு பட்டியலையே கொடுத்துக் கொண்டு இருந்தது. 

"கடற்கரை ஊருகள், நகரங்கள் அழிந்திடுமாம்    
வெள்ளம், ஊதி வந்த காற்றுடனே போட்டியிடுமாம் 
சீருந்துகள் [மகிழுந்து], படகுகள் அழிந்திடுமாம்     
வீடுகள், பாடசாலைகள் வெள்ளம் நுழைந்துடுமாம்  
சோலைகளும் மரங்களும் வேர்கள் பிடுங்கிடுமாம்" 

"புயல் தீவிரமடைந்தால் என்ன செய்வது?" மீனா கேட்டாள், அவள் குரல் கவலையில் கனத்தது. "இது மிகவும் ஆபத்தானது." ஆனால் கவிதா, அரவிந்தின் கையைப் பிடித்துக் கொண்டு உறுதியாக இருந்தாள். 

“அம்மா, இது எங்களுக்கு முக்கியம். புயல் நம்மைத் தடுத்து நிறுத்த அனுமதிக்க முடியாது. அரவிந்தும் தலையசைத்தான், அமைதியான உறுதியால் அவர்கள் இருவரினதும் கண்கள் நிரம்பி ஒளிர்ந்தன. "இதை ஒன்றாகச் சந்திப்போம்," என்று அவன் உறுதியளித்தான்.

"உரு கெழு யானை உடை கோடு அன்ன,
ததர் பிணி அவிழ்ந்த தாழை வான் பூ,
தயங்கு இருங் கோடை தூக்கலின், நுண் தாது
வயங்கு இழை மகளிர் வண்டல் தாஅம்
காமர் சிறுகுடி புலம்பினும், அவர்காண்:         
நாம் இலம் ஆகுதல் அறிதும் மன்னோ
வில் எறி பஞ்சி போல, மல்கு திரை
வளி பொரு வயங்கு பிசிர் பொங்கும்
நளி கடற் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே"

'அச்சம் தரும் யானையின் உடைந்த தந்தம் போல மலர்ந்திருக்கும் தாழம்பூவின் மடல், வாடைக்காற்று வீச்சில், மகளிர் வண்டல் விளையாடும் களத்தில் வந்து விழும் ஊர் நம் [கடற்கரை] ஊர். இந்த ஊரே என்னைக் கைவிட்டுத் தனிமைப்படுத்தினாலும், அவர் தான் எனக்குத் துணை. அவரும், நான் இல்லாமல், தான் இல்லை என்று வாழ்பவர். வில்லால் அடித்த பஞ்சு போல அலைநுரை பொங்கும் குளிர்ந்த கடல்நிலத் தலைவனாகிய சேர்ப்பன் [நெய்தல் நிலத்து மகன் ] அவன். அவனோடு சிரித்துக்கொண்டு விளையாடாவிட்டால் நான் இருக்கமாட்டேன்.' என்கிறது நற்றிணை 299 கூறுகிறது. அப்படித்தான்  கவிதா  இருந்தாள். 

நவம்பர் 29 காலை இடைவிடாத மழை மற்றும் பலத்த காற்றுடன் விடிந்தது. வெளியே குழப்பம் இருந்தாலும், செல்வராஜா குடும்பத்தினர் அன்றைய தினத்திற்கு தங்களை தயாராக்கினர். அக்கம்பக்கத்தினர் எல்லோரும் எல்லாவித உதவிக்கும் விருப்பத்துடன் உள்ளே வந்தனர். கையில் குடைகள் மற்றும் மழையங்கிகளும் கொண்டுவந்தனர். மற்றும் பதிவாளர் அலுவலகத்திற்கு பயணம் செய்ய ஒரு வேனையும் [கூண்டுந்து] கொண்டு வந்தனர். கவிதாவின் சகோதரர்கள், 15 வயது ரமேஷ் மற்றும் 12 வயது சஞ்சய், மழையில் இருந்து அக்காவை பாதுகாக்க, ​​குடைகளைப் பிடித்துக் கொள்ளும் பணியில் ஈடுபட்டனர்.

