"அறிவியல் நோக்கில்....பகுதி-27C -"பெளத்தம் ஒரு அலசல்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய  இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" [In Tamil & English]

 


பகுதி: 27 C / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'அசோக மன்னன் திஸ்ஸனுடனான நட்பைப் பற்றிய எந்தப் பதிவையும் தனது கல்வெட்டுக்கள் எதிலும் ஏன் பதியவில்லை' [தமிழ் விரிவாக்கம் தொடர்கிறது]

 


வரலாற்று அறிஞர்களின் கூற்றின் படி, சேர [கேரள] மற்றும் பாண்டிய [மதுரை] மன்னர்களின் சத்திவாய்ந்த செல்வாக்கு இலங்கை மேல், கிருஸ்துக்கு முன்பே இருந்து கி பி 300 ஆண்டு வரை இருந்துள்ளது. அந்த கால பகுதியில் கேரள மக்கள் பேசிய மொழி தமிழாகும். பின்பு காலப்போக்கில் சேர நாட்டுத் தமிழ் மொழியில் வட்டார வேறுபாடுகள் அதிகமாகி, தமிழுடன் சமஸ்கிருதத்தைக் கலந்து, மலையாளம் என்ற தனி மொழி பிறந்தது. இலங்கைக்கும் தமிழ் நாட்டிற்கும் இடையில் உள்ள தூரம் ஆக 30 கிலோமீட்டர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கலாநிதி ஒபேயசேகர [Dr Obeysekere ] இலங்கைக்கும் கேரளத்திற்கும் உள்ள தொடர்பை பத்தினி தெய்வ வழிபாடு [ கண்ணகி வழிபாடு] மற்றும் தாய் வழி அமைப்பு [matrilineal system] மூலம் அலசுகிறார். மேலும் அவர் தாய் வழி அமைப்பு தெற்கு சிங்களவர்களிடமும் முன்பு இருந்து, ஆனால் பின்பு தந்தை வழி அமைப்பால் மாற்றம் செய்யப் பட்டது என்கிறார். [According to Dr Obeysekere, the matrilineal system existed in the Sinhala-speaking South also, but was supplanted by the patrilineal system]. மேலும் அவர், பத்தினி தெய்வ வழிபாட்டை கேரளத்து தமிழ் மொழி பேசும் புத்த சமய வர்த்தகர்களாலும் மற்றும் மற்றவர்களாலும், குறிப்பாக வஞ்சி [Tamil-speaking Kerala Buddhist traders and other immigrants from the Vanchi area] பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டதாக கூறுகிறார். குறிப்பாக இரண்டு கேரளா வர்த்தக குடும்பம், மெஹனாவரா மற்றும் அழகக்கோனார் அல்லது அழகக்கோன் குடும்பங்கள் இதில் ஈடுபட்டதாக கூறுகிறார். இதில் இன்று சிங்களவர்களில் காணப்படும் அழகக்கோன் குடும்பங்கள் இவர்களின் வாரிசு என்கிறார் [two trader families of Kerala origin, namely, the Mehenavara and the Alagakonara (the Alagakones of today are probably their descendents)], மேலும் பத்தினி தெய்வம் பற்றிய சிங்கள பாடலின் மூலம் தமிழ் என்கிறார் [Dr Obeysekere says that the Sinhala songs related to the Pattini cult were originally in Tamil].

 


