மறந்த தந்தை — சிறுகதை


யாழ்ப்பாணத்தின் கடற்கரையோரம் நெய்தல் கிராமம். மாலை அலைகள் கரையை முத்தமிட, பறவைகள் தம் கூடுகளுக்குத் திரும்பின. சிவாசிதம்பரம் ஒரு பழைய நாற்காலியில் அமர்ந்து கடலை நோக்கினார். அவர் கண்களில் இருந்தது நடந்த சம்பவத்தின்  நினைவில்  ஆழ்ந்திருந்தார்..

அது.......

♧♧♧

அம்சமான அந்த வீட்டின் உள்ளே, விஜயனின்  மனைவி இவர்களுடன்  விஜயனின் தந்தை சிவாசிதம்பரமும்   வாழ்ந்து வந்தனர். இருந்தாலும்  அவரின் மருமகளுக்கு சிவாசிதம்பரமும் தங்களுடன் இருப்பது பிடிப்பே இல்லாதிருந்தது.

ஒருநாள்,

மாலா கைகளைக் கட்டிக் கொண்டு கோபத்துடன்  சோபாவில் உட்கார்ந்திருந்தாள்.

வேலையால்  வந்த விஜயனிடம் மாலா (எரிச்சலுடன்):
“என்னங்க , இப்படி எத்தனை நாளு? உன் அப்பா வீட்டிலே இருந்து நான் பணிவிடை செய்வது. அதுக்கா உங்களை எனக்கு அம்மா அப்பா கட்டி வைச்சாங்கள் . எனக்கு  நிம்மதியே கிடைக்கலே!”

என்று சினந்துகொண்டாள் .

விஜயன் (சந்தேகத்துடன்):
“அவங்க வயதானவர், என்ன பண்ணுறது? எங்கே போவேங்க அவர்?”

மாலா (கடுமையாக):
“ஏன் , இடமில்லை, ஒரு நல்ல முதியோர் இல்லம்னு இருக்கே!— அன்பு இல்லம். அங்கே எல்லா வசதியும் இருக்கு. அவருக்கும் நிம்மதி கிடைக்கும், நமக்கும் ஒய்வு கிடைக்கும்.”

அந்தச் சொற்கள் குத்தியபடி விஜயன் தூக்கம் இல்லாது புரண்டு ,புரண்டு அவனால் நிம்மதியாக  படுத்துக்க கொள்ள முடியவில்லை..

மறுநாள் காலையில், மகனின் வேண்டுகோளை ஏற்று சிவாசிதம்பரம் அமைதியாக கூடை ஒன்றில் தன் சில புத்தகங்களையும் பழைய புகைப்படத்தையும் வைத்துக்கொண்டார். அவரின் கண்களில் எதுவும் குற்றம் இல்லை— கேள்வி மட்டுமே.

மருமகளுடன் புறப்பட ஆயத்தமான மகனிடம் 

சிவாசிதம்பரம் (மெதுவாக):
“மகனே, எங்கே போறோம்?”

விஜயன் (தயக்கத்துடன்):
“உங்களுக்கு சிறிது ஓய்வா இருப்பதற்கு நல்ல இடம் ஒன்று  கிடைத்தது ,அப்பா. அங்கதான் போறோம்.”

வண்டி நகரத்தைத் தாண்டி அன்பு இல்லம் என்ற முதியோர் இல்லத்தை  அடைந்தது. அவ்விடத்தில் மலர்கள் அலங்கரித்து இருந்தன. பொறுப்பாளர் ஒருவன் புன்னகையுடன் வரவேற்றான்.

பொறுப்பாளர் (உற்சாகமாக):
“சிவாசிதம்பரம் அய்யா! உங்களை கண்டு கன காலம்., உங்கள் வருகை எங்களுக்குப் பெரிய மகிழ்ச்சி! உட்க்காருங்கள்!”

விஜயன் அதிர்ந்தான்.

விஜயன்:
“நீங்கள் என் அப்பாவை எப்படி இவ்வளவு நன்கு தெரிந்திருக்கிறீர்கள்?”