செல்வராஜா குடும்பம் வெள்ளம் சூழ்ந்த தெருக்களில் செல்லும்போது, ​​மரங்கள் மற்றும் மின்கம்பிகள் அங்கும் இங்கும் விழுந்து கிடந்தது . வேன், அங்கு வீதியில் ஓடாமல் தேங்கி இருக்கும் வெள்ளத்தில் பல முறை சறுக்கியது, ஆனால் ஓட்டுநர், அனுபவம் வாய்ந்த உள்ளூர்வாசி,  திறமையாக அந்த வீதியில் சமாளித்து ஓட்டினான். "நாங்கள் சரியான நேரத்துக்கு முன் அங்கு போவோம்," என்று அவன் அவர்களுக்கு உறுதியளித்தான், “பொதுவில் தூங்கு விசியுறு தண்ணுமை வளி பொரு தெண் கண் கேட்பின்” எனப் புறநானூறு 89 இல் கூறும் 'மன்றத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் போர்த்தண்ணுமையில் (போர்முரசு) காற்று மோதுவதால் உண்டாகும் சிறிய ஒலியான' ஊளையிடும் காற்றையும் மீறி அந்த அவனது குரல் அவர்களுக்கு மகிழ்ச்சி கொடுத்தது.
 
பதிவாளர் அலுவலகத்தில், ஒரு சில தம்பதிகள் மட்டும், புயலையும் தைரியமாக எதிர்கொண்டு, தங்கள் குடும்பத்துடன் பதிவு திருமணம் செய்ய அங்கு வந்திருந்தனர். வளிமண்டலம் பதட்டமாக இருந்தாலும், தங்கள் நல்ல நாளை பின்போடாமல், நிறைவேற்றுவதில் அவர்கள் மகிழ்வாகவும் உறுதியாகவும் இருந்தார்கள். கவிதா மற்றும் அரவிந்தின் முறை வந்ததும், பதிவாளர் விழாவை விரைவாக, சுருக்கமாக ஆனால் ஆடம்பரமாக நடத்தினார். இளம் தம்பதிகள் ஒருவருக்குஒருவர் சபதம் பரிமாறிக் கொண்டார்கள்.  அவர்களின் காதல், வெளியில் வீசும் புயலை விட பலமாக இருந்தது.

நான்காயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பண்டைய சுமேரியாவில் ஆண் பெண் இருவருக்கும் இடையிலான உறவுகள், ஒரு திருமணக் கோரிக்கை  அல்லது முன்மொழிதல்  உடன் ஆரம்பமாகி, அதை தொடர்ந்து, திருமண ஒப்பந்தம் நிறைவேற்றப் பட்டு , இறுதியாக ஒரு கல்யாணத்தில் முடிவுக்கு வருகிறது. அங்கு பொதுவாக எல்லா பெண்களும் தமது சம்பிரதாய பங்கான, மனைவி, தாய், வீட்டுக் காப்பாளர் ஆகிய நிலைகளுக்கு சிறு வயதில் இருந்தே நன்கு பயிற்றுவிக்கப் பட்டுள்ளனர். பெண் தெய்வம் குலாவிற்கான [goddess Gula] துதிப்பாடல், பெண்களின் வெவ்வேறு  நிலைகளை "நான் ஒரு மகள், நான் ஒரு மணமகள், நான் ஒரு  மனைவி, நான் ஒரு இல்லத் தரசி" ["I am a daughter, I am a bride, I am a spouse, I am a house keeper"].என கூறுகிறது. அப்படித்தான் இன்று கவிதா மகள் நிலையில் இருந்து மணமகள் நிலைக்கு வந்துள்ளார்.  

"புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று
வால் இழை மகளிர் நால்வர் கூடி,
''கற்பினின் வழாஅ, நற் பல உதவிப்
பெற்றோற் பெட்கும் பிணையை ஆக!'' என,
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி    
பல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க,
வதுவை நல் மணம் கழிந்த பின்றை"

திருமண பதிவு நிலையத்தில் கூடியிருந்த சிறுகூட்டத்தில் இருந்த திருமணமான மகளிரும் தம் தம் கணவருடன் சேர்ந்து கூடிநின்று ஈரமான பூக்களையும், நெல்லையும் தலையில் போட்டு, நீர் தெளித்து வாழ்த்திச் சடங்குத் திருமணத்தை நடத்திவைத்தனர். “கற்புநெறி வழுவாமல் வாழ்க, நல்ல பல பிள்ளைகளை உலகுக்கு உதவி வாழ்க, தன்னைப் பெற்ற பெற்றோரையும், கணவனைப் பெற்ற பெற்றோரையும் விரும்பிப் பேணும் பிணைப்புடையவளாக வாழ்க” என்றல்லாம் வாழ்த்தினர். கவிதாவின் தலையில் போட்ட பூவும், நெல்லும், சீவி முடித்த கூந்தலில் (கதுப்பு) கிடந்தன. அவள் மகிழ்ச்சியின் ஒரு எல்லைக்கே போய்விட்டாள்.