சுருக்கமாக, விஜயன் முதல் துட்டகைமுனு வரை, எல்லாளன் உட்பட,  மொத்தம் 396 ஆண்டுகள் ஆட்சி செய்தவர்கள் கற்பனையான மன்னர்கள் போலவே தோன்றுகிறது.  இக்காலத்தில் அரசர்கள் இல்லை என்பதல்ல. அரசர்கள் அல்லது தலைவர்கள் இருந்திருக்க வேண்டும், ஆனால் அவர்களின் பெயர்கள், இலங்கை ஆட்சிக்கு ஒரு பௌத்த சாயலைக் கொடுப்பதற்காக தியாகம் செய்யப்பட்டுள்ளன என்று நம்புகிறேன். தேவநம்பிய திஸ்ஸா என்பது இந்தியப் பேரரசர் அசோகரின் பிரதி அல்லது நகல். அசோகனும் தேவநம்பிய திஸ்ஸ என்ற இரண்டாவது மகன். தேவநம்பிய திஸ்ஸ 40 வருடங்கள் ஆட்சி செய்ததாக இலங்கை வரலாற்று நூல் கூறுகிறது. அசோகர் இந்திய மரபுப்படி 40 ஆண்டுகள் ஆட்சி செய்தார். அசோகன் மாதிரி, ‘தேவானம்பிய’  என்ற அடைமொழியுடன், இலங்கையில் திஸ்ஸ மட்டுமே இடுந்தாரென இலங்கை நூல் கூறுகிறது. அசோகனுக்கும் திசாவுக்கும் இருந்ததாகக் கூறப்படும் நட்பு தமிழ்நாட்டில் இருந்த நட்பின் நகல் என்று இலகுவாகக் கூறலாம். அந்த நட்பு தமிழ்ப் புலவர் பிசிராந்தியாருக்கும்,  கிள்ளி என்ற பெயரால் அழைக்கப்பட்ட, தமிழ் மன்னன் கோப்பெருஞ்சோழனுக்கும் இடையே இருந்தது போல, நேரில் காணாமலேயே நட்பு கொண்டனர். என்றாலும் அசோக மன்னன் திஸ்ஸனுடனான நட்பைப் பற்றிய எந்தப் பதிவையும் தனது கல்வெட்டுக்கள் எதிலும் பதியவில்லை என்பதும், மற்றும் எந்த அசோகன் வாழ்ந்த மண்ணின் வரலாற்றில் அல்லது புராணத்திலோ குறிப்பிடவில்லை என்பது முக்கியமாகும். மாறாக சங்ககால நண்பர்களின் குறிப்பு சங்கப்பாடலில் உள்ளத்தையும் கவனிக்க.

 

முதுமையினால் ஏற்படும் துன்பம், வேதனை, அவமானம் இவைகளை மக்கள் விரும்பாமல் ஒதுக்குப்புறமான இடத்திற்குச் சென்று வடக்கு நோக்கி அமர்ந்து கொள்ளும் வழக்கம் தமிழகத்தில் அன்று இருந்தது; அதன்படி,  இறக்கும் வரை உணவைத் தவிர்த்து, சோழ மன்னன் இறக்க முடிவு செய்து மேலும் சிலருடன் வடக்கு நோக்கி அமர்ந்தான். மன்னர், தான் இறப்பதற்கு முன், தனது கவிஞர் நண்பர் தன்னைப் பார்க்க வருவார் என்று நம்பினார். கவிஞர் இதை உணர்ந்து அந்த இடத்திற்கு விரைந்தார், ஆனால், துரதிர்ஷ்டவசமாக, மன்னர் தனது கவிஞர் நண்பரைக் காணாமல் இறந்துவிட்டார். பிசிராந்தையார் தனது உணர்ச்சிவசப்பட்ட அரச நண்பரின் நினைவாக எழுப்பப்பட்ட நினைவுக் கல்லைக் கண்டு, அங்கேயே வடக்கு நோக்கி அவரும் அமர்ந்து இறந்தார்.

 

 

 

நன்றி 

Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna]

பகுதி / Part: 28 தொடரும் / Will follow

 

 

40+ வயதில் கருத்தரித்தல்:

-சவால்களும் தீர்வுகளும்

தற்கால சூழலில் பெண்கள் தங்கள் இலக்குகளை அடைந்த பிறகு, 40 வயதிற்கு மேல் தாய்மையடைவது அதிகரித்து வருகிறது. இருப்பினும், இந்த வயதில் கருத்தரிப்பது சில தனித்துவமான உடல் மற்றும் உயிரியல் சவால்களைக் கொண்டுள்ளது.

1. தாய் மற்றும் சேய்க்கு ஏற்படக்கூடிய முக்கிய சிக்கல்கள்

40 வயதிற்குப் பிறகு கருத்தரிக்கும் போது பின்வரும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர் எஸ்.என். பாசு மற்றும் ஷிவானி கார்க் குறிப்பிடுகின்றனர்:

  • உயர் இரத்த அழுத்தம்: இது தாய்க்கும் குழந்தைக்கும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கலாம்.
  • கர்ப்பகால நீரிழிவு: சர்க்கரை அளவு அதிகரிப்பதால் குழந்தையின் எடை கூடுதல் மற்றும் பிறந்த பின் குழந்தைக்கு மஞ்சள் காமாலை ஏற்பட வாய்ப்புள்ளது.
  • கருச்சிதைவு: இந்த வயதில் கருச்சிதைவு ஏற்படும் அபாயம் 30-40% வரை அதிகரிக்கிறது.
  • குரோமோசோம் குறைபாடுகள்: குறிப்பாக டவுன் சிண்ட்ரோம் பாதிப்பு ஏற்பட 100-ல் 1 வாய்ப்பு உள்ளது.
  • வளர்ச்சித் தடைகள்: நஞ்சுக்கொடி (Placenta) சரியாக அமையாததால் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படலாம்.