பொறுப்பாளர் (நெகிழ்ந்து):
“இருபத்தைந்து வருடம் முன்னாடி, என் மாமாவும் மாமியும்  ஒரு சாலை விபத்தில் இறந்தார்கள்.  அதில் கடுமையான காயங்களுடன் பிழைத்த அவர்களது ஒரே ஒரு மகனை வைத்தியசாலை எடுத்துச்சென்று தங்கள் செலவில் வைத்தியம்பார்த்துடன், அப்பிளையை தங்கள் பிள்ளையாக வளர்ப்பதாகவும் தத்து எடுத்து அப்பிள்ளையை வளர்த்தனர். அதிலிருந்து அவர்மேல் எனக்கு மிகுந்த மதிப்பு இருந்தது. என்னுடைய அப்பா அம்மா செய்யாத கடமையை அவர்கள் இருவரும் இணைந்தே நிறைவேற்றினார்கள். உங்க அம்மாவை, அவர் வாழ்ந்த காலத்தில் நான் அவரை  வங்கியில் பலமுறை சந்தித்திருக்கிறேன். அவரது பொதுசேவை அறிவுரைகள்தான் என்னை இந்த முதியோர் இல்லத்தினை நடத்த வழிகோலியது. அதனால் அவர்களுக்கு நான் என்றும் நன்றியுடையவனாக இருக்கிறேன்.

சிவாசிதம்பரம் அமைதியாகவே  நின்றுகொண்டிருந்தார்.. விஜயன் சில நிமிடங்கள் உயிரே கேள்வியாக மாறியபடி இருந்தான். இதுவரை தான் பெற்றோர் என தான் எண்ணியவர்கள்  தன்னைக் காப்பாற்றிய தனது வளர்ப்பு தாய் தந்தையர் என்று உணர்ந்தான். தன்னை காப்பாற்றியதற்காக நன்றியுடன் நிற்கும் அவன் எங்கே! தன்னை  வளர்த்த தாய் ,தந்தையை மதியாத தான் எங்கே! என்று எண்ணியபோது அவன் மனம் கூசியது, நெஞ்சம் வெடித்தது, தாங்கமுடியாமல் ஓவென்று அலறியவண்ணம் வளர்த்த  தந்தையின் காலில் விழுந்தான். புலம்பினான். 

விஜயன் (உள்ளம் கலங்கி):
“அப்பா... மன்னிச்சிடுங்க. அப்பா! அது உங்க வீடு அப்பா! நாங்கதான் வெளியில போகவேணும்! நாங்க  உங்களுக்குத் தந்த வேதனைக்காக என்னை என்றும் மன்னிக்க முடியாது அப்பா!.”

மாலா(அழுதுகொன்டே): ஓம் மாமா! நானும் நிறைய உங்களுக்கு கஷ்டம் கொடுத்திட்டேன். எங்களை மன்னிச்சிடுங்க மாமா!

சிவாசிதம்பரம்: பிள்ளையள் அதை ஒண்டையும் நான் மனசில வைச்சிருக்கேல்லை. அதை அப்ப அப்பவே நான் மறந்திடுவன் 

மீண்டும் வீடு திரும்புகையில் இருவரினதும் புலம்பல்கள் சிவாசிதம்பரத்திற்கு அவர் நெஞ்சினை நன்றாகவே வருடிக்கொண்டன.

மருமகளின் பாயச விருந்துடன் அன்று மாலை ஒரு பெரும் நிம்மதி பெருமூச்சினை அவர்கள் விட்டதனை  சிவசிதம்பரம் கவனிக்காமலில்லை.

நடந்தவற்றை ஒருமுறை இரைபோட்டு தனக்குள் சுவைத்துக்கொள்ளவே முற்றத்தில் நாற்காலியில் அமர்ந்து கடலை நோக்கினார்.

'தான் தான் பரவாயில்லை, எத்தனை முதியோர்கள் பிள்ளைகளால் துரத்தப்பட்டு முதியோர் இல்லங்களில்......அவர்களின் கஷ்டங்களை அவர் எண்ணுகையில்... 

அவ்வேளையில் வானத்திலிருந்து பறந்து வந்த குருவி ஒன்று அவரருகே வந்து 'கீச் ,கீச் ,கீச் 'என்று கத்திச் சென்றது.