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான “பெங்கல்” சூறாவளியானது திருகோணமலைக்கு வடக்கே 360 கிமீ தொலைவிலும் காங்கேசன்துறைக்கு வடகிழக்கே 280 கிமீ தொலைவிலும் நவம்பர் 29, 2024 இரவு 11.30 மணிக்கு நிலை கொள்ளுமென வானிலை ஆய்வு மையம் அன்று தெரிவித்தது. மேலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், வட மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் அறிவித்தது. எனவே வீட்டிற்கு திரும்பிய குடும்பம், அவசரம் அவசரமாக ஒரு சிறிய கொண்டாட்டத்திற்கு கூடியது. அக்கம் பக்கத்தினர் கலந்து கொண்டு, வீட்டில் இருந்து இனிப்புகளை எடுத்து வந்து வாழ்த்துக்கள் [ஆசிர்வாதம்] கூறிர். அரவிந்தும் கவிதாவும் எதிர்கால கனவுகளைப் பகிர்ந்து கொண்டு, மாலைப் பொழுதை தங்கள் வீட்டின் சுற்றாடலில் கழித்தனர்

"புயல்கள் கரையைத் தாக்கினாலும், கடல் கிசுகிசுக்கிறது: எங்கள் காதல் நிலைத்திருக்கும்." என்ற உணர்வுதான் அவர்கள் இருவரிடமும் இருந்தது. புயல் ஓயாமல் தொடர்ந்தாலும், அவர்களின் இதயம் அமைதியாக இருந்தது, அவர்களின் அன்பாலும், குடும்பத்தினரின் ஆதரவாலும் அது நங்கூரமிட்டது. மறுநாள் காலை, வானம் தெளிவாகத் தொடங்கியது. என்றாலும் இருவர் குடும்பமும் மற்றொரு சவாலை எதிர்கொண்டது: அரவிந்தை கிட்டத்தட்ட 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லவேண்டி இருந்தது. பொது போக்குவரத்து தடைப்பட்டதால், செல்வராஜா ஒரு நம்பகமான வேனை ஏற்பாடு செய்தார். ஆனால் மரங்கள் முறிந்து விழுந்த மற்றும் உடைந்த பாலங்கள் நிறைந்த சாலைகளும் இடைவிடாத மழையும் பயணத்தை அவர்களுக்கு  கடினமாக்கியது. எது எப்படியாயினும் அவர்கள் சரியான நேரத்தில் விமான நிலையத்தை அடைந்தனர்.

புறப்படும் வாயிலில் கவிதாவும் அரவிந்தும் கண்ணீர் மல்க விடைபெற்றனர். அரவிந்த் அவளை இறுக்கி அணைத்து முத்தமிட்டான். “தினமும் உன்னுடன் பேசுவேன், எழுதுவேன், இந்த ஆண்டுகள் விரைவில் கடந்துவிடும்" என்று ஆறுதல் கூறினான். அவன் சென்றதும், கவிதா தன் கண்ணீரைத் துடைத்தாள், அவளுடைய இதயம் கனமாக இருந்தாலும் நம்பிக்கையுடன் இருந்தது. அவர்களின் காதல் தூரத்தையும் நேரத்தையும் தாங்கும் என்று அவளுக்குத் தெரியும்.

செல்வராஜா குடும்பத்தினர் அன்று மாலையே திருகோணமலைக்குத் திரும்பினர். புயல் அவர்களின் நெகிழ்ச்சியை சோதித்தது, ஆனால் அவர்கள் அதை ஒன்றாக எதிர்கொண்டனர். கவிதா மற்றும் அரவிந்துக்கு, புயல் இயற்கையின் சக்தி மட்டுமல்ல, அவர்களின் அன்பின் வலிமைக்கு ஒரு சான்றாக இருந்தது, கடுமையான காற்று கூட அவர்களைப் பிரிக்க முடியாது என்பதை நினைவூட்டியது. காதலும் கரையைப் போலவே ஒவ்வொரு புயலையும் தாங்கும் என்பதை உணர்ந்தாள்.

"புளகாங் கிதமே புறவேலி யாக. 
கன்னந் தனில் நீ சின்ன மாகள். 
அடைக்கலப் பொருள்போல் அமையப்  பேணும்" [காதா சப்த சதி 1 - 69]

[காதா சப்த சதி' என்பது கி. மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிராகிருத மொழியில் எழுதப்பட்ட பாடல்கள்]

ஒரு பொருளை ஒருவரிடம் அடைக்கலமாகக் கொடுத்தால், அதை பாதுகாப்பது அவரின் அறத்தின் கடமை. அதைப்போலத்தான் அரவிந், விமான நிலையத்தில் பிரியும் முன் கவிதாவை காதலுடன் முத்தமிட்ட பற்குறியை கவிதா கண்ணாடியில் காணும் போதெல்லாம் புளகிதம் அடைந்து, அதை அரவிந்தின் நினைவாக விரும்பி பாதுகாத்தாள்!
➖➖➖➖➖➖➖➖➖➖➖
நன்றி   
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

'கருப்பி' -குறும்படம்


'கருப்பி'  -குறும்படம் 

கருப்பு தோல் பணத்திடம் கூட தோற்று போகும் காலமா இது?