2. அபாயங்களைக் குறைப்பதற்கான மருத்துவத் தீர்வுகள்

அபாயங்களை முழுமையாகத் தவிர்க்க முடியாவிட்டாலும், சரியான திட்டமிடல் மூலம் ஆரோக்கியமான பிரசவத்தை உறுதி செய்ய முடியும்:

வகை

பரிந்துரைக்கப்படும் நடவடிக்கைகள்

பரிசோதனைகள்

இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, தைராய்டு, KFT, LFT மற்றும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்.

சத்துக்கள்

ஃபோலிக் அமிலம் (Folic Acid), இரும்புச்சத்து, வைட்டமின் டி மற்றும் DHA மாத்திரைகள்.

வாழ்க்கை முறை

புரதம், ஒமேகா-3 நிறைந்த உணவுகள்; புகைப்பிடித்தல் மற்றும் மதுவைத் தவிர்த்தல்.

உடற்பயிற்சி

நடைபயிற்சி, நீச்சல், யோகா (கடுமையான விளையாட்டுகளைத் தவிர்க்கவும்).


3. கருவுறுதல் திறன் மற்றும் அறிவியல் முன்னேற்றங்கள்

  • இயற்கை கருத்தரிப்பு வாய்ப்பு: 40 வயதில் ஒரு மாதவிடாய் சுழற்சியில் கருத்தரிக்கும் வாய்ப்பு வெறும் 5% மட்டுமே.
  • AMH சோதனை: கருமுட்டைகளின் தரத்தை அறிய Anti-Müllerian Hormone (AMH) சோதனை அவசியம்.
  • ஆண்களுக்கான பரிசோதனை: 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் தங்கள் விந்தணு தரத்தைச் சோதிப்பது அவசியம்.

நவீன பரிசோதனை முறைகள்:

  1. NIPT (Non-Invasive Prenatal Testing): குரோமோசோம் குறைபாடுகளைக் கண்டறிய.
  2. NT Scan: முதல் மூன்று மாதங்களில் செய்யப்படும் ஸ்கேன்.
  3. Amniocentesis: தேவைப்பட்டால் செய்யப்படும் மரபணுப் பரிசோதனை.

4. எச்சரிக்கை அறிகுறிகள் (உடனடி மருத்துவ உதவி தேவைப்படுபவை)

கீழ்க்கண்ட அறிகுறிகள் தெரிந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்:

  • கடுமையான வயிற்று வலி அல்லது இரத்தப்போக்கு.
  • பார்வை மங்குதல் அல்லது உடலில் திடீர் வீக்கம் (Pre-eclampsia அறிகுறிகள்).
  • 20 வாரங்களுக்குப் பிறகு குழந்தையின் அசைவு குறைதல்.
  • தொடர் காய்ச்சல்.

குறிப்பு: இந்திய இலங்கைப் பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் சராசரி வயது (45-49) மேற்கத்திய நாடுகளை விடக் குறைவாக இருப்பதால், வைத்தியர் ஆலோசனையுடன் காலத்தே திட்டமிடுதல் மிக முக்கியமானது.


பிபிசி மருத்துவ ஆய்வுக் கட்டுரைகளின் சாரம் /நன்றி பிபிசி  

மனம்: ஒரு மாயக் கண்ணாடி

மூளையின் துடிப்பும் பிரபஞ்சத்தின் அலைவரிசையும்


"மனம் ஒரு குரங்கு" என்பார்கள். ஆனால், அந்தக் குரங்குதான் மனித நாகரிகத்தின் நாயகன். இத்தனை கால வளர்ச்சியில் மனிதன் கண்டடைந்த ஆகப்பெரிய விந்தை அவனது 'மனம்'. ஆனால், உண்மையில் மனம் என்பது எங்கே இருக்கிறது? அது வெறும் நரம்புகளின் கூட்டமைப்பா அல்லது எல்லைகளற்ற பிரபஞ்சத்தின் அங்கமா?