நினைவுகள்  கலைந்த அவர்  கை மணிக்கூடு பார்த்த அவர் நேரம் வந்ததை உணர்ந்து அமைதியாகவே படுக்கை நோக்கி சென்றார்.செல்லும்போது கடலையும் ஒருமுறை அவதானித்தார். ஆம்.அதுவும் அமைதியாகவே இருந்தது.

-செ.மனுவேந்தன் 

---------------------------

மறந்த தந்தை

யாழ்ப்பாணத்தின் கடற்கரை அருகே அமைந்த அமைதியான நெய்தல் கிராமம்.
மாலைப் பொழுதின் மெத்தையான அலைகள் கரையை முத்தமிட்டு, வானம் ஆரஞ்சு நிறத்தில் திளைத்தது.
கூடுகளுக்குத் திரும்பும் பறவைகள் வானைக் கடந்து பறந்தன.

மரமடியில் வைக்கப்பட்டிருந்த பழைய மர நாற்காலியில் சிவாசிதம்பரம் சாய்ந்தபடி கடலை நோக்கிக் கொண்டிருந்தார்.
அவரது கண்களில், இன்னும் முழுவதும் ஆறாத ஒரு நினைவு படிந்திருந்தது.
மனதை ஊடுருவி செல்லும் அந்த நினைவுகள்  அவரை முழுதாக ஆக்கிரமித்திருந்தது.

அவற்றை ஒருமுறை நெஞ்சில் மீட்டுக் கொண்டார்....


அம்சமாகத் தோன்றிய அந்த வீட்டின் உள்ளே, மெல்லிய பண்பாட்டின் நிழல் ஒளிந்து கிடந்தது.
விஜயனும், அவன் மனைவி மாலாவும், அவருடன் தங்கியிருந்தவர் விஜயனின் தந்தை சிவாசிதம்பரமும் தான்.

வயது முதிர்ந்த மாமியாரைப் போலவே, அவர் இறந்த பின்பும் இந்த மாமனாரின் இருப்பும் தங்களுக்கு வெறும்  சுமையாகவே   மாலாவுக்கு தோன்றியதுடன் அவரது உரையாடல் , அன்பாக இல்லாது இடைஞ்சலாகவே  உணரப்பட்டது; 

♧♧♧

ஒருநாள் மாலை.
வெளியில் மழை பெய்யப் போகிறதென்பது போல வானம் கனிந்தது.
உள்ளே, மாலாவின் மனமே மின்னலாகக் கொந்தளித்துக் கொண்டிருந்தது.

மாலா கைகளை மார்பின் மேல் கட்டிக் கொண்டு கோபத்துடன் சோபாவில் திணறியபடி உட்கார்ந்திருந்தாள்.
அழுத்தமாக மூச்சை விட்டுக் கொண்டிருந்தாள்.

அந்த நேரத்தில் வேலை முடிந்து வீடு திரும்பிய விஜயன், அவளது முகத்தைக் கண்டு தயக்கத்துடன் கேட்டான்.

விஜயன் (சந்தேகத்துடன்):
“ஏதோ சரியில்லாம தெரியுதே… என்னாச்சு மாலா?”

மாலாவின் உள்ளம் ஏற்கெனவே எரிந்துக் கொண்டிருந்தது.
அவள் தன்னைக் கட்டுப்படுத்தாமல் வெடித்தாள்.

மாலா (எரிச்சலுடன்):
“என்னங்க, இப்படி எத்தனை நாளு?
உங்க அப்பா வீட்டிலேயே இருந்து, நான் அவருக்கெல்லாம் பணிவிடை பண்ணிக்கொண்டே இருக்கணுமா?
அதுக்காகத்தான் என்னை உங்களுக்கு அம்மா அப்பா கட்டிக் கொடுத்தாங்களா?
எனக்கு இந்த வீட்டிலே நிம்மதியே இல்லையா!”

இந்த வார்த்தைகள் வழக்கமான புலம்பல் அல்ல; உள்ளம் சோர்ந்து விட்ட மனைவியின் சத்தம்தான்.
ஆனால் அந்த சத்தம், கேட்டவரிடம் அம்புபோல் குத்தியது.

