சிரிக்க... சில நிமிடம்

 நகைச்சுவை=ஜோக்ஸ் 

-01- 

ஆசிரியர்: டேய், உன் வீட்டுப்பாடத்தை ஏன் உன் அப்பா செஞ்சு கொடுத்தாரு?

மாணவர்: அது வந்து சார்... நீங்கதானே சொன்னீங்க, "உன்னால முடியலன்னா உங்க அப்பா உதவியை கேட்டுக்கோன்னு"!


-02-

ஆசிரியர்: அக்பர் எங்க இறந்தாரு?மாணவர்: பக்கத்து பக்கத்துல ரெண்டு பக்கத்துலயும் (History Book-ல) தேடிட்டேன் சார், கடைசில செத்துப்போயிட்டாருன்னு மட்டும் தான் போட்டிருக்கு!


-02-

ஆசிரியர்: பூமி உருண்டைன்னு எப்படி நிரூபிப்ப?மாணவர்: இதுக்கு எதுக்கு சார் சாட்சி? நீங்க வேணும்னா மேப்ல (Map) பாருங்க, அது வட்டமாத்தான் இருக்கு!


-03-
ஆசிரியர்: ஒரு கிலோ இரும்பு அதிக எடையா? இல்ல ஒரு கிலோ பஞ்சு அதிக எடையா?
மாணவர்: எடையை விடுங்க சார், இரும்பு கால்ல விழுந்தா வலிக்கும், பஞ்சு விழுந்தா வலிக்காது!


-04-
ஆசிரியர்: காந்திக்கு முன்னாடி யாரு இருந்தாங்க?மாணவர்: காந்திக்கு முன்னாடி அவங்க அப்பா இருந்தாரு சார்!

-05-
ஆசிரியர்: "நேற்று மழை பெய்தது" - இது என்ன காலம்?
மாணவர்: ஸ்கூல் லீவு விடுற காலம் சார்!

-06-
ஆசிரியர்: 10-ல 7 போனா மீதி எவ்வளவு?
மாணவர்: தெரியல சார்... 7-ஐ எங்காவது ஒளிச்சு வெச்சிருக்கீங்களா?

-07-
ஆசிரியர்: நிலாவுக்கும் சூரியனுக்கும் என்ன வித்தியாசம்?
மாணவர்: நிலா நைட்ல வெளிச்சம் தரும், ஆனா சூரியன் பகல்ல வெளிச்சம் தரும். ஆனா 
பகல்ல 
தான் ஏற்கனவே வெளிச்சம் இருக்கே, அப்ப சூரியன் எதுக்கு சார்?


-08-
ஆசிரியர்: மகாபாரதத்துல உனக்கு பிடிச்ச கேரக்டர் எது?
மாணவர்: அந்த சங்கு ஊதுறவர் தான் சார், ஏன்னா சங்கு ஊதுனா சண்டை முடிஞ்சிரும்!

-09-
ஆசிரியர்: ஆக்சிஜன் இல்லாம மனுஷனால வாழ முடியுமா?
மாணவர்: முடியும் சார், சிலிண்டர் இருந்தா போதும்!

-10-
ஆசிரியர்: ஐந்துக்கும் எட்டுக்கும் இடையில என்ன இருக்கு?
மாணவர்: ஒரு  'கமா'(,) இருக்கு சார்!

-11-
ஆசிரியர்: ஒரு மாணவன் எப்பவும் சந்தோஷமா இருப்பான்?
மாணவர்: ஸ்கூல் கேட் மூடி இருக்கும்போது சார்!

-12-
ஆசிரியர்: கிளாஸ்ல ஏன் தூங்குற?மாணவர்: நீங்கதான் சார் சொன்னீங்க, "அமைதி நிலவுற இடத்துல தான் ஞானம் கிடைக்கும்"னு!

-13-
ஆசிரியர்: நீ ஏன் ஸ்கூலுக்கு லேட்டா வர்ற?மாணவர்: ரோட்ல ஒரு போர்டு இருந்தது சார், "மெதுவாகச் செல்லவும் - பள்ளிக்கூடம் அருகில் உள்ளது"னு!

-14-
ஆசிரியர்: நியூட்டன் ஒரு ஆப்பிள் மரத்துக்கு அடியில உட்கார்ந்திருந்தப்ப தலையில ஆப்பிள் விழுந்துச்சு. அப்புறம் என்ன நடந்துச்சு?மாணவர்: அவர் அந்த ஆப்பிளை சாப்பிட்டு நிம்மதியா தூங்கியிருந்தா, நாம இப்போ இந்த பிசிக்ஸ் (Physics) படிக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது சார்!

-15-
ஆசிரியர்: ஐந்து பழங்களின் பெயரைச் சொல்லு.
மாணவர்: ஒரு ஆப்பிள், நாலு வாழைப்பழம் சார்!

-16-
ஆசிரியர்: ஏன் எக்ஸாம் பேப்பர்ல எதுவுமே எழுதல?மாணவர்: "கேள்விக்குத் தகுந்த பதில் அளிக்கவும்"னு போட்டிருந்தது சார். என்னுடைய  தகுதிற்குரிய  கேள்வி அங்க ஒண்ணுமே இல்லை! அதான் தகுதியான பதிலையும் எழுதலை.

-17-
ஆசிரியர்: ஒரு பூனை எலியைத் துரத்துது, இது என்ன காலம்?
மாணவர்: எலிக்குக் கெட்ட காலம் சார்!

