"அறிவியல் நோக்கில்....[பகுதி-43] பெளத்தம் ஒரு அலசல்''

"அறிவியல் நோக்கில் '

இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய  இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" /

 "A look at 'Lanka chronicles' from a scientific perspective"

[In Tamil & English]

 


[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

 

பகுதி: 43 / பின் இணைப்பு - தீபவம்சம் / 'தேவி அரண்மனையில் வசிக்கத் தகுதியற்றவள் என்றால், அவளுடைய குழந்தைகள் அங்கே தங்குவதற்கு எப்படித் தகுதியானவர்கள்?'

 

உச்சைன் (உஜ்ஜைன் / Ujjain) மத்திய இந்தியாவின் மால்வாப் பகுதியில் அமைந்துள்ள பழைய நகரமாகும். இதனை உஞ்சேனை என்று திருநாவுக்கரசர் தேவாரத்திலும் உஞ்சை எனத் தமிழ்ப்படுத்திப் பெருங்கதை என்னும் நூல் வழங்குகிறது.

 

'உஞ்சேனை மாகாளம், ஊறல், ஓத்தூர்,

             உருத்திரகோடி, மறைக்காட்டுள்ளும்,

மஞ்சு ஆர் பொதியில் மலை, தஞ்சை,

       வழுவூர்-வீரட்டம், மாதானம், கேதாரத்தும்,'

 

[திருநாவுக்கரசர் தேவாரம்]

 

இன்றைய மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள இது சிப்ரா ஆற்றின் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது. உஜ்ஜையினி என்னும் பெயரில் இந்நகரம் பற்றிய குறிப்பு புத்தர் காலத்திலிருந்தே கிடைக்கிறது. அக்காலத்தில் இது அவந்தி நாட்டின் தலைநகரமாக இருந்தது. பிற்காலத்தில் மௌரியப் பேரரசனான அசோகர் மௌரியப் பேரரசின் மேற்கு மாகாண இராஜப்பிரதிநிதியாக [viceroy] இருந்தபோது உஜ்ஜயினியிலேயே வாழ்ந்தான். அப்பொழுது உஜ்ஜேனியில் வசூல் செய்யும் பொறுப்பு இளவரசர் அசோகரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் அங்கு, தேவி என்ற ஒரு சேத்தி [Setthi [wealthy merchant] / பண்டைய படிநிலை இயல்பு கொண்ட நான்கு சமூகப் பிரிவுகளுள் ஒன்றான, வைசியர் பிரிவில் வணிக சமூகத்தை சேர்ந்தவள் இவள்] பெண்ணைச் சந்தித்தார். அவர்கள் ஒன்றாக அங்கு வாழ்ந்தனர். இவர்களுக்கு மகிந்த என்ற மகனும், சங்கமித்தா என்ற மகளும் பிறந்தனர். மகிந்தவும் சங்கமித்தாவும் தங்கள் தந்தையுடன் பாடலிபுத்திரத்தில் உள்ள அரண்மனைக்கு சென்றனர், என்றாலும் தாய் தேவி அங்கு போக முடியவில்லை. தேவி வணிக சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும், எனவே, அரண்மனையில் வசிக்கத் தகுதி அற்றவர் என்றும் கருதப் பட்டது  என்று கூறப்படுகிறது. அது ஒரு சரியான காரணம் என்றால், கட்டாயம் மகிந்தவும் சங்கமித்தாவும் கூட  அரண்மனையில் இருக்க தகுதியற்றவர்கள் ஆகும். மகிந்தவின் பிறந்த ஆண்டு புத்தர் இறந்து இருநூற்று நான்கு ஆண்டுகள் எனவும், [6-20. Two hundred years and four years more had elapsed: just at that time Mahinda, the son of Asoka, was born.] மற்றும் சங்கமித்தா இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு என்றும்  கூறப்படுகிறது. சில மூலங்களின்படி சங்கமித்தை மற்றும் மகிந்த,  இரட்டைப் பிள்ளைகள் ஆவார்கள். சுமார் இரண்டாயிரத்து இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குழந்தை பிறந்த ஆண்டை துல்லியமாக சுட்டிக்காட்டுவது கட்டாயம் சாத்தியமில்லை. சங்கமித்தா விடயத்திலும் அப்படித்தான். அறிஞர் சமூகத்தைச் சேர்ந்த சிலர் மகிந்தவையும் சங்கமித்தாவையும் கற்பனையான நபர்களாகக் கருதுகின்றனர். மகிந்த மற்றும் சங்கமித்தா, அசோக மன்னனின் மகன் மற்றும் மகள் என்று எந்த இந்திய ஆதாரங்களிலும் குறிப்புகள் இல்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.