விஜயன் (மனக்குழப்பத்துடன்):
“அவங்க வயதானவர் மாலா… இப்படி என்ன பண்ணுறது?
இப்போ எங்கே போவார்  அவர்?”

மாலா பதில் சொல்லும்போது, அவளது குரலில் கருணை இல்லாமல் கணக்கு மாத்திரம் இருந்தது.

மாலா (கடுமையாக):
“ஏன் இடமில்லையா?
ஒரு நல்ல முதியோர் இல்லம்  இருக்கே – *‘அன்பு இல்லம்’* என்று.
அங்கே எல்லா வசதியும் இருக்கு.
அவருக்கும் நிம்மதி கிடைக்கும், நமக்கும் கொஞ்சம் ஒய்வு கிடைக்கும்.
எத்தனை நாளைக்குத்தான்  இப்படி வாழப் போறோம்?”

அந்த இரவு, மாலாவின் வார்த்தைகள் விஜயனின் மார்பினுள் குத்தியபடி இருந்தன.
கண்களை மூட முயன்றாலும், அந்த “அன்பு இல்லம்” என்ற சொல் மட்டும் மனதுக்குள் மர்மமாக ஒலித்துக் கொண்டே இருந்தது.
தூக்கம் அவனை விட்டு வெகுதூரம் போய்விட்டது.

மறுநாள் காலையில், மருமகளின் வலியுறுத்தலுக்கும், தனது உள்ளத்தின் பலவீனத்துக்கும் இடையே சிக்கித் தவித்த மகனின் வேண்டுகோளை சிவாசிதம்பரம் அமைதியாக ஏற்றுக் கொண்டார்.

மெல்லிய சிரிப்புடன், ஒரு சிறிய கூடை எடுத்தார்.
அதில் இரண்டு மூன்று பழைய புத்தகங்களையும், மஞ்சள் பிடித்த புகைப்படங்களையும் நிதானமாக அடுக்கினார்.
ஒவ்வொரு புகைப்படத்தையும் கையில் வைத்தபோது, அவர் கண்களில் மின்னியது குற்ற உணர்வு அல்ல;
சில கேள்விகள்தான்.

வெளியே செல்ல தயாரான மகனையும் மருமகளையும் பார்த்து, அவர் மெதுவாகக் கேட்டார்.

சிவாசிதம்பரம் (மெதுவாக):
“மகனே… எங்கே போறோம்?”

விஜயன் ஒரு நொடி தந்தையின் கண்களை நேராகப் பார்க்க முடியாமல் தலையைத் தாழ்த்திக் கொண்டான்.

விஜயன் (தயக்கத்துடன்):
“உங்களுக்கு கொஞ்சம் ஓய்வாக, நல்லா இருப்பதற்கான இடம் கிடைச்சிருக்கு அப்பா…
அங்க தான் போறோம்.”

மாலா அந்தக் காட்சியை அமைதியாகவே நோட்டமிட்டாள்.
அவளது உள்ளத்தில் சற்று மிரளல் இருந்தாலும், மனதை கடினப்படுத்திக்கொண்டாள்.

வண்டி கிராமத்தை விட்டு நகரத்தையும் கடந்து சென்றது.
வழியெங்கும் அமைதியை முறியடித்ததோ வண்டியின் சத்தமும்,
சிவாசிதம்பரத்தின் மனச் சிந்தனைகளைப் பின்தொடர்ந்த சற்றே கனிந்த காற்றும்.

சில மணிநேர பயணத்திற்குப் பின்,
“அன்பு இல்லம்” என்ற பலகை தொங்கிய ஒரு கட்டிடத்தின் முன் வண்டி நின்றது.
வாசலின் இருபுறமும் மலர்த்தொட்டிகள் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தன.
அவை, அந்த இடம் ஒரு வீடு என்பதை நினைவூட்டப் போராடுகின்றன போலத் தோன்றின.

அங்குள்ள பொறுப்பாளர், முகம் முழுவதும் புன்னகையுடன் இருவரையும் வரவேற்றார்.