-18-
ஆசிரியர்: உனக்கு முன்னாடி ஒரு கிலோ தங்கம், ஒரு கிலோ அறிவு இருக்கு. நீ எதை எடுப்ப?
மாணவர்: கண்டிப்பா தங்கத்தை தான் சார்!ஆசிரியர்: நான் உன்னோட இடத்துல இருந்தா அறிவைத் தான் எடுப்பேன்.
மாணவர்: அது அவங்க அவங்ககிட்ட எது இல்லையோ அதைத்தான் சார் எடுப்பாங்க!

-19-
ஆசிரியர்: சூரியன் ஏன் காலையில சீக்கிரம் வருது?மாணவர்: ராத்திரி முழுக்க இருட்டுல இருக்க அதுக்கும் பயமா இருக்கும்ல சார், அதான்!

-20-
ஆசிரியர்: உலகத்துலேயே ரொம்ப அமைதியான நாடு எது?
மாணவர்: அமைதியா இருக்கிறதாலதான் சார் அந்த நாட்டைப் பத்தி யாருக்கும் தெரியல!

😁😀😂😀😁தீபம் சிரிப்பு மேடை 

அறிவியல் நோக்கில்....[பகுதி-25B] -"பெளத்தம் ஒரு அலசல்"

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய  இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" [In Tamil & English] / 




பகுதி: 25 B / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'எல்லாளனுக்கு முந்திய மன்னர்கள், எல்லாளன் உட்பட, கற்பனைப் கதாபாத்திரங்களா?' [தமிழ் விரிவாக்கம் தொடர்கிறது]

ரொபெர்ட் நொக்ஸ் கண்டி அரசனால் சிறை பிடிக்கப் பட்டான். எனினும் பல ஆண்டுகளின் பின், சிறையில் இருந்து தப்பி, காடுகளையும் மலைகளையும் கடந்து அனுராத புரத்தை வந்தடைந்தான். அவன் சிறையில் இருந்த போது, சிங்கள மொழியில் தேர்ச்சி பெற்றிருந்தான். ஆகவே அநுராத புரம் வந்த ரொபெர்ட் நொக்ஸ், அங்குள்ள மக்கள் சிங்கள மக்கள் என எண்ணி, சிங்கள மொழியில் பேச முற்பட்டான். ஆனால் அவர்களுக்கு அந்த மொழி விளங்க வில்லை. அதன் பின்பு தான் அவனுக்கு தெரிய வந்தது இவர்கள் தமிழர்கள் என்று எழுதி உள்ளார். ["To Anarodgburro therefore we came, called also Neur Waug.* Which is not so much a particular single Town, as a Territory. It is a vast great Plain, the like I never saw in all that Island: in the midst where∣of is a Lake, which may be a mile over, not natural, but made by art, as other Ponds in the Country, to serve them to water their Corn Grounds. This Plain is encompassed round with Woods, and small Towns among them on every side, inhabited by Malabars, a distinct People from the Chingulayes. But these Towns we could not see till we came in among them. Being come out thro the Woods into this Plain, we stood looking and staring round about us, but knew not where nor which way to go. At length we heard a Cock crow, which was a sure sign to us that there was a Town hard by; into which we were resolved to enter. For standing thus amazed, was the ready way to be taken up for suspitious persons, especially because White men ne∣ver come down so low. Being entred into this Town, we sate our selves under a Tree,* and proclaimed our Wares, for we feared to rush into their Yards, as we used to do in other places, lest we should scare them. The People stood amazed as soon as they saw us, being originally Malabars, tho Subjects of Cande. Nor could they understand the Chingulay Lan∣guage in which we spake to them. And we stood looking one upon another until there came one that could speak the Chingulay Tongue: "[ "The History of Ceylon from the Earliest Period TO THE YEAR MDCCCXV " / AUTHOR'S ESCAPE. PART IV /page 322-323].  