📽பகிர்வு:தீபம் இணையத்தளம் / theebam /ttamil.com / dheepam


 

 

விஞ்ஞானத்தின் விந்தை

 அறிவியல் =விஞ்ஞானம் 



👩 புற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி: mRNA தனிப்பயனாக்கப்பட்ட தடுப்பூசி
விளக்கம்: கரோனா தடுப்பூசியில் பயன்படுத்தப்பட்ட mRNA தொழில்நுட்பம் இப்போது புற்றுநோய்க்கு எதிராகத் திரும்பியுள்ளது. குறிப்பாக, மிகவும் ஆபத்தான கணைய புற்றுநோயைத் (Pancreatic Cancer) தடுக்க இந்தத் தடுப்பூசி உதவுகிறது. நோயாளியின் உடலில் இருந்து புற்றுநோய் செல்கள் அகற்றப்பட்டு, அவற்றின் மரபணு மாற்றங்களை ஆராய்ந்து, ஒவ்வொரு நோயாளிக்கும் தனித்தனியாக இந்தத் தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது.
விஞ்ஞானிகள்/நிறுவனம்Memorial Sloan Kettering Cancer Center (நியூயார்க்) மற்றும் BioNTech நிறுவனம். முதன்மை ஆராய்ச்சியாளர்: டாக்டர் வினோத் பாலச்சந்திரன் (Dr. Vinod Balachandran).
முக்கியத்துவம்: 2025-ல் வெளியிடப்பட்ட முடிவுகளின்படி, இந்தத் தடுப்பூசி செலுத்தப்பட்ட நோயாளிகளில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாகப் புற்றுநோய் மீண்டும் வரவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻

👸 குவாண்டம் பேட்டரிகள்: நொடிகளில் சார்ஜ் ஆகும் வசதி
விளக்கம்: சாதாரண பேட்டரிகள் ரசாயன மாற்றங்கள் மூலம் செயல்படுகின்றன. ஆனால், குவாண்டம் பேட்டரிகள் அணுக்களுக்கு இடையிலான 'குவாண்டம் பிணைப்பை' (Entanglement) பயன்படுத்திச் செயல்படுகின்றன. இதனால், ஒரு மின்சார வாகனத்தை சார்ஜ் செய்ய ஆகும் நேரம் ஒரு சில நிமிடங்களிலிருந்து ஒரு சில வினாடிகளாகக் குறையும்.
விஞ்ஞானிகள்: ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜேம்ஸ் குவாச் (Dr. James Quach) தலைமையிலான குழுவினர்.
முக்கியத்துவம்: 2025 ஆகஸ்ட் மாதத்தில் ஜெர்மனியின் University of Augsburg விஞ்ஞானிகள் அரிசி அளவிலான ஒரு முன்மாதிரியை (Prototype) உருவாக்கி சாதனை படைத்தனர்.
🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻

👳 கனவுகளைத் திரையில் காணும் தொழில்நுட்பம் (Dream Decoder)
விளக்கம்: மனிதர்கள் தூக்கத்தில் காணும் காட்சிகளை அப்படியே வீடியோவாகப் பதிவு செய்யும் தொழில்நுட்பத்தில் ஜப்பானிய விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளனர். fMRI ஸ்கேன்கள் மூலம் மூளையின் செயல்பாடுகளைப் பதிவு செய்து, அதை AI மூலம் படங்களாக மாற்றுகிறார்கள்.
விஞ்ஞானிகள்: கியோட்டோவில் உள்ள ATR Computational Neuroscience Laboratories மற்றும் கியோட்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் யுகியாசு காமிதானி (Professor Yukiyasu Kamitani).
முக்கியத்துவம்: 2025-ல் வெளியிடப்பட்ட மேம்பட்ட சோதனைகளில், சுமார் 70% துல்லியத்துடன் கனவின் உள்ளடக்கங்களை வீடியோவாக மாற்ற முடிந்தது.
🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻

👨 மூளை-கணினி இணைப்பு (BCI): எண்ணங்களால் இயங்கும் உலகம்
விளக்கம்: பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது பேச முடியாதவர்கள், தங்களின் எண்ணங்கள் மூலமாகவே கணினியில் டைப் செய்யவும், ரோபோ கைகளை இயக்கவும் உதவும் சிப் இது.
விஞ்ஞானிகள்Neuralink (எலான் மஸ்க்) மற்றும் Synchron நிறுவனங்கள். சமீபத்தில் கலிபோர்னியாவின் UC Davis Health குழுவினர் டாக்டர் டேவிட் பிராண்ட்மேன் (Dr. David Brandman) தலைமையில் மூளை சிக்னல்களை 97% துல்லியத்துடன் பேச்சாக மாற்றும் சிப்பை உருவாக்கினர்.
முக்கியத்துவம்: 2025 டிசம்பரில் சீன விஞ்ஞானிகள் (CAS) எண்ணங்கள் மூலம் ஒரு சக்கர நாற்காலியை (Wheelchair) வெற்றிகரமாக இயக்கி சாதனை படைத்தனர்.
🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻

👵 ஆய்வகத்தில் வளர்க்கப்படும் 'மினி இதயங்கள்'
விளக்கம்: ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி மனித இதயத்தின் செயல்பாட்டைக் கொண்ட சிறிய உறுப்புகளை ஆய்வகத்தில் உருவாக்குதல். இதில் முதன்முறையாக இரத்த நாளங்களை (Blood Vessels) வெற்றிகரமாக இணைத்துள்ளனர்.
விஞ்ஞானிகள்: ஆஸ்திரியாவின் Institute of Molecular Biotechnology (IMBA) விஞ்ஞானிகள் மற்றும் சான் பிரான்சிஸ்கோவின் Gladstone Institutes.
முக்கியத்துவம்: இது மருந்துகளின் செயல்பாட்டைச் சோதிக்கவும், எதிர்காலத்தில் மாற்று அறுவை சிகிச்சைக்குப் பயன்படும் முழு இதயத்தை உருவாக்கவும் அடிப்படையாக அமையும்.
🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻

👶 செவ்வாய் கிரகத்தில் உயிரினத் தேடல்: பெர்சிபரன்ஸ் ரோவர்
விளக்கம்: நாசாவின் ரோவர் செவ்வாய் கிரகத்தின் 'ஜெஸிரோ' (Jezero Crater) பள்ளத்தில் ஆய்வு செய்து வருகிறது. அங்குள்ள பாறைகளில் பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நுண்ணுயிரிகள் வாழ்ந்ததற்கான சாத்தியக்கூறு உள்ள கரிம மூலக்கூறுகளை (Organic Molecules) இது கண்டறிந்துள்ளது.
அமைப்புNASA Jet Propulsion Laboratory (JPL) குழுவினர்.
முக்கியத்துவம்: இந்தத் தரவுகள் 2030-களில் பூமிக்குக் கொண்டு வரப்படும்போது, செவ்வாயில் உயிர் வாழ்ந்ததா என்ற ரகசியம் முழுமையாக உடையும்.
🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻

👷 விலங்கு-மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை (Xenotransplantation)
விளக்கம்: மனித உறுப்புகளுக்குத் தட்டுப்பாடு உள்ள நிலையில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்குப் பொருத்தும் சாதனை.
விஞ்ஞானிகள்: நியூயார்க் பல்கலைக்கழகத்தின் NYU Langone Health மருத்துவக் குழு, டாக்டர் ராபர்ட் மாண்ட்கோமெரி (Dr. Robert Montgomery) தலைமையில்.
முக்கியத்துவம்: 2025-ஆம் ஆண்டு நிலவரப்படி, இத்தகைய சிறுநீரகத்துடன் ஒரு நோயாளி சுமார் 271 நாட்கள் (சுமார் 9 மாதங்கள்) ஆரோக்கியமாக உயிர் வாழ்ந்து மருத்துவ வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻

👳பிளாஸ்டிக்கைச் செரிக்கும் பாக்டீரியாக்கள்
விளக்கம்: பிளாஸ்டிக் கழிவுகளைச் சிதைத்து அழிக்கக்கூடிய புதிய வகை பாக்டீரியாக்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இவை பிளாஸ்டிக்கை உணவாக உட்கொண்டு, அதைச் சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத பொருளாக மாற்றுகின்றன.
விஞ்ஞானிகள்: ஜெர்மனியின் Leipzig University மற்றும் ஜப்பானின் Kyoto Institute of Technology.
முக்கியத்துவம்: 'Comamonas testosteroni' போன்ற பாக்டீரியாக்கள் பிளாஸ்டிக் மாசுபாட்டை ஒழிப்பதில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻

👱ஒளியை உறைய வைத்தல் (Stopping and Freezing Light)
விளக்கம்: ஒளியானது வினாடிக்கு 3 லட்சம் கி.மீ வேகத்தில் பயணிக்கும். ஆனால், இத்தாலிய விஞ்ஞானிகள் ஒளியை ஒரு குறிப்பிட்ட படிகத்தில் (Crystal) மோதச் செய்து, அதன் வேகத்தைப் பூஜ்ஜியமாக்கி 'உறைய' வைத்துள்ளனர்.
விஞ்ஞானிகள்: இத்தாலியின் Sapienza University of Rome மற்றும் தேசிய ஆராய்ச்சி கவுன்சில் (CNR) குழுவினர்.
முக்கியத்துவம்: இது எதிர்காலத்தில் ஒளியையே தரவுகளாக (Data Storage) சேமித்து வைக்கும் குவாண்டம் கணினி தொழில்நுட்பத்திற்கு மிக முக்கியமானது.
🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻

💆பி.ஐ.எஸ்.சி (BISC) குவாண்டம் சிப்
விளக்கம்: மிகச் சிறிய அளவில், ஒரு உளுந்து பருப்பை விடக் குறைவான அளவில் வடிவமைக்கப்பட்ட இந்த சிப், மூளையின் பல்லாயிரக்கணக்கான நரம்புத் துடிப்புகளை ஒரே நேரத்தில் கவனிக்கும் திறன் கொண்டது.
விஞ்ஞானிகள்: அமெரிக்காவின் Columbia University மற்றும் Stanford University ஆராய்ச்சியாளர்கள்.
முக்கியத்துவம்: 2025 டிசம்பரில் வெளியிடப்பட்ட இந்தத் தொழில்நுட்பம், மனித மூளைக்கும் AI-க்கும் இடையிலான பாலமாக அமையும். 

🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻
-தீபம் அறிவியல் புதினம் 

"அறிவியல் நோக்கில்....பகுதி-23 -"பெளத்தம் ஒரு அலசல்"

 "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய  இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" [In Tamil & English]



[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்த பதிப்பாகும்.]

பகுதி: 23 / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / ''பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இலங்கையைச் சேர்ந்த ஒருவர், இந்தியாவில் ஒரு பெண்ணைக், 2000 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்தார் என்றால் யாராவது நம்புவார்களா?' 


தீபவம்சத்தின்படி, அலவத்த [புலகத்த] சபியா (பாகிய), பனய, பழைய மற்றும் தட்டிக ஆகிய ஐந்து தமிழ் மன்னர்கள் [புலகத்தன், பாகியன், பண்டியமாறன், பழையமாறன் மற்றும் தட்டிகன்  / Alavatta (Pulahattha), Sabhiya (Bahiya), Panaya, Palaya, and Dathika] மொத்தம் பதினான்கு ஆண்டுகள் ஏழு மாதங்கள் ஆட்சி செய்தனர். ஆனாலும் இவர்கள் இலங்கைக்கு வெளியிலிருந்து வந்தவர்கள் என்று தீபவம்சம் கூறவில்லை. தீபவம்சம் 20-17ன் படி தட்டிக என்பது தமிழர் பெயர் என்பதைக் கவனியுங்கள். மகாநாமதேரர் [மஹாநாம] தீபவம்சத்தில் உள்ள ஐந்து தமிழர்களை, ரோகணத்தில் இருந்து ஒரு பிராமணனையும் மற்றும் ஏழு தமிழர்களையும் சேர்த்து, எட்டு பேராக மகாவம்சத்தில் திரித்து விரிவுபடுத்தினார். அதாவது தீபவம்சத்தில் அரியணைக்கு போட்டியிட்ட ஐந்து போட்டியாளர்கள், மகாவம்சத்தில் எட்டு பேர் ஆனார்கள். மேலும் பிராமணனை தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்தினர். பிராமணனின் பெயர் திஸ்ஸ. எனவே, முன்பு கூறியது போல், பிராமணனும் ஒரு தமிழனாக இருக்கலாம்? பின்னர் ஏழு தமிழர்கள் பிராமணனையும் மன்னனையும் தோற்கடித்தனர். மேலும் மன்னன் தனது இரண்டு மனைவிகளில் ஒருவரான சோமாதேவியை, அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார். ஏழு தமிழர்களில் ஒருவன் சோமாதேவியை தன்னுடன் அழைத்துக் கொண்டு திரும்பிச் சென்றுவிட்டான். ஆனாலும் அனுலாவும் சோமாதேவியும் [Anula and Somadevi] வட்டகாமினியின் மனைவிகள் என்று தீபவம்சம் ஒன்றும் கூறவில்லை.