 

புத்தர் இறந்து இருநூற்று பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அசோகரின் முடிசூட்டு விழா நடந்தது என்ற கூற்று இலங்கை வரலாற்றில் மட்டும் காணப்படுகிறது. இதை பொதுவாக  நீண்ட பாரம்பரியம் அல்லது தெற்கு பாரம்பரியம் [Long Tradition or Southern Tradition] என்று அழைக்கப்படுகிறது. என்றாலும் புத்தர் இறந்து நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இது நடந்ததாக, புத்தர் பிறந்து, வளர்ந்து இறந்த   இந்தியாவின் ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன. இது வடக்கு பாரம்பரியம் அல்லது குறுகிய பாரம்பரியம் [Northern Tradition or Short Tradition] என்று அழைக்கப்படுகிறது. ஆங்கிலேய அரசு ஊழியர் ஜோர்ஜ் டேனர் அல்லது ஜோர்ஜ் டர்னர் [George Turnour] கி பி 1837 இல் மகாவம்சத்தை மொழிபெயர்த்தார். மேலும் அவரது செல்வாக்கு, அன்று  இலங்கையின் இருநூற்று பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னுரிமை அளித்து, நூறு ஆண்டுகள் என்ற இந்தியர்களின் வரலாற்றுக் குறிப்பை பின் தள்ளியது. புத்தரின் மரணம் ஜோர்ஜ் டர்னரால் முதலில் கிமு 543 என்று ஊகிக்கப்பட்டது. என்றாலும் இந்திய பாரம்பரியத்தைப் பின்பற்றினால், புத்தரின் மரணம் கிமு 369 இல் நிகழ்ந்திருக்க வேண்டும். மேலும் இந்த அத்தியாயமும் இலங்கையில் நடந்த எந்த மனித வரலாற்று நிகழ்வுகளையும் பற்றியது அல்ல.

 *அடுத்த பகுதியை வாசிக்க அழுத்துக...

*ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக..

 

Part: 43 / Appendix – Dipavamsa / 'If Devi ls  unfit to reside in the palace, How her children fit to stay there?'

 

Prince Asoka was entrusted with the collection of revenue in Ujjeni. He met a Setthi (Vaisya- trading community) lady named Devi, and, they cohabited. A son, Mahinda, and a daughter, sanghamitta, were born to them. Mahinda and sanghamitta  moved with their father to the palace in Pataliputra, but not the mother, Devi. It is cited that Devi belonged to trading community and, therefore, not considered fit to reside in the palace.  If that is a sound reason then Mahinda and sanghamitta  too unfit to be in the palace. Mahinda’s year of birth is given as two hundred and four years after the death of the Buddha, 6-20, and sanghamitta  two years later.  This exact pinpointing of the year of birth of a child about two thousand two hundred and fifty years ago is not possible. Same is the case with sanghamitta. Some members of the scholarly community consider Mahinda and sanghamitta  as fictitious persons. There are no references to Mahinda and sanghamitta as the son and the daughter of the King Asoka in any Indian sources.

 

The statement that Asoka’s coronation took place two hundred and eighteen years after the Buddha’s death is from the Ceylonese chronicles only. This is the Long Tradition or Southern Tradition. The Indian sources indicate that it took place one hundred years after the Buddha’s death. This is the Northern Tradition or Short Tradition. The English civil servant George Turnour translated the Mahavamsa in 1837 A. D. and his influence overshadowed the Indian one hundred years in preference to the Ceylonese two hundred and eighteen years. The Buddha attained Nirvana in 543 B. C. based on this Ceylonese tradition. As per Indian tradition, the Buddha’s death would have occurred about 369 B. C. See the Appendix-Mahaparinirvana of the Buddha for more information. This chapter 6 is also not about any human historical events that took place in Lanka.

நன்றி 

Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna]

பகுதி / Part: 44 A தொடரும் / Will follow

சூரிய ஒளி: நன்மையும் பாதுகாப்பும்



வைட்டமின் டி பெறுவதற்கு எவ்வளவு வெயில் போதும்?

சூரிய ஒளி உடலுக்கு தேவையானது; ஆனால்அதிக வெயில் = அதிக ஆரோக்கியம்என்பது தவறான கருத்து. வைட்டமின் டி உருவாக்கம், உடல் கடிகாரம் ஒழுங்காக இயங்குதல், மனநிலை மற்றும் எலும்பு ஆரோக்கியம் போன்ற பல நன்மைகள் இயற்கை வெளிச்சத்துடன் தொடர்புடையவை. அதே நேரத்தில், அளவுக்கு மீறிய புற ஊதாக் கதிர் (UV) வெளிப்பாடு தோல் கருகல், தோல் முதிர்வு, கண் பாதிப்பு மற்றும் தோல் புற்றுநோய் அபாயத்தை உயர்த்தும்.