அது மட்டும் அல்ல, போர்த்துகீசியர்கள் இலங்கையில் 1505 ஆம் ஆண்டு தரையிறங்கிய காலத்திலும் கூட தமிழ் இலங்கையில் ஒரு பிரதான மொழியாக இருந்தது என்பதற்கு பல சான்றுகள் வரலாற்று ரீதியாக இருக்கின்றன. உதாரணமாக, கோட்டை அரசன் ஏழாம் புவனேகபாகு [the king of Kotte, Bhuvanehabahu VII / 1468 – 29 December 1550] போர்த்துகீசியர்களுடன் தமிழில் ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டார். மேலும் கோட்டை அரசாட்சியில் நீதிமன்ற மொழியாக அன்று தமிழும் இருந்துள்ளது.[Aiyangar, S. Krishnaswami; de Silva, Simon; M. Senaveratna, John (1921). "The Overlordship of Ceylon in the Thirteenth, Fourteenth and Fifteenth Centuries"] . Kotte என்ற சொல்லே தமிழ் சொல் கோட்டை யில் இருந்து பெறப்பட்டதாகும்.[Somaratne, G.P.V. (1984). The Sri Lanka Archives, Volume 2. Department of National Archives. p. 1.]  அதே போல, அறிஞர் H L செனிவிரட்ன [H L Seneviratne] பல கண்டி தலைவர்கள் [Kandyan chieftains] 1815 ஆண்டு மாநாட்டு [1815 Convention / treaty with the British] உடன்படிக்கைகள் தமிழில் கையெழுத்திட்டார்கள் என்பதை  சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், ஊகங்கள் மற்றும் அனுமானங்களைத் தவிர்த்து, தொல்பொருள் சான்றுகள் அல்லது கல்வெட்டியல் சான்றுகள் மூலம் [archeological / epigraphic facts / evidence] சிங்கள மொழி கி பி 9ஆம் நூற்றாண்டிற்கு முன் இருந்ததாக எந்த தகவலும் நான் அறிந்த வரையில் இல்லை. சிங்கள மொழியில் ஏறக்குறைய 4000+ தமிழ் சொற்கள் இருப்பதை ஆதார பூர்வமாக எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் [Rev. S. Gnanapiragasam] சுட்டிக் கட்டி, சிங்கள மொழியில் இருந்து எல்லா தமிழ் சொற்களையும் கழற்றிவிட்டால், அங்கு சிங்கள மொழி என்று ஒன்றுமே இருக்காது என்கிறார். [If the Sinhala vocabulary is stripped of all the Tamil words there will be no Sinhala language.] சொற்பிறப்பு – ஒப்பியல் தமிழ் அகராதி (An Etymological and comparative Lexion of the Tamil Language), இவரால் 1938-இல் வெளிப்படுத்தப் பெற்றது என்பது குறிப்பிடத் தக்கது.1815 இல் கண்டி இராச்சியம் காட்டிக்கொடுப்பினால் வீழ்த்தப்பட்டது. அதன் பின் “கண்டி ஒப்பந்தம்”  கண்டி அரச மாளிகையில் 02.03.1815 அன்று பி.ப. 4.00க்கு செய்து கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் கண்டி திசாவைகள் மற்றும் அதிகாரிகள் கையெழுத்திட்டனர். அட்டவணை - 10  அவர்களின்  கையொப்பத்தை காட்டுகிறது. இதில் ரத்வத்தையின் கையெழுத்து தமிழில் பூரணமாக வைக்கப்பட்டுள்ளது. மற்றும் பலரின்  கையெழுத்து தமிழும் மற்றும் இன்னும் அப்பொழுது பரிணாமம் அடைந்து வரும் சிங்களமும் கலந்து இருக்கின்றன. [Table 10, depicts the signatures of the Dissawes and Adigars who were a party to the March’ 1815 Kandyan convention. The mixture of Tamil and yet evolving Sinhala alphabets used by many may depict a period in our history (especially in the Kandyan Kingdom) when a combination of Sinhala and Tamil alphbets were used].

மேலும், டச்சு காலத்தில், கிபி 1656 முதல் கிபி 1796 வரை, இலங்கையில் அடிமட்ட சமூக உறவுகளில், சிங்களம் தமிழ் என்ற வேறுபாடுகள் காணப்படவில்லை என்றும், ஆனால் பல்வேறு சாதி பிரிவுகளே காணப்பட்டதாகவும் அருட்தந்தை வீ. பெர்னியோலா அடிகள் கூறுகிறார் [Vito Perniola, in observing the social relations at the grassroots level in the Dutch period of SriLanka, did not see "any racial distinction between Sinhala and Tamils," but "rather the division into various castes"]. கண்டியைத் தலை நகராகக்கொண்டு 1707 ஆம் ஆண்டுக்கும் 1815 ஆம் ஆண்டுக்கும் இடையில் ஆண்டு வந்த நாயக்கர் அரச மரபு [வம்சம்] எமக்கு எடுத்து கட்டுவது, அரசன் சிங்களவனாக இருக்கவேண்டும் என்ற எந்த நிபந்தனையும் அப்பொழுதும் இலங்கையில் இருக்கவில்லை என்றும், ஆனால் புத்த மதத்திற்கு ஆதரவளிக்க மட்டுமே அங்கு வலியுறுத்தப்பட்டது என்பதாகும். [The longevity of the Nayakkar dynasty (1739-1815) in the kingdom of Kandy indicates that there was no requirement for the king to be Sinhalese,while his patronage to Buddhism was insisted upon].  
⛰⛰⛰⛰⛰⛰⛰

*அடுத்த பகுதியை வாசிக்க அழுத்துக...


*ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக...



நன்றி  
Thanks
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna] 
பகுதி / Part: 25 C தொடரும் / Will follow 

குடல் புற்றுநோய்: இளைஞர்களிடையே அதிகரிக்கும் அபாயம்



“புற்றுநோய்” என்ற சொல் ஒருகாலத்தில் முதியவர்களுடன் மட்டுமே தொடர்புபடுத்தப்பட்டது. ஆனால் இப்போது நிலைமை மாறி வருகிறது. குறிப்பாக குடல் புற்றுநோய் (பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய்) இளைஞர்களிடையே அதிகமாக கண்டறியப்படுவது உலகளாவிய கவலைக்குரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

பிரிட்டனில் செயல்படும் Cancer Research UK அமைப்பின் தகவல்படி, ஆரம்ப கட்டத்தில் கண்டறியப்பட்ட குடல் புற்றுநோயாளிகளில் 90%-க்கும் மேற்பட்டோர் ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் உயிர்வாழ்கிறார்கள். ஆனால் நோய் கடைசி கட்டத்தில் கண்டறியப்பட்டால் அந்த விகிதம் 44% வரை குறைகிறது. இதுவே ஆரம்பகால விழிப்புணர்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.


1. குடல் புற்றுநோய் என்றால் என்ன?

குடல் புற்றுநோய் என்பது பெருங்குடல் அல்லது மலக்குடலின் உள்வரைப்பகுதியில் உருவாகும் அசாதாரண செல்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியாகும். ஆரம்பத்தில் இது சிறிய பாலிப் (polyp) எனப்படும் கட்டிகளாக உருவாகி, காலப்போக்கில் புற்றுநோயாக மாறக்கூடும்.

