"அறிவியல் நோக்கில்....[பகுதி-39] பெளத்தம் ஒரு அலசல்''

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய  இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" [In Tamil & English]

 


[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

 

பகுதி: 39 / பின் இணைப்பு - தீபவம்சம் / 'புத்தர் இந்தியாவை விட்டு வெளியே எங்கேயாவது சென்றாரா?'

புத்தர் நாகர்களை வென்று ஜேதவனத்திற்குத் [ஜேதவனம் (Jetavana) பரத கண்டத்தின் பண்டைய நகரமான சிராவஸ்தி அருகே கௌதம புத்தர் மற்றும் பௌத்த பிக்குகள் தங்குவதற்காகவும், பௌத்த தத்துவங்களை மக்களுக்கு எடுத்துரைப்பதற்காகவும், அனாதபிண்டிகன் என்ற செல்வந்தன் புத்தருக்குத் தானமான வழங்கிய தோட்டமாகும்.] திரும்பினார். பின்னர் மீண்டும் நாக அரசரின் அழைப்பின் பேரில், புத்தர் மூன்றாவது முறையாக இலங்கைக்கு விஜயம் செய்தார். புத்தர் தனது மூன்றாவது பயணமாக 2-52 இல் இந்தியாவிலிருந்து ஐந்நூறு தேரர்களுடன் இலங்கைக்கு காற்றில் பறந்து சென்றார்? அப்படி உண்மையில் நடந்து இருந்தால், இது ஒரு விசித்திரமான மற்றும் கண்கவர் காட்சியாக இருந்திருக்கும். பலர் இதை இந்தியாவில் பதிவும்  செய்திருப்பார்கள், ஆனால் இந்தியாவின் எந்த வரலாற்று குறிப்பிலோ இல்லை புராணங்களிலோ அப்படி ஒன்றும் இல்லை!  உப மனித நாகர்கள் அல்லது மனிதர் அல்லாதவர்கள், ஆயிரம் மைலுக்கும் அப்பால் இருந்த புத்தருக்கு ஐந்நூறு பிக்குகளுடன் மீண்டும் வருகை தரும் படி அழைப்பை அனுப்பும் திறன் கொண்டவை என்பது உண்மையில் விசித்திரமே ! எனினும் இது, இந்த அத்தியாயம், இலங்கையில் நடந்த எந்த மனித வரலாற்று நிகழ்வுகளையும் பற்றியது அல்ல.

வின்சென்ட் . ஸ்மித் எழுதிய 'Asoka – The Buddhist Emperor of India by Vincent A. Smith, Third Edition 1919' என்ற புத்தகத்தின் பக்கம் 47 இல், கௌதம புத்தர் மகதத்திலும் [Magadha] அதற்கு அருகாமையிலும் ஒரு சிறிய பிரதேசத்தில் தான் வாழ்ந்தார், உலாவினார், இறந்தார் என்று கூறுகிறார். முன்பு கூறியது போல், 'The Harvard Oriental Series, Volume 28, Buddhist Legends' என்ற நூலின் பக்கம் 8ன் படி, புத்தர் பெனாரஸ் என்றும் அழைக்கப்படும் வாரணாசியில் (Varanasi / Benares) இருந்து 250 மைல்களுக்கு அப்பால் செல்லவே இல்லை என்று கூறுகிறது. காசி என்பது பெனாரஸின் மற்றொரு பெயர். கீழே உள்ள அசோகப் பேரரசின் பரப்பளவைக் காட்டும் வரைபடத்தைப் பார்க்கவும். இந்தியாவில் தோன்றிய எந்த ஆவணங்களும், புத்தர் வான்வழி பறந்து இலங்கைக்கு சென்றது பற்றிய எந்த விவரங்களையும் கொடுக்கவில்லை.  அத்தியாயம் 3, புத்த மரபின்படி உலகின் முதல் விவசாயி மன்னரான மகாசம்மதாவிலிருந்து [Mahasammata] புத்தரின் பரம்பரையைப் பற்றியது ஆகும். 