ஒருவன் வெளியில் இருந்து வந்து, நாட்டை கைப்பற்ற போரில் ஈடுபட்டு, ஏற்கனவே திருமணமான தோற்ற மன்னனின் மனைவி, தனக்கு காணும் என்று அவளுடன் திருப்தி அடைந்து, நாட்டை விட்டுவிட்டு திரும்பி போனார் என்பதை, யாராவது நம்புவார்களா? மற்றொரு தமிழர்,  ஒரு பௌத்தர் என்பதைச் சுட்டிக்காட்டி, அவர் புத்தரின் பிச்சைப் பாத்திரத்துடன் திருப்தியடைந்து நாடு திரும்பினாராம் ! பின்னர் தீபவம்சத்தில் கூறப்பட்டதைப் போலவே மற்ற ஐந்து பேரும், இலங்கையை அடுத்தடுத்து ஆண்டனர். இது ஒன்றே மற்றைய மூவரையும் வலிந்து கதையில்  உட் புகுத்தியதைக் காட்டுகிறது. பின்னர் அரசன் வட்டகாமினி திரும்பி வந்து, தமிழ்  அரசன் தட்டிகனை தோற்கடித்து மீண்டும் ஆட்சியைத் கைப்பற்றி, பன்னிரண்டு ஆண்டுகள் ஐந்து மாதங்கள் ஆட்சி செய்தார். அவர் தனது மற்றொரு மனைவி சோமாதேவியையும் இந்தியாவிலிருந்து அழைத்து வந்தார். இலங்கையைச் சேர்ந்த ஒருவர், பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஒரு பெண்ணைக் கண்டுபிடித்தார் என்றால் யாராவது நம்புவார்களா? 

எப்படியாகினும், அந்த காலத்திலும் இலங்கை மற்றும் தென்னிந்தியா இடையே வணிகம், சமயப் பரிமாற்றம் மற்றும் அரச மரியாதை தொடர்புகள் இருந்ததுடன், பௌத்த பிக்குகள் மற்றும் வணிகர்கள் இரண்டு தீவுகளுக்கும் இடையே சுதந்திரமாகச் சஞ்சரித்தனர். எனவே, பௌத்த பிக்குகள், வணிகர்கள், மற்றும் இராசஅரண்மனையினர் வழியாக சோமதேவியின் இருப்பிடம் பற்றிய தகவல் அரசனிடம் வந்திருக்கலாம் என்று நம்பவும் ஒரு அரிய வாய்ப்பு உண்டு. குறிப்பாக, காஞ்சிபுரம், மதுரை, அனுராதபுரம் போன்ற பகுதிகள் பல உறவுகளால் அன்று இணைக்கப்பட்டிருந்தன என்பதற்கு வரலாற்று சான்றுகள் உண்டு.

மகாவம்சத்தின் 33 ஆம் அத்தியாயம் பத்து அரசர்களைப் பற்றியது, அடுத்த அத்தியாயம் பதினொரு மன்னர்களைப் பற்றியது, அதுக்கு அடுத்த அத்தியாயம் பன்னிரண்டு மன்னர்களைப் பற்றியது, மகிழ்ச்சியான ஒரு ஏறுவரிசையில் அதிகரிப்பு! வட்டகாமினி மதக்கொள்கை கோட்பாட்டை முதல் முறையாக புத்தக வடிவில் எழுதச் செய்தார். பிற்காலப் பகுப்பாய்வில் தமிழ் அரசன் தட்டிக மிகவும் முக்கியமானவராக வருகிறார். 

வட்டகாமனிக்குப் பிறகு மகசுழி மகாதீசன் [Mahachuli Mahatissa] பதினான்கு ஆண்டுகள் கி.மு. 76 தொடக்கம் கி.மு. 62 வரை ஆட்சி செய்தார்.  பின்னர் வட்டகாமனியின் மகன் கோரநாகன் [Coranaga] பன்னிரண்டு ஆண்டுகள் கொள்ளையனைப் போல அரசாண்டான். மகசுழியின் மகன் திஸ்ஸா [Tissa], கோரநாகனுக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்தான். பின்னர் சிவா [Siva] ராணி அனுலாவுடன் ஒன்றாக இணைந்து வாழ்ந்து, ஒரு வருடம் மற்றும் இரண்டு மாதங்கள் ஆட்சி செய்தார். பின்னர் வெளிநாட்டில் இருந்து வந்த வடுக [Vatuka], ஒரு தமிழன் ஒரு வருடம் மற்றும் இரண்டு மாதங்கள் ஆட்சி செய்தார். வடுகா என்பது தெலுங்கு பேசும் மக்களைக் குறிக்கப் பயன் படுத்தப்படும் ஒரு சொல், ஆனால் இங்கு அவர் ஒரு தமிழர் என்று குறிக்கப் பட்டுள்ளது. பின்னர் திஸ்ஸ ஒரு வருடமும் ஒரு மாதமும் ஆட்சி செய்தார். பின்னர் ஒரு தமிழ் மன்னர் நிலயா [Nilaya] மூன்று மாதங்கள் ஆட்சி செய்தார். தீபாவம்சம் 20 - 30 இன் படி, அனுலா மேற் கூறிய சிறந்த நபர்களைக் கொன்று நான்கு மாதங்கள் ஆட்சி செய்தார். இந்த அனுலா வட்டகாமினியின் மூத்த சகோதரனின் மனைவி என்றால், அவள் மிகவும் வயதான காலத்திலும் மிகவும் சுறுசுறுப்பாக இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது?. வட்டகாமினி அவளை அழைத்துச் சென்றபோது அவள் ஒரு குழந்தையுடன் இருந்தாள். எனவே அப்பொழுது அவளுக்கு 25 வயது என்றால், வட்டகாமினி இறக்கும் போது அவளுக்கு 37 வயது இருக்க வேண்டும். பிறகு மற்றவர்கள், 14+12+3+4, மொத்தமாக 33 ஆண்டுகள், ஆட்சி செய்தனர்.