சிகிச்சை இல்லாமல் விட்டால்:

  • அருகிலுள்ள திசுக்களுக்கு

  • லிம்ப் கட்டிகள்

  • கல்லீரல், நுரையீரல் போன்ற உறுப்புகளுக்கு

பரவக்கூடும்.


2. உலகளாவிய புள்ளிவிவரங்கள் – ஏன் இது கவலைக்குரியது?

World Health Organization தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, American Cancer Society தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வு, The Lancet இதழில் வெளியிடப்பட்டது.

அதில்:

  • ஆய்வு செய்யப்பட்ட 50 நாடுகளில் 27 நாடுகளில்

  • 50 வயதிற்குட்பட்டவர்களில்

  • குடல் புற்றுநோய் அதிகரித்து வருகிறது என்று கண்டறியப்பட்டது.

முதல் முறையாக:

  • லத்தீன் அமெரிக்கா

  • கரீபியன்

  • கிழக்கு ஐரோப்பா

  • ஆசியாவின் சில பகுதிகள்

இவற்றிலும் உயர்வு பதிவாகியுள்ளது.

அதே நேரத்தில், இளம் வயதினரிடம் இது இன்னும் “அரிதானது” என்பது நினைவில் கொள்ள வேண்டியது.


3. இளைஞர்களிடையே அதிகரிப்பதற்கான சாத்திய காரணிகள்

சரியான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஆனால் நிபுணர்கள் சில முக்கிய காரணிகளை முன்வைக்கின்றனர்:

(1) உடல் பருமன்

அதிக எடை உடலில் அழற்சி நிலையை (chronic inflammation) அதிகரிக்கிறது. இது செல்களின் மாற்றத்துக்கு வழிவகுக்கும்.

(2) பதப்படுத்தப்பட்ட உணவுகள்

சிவப்பு இறைச்சி, பதப்படுத்தப்பட்ட இறைச்சி, அதிக கொழுப்பு, குறைந்த நார்ச்சத்து கொண்ட உணவுகள் குடல் ஆரோக்கியத்தை பாதிக்கின்றன.

(3) குடல் நுண்ணுயிர் மாற்றங்கள்

நுண்ணுயிர் எதிர்ப்பிகள் அதிகமாகப் பயன்படுத்துதல், ஜங்க் உணவு பழக்கம் ஆகியவை குடல் மைக்ரோபையோமில் மாற்றத்தை உண்டாக்குகின்றன.

(4) வாழ்க்கை முறை மாற்றங்கள்

  • உடற்பயிற்சி குறைவு

  • நீண்ட நேரம் அமர்ந்திருக்கும் வாழ்க்கை

  • அதிக மது

  • புகைபிடித்தல்

(5) மரபியல் காரணிகள்

பெரும்பாலான குடல் புற்றுநோய்கள் பரம்பரையாக வருவதில்லை. இருப்பினும், லிஞ்ச் சிண்ட்ரோம் போன்ற மரபணு நிலைகள் ஆபத்தை அதிகரிக்கின்றன.


4. கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள்

கீழ்க்கண்ட அறிகுறிகள் மூன்று வாரங்களுக்கு மேல் நீடித்தால் மருத்துவரை அணுக வேண்டும்:

  • மலத்தில் ரத்தம்

  • அடிக்கடி மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு

  • மலம் திரவமாகவோ அல்லது கடினமாகவோ மாறுதல்

  • தொடர்ச்சியான வயிற்று வலி அல்லது வீக்கம்

  • விளக்கமற்ற எடை இழப்பு

  • அதிக சோர்வு

  • குடல் முழுமையாக காலியாகாத உணர்வு

அவசர நிலை

குடல் அடைப்பு ஏற்பட்டால்:

  • கடுமையான வயிற்று வலி

  • மலச்சிக்கல்

  • வாந்தி

இவை ஏற்பட்டால் உடனடி மருத்துவ உதவி அவசியம்.


5. ஆரம்பகால கண்டறிதல் – உயிரைக் காக்கும் திறவுகோல்

திரையிடல் (screening) பரிசோதனைகள்:

  • கொலோனோஸ்கோபி

  • மலம் ரத்த பரிசோதனை

  • CT colonography

ஆரம்ப கட்டத்தில் கண்டறியப்பட்டால், அறுவை சிகிச்சை மட்டுமே போதுமானதாக இருக்கலாம்.

மேம்பட்ட கட்டங்களில்:

  • அறுவை சிகிச்சை

  • கீமோதெரபி

  • ரேடியோதெரபி

இவற்றின் கலவை தேவைப்படலாம்.


6. தடுக்கும் வழிகள் – வாழ்க்கை முறையில் மாற்றம்

விஞ்ஞானிகள் கூறுவதாவது: குடல் புற்றுநோய் பாதிப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவை வாழ்க்கை முறையால் தடுக்கக்கூடியவை.

