நகைச்சுவை=ஜோக்ஸ்
-01-
கணவன்: நீ சமைச்ச
சமையலில் இண்டைக்கு ஒரு பெரிய மாற்றம் இருக்கிறது.
மனைவி: அடடே! என்ன மாற்றமுங்க?
கணவன்: வழமையாய் கறிக்குள்ள கருத்த மயிர்தான் வரும், இன்றைக்கு வெள்ளை மயிர் வந்திருச்சு!
-02-
மாமி: மருமகளே, காலை எழுந்தவுடன் என்ன செய்வாய்?
மருமகள்: என் காதுகளை மூடுவேன், கண்களைத் திறப்பேன் மாமி…
-03-
காதலி: நான் செத்துப்போயிட்டா நீ என்ன பண்ணுவ?
காதலன்: நானும் செத்துப்போய்டுவேன்.
காதலி: ஏன்? அவ்வளவு பாசமா?
காதலன்: இல்ல, நீ அங்கேயும் வந்து ஏன் லேட்டா வந்தன்னு சண்டை போடுவியே, அதுக்கு பயந்துதான்!
-04-
காதலன்: உனக்கு முன்னாடி எனக்கு மூணு காதலி இருந்தாங்க.
காதலி: (கோபமாக) என்னது? அப்புறம் ஏன் என்கிட்ட வந்தீங்க?
காதலன்: அப்புறம்தான் தெரிஞ்சது, "முன்னாடி இருந்த மூணு பேரும் பரவாயில்லை"னு!
-05-
காதலி: நான் அழகில்லாம
இருக்கேனா?
காதலன்: இல்லையே, நீ நிலா மாதிரி.
காதலி: (சந்தோசமாக)நிஜமாவா?
காதலன்: ஆமா, (தனக்குள்)நிலவை நேர பார்த்தால் தானே புரியுது, எவ்வளவு மேடு பள்ளமும் ,கரடு முரடு என்று!
-06-
காதலன்: ஏன் அழுதுட்டு இருக்க?
காதலி: என் ஃபேஷியல் சரியா வரல.
காதலன்: ஓ... அது மேக்கப்பா? நான் ஏதோ புதுசா 'மாஸ்க்' போட்டுருக்கன்னு நினைச்சேன்!
-07-
காதலி: நாம ஏன் ஒருத்தரை ஒருத்தர் லவ் பண்றோம்?
காதலன்: ஏன்னா, நமக்கும் வேற யாரும் கிடைக்கல, அவங்களுக்கும் நம்மள பிடிக்கல!
-08-
காதலன்: நீ தூங்கும்போது நீ தேவதை மாதிரி இருப்ப.
காதலி: அப்போ முழிச்சிருக்கும்போது?
காதலன்: அப்போதான் நீ 'தேவதை'ங்கிறது நான் கண்டது கனவுன்னு புரியுது!
-09-
காதலி: நீங்க எனக்காக நிலாவை பிடிச்சு வருவீங்களா?
காதலன்: முதல்ல உன் மேக்கப்பை கலைச்சிட்டு வா, அப்புறம் நிலாவை பத்தி பேசவேண்டிய தேவையே வராது!
-10-
காதலி: நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் நான் உங்க கவலைகளை பகிர்ந்துப்பேன்.
காதலன்: எனக்கு கவலையே இல்லையே?
காதலி: அதான் கல்யாணத்துக்கு அப்புறம் வந்திடும்னு சொல்றேனே!
-11-
காதலி: நான் உங்களை விட்டுட்டு வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்க போறேன்.
காதலன்: ஐயோ பாவம்! அந்த அப்பாவியும் யாருன்னு தெரியலையே!
-12-
காதலி: நீங்க ஏன் எப்பவும் பழைய ஜோக் சொல்றீங்க?
காதலன்: ஏன்னா, புது ஜோக் சொன்னா உனக்கு புரியறதுக்குள்ள நம்ம கல்யாணமே முடிஞ்சிடும்!
-13-
போலீஸ்: ஏப்பா திருடா, மூணாவது தடவையா பொலிஸ் நிலையம்
வர்ற? உனக்கு வெட்கமா இல்ல?
திருடன்: நீங்க தினமும் இங்கேயே தான சார் இருக்கீங்க, உங்களுக்கு இல்லாத வெட்கம் எனக்கென்ன?
-14-
இன்ஸ்பெக்டர்: ஏட்டு, அந்த கைதி தப்பி ஓடியிற்றானே , ஏன் பிடிக்கல?
ஏட்டு: அவன் ஐயப்ப மாலை போட்டிருந்தான்
சார், அதான் பிடியாம
விட்டுட்டேன்!
-15-
குடிமகன்: சார், என் மனைவியை காணோம்.
போலீஸ்: எப்படியாவது கண்டுபிடிச்சு தந்துடுறோம்.
குடிமகன்: அவசரம் இல்ல சார், நிதானமாவே தேடுங்க!
-16-
திருடன்: சார், என்னை ஜெயில்ல போடுங்க.
போலீஸ்: ஏன்?
திருடன்: பொண்டாட்டி சமையலை விட ஜெயில் கஞ்சி எவ்வளவோ மேல் சார்!
-17-
நீதிபதி: சாட்சி சொல்ல வந்த இடத்துல ஏன் தூங்குறீங்க?
சாட்சி: வக்கீல் குறுக்கு விசாரணை பண்றத பார்த்தா, எனக்கு தூக்கம் தான் வருது சார்!
-18-
வக்கீல்: நீங்க ஏன் உங்க மனைவியை விவாகரத்து பண்ண விரும்புறீங்க?
நபர்: அவங்க 6 மாசமா என்கிட்ட பேசவே இல்ல சார்.
வக்கீல்: யோசிச்சு முடிவெடுங்க, இவ்வளவு அமைதியான மனைவி கிடைக்கிறது கஷ்டம்!
-19-
நீதிபதி: உங்களுக்குத் தண்டனையா 500 ரூபாய் அபராதம் அல்லது 10 நாள் ஜெயில்.
குற்றவாளி: சார், அந்த 500 ரூபாயை என் வக்கீல் கிட்ட வாங்கிக்கோங்க, என்கிட்ட இருந்த எல்லாத்தையும் அவர்தான் வாங்கிட்டாரு!
-20-
நண்பன் 1: வக்கீல்கள் ஏன் எப்பவும் கருப்பு கோட் போடுறாங்க?
நண்பன் 2: ஏன்னா, அவங்க சொல்ற பொய்கள் எல்லாம் வெள்ளையா தெரியக்கூடாதுன்னுதான்!
😁😁😁😁😁தொகுப்பு:செ.மனுவேந்தன்