"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look
at 'Lanka chronicles' from a scientific perspective" [In Tamil &
English]
[This detailed Tamil article is based on the
unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr.
Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own
version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]
பகுதி: 42 / பின் இணைப்பு - தீபவம்சம் / 'தகனத்திற்குப் பிறகு, எஞ்சியிருக்கும் எலும்புகளை, அந்த பண்டைய காலத்தில் 84,000 பகுதிகளாகப் பிரிக்க முடியுமா?'
தீபவம்சத்தில், மிக நீண்ட காலம் வாழ்ந்து நான்கு முன்னால் புத்தர்களிடம் உடனிருந்த கொண்ட, ஒரு பெரிய நாகாவைப் [great Naga] பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பெரிய நாகர், தங்கச் சங்கிலி அணிந்து, அசோகரைப் பார்க்க வந்தான். இவர் நான்கு புத்தர்களை சந்தித்து, அதன் பிறகு, அசோகரைச் சந்திக்கும் வரை வாழ்ந்தார் என்பதில் இருந்து, இது முற்றிலும் ஒரு புராணக்கதை என்று தெரிகிறது. என்றாலும், நாகர்கள் இலங்கையிலிருந்து மகத வரையிலும், வடக்கே ஆப்கானிஸ்தானிலும் கூட வாழ்ந்தனர் என்பதை இந்தத் தகவல் ஒப்புக் கொள்கிறது. அது மட்டும் அல்ல, புத்த மதம் சித்தார்த்த கௌதமருக்கு பிறகே தோன்றியது, அப்படி என்றால் அவருக்கு முன்னைய மூன்று புத்தர்களையும் [?] புத்தர் என்று அழைப்பதின் காரணம் என்ன? எனக்குப் புரியவில்லை?
அசோகர் தனது முடிசூட்டுக்கு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, [6-18] புத்த மதத்திற்கு மாறினார். அவர் அதற்கு முன், பசண்டா, அதாவது, புத்த மதம் அற்ற ஒரு
மதத்தைப் பின்பற்றினார். [Pasanda religion /
"Pasanda" in this context refers to heretical or non-Buddhist
religious sects, often used in Pali and Sanskrit literature to describe
different ascetic or Brahmanical traditions. / "பசண்டா" என்பது புத்தமதமற்ற மதப் பிரிவுகளைக் குறிக்கிறது, இது பாளி மற்றும் சமஸ்கிருத இலக்கியங்களில் வெவ்வேறு துறவி அல்லது பிராமண மரபுகளை விவரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.]. இந்த "பசண்டா" 6-24 இல் கூறப்பட்டுள்ளது. பல்வேறு சமயங்களைக் அல்லது கொள்கைகளைக் பின்தொடரும் பலரை அழைத்து, உண்மையான கோட்பாட்டைக் கண்டறிய அவர்களிடம் அசோகர் விசாரித்தார். ஆனால் எல்லோரும் அவரை நம்பிக்கைப்படுத்த தவறிவிட்டனர். அவ்வேளை, அசோகன் ஒரு இளம் அலைந்து திரிந்த சந்நியாசியை அல்லது ஒரு அருகதர் துறவியை [நிக்ரோதாவைக் / Nigrodha] கண்டு, அவனைத் தன் அரண்மனைக்குள் அழைத்து வந்தார். அருகதர் (Arhat or Arahant) என்பதற்கு, ஆன்மீக ஞான ஒளி (நிர்வாணம்) அடைவதற்கு மிகவும் தகுதியானவர் (one who is worthy) அல்லது மிகச் சரியான மனிதர் என்று தேரவாத பௌத்தப்பிரிவு கருத்து கூறுகிறது. அசோகர், தான் இதுவரை தேடிக்கொண்டு இருந்த, மரியாதைக்குரியவராக அந்த அருகதர் துறவியை மதிப்பிட்டார். அதனால், விரைவில், அவன், அசோகரின் ஆன்மீக வழிகாட்டி ஆனான்.