பரிந்துரைகள்

✔️ அதிக நார்ச்சத்து (காய்கறி, பழம், முழுத்தானியம்)
✔️ குறைந்த கொழுப்பு உணவு
✔️ சிவப்பு இறைச்சி அளவு குறைத்தல்
✔️ தினமும் 6–8 கிளாஸ் தண்ணீர்
✔️ வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடம் உடற்பயிற்சி
✔️ புகை, மது தவிர்த்தல்
✔️ ஆரோக்கியமான உடல் எடை பராமரித்தல்


7. ஆராய்ச்சியின் புதிய திசை

பிரிட்டனின் புனித மார்க்ஸ் மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள் நூற்றாண்டு காலமாக சேமித்து வைக்கப்பட்ட குடல் புற்றுநோய் திசு மாதிரிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

மேம்பட்ட மூலக்கூறு நுட்பங்கள் மூலம்:

  • இளம் வயதினருக்கு ஏன் அதிகமாக கண்டறியப்படுகிறது?

  • சுற்றுச்சூழல் தாக்கம் என்ன?

  • உணவு பழக்க மாற்றங்கள் காரணமா?

என்பதை ஆராய்கின்றனர்.


8. சமூக விழிப்புணர்வு – இன்றைய அவசியம்

இளைஞர்களிடையே:

  • “நான் இன்னும் இளமையானவன்; எனக்கு இது வராது” என்ற எண்ணம்

  • அறிகுறிகளை புறக்கணித்தல்

  • மருத்துவரை அணுகுவதில் தாமதம்

இவை நோயை கடைசி கட்டத்தில் கண்டறியச் செய்யும் முக்கிய காரணிகள்.

அதனால்:

  • பள்ளி மற்றும் கல்லூரி நிலை விழிப்புணர்வு

  • குடும்ப மருத்துவ ஆலோசனை

  • சமூக ஊடக கல்வி பிரச்சாரம்

மிகவும் அவசியம்.


👨👨👨👨👨👨

குடல் புற்றுநோய் இப்போது வயதானவர்களின் நோய் மட்டுமல்ல. வாழ்க்கை முறையின் மாற்றம், உணவு பழக்கங்கள், சுற்றுச்சூழல் தாக்கங்கள் ஆகியவை இளைஞர்களையும் பாதிக்கக்கூடிய நிலையை உருவாக்கியுள்ளன.

ஆனால் நம்பிக்கை உள்ளது.
ஆரம்பகால கண்டறிதல் + ஆரோக்கியமான வாழ்க்கை முறை = குணப்படுத்தக்கூடிய நோய்.

அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்.
உடல் தரும் சிறிய சைகைகளையும் கவனியுங்கள்.
மருத்துவரை அணுகுவதில் தயங்காதீர்கள்.

விழிப்புணர்வே உயிர்காக்கும் மருந்து.


෴෴෴தீபம் உடல்நலம்෴෴෴

இன்றைய இளையோர்கள் மற்றும் உடனடி வெற்றி மனப்பான்மை

– தோல்வியை அனுபவிக்க விடாத பெற்றோர் கலாச்சாரம் ஒரு மறைமுக காரணமா?



வெற்றி பெற்றாய் என்றால் என் பிள்ளை;
தோற்றால் – அடுத்தமுறை வேண்டாம்!”

இது வெளிப்படையாக சொல்லப்படாதாலும், பல குடும்பங்களில் அமைதியாக இயங்கும் உளவியல் செய்தி. பேச்சுப்போட்டி, விளையாட்டு போட்டி, கலை நிகழ்ச்சி – எதிலும் பெற்றோர் பெரும்பாலும் எதிர்பார்ப்பது வெற்றி. தோல்வி ஏற்பட்டால், அடுத்தமுறை அந்தப் போட்டிக்கு அனுப்பவே மாட்டார்கள்.

இந்த “தோல்வி அனுபவிக்க விடாத வளர்ப்பு” இன்றைய இளைஞர்களின் உடனடி வெற்றி ஆசைக்கு ஒரு முக்கிய காரணமாக மாறுகிறதா?

இந்த ஆய்வுக் கட்டுரை, வளர்ப்பு முறை, சமூக ஒப்பீடு, உளவியல் கோட்பாடுகள், மற்றும் வாழ்வியல் உதாரணங்கள் மூலம் இந்த கேள்விக்கு பதில் தேடுகிறது.


பகுதி 1: தோல்வியை மறுக்கும் வளர்ப்பு – உளவியல் விளக்கம்

1.1 “பாதுகாப்பு பெற்றோர்” (Overprotective Parenting)

சமீப காலங்களில் உருவான “Helicopter Parenting” என்ற சொல்லாக்கம், குழந்தையை எல்லா தோல்விகளிலிருந்தும் காப்பாற்ற முயலும் பெற்றோரைக் குறிக்கிறது.

Carol Dweck தனது Growth Mindset கோட்பாட்டில் கூறுவது:

“முயற்சியைப் பாராட்டாத சமூகம், திறமையை மட்டுமே பாராட்டும் போது, குழந்தை சவாலைத் தவிர்க்கும்.”

பேச்சுப்போட்டியில் தோற்ற குழந்தையை, “பரவாயில்லை, மீண்டும் முயற்சி செய்” என்று சொல்லாமல், அடுத்தமுறை சேர்க்காத பெற்றோர், குழந்தைக்கு மறைமுகமாக ஒரு செய்தி தருகிறார்கள்:

“நீ வெற்றி பெற்றால் மட்டுமே மதிப்பு உண்டு.”

இதனால் குழந்தையின் மனதில் உருவாகுவது:

  • தோல்வி = அவமானம்

  • போட்டி = அபாயம்

  • முயற்சி = ஆபத்து


1.2 உளவியல் அடையாள கட்டமைப்பு

Erik Erikson கூறிய Identity vs Role Confusion கட்டத்தில், இளைஞன் தன் அடையாளத்தை உருவாக்குகிறான்.