பொறுப்பாளர் (உற்சாகமாக):
“சிவாசிதம்பரம் ஐயா!
உங்களை கண்டு நிறைய  நாளாச்சு.
இப்போது தான் வந்தீங்களா?
உங்கள் வருகை எங்களுக்கு பெரிய மகிழ்ச்சி ஐயா.
உள்ளே வாங்க, உட்காருங்க!”

அந்த வார்த்தைகள் விஜயனின் காதில் விழுந்ததும், அவன் ஆச்சரியத்துடன்  தந்தையைக் கடைந்து பார்த்தான்.
அவர் முகத்தில் எந்த அதிர்ச்சியும் இல்லை.
ஆழமான  அமைதி மட்டும் அவரை அணைத்திருந்தது.

ஆனால் விஜயன் வியந்தான்.

விஜயன்:
“ஐயா!… நீங்க என் அப்பாவை இவ்வளவு நன்கு எப்படிப் பழக்கத்தோட தெரிஞ்சுக்கிட்டீங்க?”

பொறுப்பாளரின் கண்களில் திடீரென்று ஒரு நெகிழ்ச்சி மின்னியது.
அவன் பழைய நினைவுகளை திரும்பிப் பார்க்கும் ஒருவரைப் போல மெதுவாகத் தொடங்கினான்.


பொறுப்பாளர் (நெகிழ்ந்து):

“இருபத்தைந்தே ஆண்டுகளுக்கு முன்னாடி…
என் மாமாவும் மாமியும் ஒரு சாலை விபத்தில் இறந்தாங்கள் .
அந்த விபத்துல கடுமையா காயம்பட்டு இருந்த அவர்களோட ஒரே மகனை, அந்த 
வழியாக வந்த உங்கள் அப்பா – சிவாசிதம்பரம் ஐயா – தானாகவே வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றார்.

அவங்க அதுக்காக யாரிடமும் ஒரு நொடி யோசிக்கவில்லை..
வைத்தியசாலை செலவெல்லாம் அவங்கதான் தாங்கினாங்க.
பின்னாடி, அந்த அப்பிள்ளையை தங்களோட பிள்ளையா தத்தெடுத்து வளர்க்கலைாம் என்று  முடிவெடுத்தாங்கள்.

என்னுடைய அப்பா–அம்மா செய்ய முடியாம போன கடமையையே,
அவரு உங்க அம்மாவோட சேர்ந்து நிமிர்ந்த கையை நீட்டி நிறைவு செய்தாங்கள்.

அதிலிருந்து அவங்களுக்கு நான் என்றும் கடன்பட்டவன்தான்.
உங்க அம்மாவை நான் வங்கியில் பலமுறை பார்த்திருக்கேன்.
அவரோட பொதுச்சேவை உரையாடல்கள் , வழிகாட்டுதல்கள்தான் இப்போ நான் நடத்துற இந்த முதியோர் இல்லத்துக்கே காரணம்.

நான் நடத்துற ‘அன்பு இல்லம்’ல, அன்புக்கே அவங்க பெயர் வைச்சிருக்கேன்னு தான் நினைக்கிறேன்.”

அவன் பேசும் ஒவ்வொரு வார்த்தையும்,
விஜயனின் உள்ளத்தில் கல்லெறியும் ஒலி போலத் தாக்கின.

சிவாசிதம்பரம் அமைதியாக நின்றுகொண்டிருந்தார்.
அவரது முகத்தில் எந்த ஆதங்கமும் இல்லாது,
“எல்லாம் நடந்தவைகள்” என்று ஏற்றுக்கொள்ளும் தத்தளிப்பற்ற தெளிவு மட்டுமே அவரிடம் பொலிந்தது.

அந்நேரம்,
விஜயனின் உயிரே கேள்வியாக மாறிப்போனது.

இத்தனை நாளாக தன் பெற்றோர் என்று நினைத்தவர்கள்,
உண்மையில் தன்னைப் பிழைத்தெடுத்து, தத்தெடுத்து, உயிரை அளித்த வளர்ப்பு தந்தை–தாய் என்பதை அந்த நொடியில்தான் அறிந்தான்.

“தன்னை காப்பாற்றியதற்காக நன்றியோடு நிற்க வேண்டியவன் தான்.
ஆனால் தன்னைப் பாதுகாத்த இந்த தந்தைக்கு, இவ்வளவு அநியாயம் செய்தவன் தான்!”