கோட்பாட்டில் 84,000 பிரிவுகள் இருப்பதாக அசோகர் அவனிடம் இருந்து அறிந்து கொண்டார். எனவே, ஒவ்வொரு நகரத்திலும் கோட்பாட்டின் ஒவ்வொரு பிரிவுக்கும் ஒன்று வீதம், 84,000 மடங்களைக் கட்ட அசோகர் முடிவு செய்தார். அது மட்டும் அல்ல இந்த 84,000 மடங்கள் மூன்று ஆண்டுகளில் கட்டப்பட்டன; சராசரியாக ஒரு நாளைக்கு எழுபத்தேழு மடங்கள்? அந்த பண்டைய நாட்களில் இந்த விகிதத்தை அடைவது மிகவும் சாத்தியமற்றது? ஆகவே தான், இது ஒரு உண்மையான,
எளிமையான புராணமாக இருக்க வேண்டும் என்று நம்புகிறேன்.
இந்த புராணக்கதை பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. அதாவது, புத்தர் தகனம் செய்யப்பட்டபோது, புத்தரின் தாதுக்களைப் (relics) பெறுவதற்கான உரிமைக்கான உரிமைகோரல்கள் மற்றும் எதிர் உரிமைகோரல்கள் இருந்தன, மேலும் மன்னர்கள் தங்கள் கோரிக்கைகளை இராணுவத்துடன் ஆதரிக்கத் தயாராக இருந்தனர். இங்கு புத்தரின் நினைவுச்சின்னங்கள் என்பது, கௌதம புத்தரின் மரணத்திற்குப் பிறகு (பரிநிர்வாணம்) அவருடன் தொடர்புடைய உடல் எச்சங்கள் ஆகும். அதாவது, அப்போது, அங்கிருந்த துரோணன் என்னும் பார்ப்பனன், அவர்களை அமைதிப்படுத்தி, புத்த தாதுவைப் பல இடங்களுக்கு அனுப்பினால், அத்தாதுக்களின் மேல் சேதியங்களை அமைத்துக் கொண்டாடுவார்கள்; அதனால் பகவன் புத்தருடைய புகழும் பெருமையும் உலகெங்கும் பரவும் என்று பரிந்து பேசி, எச்சங்களை எட்டுப் பகுதிகளாகப் பிரித்து உரிமை கோருபவர்களுக்கு கொடுத்தார். ஒரு பகட்டான, ஆடம்பர விழாவுடன் நினைவுச் சின்னங்களை அவர்கள் தங்கள் தங்கள் நாடுகளுக்கு எடுத்துச் சென்று ஸ்தூபிகளில் பதித்துள்ளனர். இது
'Gandharan Buddhist Reliquaries By David Jongward, Elizebeth Errington,
Richard Saloman and Stefans Baums'' என்ற புத்தகத்தின் அத்தியாயம் 2 இல் இது விவரிக்கப்பட்டுள்ளது. அசோகர் 84,000 மடங்களைக் கட்ட முடிவு செய்தபோது, அவர் மீண்டும் நிலத்தை அகழ்ந்து, முன்பு நிலத்தின் கீழ் புதைத்த ஏழு இடங்களில் இருந்து நினைவுச்சின்னங்களைப் பெற்றார். என்றாலும் நாகர்கள் வசம் இருந்த எட்டாவது புத்தரின் தாதுப் பகுதியை அவரால் பெற முடியவில்லை. ஆனால், பேரரசர் அசோகா தோல்வியுற்ற அந்த எட்டாவது புத்தரின் தாதுவை, துட்டகாமினி, நாகரின் பாதாள உலகத்திலிருந்து பெற்றதாக மகாவம்சம் பெருமையாக கூறுகிறது. இது சம்பந்தமாக மகாவம்சத்தின் முப்பத்தொன்றாம் அத்தியாயத்தைப் பார்க்கவும்.