ஒரு குழந்தை பலமுறை போட்டியில் பங்கேற்கும் அனுபவத்தைப் பெறவில்லை என்றால், அவன் தனது திறமையை “வெற்றியின் அடிப்படையில்” மட்டுமே அளவிடத் தொடங்குகிறான்.


பகுதி 2: தோல்வி அனுபவம் இல்லாத மனம் – எதிர்காலத்தில் என்ன நடக்கும்?

2.1 உடனடி வெற்றியை மட்டுமே தேடும் மனப்பாங்கு

Angela Duckworth தனது “Grit” ஆராய்ச்சியில் கூறுகிறார்:

நீண்டகால சாதனையின் முக்கிய காரணம் திறமை அல்ல; தொடர்ந்து முயற்சி செய்யும் பொறுமை.

ஆனால் சிறுவயதில் தோல்வியை அனுபவிக்காத குழந்தை, “முயற்சி”யை விட “முடிவு”யை மட்டுமே மதிக்கும் மனப்பாங்கை உருவாக்கிக் கொள்கிறது.


2.2 தோல்வி பயம் மற்றும் பதட்டம்

Martin Seligman தனது “Learned Helplessness” கோட்பாட்டில் கூறுவது:

மீண்டும் முயற்சி செய்ய அனுமதி மறுக்கப்பட்ட குழந்தை,
“நான் முயற்சி செய்தாலும் பயன் இல்லை” என்ற மனநிலையை உருவாக்கிக் கொள்ளலாம்.

இதனால்:

  • போட்டியைத் தவிர்க்கும் பழக்கம்

  • தோல்வி அச்சம் (Performance Anxiety)

  • தன்னம்பிக்கை குறைவு

  • உடனடி பலன் தரும் குறுக்கு வழி தேடல்


பகுதி 3: வழக்குக் கதைகள் (Case Studies)

வழக்கு 1: அருண் – பேச்சுப்போட்டி அனுபவம்

அருண் 10 வயதில் பேச்சுப்போட்டியில் பங்கேற்றான். முதல் முறையில் பரிசு கிடைக்கவில்லை. பெற்றோர், “படிப்பை மட்டும் கவனிப்போம்” என்று கூறி, அவனை அடுத்தமுறை போட்டியில் சேர்க்கவில்லை.

20 வயதில், கல்லூரியில் பொதுவாக பேச வேண்டிய சூழலில் அவன் பதட்டம் அடைகிறான். காரணம்: தோல்வி அனுபவிக்க அனுமதி மறுக்கப்பட்டதால், “தோல்வி = நிறுத்தம்” என்ற மனச்சித்திரம் உருவானது.


வழக்கு 2: நித்யா – விளையாட்டு போட்டி

நித்யா மாவட்ட மட்ட போட்டியில் தோற்றாள். அடுத்த வருடம், அவளே போட்டியில் பங்கேற்க தயங்கினாள்.

ஏன்?
ஏனெனில் வீட்டில் “இந்த முறை வெற்றி பெற வேண்டும்” என்ற எதிர்பார்ப்பு மட்டுமே இருந்தது.

அவள் விளையாட்டை நேசித்தாள்; ஆனால் தோல்வி பயம், அவளை விளையாட்டை விட்டு விலகச் செய்தது.


பகுதி 4: சமூக ஊடக ஒப்பீடு

Instagram மற்றும் YouTube போன்ற தளங்கள் வெற்றியை மட்டுமே காட்சிப்படுத்துகின்றன.

யாரும் தோல்வியை பதிவிடுவதில்லை.

இதனால் இளைஞன் நினைப்பது:
“அனைவரும் வெற்றி பெறுகிறார்கள்; நான் மட்டும் ஏன் காத்திருக்க வேண்டும்?”


பகுதி 5: பெற்றோர் மனநிலை – உளவியல் பின்னணி

பெற்றோர் ஏன் இவ்வாறு செய்கிறார்கள்?

  1. சமூக அழுத்தம்

  2. தங்கள் நிறைவேறாத கனவுகளை பிள்ளைகளில் காண விரும்புதல்

  3. தோல்வி = திறமையின்மை என்ற தவறான நம்பிக்கை

  4. குழந்தை மனவேதனை அடையக் கூடாது என்ற அச்சம்

ஆனால் உண்மை என்னவெனில்:

கட்டுப்படுத்தப்பட்ட தோல்வி அனுபவம் = எதிர்கால மன வலிமை.


பகுதி 6: ஆராய்ச்சி ஆதாரங்கள்

  • Growth Mindset – முயற்சி பாராட்டு → உயர்ந்த சாதனை

  • Grit ஆய்வு – நீண்டகால முயற்சி → நிலையான வெற்றி

  • Self-Determination Theory (Deci & Ryan) – சுயமுனைவு வளர்ப்பு → ஆழ்ந்த உள் உந்துதல்

(Deci மற்றும் Ryan பற்றிய கோட்பாடு உளவியல் உலகில் Self-Determination Theory எனப் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.)


பகுதி 7: தீர்வுகள் – உளவியல் பரிந்துரைகள்

7.1 தோல்வியை சாதாரணமாக்குங்கள்

“நீ தோற்றாய்” என்பதற்குப் பதில்
“நீ கற்றுக் கொண்டாய்” என்று சொல்லுங்கள்.

7.2 முயற்சியைப் பாராட்டுங்கள்

“நீ எவ்வளவு முயன்றாய்?”
என்பதே முக்கியம்.