 

1. உயிரியல் கண்ணாடி: மூளையின் நடனம்

அறிவியல் ரீதியாகப் பார்த்தால், மனம் என்பது மூளையின் ஒரு செயற்பாடு (Function). கணினித் திரையில் நாம் காணும் படங்கள் எப்படி உள்ளே இருக்கும் 'சிப்' (Chip) மற்றும் மின்சுற்றுகளின் விளைவோ, அப்படித்தான் மனமும்.

 

உதாரணம்: ஒரு இனிமையான இசையைக் கேட்கும்போது, மூளையில் 'டோபமைன்' (Dopamine) சுரக்கிறது. அந்த வேதியியல் மாற்றத்தை நாம் 'மகிழ்ச்சி' என்று பெயரிட்டு அழைக்கிறோம்.

 

கோபம் வரும்போது இதயத்துடிப்பு அதிகரிப்பதும், பயப்படும்போது உள்ளங்கை வியர்ப்பதும் மூளை தரும் கட்டளைகளே. இங்கு மனம் என்பது ஒரு உயிரியல் மென்பொருள் (Biological Software).

 

2. வாழ்வியல் உண்மை: ஒரு உணர்வுத் தளம்

மூளை என்பது வன்பொருள் (Hardware) என்றால், மனம் என்பது அதில் ஓடும் மென்பொருள். மூளை சிதைந்தால் மனம் சிதைகிறது என்பது உண்மைதான். ஆனால், மனம் என்பது வெறும் சதைப்பிண்டம் மட்டுமல்ல. அது நாம் சேமித்து வைத்திருக்கும் நினைவுகள், அனுபவங்கள் மற்றும் கற்பனைகளின் தொகுப்பு.

 

3. ஆன்மீக மற்றும் குவாண்டம் பார்வை: பிரபஞ்ச வெளிப்பாடு

அறிவியலுக்கு அப்பாற்பட்ட தத்துவவாதிகளும், நவீன குவாண்டம் இயற்பியலாளர்களும் ஒரு கருத்தை முன்வைக்கிறார்கள்: "மனம் என்பது வானொலிப் பெட்டி போன்றது."

 

வானொலிப் பெட்டி (மூளை) இசையை உருவாக்குவதில்லை; காற்றில் பரவியிருக்கும் அலைகளை (பிரபஞ்ச சக்தி) அது உள்வாங்கி ஒலியாக மாற்றுகிறது.

 

உதாரணம்: நீங்கள் ஒருவரைப் பற்றி நினைக்கும் அதே கணத்தில் அவரிடமிருந்து அழைப்பு வருவது, அல்லது ஒரு அசம்பாவிதம் நடப்பதற்கு முன் உங்கள் உள்ளுணர்வு எச்சரிப்பது போன்றவை உங்கள் மனம் இந்த பிரபஞ்ச அலைவரிசையோடு இணைந்திருப்பதன் சான்றுகள்.

 

4. மனதை ஆளுமைப்படுத்துவது எப்படி?

மனம் என்பது மூளையின் இயக்கமா அல்லது பிரபஞ்சத்தின் வெளிப்பாடா என்ற விவாதம் ஒருபுறம் இருக்கட்டும். நடைமுறை வாழ்க்கையில் அது ஒரு கருவி.

 

நேர்மறை எண்ணங்கள்: ஒரு இருட்டு அறையில் விளக்கேற்றினால் இருள் மறைவது போல, நல்ல எண்ணங்கள் மூளையின் நியூரான்களை (Neurons) ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

 

பயிற்சி: மூளை ஒரு தசை (Muscle) போன்றது. தியானம் மற்றும் வாசிப்பின் மூலம் மனதை நாம் விரும்பியபடி செதுக்க முடியும்.

 

👉

சுருக்கமாகச் சொன்னால், மனம் என்பது மூளை எனும் மேடையில் பிரபஞ்ச சக்தி நிகழ்த்தும் ஒரு நாடகம். உடல் அதற்குத் தேவையான ஆற்றலை வழங்குகிறது; பிரபஞ்சம் அதற்குத் தேவையான உணர்வுகளை வழங்குகிறது.

 

நம் எண்ணங்கள் செம்மையானால், நம் வாழ்வு மட்டுமல்ல, இந்தப் பிரபஞ்சமே நமக்காக இயங்கும். உங்கள் மனதை ஒரு போர்வீரனாக அல்ல, ஒரு தோட்டக்காரனாக மாற்றுங்கள். அப்போதுதான் உங்கள் வாழ்க்கை நந்தவனமாகும்.

 

🚩 தீபம் உளவியல்