"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look
at 'Lanka chronicles' from a scientific perspective" [In Tamil &
English]
[This
detailed Tamil article is based on the unfinished historical book 'History of
Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The
English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]
பகுதி: 44 A / பின் இணைப்பு - தீபவம்சம் / 'மகிந்த மற்றும் சங்கமித்த இருவரும் அசோகரின் பிள்ளைகளா?'
அத்தியாயம் 7 அசோகனின் சமய நம்பிக்கை பற்றியது. பிக்குகளுக்கு பலவற்றைச் செய்ததாலும், எண்பத்து நான்காயிரம் மடங்களைக் கட்டியதாலும், தான் புத்த சமயத்தின் நம்பிக்கைக்கு உரியவராக இருக்கத் தகுதியானவர் என்று அசோகர் நினைத்தார். இருப்பினும், மொகாலிபுத்த [Moggaliputta], அசோகன் தனது மகனையோ மகளையோ புத்த மத விசுவாசத்திற்கு [தெய்வ நம்பிக்கைக்கு] அர்ப்பணித்து, அவர்களுக்கு பப்பாஜ்ஜி நியமனம் [ Pabbajji ordination / ஒரு புதிய துறவி அல்லது கன்னியாஸ்திரியாக ஒரு நபரின் வாழ்க்கையின் தொடக்கத்தைக் குறிக்கும் ஒரு புத்த சமய விழா.] செய்ய வேண்டும் என்று கூறினார். 7-17 பார்க்கவும். அசோகனின் மகன் மகிந்தவும் மகள் சங்கமித்தாவும் பாப்பாஜி நியமனம் பெற உடனடியாக ஒப்புக்கொண்டனர். தந்தை தன் ஆசையை அடைய அவர்கள் இருவரும் பாப்பாஜி நியமனத்தைப் பெற்ற போது மகிந்தவின் வயது ஆக 20 மற்றும் சங்கமித்தாவுக்கு 18 வயது. ஒரு தகப்பனும், அசோகனைப் போன்ற கருணையுள்ள ஒருவரும், இருபது மற்றும் பதினெட்டு வயதுடைய தனது இரு வாலிப பிள்ளைகளை பிக்கு மற்றும் பிக்குணியாக [பெண் துறவி] ஆக்கி, அதனால் தான் தெய்வ நம்பிக்கைக்கு உரியவராக மாறலாம் என்று விரும்புவாரா? அல்லது அதனால் திருப்தி அடைவாரா? பெரும்பாலும் இருக்காது! அது மட்டும் அல்ல, மகாவம்சத்தின்படி சங்கமித்தா திருமணம் செய்து, அந்த நேரத்தில், அவளுக்கு ஒரு இளம் மகனும் இருந்தான். அப்படி உண்மையில் நடந்து இருந்தால், இது கட்டாயம் அசோகனின் கொடூரமான செயல் அல்லவா? மேலும், மொகாலிபுத்தவின் முடிவு என்னவென்றால், பாப்பாஜி நியமனம் பெறுவதற்கு ஒரு மகன் அல்லது ஒரு மகள் இருக்க வேண்டும், அவ்வளவு தான், இருவரும் அல்ல. எனவே இது ஒன்றே இந்த தீபவம்சம் கதையின் உண்மையைப் புரியவைக்கும்?
அதாவது, மகிந்த மற்றும் சங்கமித்தா இருவரின் இருப்பை இது கேள்விக்குறி ஆக்கிறது. இந்த இருவருமே இலங்கை புத்த துறவி ஆசிரியர்களின் போலியான படைப்பாக இருக்க வேண்டும்? அசோகரின் கல்வெட்டுகளில் ஒன்று அசோகரின் மகன்கள் மற்றும் பேரன்களைப் பற்றி பேசுகிறது, ஆனால் மகிந்த மற்றும் சங்கமித்தாவைப் பற்றி அல்ல என்பது குறிப்பிடத் தக்கது. வேறு சில இந்திய ஆதாரங்களின்படி, அசோகருக்கு சாருமதி அல்லது சாருமித்ரா என்ற பெயரில் ஒரு மகள் இருந்தாள், பின்னர் அவர் தனது கணவருடன் நேபாளத்தில் குடியேறினார், இருவரும் துறவிகள் ஆனார்கள் என்கிறது. இலங்கை துறவிகள் சிறிய மாற்றங்களுடன் இலங்கையை புத்த மதத்திற்கு மாற்ற, மேலே கூறிய இரண்டையும் நகலெடுத்திருக்க வேண்டும்.