7.3 மீண்டும் பங்கேற்க ஊக்குவியுங்கள்

தோல்விக்குப் பிறகு அடுத்தமுறை போட்டியில் சேர்ப்பது –
மன வலிமைக்கு மிகப் பெரிய முதலீடு.

7.4 பெற்றோர் பயிற்சி

பெற்றோர்களுக்கே “வளர்ப்பு உளவியல்” பயிற்சி அவசியம்.


👉👉👉

இன்றைய இளைஞன் உடனடி வெற்றியை விரும்புகிறான்.
அவன் சோம்பேறி அல்ல.
அவன் பேராசைக்காரன் அல்ல.

அவன் தோல்வியை அனுபவிக்க கற்றுக்கொள்ளாதவன்.

கற்றுக்கொள்ளாதவன வாழக்கையில் வரும் தோல்விகளை எப்படி ஏற்றுக்கொள்வான்.

ஏற்றுக்கொள்ளாதவனே தோல்வியைக் கண்டு தற்கொலை நிலைக்குச் செல்கிறான்.

தோல்வியை மறுக்கும் வளர்ப்புதான்  அவனை வெற்றியை மட்டும் நாடும் மனிதனாக மாற்றுகிறது.

ஆனால் உண்மையான வெற்றி –
தோல்வியின் மேல் கட்டப்படும் ஒரு வீடு.

எனவே பிள்ளைகளை தோல்விகளையும் கற்றுக்கொள்ள அனுமதியுங்கள்.
🏁🏁🏁🏁🏁🏁🏁🏁🏁

👲-தீபம் உளவியல் உலகம் 

அண்ணலே அனாதியே: பிறப்புக்கு முன் நம் உண்மை நிலை

 


சிவவாக்கியரின் சிந்தனைகள் எண் : :28

அண்ணலே அனாதியே அனாதிமுன் அனாதியே

பெண்ணும் ஆணும் ஒன்றலோ பிறப்பதற்கு முன்னெலாம்

கண்ணில் ஆணின் சுக்கிலம் கருவில் ஓங்கும் நாளிலே

மன்னுளோரும் வின்னுளோரும் வந்தவாறு எங்ஙகனே

நான்கு படிகள்:

  1. கடவுளின் அனாதி சத்தியம் (1-ஆவது வரி).

  2. ஆன்மாவின் பிறவுக்கு முந்தைய சமநிலை (2-ஆவது வரி).

  3. உடல் தோற்றத்தின் உயிரியல்-ஆன்மீக சந்தி (3-ஆவது வரி).

  4. உலகளாவிய தொடர்பின் வியப்பு வினா (4-ஆவது வரி).

1. அனாதி அண்ணல்: காரணமற்ற, வரம்பற்ற ஆதாரம்

“அண்ணலே அனாதியே அனாதிமுன் அனாதியே”

  • அண்ணல்: எல்லாவற்றுக்கும் தலைவன், நடத்துபவன், அருளாளன்.

  • அனாதி: ஆரம்பம் இல்லாதவன் — காலம், காரணம், உருவம் எதுவும் இல்லாதவன்.

  • அனாதிமுன் அனாதியே: “அனாதிக்கு முன்னும் அனாதி” — ஏழும் மேலே ஏழு எனும் அளவுக்கு, எந்த அடிப்படையும் இல்லாத தூய சத்தியம்.

இதன் ஆழ்ந்த பொருள்: கடவுள் ஒரு “அரசன்” அல்ல, “நீதிமான்” அல்ல, “பரிகாரக் கடவுள்” அல்ல. அவர் எல்லா உயிர்களின் மூல இருப்பு — பிறப்பு-இறப்புக்கு முந்தைய, ஜாதி-மதங்களுக்கு அப்பாலான ஆதாரம்.

இன்றைய மூடநம்பிக்கையுடன் ஒப்பீடு:

  • பக்தி: “இந்த தெய்வம் கோபப்படும்; நான் இந்த பூஜை செய்யாவிட்டால் தண்டனை.”

  • மூடநம்பிக்கை: “இந்த ஜாதிக்கு இந்த மந்திரம், அந்த பாலினத்துக்கு வேறு வழிபாடு தான் சரி.”

  • சிவவாக்கியர்: கடவுள் யாருக்கும் தனியார் அல்ல; எல்லாருக்கும் பொதுவான அனாதி சத்தியம். பயமில்லை, புரிதல் தான்.

புத்தகத்திற்கான பாடம்: உண்மையான பக்தி, கடவுளை “எனக்கு உதவி செய்ய வேண்டியவர்” என பார்க்காது; “என்னுள் இருக்கும் ஆதாரத்தை உணர வைப்பவர்” என அறியும்.

2. பிறவுக்கு முந்தைய சமநிலை: ஆன்மாவின் அடையாளமின்மை

“பெண்ணும் ஆணும் ஒன்றலோ பிறப்பதற்கு முன்னெலாம்”

  • ஒன்றலோ: “ஒன்று தானே?” என்ற கேள்வி-உறுதிப்பாடு.

  • பிறப்பதற்கு முன்னெலாம்: உடல் உருவாகும் முன், ஆன்மா பாலினம், ஜாதி, மதம், குடி — எதுவுமின்றி சுத்த உணர்வாக இருக்கும்.

ஆழ்ந்த பொருள்: ஆன்மா நிர்விகல்ப நிலை — பெயர், உருவம், அடையாளம் இல்லாத ஒளி. உடல் பிறந்த பிந்து மட்டுமே “ஆண்/பெண்” என்ற வேடம் வரும்.