கருமை நிறத் தோல் உள்ளவர்களுக்கு மெலனின் அதிகம் இருக்கும். மெலனின் இயற்கையான UV வடிகட்டியாகச் செயல்பட்டு சருமத்தின் DNA-வை ஒரு அளவு பாதுகாக்கிறது. ஆனால் அதே காரணத்தால், வைட்டமின் டி உருவாக உதவும் UVB கதிர்கள் தோலுக்குள் செல்லும் வேகமும் குறையலாம். எனவே, வெளிர் நிறத் தோல் உடையவர்களைவிட கருமை நிறத் தோல் உடையவர்களுக்கு அதே அளவு வைட்டமின் டி உருவாகச் சற்றே அதிக வெளிச்ச நேரம் தேவைப்படலாம். ஆயினும் இதைநீண்ட நேரம் வெயிலில் நிற்க வேண்டும்என்று புரிந்துகொள்ளக் கூடாது.


சூரிய ஒளி ஏன் அவசியம்?

சூரிய ஒளி தோலில் படும்போது UVB கதிர்கள் வைட்டமின் டி உருவாக்கத்தைத் தொடங்குகின்றன. வைட்டமின் டி:

  • கால்சியத்தை உடல் உறிஞ்ச உதவுகிறது; எலும்பு மற்றும் பற்களின் வலிமைக்கு முக்கியம்.
  • தசைச் செயல்பாடு மற்றும் சமநிலைக்கு உதவுகிறது.
  • நீண்டகாலக் குறைபாடு இருந்தால் குழந்தைகளில் ரிக்கெட்ஸ், பெரியவர்களில் எலும்பு மெலிதல் அல்லது வலி போன்ற பிரச்சினைகளின் அபாயம் அதிகரிக்கலாம்.
  • வெளிப்புற இயற்கை ஒளி, தூக்கம்விழிப்பு சுழற்சியை ஒழுங்குபடுத்த உதவுகிறது. குறிப்பாக காலையிலான வெளிச்சம், இரவு நேர மெலட்டோனின் சுரப்புக்கான உடல் நேரத்தைச் சரி செய்ய உதவும்.
  • வெளியில் நடைப்பயிற்சி, தோட்ட வேலை, சமூகச் செயல்பாடு போன்றவற்றுடன் கிடைக்கும் சூரிய ஒளி மனநிலைக்கும் உடல் இயக்கத்திற்கும் உதவக்கூடும்.

ஆனால் சூரிய ஒளி மட்டுமே எல்லா நோய்களையும் தடுக்கும்மருந்துஅல்ல. இதய நோய், புற்றுநோய், நீரிழிவு, மனநலம் போன்றவற்றில் காணப்படும் சில தொடர்புகள் நேரடியான காரணவிளைவு என்பதை உறுதியாக நிரூபிப்பதில்லை. உடற்பயிற்சி, தூக்கம், உணவு, சமூகத் தொடர்பு போன்ற பிற காரணிகளும் இதில் பங்கு வகிக்கின்றன.

 

கருமை நிறத் தோலுக்கு அதிக நேரம் வேண்டுமா?

பொதுவாக, ஆம்ஆனால் நேரம் ஒரே எண்ணாகக் கூற முடியாது. தோலின் நிறம், வயது, உடையின் அளவு, சன்ஸ்கிரீன் பயன்பாடு, வாழும் இடத்தின் அட்சரேகை, பருவம், மேகமூட்டம், நாளின் நேரம், மற்றும் அன்றைய UV Index ஆகியவை அனைத்தும் வைட்டமின் டி உற்பத்தியை மாற்றுகின்றன.

வசந்தம் அல்லது கோடைக்காலத்தில், முகம், கைகள், முன்கைகள் போன்ற ஒரு பகுதி வெளிப்படுமாறு வெளியில் இயல்பான செயல்களில் ஈடுபடுவது பலருக்கு உதவலாம். கருமை நிறத் தோல் உடையவர்களுக்கு அதே விளைவுக்குச் சற்றே நீண்ட நேரம் தேவைப்படலாம். ஆஸ்திரேலிய பொது சுகாதார வழிகாட்டுதலில், மிகக் கருமை நிறத் தோல் உடையவர்களுக்கு வெளிர் நிறத் தோல் உடையவர்களை விட சுமார் 3 முதல் 6 மடங்கு வரை அதிக வெளிச்சம் தேவைப்படலாம் எனக் கூறப்படுகிறது.

ஆனால் டொராண்டோ போன்ற கனடாவின் வடஅட்சரேகைப் பகுதிகளில் இலையுதிர் கால இறுதி முதல் குளிர்காலம் வரை UVB அளவு குறைவாக இருக்கும். அப்போது வெயிலில் நீண்ட நேரம் இருப்பதால் மட்டும் போதுமான வைட்டமின் டி கிடைக்கும் என நம்புவது சரியல்ல. உணவு, உறுதிப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள், தேவைப்பட்டால் மருத்துவர் ஆலோசனையுடன் மாத்திரை ஆகியவை முக்கியமான வழிகள்.