மூன்றாவது பௌத்த மாநாடு அசோகரின் ஆதரவில் ஒன்பது மாதங்கள் நீடித்தது. வரலாற்று முக்கியத்துவம் இல்லாத பல மத விவரங்கள் இங்கு உள்ளன. பலர் தங்களின் சுயலாபத்திற்காகவும், நம்பிக்கைக்கு சேதம் விளைவிப்பதற்காகவும் தந்திரமாக, புத்த விசுவாசத்தில் சேர்ந்தனர். பின்னர் மொகாலிபுத்த மூன்றாவது புத்தமத சபையை நடத்தி, சமயப் பிளவுகளை அகற்றினார். அத்துடன், போலித் துறவிகளை மன்னர் அசோகன் சமய நடவடிக்கைகளில் இருந்து அகற்றினார். இந்திய ஆதாரங்களில், மூன்றாவது பௌத்த சபை பற்றி எந்தத் தகவலும் இல்லை. அதாவது எங்கு மூன்றாவது பௌத்த சபை நடந்ததோ, அங்கிருந்து எந்தச் சான்றுகளும் இல்லை. எனவே மூன்றாம் பௌத்த சபையின் உண்மைத்தன்மை பல அறிஞர்களால் சந்தேகிக்கப்படுகிறது. மீண்டும் இந்த அத்தியாயம் இலங்கையில் நடந்த மனித வரலாற்று நிகழ்வுகளைப் பற்றியது அல்ல.
*அடுத்த பகுதியை வாசிக்க அழுத்துக...
*ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக...
Part: 44 / Appendix –
Dipavamsa / 'Are both Mahinda and Sanghamitta, children of Asoka?'
Chapter
7 is about Asoka’s intention to become the relation of the Faith. He thought
that he was fit to be the relation of the faith as he did a lot to the Bikkhus,
and also constructed eighty four thousand monasteries. Moggaliputta, however,
told that he should give his son or daughter to the Faith and cause them to
receive Pabbajji ordination [a Buddhist ceremony that marks the beginning of a
person's life as a novice monk or nun.] to become the relation of the Faith,
7-17. Asoka’s son Mahinda and the daughter Sanghamitta readily agreed to receive Pabbajji
ordination. Mahinda was 20 years of age and Sanghamitta was 18 years of age when they both received
Pabbajji ordination so that their father could attain his desire. Would a
father and a benevolent one like Asoka, make his young children of twenty and
eighteen years to become a Bikkhu and a Bikkhunni so that he could satisfy his
desire to be a relation of the Faith? Most probably would not! Sanghamitta had
a young son, as per the Mahavamsa, by that time. It is a cruel act on the part
of Asoka. Furthermore, the Moggaliputta’s decision was that either a son or a
daughter to be made to receive the Pabbajji ordination, and not both. This is
also of the reasons to doubt the bona fide of both Mahinda and Sanghamitta;
both must be the bogus creation of the monkish authors of Lanka. One of the
Asoka’s inscriptions speaks of sons and grandsons of Asoka, but not about
Mahinda and Sanghamitta. Asoka had, as per Indian sources, a daughter by the
name Charumati or Charumitra, and later she settled in Nepal with her husband,
and both became monks. Lanka monks must have copied these two to convert Lanka
to the Faith with small modification.
Third
Buddhist Council took place under the aegis of Asoka which lasted for nine
months. There are quite many religious details which are not of historical
significance. Many furtively joined the Faith for their own gain, and doing
damage to the Faith. Then Moggaliputta held the Third Buddhist Council, and
demolished the schisms, and the bogus monks were disrobed by the King Asoka.
There is no information about the Third Buddhist Council from the Indian
sources. Therefore the veracity of the Third Buddhist Council is suspected by
many scholars. This chapter is also not about human historical events that took
place in Lanka.
நன்றி
Thanks
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
பகுதி / Part: 44 B தொடரும் / Will follow