மூடநம்பிக்கையுடன் ஒப்பீடு:

  • “பெண்களுக்கு கோயில் நுழைவு தடை; இந்த ஜாதிக்கு இந்த வழிபாடு உரிமை இல்லை.”

  • “இந்த மதத்தவர் சொர்க்கம்; மற்றவர்கள் நரகம்.”

  • சிவவாக்கியர்: இவை உடல் வேடங்களை ஆன்மாவில் ஒட்டிக்கொள்ளும் தவறு. பிறவுக்கு முன் நீ “ஒன்றே”; அது உன் உண்மை.

புத்தகத்திற்கான பாடம்: ஆன்மிகம் என்பது அடையாளப் பாகுபாடுகளை உடைப்பது; “நான் யார்?” என்ற உள் தேடல்.

3. உடல் தோற்றம்: உயிரியல்-ஆன்மீக இணைப்பு

“கண்ணில் ஆணின் சுக்கிலம் கருவில் ஓங்கும் நாளிலே”

  • கண்ணில் ஆணின் சுக்கிலம்: ஆணின் விந்து (sperm).

  • கருவில் ஓங்கும்: பெண்ணின் கருப்பையில் (ovum) உயிர் உருவாவது.

  • நாளிலே: அந்த சரியான தருணத்தில்.

ஆழ்ந்த பொருள்: அறிவியல் உண்மை (fertilization) + ஆன்மீகம் — அனாதி ஆன்மா உடல் வடிவம் எடுக்கிறது. இது தெய்வீக அபிஷேகம் — பரம்பொருள் ஒரு ஜீவனாக வெளிப்படுகிறது.

மூடநம்பிக்கையுடன் ஒப்பீடு:

  • “கருவுக்கு தோஷம்; இந்த நகை/மந்திரம் இல்லையெனில் பிரச்சனை.”

  • “ஜாதகம் பார்த்து குழந்தை நல்லது/கெட்டது.”

  • சிவவாக்கியர்: பயமில்லை; இது புனித நிகழ்வு. உயிர் வருவது சத்தியத்தின் வெளிப்பாடு.

புத்தகத்திற்கான பாடம்: அறிவியல் உடலைக் கூறும்; ஆன்மிகம் அதன் பின்னுள்ள புனிதத்தைக் கூறும்.

4. உலகளாவிய தொடர்பு: பிறப்பின் அற்புத வினா

“மன்னுளோரும் வின்னுளோரும் வந்தவாறு எங்ஙகனே”

  • மன்னுளோர்: மனித உலகம் (பூமி).

  • வின்னுளோர்: தெய்வ உலகம் (வானம், உயர்நிலைகள்).

  • எங்கனே: “எப்படி?” என்ற வியப்பு-வினா.

ஆழ்ந்த பொருள்: ஒரு உயிர் பிறப்பது உலக யாகம் — பூமியும் வானமும் ஒத்திசைவு கொண்டு பங்கேற்கின்றன.

மூடநம்பிக்கையுடன் ஒப்பீடு:

  • “இந்த நட்சத்திரம் தீயது; திதி சரியில்லை.” / தீட்டு தொடக்கு என்று பிறப்பினை கேவலப்படுத்தி ஒதுக்கி வைப்பது 

  • சிவவாக்கியர்: அற்புதத்தை பயமாக்காதே; வியந்து உணர்ந்திடு.

மூடநம்பிக்கை vs சிவஞானம்: விரிவான ஒப்பீடு

அம்சம்மூடநம்பிக்கை பக்திசிவவாக்கியர் ஞானம்ஆன்மிகப் பாடம்
கடவுள்கோபம், பரிகாரம் தேவை; ஜாதி-மதப் பாரபட்சம்அனாதி ஆதாரம்; எல்லாருக்கும் கருணைபயம் அல்ல, புரிதல்
அடையாளம்பாலின-ஜாதி வழிபாட்டு உரிமை வரம்பிடும்பிறவுக்கு முன் ஒன்றே; சமம்வேடங்கள் தற்காலிகம்
கரு-பிறப்புதோஷம், ஜாதகம், நகை-மந்திரப் பரிகாரம்தெய்வீக தோற்றம்; புனித நிகழ்வுஅறிவியல்+ஆன்மிக இணைப்பு
பக்தி நோக்கம்வரம் பெறுதல், பாவம் தவிர்த்தல்தன்னறிவு, உள் ஒளி அறிதல்ஞானப் பயணம்

இன்றைய மனிதனுக்கு ஐந்து உள் கேள்விகள்

  1. கடவுளை பயப்பட வேண்டியவராகவா, உன் ஆதாரமாகவா காண்கிறாய்?

  2. உன் அடையாளங்கள் உன்னை சிறைப்படுத்துகின்றனவா?

  3. பிறப்பை தோஷமாகவா, அற்புதமாகவா உணர்கிறாய்?

  4. பக்தி உன்னை வெளியே சுற்றவிடுகிறதா, உள்ளே செல்ல வழியாகுமா?

  5. மூடநம்பிக்கை உன் ஞானத்தை மூடுகிறதா?

இறுதி ஞான வாக்கு: “பிறப்புக்கு முன் இருந்த அனாதி நீயே இன்றும் நீ; அதை உணர்ந்தால், வாழ்வு ஞானமாகும்.” சிவவாக்கியரின் இப்பாடல், அந்த விழிப்புணர்வின் விளக்கமாம்.


💼-தீபம் ஆன்மிக வளம்