 

பாதுகாப்பான நடைமுறை

வைட்டமின் டிக்காக திட்டமிட்டு வெயிலில் கருகும் வரை நிற்பது தேவையில்லை. தினசரி வெளிப்புற வாழ்வியல்நடைப்பயிற்சி, கடைக்குச் செல்வது, தோட்டப் பணி, நண்பர்களுடன் வெளியில் இருப்பதுபெரும்பாலானவர்களுக்கு நல்ல நடைமுறையாகும்.

கனடாவில் UV Index 3 அல்லது அதற்கு மேல் இருக்கும் நாள்களில் சூரியப் பாதுகாப்பு அவசியம். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை, குறிப்பாக காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை UV கதிர்கள் வலிமையாக இருக்கலாம்; மேகமூட்டம் இருந்தாலும் பாதிப்பு இருக்கலாம்.

பின்வரும் பழக்கங்கள் உதவும்:

  • வெயிலில் சருமம் சிவப்பதோ அல்லது கருகத் தொடங்குவதோ நடைபெறாதபடி கவனிக்கவும்.
  • நீண்ட நேரம் வெளியில் இருக்க வேண்டுமெனில் நிழல், அகல விளிம்புத் தொப்பி, நீளக் கை ஆடை, UV பாதுகாப்புக் கண்ணாடி பயன்படுத்தவும்.
  • வெளிப்பட்ட தோலுக்கு broad-spectrum SPF 30 அல்லது அதற்கு மேற்பட்ட சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தவும்.
  • நீர், வியர்வை அல்லது துணியால் துடைத்த பிறகு சன்ஸ்கிரீனை மீண்டும் பூசவும்.
  • டேனிங் படுக்கை அல்லது செயற்கை சூரியக் குளியல் கருவிகளைத் தவிர்க்கவும். அவை பாதுகாப்பான வைட்டமின் டி வழி அல்ல; தோல் புற்றுநோய் அபாயத்தை உயர்த்துகின்றன.
  •  

யாருக்கு கூடுதல் கவனம்?

பின்வருவோருக்கு வைட்டமின் டி குறைபாட்டின் வாய்ப்பு அதிகமாக இருக்கலாம்:

  • கருமை நிறத் தோல் உடையவர்கள், குறிப்பாக கனடா போன்ற வடநாடுகளில் வாழ்பவர்கள்.
  • பெரும்பாலும் வீட்டுக்குள் இருப்பவர்கள் அல்லது வெளியில் செல்ல இயலாதவர்கள்.
  • உடலை பெரும்பகுதி மூடும் உடை அணிபவர்கள்.
  • முதியவர்கள்.
  • குடல் உறிஞ்சல் குறைபாடு, கல்லீரல் அல்லது சிறுநீரக நோய் போன்ற உடல்நிலைகள் உள்ளவர்கள்.
  • சில மருந்துகள் பயன்படுத்துபவர்கள்.

இவர்களுக்கு ரத்தப் பரிசோதனையுடன் மருத்துவர் அல்லது மருந்தாளரின் ஆலோசனையில் வைட்டமின் டி கூடுதல் தேவைப்படுகிறதா என்பதைத் தீர்மானிப்பது நல்லது. தன்னிச்சையாக அதிக அளவு மாத்திரைகளைத் தொடங்க வேண்டாம். பொதுவாக பெரியவர்களுக்கான பொறுத்துக்கொள்ளக்கூடிய அதிகபட்ச அளவு தினம் 4,000 IU எனக் குறிப்பிடப்படுகிறது; இதற்கு மேல் எடுத்தால் ஹைப்பர்கால்சீமியா உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படலாம்.

 

முக்கியச் செய்தி

கருமை நிறத் தோல் உடையவர்களுக்கு வைட்டமின் டி உருவாகச் சற்றே அதிக சூரிய ஒளி தேவைப்படலாம். ஆனால் அதற்காக வெயிலில் நீண்ட நேரம் பாதுகாப்பின்றி நிற்பது சரியான தீர்வு அல்ல. குறுகிய கால இயல்பான வெளிப்புறச் செயல்பாடு, UV Index-ஐப் பார்த்து சரியான பாதுகாப்பு, வைட்டமின் டி உள்ள உணவு மற்றும் தேவையெனில் மருத்துவ ஆலோசனையுடன் கூடுதல் மாத்திரைஇவையே நன்மையையும் பாதுகாப்பையும் சமநிலைப்படுத்தும் நடைமுறையாகும்.

தீபம் உடல்நலம்