இந்த உண்மை அவன் நெஞ்சை நசுக்கியது.
அவனுக்குள் ஏதோ ஒன்றுக் கிழிந்தது.

தாங்க முடியாமல் ஓவென்று அலறியவாறே,
அவன் தந்தையின் கால் மீது விழுந்தான்.


விஜயன் (உள்ளம் கலங்கி):
“அப்பா…!
மன்னிச்சிடுங்க அப்பா…
அது உங்க வீடு அப்பா!
உங்களை அங்கிருந்து வெளியே அனுப்ப நினைச்ச நாங்கதான் வெளிய போகணும்.

நாங்க உங்களுக்கு தந்த கஷ்டத்துக்காக…
என்னை நீங்க எப்பவும் மன்னிக்க முடியாது அப்பா…
ஆனா… ஒரு முறை ‘மன்னிச்சுறேன்’ன்னு சொல்லுங்க அப்பா!”

விஜயன் கதறிக்கொண்டே பேச,
அழுகையுடன் அருகில் வந்த மாலா, கண்கலங்கித் தாழ்ந்த குரலில் சொன்னாள்.

மாலா (அழுதுகொண்டு):
“ஓம் மாமா…
நானும் ரொம்ப கஷ்டம் கொடுத்துட்டேன் உங்களுக்கு.
உங்களோட துன்பம் எதுவுமே புரிஞ்சுக்காம நான் நடந்துட்டேன்.
எங்களை இருவரையும் மன்னிச்சிடுங்க மாமா…”

சிவாசிதம்பரத்தின் முகத்தில் மெதுவான ஒரு சிரிப்புத் தெளிவாய்த் தோன்றியது.

அவரது குரலில் குற்றம்சாட்டு இல்லை;
அனுபவம்தான் இருந்தது.


சிவாசிதம்பரம்:
“பிள்ளைகளா…
அதை ஒண்ணுமே நான் மனசுல வைச்சிருக்கேல்லை.
நீங்க சொன்ன ஒவ்வொரு வார்த்தையும், நடந்த ஒவ்வொரு விஷயமும்…
அப்ப அப்பவே நான் மறந்துட்டே இருப்பேன்."

வயசானவங்க எல்லாருக்கும் இது மாதிரி துன்பம் வர்றது.
நான் மட்டும் தப்பிச்சு போனா, அது நீதி இல்லையே…”
அவரது வார்த்தைகள் இருவரின் உள்ளத்தையும் உருக்கின.
இருவருமே அழுது புரண்டு அவரை அவர்களுடன் மீண்டும் வீடு திரும்ப வைத்தேவிட்ட்னர்.
🥿
அன்று ஞாயிற்றுக்கிழமை வாரத்தின் ஆரம்பம்தான். ஆனால் 
அவர்களுடைய வாழ்க்கையிலே புதிய ஒரு காலை உதித்ததுக் கொண்டது..

அவர்கள் மூவரும் சேர்ந்து மீண்டும் வண்டியில் ஏறி வீட்டுக்குத் திரும்பத் தொடங்கினார்கள்.
வண்டியோடு சேர்ந்து மாலாவின் மனக்கூச்சமும், விஜயனின் குற்ற உணர்ச்சியும் அலைபோல் ஆடியது.

வீட்டுக்குத் திரும்பும் வழியிலெல்லாம்
விஜயனும் மாலாவும் தங்களது தவறுகளைத் தலையகத்திலேயே திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே புலம்பினர்.
அவர்களின் அந்த புலம்பல்கள், சிவாசிதம்பரத்தின் மனச் சதையை மெதுவாக வருடியபடி சென்றன.


அன்று மாலை, வீட்டுக்குள் புதிதான ஒரு பண்டிகை உணர்ச்சி நிலவியது.
மாலா  மகிழ்வுடன் சமையலறைக்கு சென்று, பால் கொதிக்க, வெல்லம் கரைத்தாள்.
தனது மனமன்னிப்பைத் தெரிவிக்க,
மருமகளின் கைகளால் உருவான பாயசம் தான் சிறந்த வழி என்று அவள் நினைத்தாள்.

