"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look
at 'Lanka chronicles' from a scientific perspective" [In Tamil &
English]
[This detailed Tamil article is based on the unfinished
historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran,
a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]
பகுதி: 32 / முடிவுரை /
'சிங்கள மொழி அதன் வரலாறு எழுத பொருத்தமற்றதா?'
தத்திக முதல் கஜபாகு வரை பல தமிழ் மன்னர்களின் சாத்தியம் முன்னரே காட்டப்பட்டுள்ளது. மூத்தசிவன், சிவன், மகாசிவன், எல்லாளன் எனப் பல தமிழ் மன்னர்களும், மற்றும் தத்திகவுக்குப் பின்பும் பல தமிழ் மன்னர்களும் உள்ளனர். ‘நாக’ என்று முடிவடையும் பல மன்னர்களின் பெயர்கள் உள்ளன. அவர்கள் தமிழ் மன்னர்களாகவும் இருக்கலாம்? அதற்கான காரணம் ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. மற்றொரு விசித்திரமான அம்சம், இலங்கை வரலாற்றை வெளிநாட்டு மொழியில், பாளியில் எழுதியது. சிங்கள மொழி அதன் வரலாறு எழுத பொருத்தமற்றதா? அல்லது அந்தக் காலக்கட்டத்தில் - ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டுக்கு முதல் - சிங்கள மொழி வளர்ச்சி அடையவில்லையா?
தீபவம்சம், மகாவம்சம் போல் தமிழுக்கும் தமிழருக்கும் எதிரானது அல்ல. இந்த மாற்றம் எப்படி வந்தது?
சிறந்த விளக்கவுரை ஆசிரியர் புத்தகோசரின் [great commentator Buddhaghosa] வருகையாக இருக்கலாம்? மூல பாஷை [மூல் பாஷா {mul bhaSha} = அசல் மொழி] கருத்தை அறிமுகப்படுத்தி, பாளி மொழியில், முன்னைய நூல்களை மொழிபெயர்த்த பிறகு, அவற்றை - முன்னைய நூல்களை - எரித்தார் என நம்பப்படுகிறது. எனவே, மகாநாம அவரிடமிருந்து தான் இந்த உத்வேகத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது?
புத்தகோசரின் வாழ்க்கையைப் பற்றி வரையறுக்கப் பட்ட நம்பகமான தகவல்கள் மட்டுமே இருக்கின்றன. புத்தகோசர் தென்னிந்தியாவில் பிறந்தவர் என்றும் வட இந்தியாவிலிருந்த அன்றைய மகத அரசுக்குட்பட்ட புத்தகயாவிற்கு அருகில் பிறந்தவர் என்றும் ஆய்வாளர்கள் நடுவில் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. என்றாலும் அவர் பிராமண குடும்பத்தில் பிறந்தார் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. மகாவம்சத்தின் படியும், புத்தகோசர் மகத அரசுக்குட்பட்ட புத்தகயாவிற்கு [Bodh Gaya] அருகில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவராகவும், வேதங்களில் தேர்ச்சி பெற்றவராகவும், இந்தியா முழுவதும் தத்துவ விவாதங்களில் ஈடுபட்டவராகவும் கூறுகிறது. ரேவதா [Buddhist monk named Revata] என்ற புத்த துறவியை சந்தித்த பிறகுதான், புத்தகோசர் விவாதத்தில் சிறந்து விளங்கினார், முதலில் வேதக் கோட்பாட்டின் பொருள் குறித்த சர்ச்சையில் தோற்கடிக்கப்பட்டார். பின்னர் அபிதம்மத்திலிருந்து [Abhidhamma] ஒரு போதனையை வழங்குவதில் குழப்பமடைந்தார். அதன் பின் பௌத்தத்தில் ஈர்க்கப்பட்ட புத்தகோசர் ஒரு பிக்கு (பௌத்த துறவி) ஆனார் மற்றும் திபிடகா [Tipiṭaka / இது தேரவாத பௌத்தத்தின் கோட்பாட்டு அடித்தளத்தை உருவாக்கும் முதன்மை பாளி மொழி நூல்களின் தொகுப்பாகும்] மற்றும் அதன் விளக்கவுரைகளில் ஆய்வு செய்தார். இந்தியாவில் விளக்கவுரை தொலைந்து போன ஒரு வாசகத்தைக் கண்டுபிடித்து படிப்பதற்காக, அது இலங்கையில் பாதுகாப்பாக இருக்கும் என்ற ஒரு நம்பிக்கையில் அங்கு பயணம் செல்லத் தீர்மானித்தார். அங்கே, இலங்கையில், புத்தகோசர் அனுராதபுர மகா விகாரையின் துறவிகளால் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட மிகப் பெரிய அளவிலான விளக்கவுரை நூல்கள் என்ன என்பதை ஆய்வு செய்யத் தொடங்கினார். புத்தகோசர் அங்கு காணப்பட்ட விளக்கவுரைகள் எல்லாவற்றையும் பாளியில் இயற்றப்பட்ட ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட விரிவான ஒரு
விளக்கவுரையாகத் தொகுக்க, அவர்களிடம் அனுமதி கோரினார்.
புத்தகோசர் வட இந்தியாவில் போதகயாவிற்கு அருகில் பிறந்தார் என்று மகாவம்சம் கூறினாலும், அவரது விளக்கவுரைகளின் பின்னுரை அல்லது முடிவுரை, இந்தியாவில் குறைந்தபட்சம் தற்காலிக வசிப்பிடமாக இருக்கும் ஒரு இடத்தை மட்டுமே குறிப்பிடுகிறது: அது தென்னிந்தியாவின் காஞ்சி ஆகும். சில அறிஞர்கள் (among them Oskar von Hinüber and
Polwatte Buddhadatta Thera) புத்தகோசர் உண்மையில் தென்னிந்தியாவில் பிறந்தார் என்றும், புத்தரின் பிராந்தியத்துடன் அவருக்கு நெருக்கமான உறவுகளை ஏற்படுத்துவதற்காக, பிற்கால சுயசரிதைகளில் வேண்டும் என்று இடமாற்றம் செய்யப்பட்டார் என்றும் முடிவு செய்கிறார்கள். புத்தகோசர் தனது பணி முடிந்ததும், இறுதியில்,
அசல் அல்லது மூல கையெழுத்துப் பிரதிகளை சேகரித்து எல்லாவற்றையும் எரித்ததாகக் நம்பப்படுகிறது.
👉
*அடுத்த பகுதியை வாசிக்க அழுத்துக...
*ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக...
Part: 32 / Conclusion /
'Was the Sinhala language
unsuitable for its history?'
The possibility of many Tamil kings from Dathika to Gajabahu
is shown earlier. There are many Tamil kings such as Mutasiva, Siva, Mahasiva,
Elara, and many kings after Dathika. There are names of many kings ending with
‘Naga’. They could also be Tamil kings. Another strange aspect is the writing
of the Lanka history in a foreign language, Pali. Was the Sinhala language
unsuitable for its history? The Dipavamsa is not anti-Tamil unlike the
Mahavamsa. What could have happened in between the compilations of the
Dipavamsa and the Mahavamsa for this change? It could be the arrival of the
great commentator Buddhaghosa! He burnt the originals after translating into
Pali, introducing the Mula Bhasha [मूल भाषा {mul bhaSha} = ORIGINAL LANGUAGE]
concept. Mahanama must have got the impetus from him.
பகுதி / Part: 33 தொடரும் / Will follow
நன்றி
Thanks
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]