எனவே, அவள் 70 வயதிலும் தீவிரமாக ஈடுபட்டிருக்க வேண்டும். இருப்பினும், அது தெளிவாக இல்லை, ஆனால் சாத்தியம் உள்ளது. சிவா, வடுக, நிலயா என்பன தமிழ்ப் பெயர்கள், இந்த ஆட்சியாளர்கள் அனைவரும் சிறந்த மனிதர்கள் என்று வர்ணிக்கப்படுகிறார்கள். திஸ்ஸா கூட தமிழ் பெயராக இருக்கலாம்?
➡➡➡➡➡➡➡➡➡➡➡➡

👉

 *அடுத்த பகுதியை வாசிக்க அழுத்துக...

*ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக...



Part: 23 / The Kings who ruled after Vijaya and the related affairs / 'Who would believe that, over two thousand years ago, a man from Lanka could find a woman in India after twelve long years?' 


Then as per the Dipavamsa, five Damila kings, Alavatta (Pulahattha), Sabhiya (Bahiya), Panaya, Palaya, and Dathika ruled for fourteen years and seven months in total. The Dipavamsa does not say that they come from outside. Note that Dathika is a Damila name as per the Dipavamsa 20-17. Mahanama twisted and elaborated the five Damilas in the Dipavamsa into one Brahman from Rohana and seven Damilas who landed at Mahatittha in the Mahavamsa. The five contestants for the throne in the Dipavamsa became eight in the Mahavamsa. The Brahman and the seven Damilas claimed the throne, and the king set the Brahman against the Damilas. The Brahman’s name is Tissa and, as stated earlier, the Brahman could be a Tamil too. Then the seven Damilas defeated the Brahman and the king, and the king ran away leaving one of his two wives, Somadevi. One of the Damilas took Somadevi and went back. The Dipavamsa does not say that Anula and Somadevi are wives of the King Vattagamni. Would anyone believe that one came from outside, fought a war and satisfied with an already married woman to go away with her? Another one returned with the alms bowl of the Buddha, implying that Damila was a Buddhist! Then the rest is same as given in the Dipavamsa. Then the king Vattagamani came back, and defeated the Damila king Dathika and resumed his reign. He reigned for the total of twelve years and five months. He also brought back his other wife Somadevi from India. Would anyone believe that one, from Lanka, was able to find a woman in India after twelve years? Chapter 33 of the Mahavamsa is about ten kings, the next chapter is about eleven kings and the next chapter is about twelve kings, a happy sequential increase! Vattagamni made the doctrine to be written in the form of books for the first time. The Damila king Dathika is very important in the analysis later. 

Mahachuli Mahatissa reigned after Vattagamni for fourteen years. Then Vattagamni’s son Coranaga reigned twelve years like a robber. Tissa, the son of Mahachuli, reigned three years after Coranaga. Then Siva cohabited with queen Anula, and ruled for one year and two months. Then Vatuka from foreign country, a Damila, ruled for one year and two months. Vatuka is a term used to denote Telugu speaking people, but he is a Damila here. Then Tissa ruled for one year and one month. Then a Damila king Nilaya ruled for three months. Anula killed the above excellent persons, and ruled for four months, as per the Dipavamsa 20-30. If this Anula was the wife of the elder brother of Vattagamani, then she must have been very active even at very old age. She was with a child when Vattagamani took her with him. If she was 25 years of age, then she should be 37 by the time Vattagamni died. Then others ruled for, 14+12+3+4, 33 years. She should have actively involved even at the age of 70 years. However, it is not clear but the possibility is there. Siva, Vatuka, Nilaya are Tamil names, and all these rulers are described as excellent persons. Even Tissa could be a Tamil name.

➡➡➡➡➡➡➡➡➡➡➡
நன்றி  
Thanks
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna] 

பகுதி / Part: 24 A தொடரும் / Will Follow