சுவைமிகு பாயசத்தை அவர்முன் வைத்து, அவள் கூச்சமாகச் சொன்னாள்.

மாலா:
“மாமா… இது நான் செய்த பாயசம்.
உங்களுக்கு பிடிக்கும் எண்டுதான்.…”

அவள் வாக்கியத்தை முடிக்க முன்னரே சிவாசிதம்பரம் அன்புடன் நசுங்கிப்   புன்னகைத்தார்.

அவர் ஒவ்வொரு கரண்டியையும் சுவைக்கும் போது,
விஜயனும் மாலாவும் நிம்மதி பெருமூச்சை விட்டனர்.
அவர்கள் விட்ட அந்த பெருமூச்சைக் கண்ணியமாகப் பார்க்காத போல நடித்தாலும்,
சிவாசிதம்பரத்துக்கு அது நன்றாகவே தெரிந்திருந்தது.

சமையலின் வாசனையையும், குடும்பத்தின் நிலையையும்  உள்ளுக்குள் எடுத்துக்கொண்டபடி,
வீட்டின் முன்றிலுக்கு வந்தார் அவர்.
கடலிலிருந்து வீசும் காற்று, அவரின் முகத்தைத் தழுவியது.

அவர் அந்த மாறாத கடலை நோக்கி நாற்காலியில் அமர்ந்தார்.

“தான் தான் பரவாயில்லை…” எனத் தனக்குள் பேசிக்கொண்டார்.
“இன்னும் எத்தனை முதியோர்கள்…
பிள்ளைகளால் துரத்தப்பட்டு, முதியோர் இல்லங்களுக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்…
அவர்களுடைய கஷ்டங்கள் எவ்வளவோ தூரம் சென்றிருக்கும்…”

அவரது சிந்தனை அலைபோல விரிந்தது.
தன் வாழ்க்கை ஒரு அளவுக்கு திரும்பி வந்துவிட்டாலும்,
பலருடைய வாழ்க்கைகள் அப்படியே துயரம் என்ற கரையில் நின்றுகொண்டிருப்பது போலத் தோன்றியது.

♧♧♧

அவ்வேளையில், வானத்தை வெட்டி ஒரு சின்னக் குருவி பறந்து வந்தது.
அவர் அமர்ந்திருந்த நாற்காலிக்கருகே வந்து,
“கீச்… கீச்… கீச்…” என்று மூன்று முறை கத்தி அவரை சுற்றிச் பறந்துச்சென்றது.

அந்தச் சிறு குரல்,
“எதுவும் மறக்கப்படவில்லை… அன்பும் துன்பமும் எல்லாம் இன்னும் உயிரோட தாங்கித் தாங்கிக் கொண்டுதான் இருக்கிறது,”
என்று கூறுவது போல அவருக்கு உணரவேண்டியதை உணர்த்தியது.

சில நொடி கடலையும் குருவியின் பறப்பையும் பார்த்துக் கொண்டிருந்த சிவாசிதம்பரம்,
எதிர்பாராதவிதமாக தனது கை மணிக்கூட்டை நோக்கினார்.
நேரம் இரவாகிக் கொண்டிருப்பதை உணர்ந்தார்.

அவர் மெதுவாக எழுந்தார்.
உள்ளே செல்ல முன் கடலை இன்னொரு முறை திருப்பிப் பார்த்தார்.
அலைகள் அசைந்தாலும்,
அதன் மேல் படிந்திருந்த வானத்தின் முகம் அமைதியாகவே இருந்தது.

அந்தக் கடலைப் போலவே, அவரது உள்ளமும் அன்றைக்கு 
ஆழத்தில் துன்பம் இருந்தாலும், மேற்பரப்பில் அமைதியால் மூடப்பட்டிருந்தது.

அமைதியாகவே அவர் தன் அறை நோக்கிச் சென்றார் இன்றைய தூக்கத்தினை எதிர்பார்த்து.... நிரந்தர தூக்கம் வரை என்ற நம்பிக்கையுடன்....

🔺🔺🔺🔺🔺🔺🔺 செ. மனுவேந்தன்🔺🔺🔺🔺🔺🔺🔺