மேலும்,
'Gandharan Buddhist Reliquaries By David Jongward, Elizebeth Errington,
Richard Saloman and Stefans Baums' என்ற புத்தகத்தின் அத்தியாயம் 1-ன் பக்கம் 5-ல், 'பாளி மரபுப்படி, சாம்பலோ அல்லது புகைக் கரியோ
இல்லாமல், தகனம் செய்தபின், எலும்பு துண்டுகள் தவிர, எதுவும் எஞ்சியிருக்கவில்லை' [‘According to Pali tradition
nothing was left after the cremation except of bits of bone, without any ashes
or soot’] என்று கூறப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் எலும்புகளை 84,000 பகுதிகளாகப் பிரிக்கும் தொழில்நுட்பம் இருந்திருக்காது, ஒருவேளை இப்போது கூட இன்னும் சாத்தியமில்லை என்றே நம்புகிறேன். அதுவும் முதலில் எட்டு பகுதிகளாகப் பிரித்து [இது கட்டாயம் சாத்தியம்], அதில் புதைத்த ஏழு பகுதிகளை, 200 ஆண்டுகளுக்குப் பின் தோண்டி எடுத்து?, அவையை 84,000 சம பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது என்பது ஏற்கக்கூடியதாகத் தெரியவில்லை?
உங்களுக்கு இதற்கு ஏற்ற விடைகள் இருக்குமாயின் சொல்லுங்கள்.
*ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக..
Part: 42 / Appendix – Dipavamsa / 'Is possible to divide the bit of
bones, left after the cremation into 84,000 portions at that time, probably
even now?'
It is also mentioned about the great Naga who lived for very
long and have attended to four former Buddhas. This great Naga, wearing gold
chain, came to see Asoka. This is purely a legend, but, however, acknowledges
that Nagas were living from Lanka to as far as Magadha, even further north to
Afghanistan. Asoka converted to Buddhist faith three years after his
coronation, 6-18. He followed Pasanda religion prior to that, 6-24. Asoka
invited many people from various followings, and questioned them to find the
true doctrine. All failed to convince him. Asoka happened to see young
Nigrodha, and brought him inside his palace.
He assessed him to be a venerable one whom he was searching for. He
became the spiritual guide of Asoka. Asoka learnt from Nigrodha that there were
84,000 sections in the doctrine. Asoka
decided to construct 84,000 monasteries, one for each sections of the Faith in
each town. These monasteries were constructed in three years; on average about
seventy seven monasteries a day. This rate is quite impossible to achieve in
those days, and it must be a pure and simple legend. The Dipavamsa is missing a point in the
legend of Asoka building 84,000 monasteries widely believed in India. See the
page 6 of the Reference 'Gandharan Buddhist Reliquaries By David Jongward,
Elizebeth Errington, Richard Saloman and Stefans Baums' in this regard, and the legend is as follows.
When Buddha was cremated, there were claims and counter claims to the right of
receive the relics of the Buddha, and the kings were ready to back up their
claims with armies. A Brahman named Drona interceded and divided the remains
into eight portions to the eight claimants. They took the relic in reliquaries
with pomp and pageantry to their countries and enshrined in Stupas. This is
detailed in the chapter 2 of the Reference 'Gandharan Buddhist Reliquaries By
David Jongward, Elizebeth Errington, Richard Saloman and Stefans Baums'. When
Asoka decided to construct 84,000 monasteries, he re-excavated and obtained the
relics from seven locations. He was unable to obtain the portion which was in
the possession of the Nagas. Mahavamsa states that Dutthagamani was able to
obtain this relic portion from the Naga’s underworld to subtly indicate that
Dutthagamani succeeded where the Emperor Asoka failed. See the chapter thirty
one of the Mahavamsa in this regard. Furthermore, it is stated in the page 5 of
the Chapter 1 of the Reference 'Gandharan Buddhist Reliquaries By David
Jongward, Elizebeth Errington, Richard Saloman and Stefans Baums' that ‘According to
Pali tradition nothing was left after the cremation except of bits of bone,
without any ashes or soot’. The technology must not have been there to divide
the bit of bones into 84,000 portions at that time, probably not possible even
now.
நன்றி
Thanks
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
பகுதி / Part: 43 தொடரும் / Will follow