உதாரணமாக, இவரைப்பற்றி கூறும் பொழுது, 'முதல் பதவியேற்ற மன்னன், பூமியின் ஆட்சியாளர், புத்திசாலித்தனம் நிறைந்தவர், இளவரசர் மகாசம்மதா என்ற பெயரால், அவரது இராஜ்யத்தை ஆட்சி செய்தார் என்று வர்ணிக்கிறது. / The first inaugurated king, a ruler of the earth, full of brilliancy, prince Mahāsammata by name, reigned over his kingdom. மேலும் சித்தார்த்த (Siddhattha / பின்னர் புத்தர்) மற்றும் அவரது மகன் ராகுலபத்தா [Rahulabhadda] வைப் பற்றி கூறும் பொழுது, சித்தார்த்த சுத்தோதனனின் மகன் என்றும், உலகின் தலைவன் என்றும், ராகுலபத்தாவைப் பெற்றவன் என்றும், பின்னர் புத்ததன்மைக்காக அல்லது புத்தத்துவத்திற்காக, அதில் முழுநேரம் பாடுபடுவதற்காக, தனது வீட்டை விட்டு வெளியேறினான் என வர்ணிக்கிறது. / He the son of Suddhodana, Siddhattha, the chief of the world, begot Rāhulabhadda, and then left his home in order to strive for Buddhaship.

புத்தத்தன்மை (சமஸ்கிருதம்: புத்தத்துவம், பாளி: புத்தத்த, அல்லது (இரண்டிலும்) புத்தபாவம்) என்பது முற்றிலும் போதியினை உணர்ந்த நிலையினை குறிக்கும். இறுதியாக அந்த அத்தியாயம் "அரசர்களின் பெரும் பரம்பரையின் முடிவு" / End of the Great Lineage of Kings என்று முடிவடைகிறது.

மகாநாம தேரரால் தொகுக்கப்பட்ட  மகாவம்சம், இந்தக் கருத்துக்கு மாறாக, விஜயன் முதல் மகாசேனா வரையிலான பரம்பரையை மகாவம்சமாகக் கூறுகிறது. புத்தரின் மகாபரிநிர்வாணத்துடன் அல்லது புத்தரின் மரணத்துடன் தொடர்புபடுத்தி அரசர்களின் ஆட்சிக்காலம் கொடுக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த அத்தியாயம் இலங்கையில் நடந்த மனித வரலாற்று நிகழ்வுகளைப் பற்றியது அல்ல.

*அடுத்த பகுதியை வாசிக்க அழுத்துக...

 

*ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக..


Part: 39 / Appendix – Dipavamsa / 'Did Buddha go anywhere outside India?'

The Buddha returned to Jetavana after conquering the Nagas. The Buddha made a third visit to Lanka on the invitation of the Naga king. Buddha flew to Lanka with five hundred Theras from India on his third visit, 2-52. It would have been a strange and spectacular sight and many would have had recorded this in India, but none! Sub human Nagas or the serpents were capable of sending an invitation to the Buddha to visit again together with five hundred Bikkhus! Strange! This chapter is also not about any human historical events that took place in Lanka.

V. A. Smith states in the page 47 of the Reference  'Asoka – The Buddhist Emperor of India by Vincent A. Smith, Third Edition 1919'  that Gautama Buddha lived, moved, and died within a small territory in and near Magadha. As stated earlier, as per the page 8 of the Reference 'The Harvard Oriental Series, Volume 28, Buddhist Legends', that the Buddha never moved beyond 250 miles of Benares. Kasi is another name for Benares. See the map showing the extent of the empire of Asoka below. No documents originated in India give any details about the Buddha’s aerial flights to Lanka. 

Chapter 3 is completely about the Buddha’s lineage from Mahasammata [3. The first inaugurated king, a ruler of the earth, full of brilliancy, prince Mahāsammata by name, reigned over his kingdom.] to Siddhattha (later Buddha) and his son Rahulabhadda [47. He the son of Suddhodana, Siddhattha, the chief of the world, begot Rāhulabhadda, and then left his home in order to strive for Buddhaship.]. 3-50 reads thus;”End of the great lineage of kings”.

 

Mahavamsa complied by Mahanama Thera, contrary to this concept, narrates the lineage from Vijaya to Mahasena as the Mahavamsa. The lengths of reigns of kings are given relative to the Buddha’s Mahaparinirvana, the death of the Buddha. This chapter is also not about human historical events that took place in Lanka.

நன்றி 

Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna]

பகுதி / Part: 40 தொடரும் / Will follow