"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" [In Tamil & English] /
பகுதி: 34 B / முடிவுரை / 'சிங்கள மொழி எப்போது தொடங்கியது?' [தமிழ் விரிவாக்கம் தொடர்கிறது]
சிங்கள மொழியானது, இந்தோ - ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின், இந்தோ-ஆரிய மொழிப்பிரிவைச் சார்ந்த மொழியாக இன்று வகைப்படுத்தப்பட்டுள்ள மொழியாகும். சிங்கள மொழியைப் பொறுத்தவரை, அதன் பிராகிருத எழுத்துகள் கி.மு இரண்டாம் நூற்றாண்டு அளவுக்குப் பழைமையானது என்று சொல்லப்பட்டாலும், அதற்கான வலுவான ஆய்வுச் சான்றுகளைக் எங்கும் காணமுடியாதுள்ளது.
சிங்கள மொழியில் கிடைக்கப்பெற்றுள்ள மிகப் பழைமையான இலக்கியமானது ஒன்பதாம் நூற்றாண்டுக்குரியது என்று நம்பப்படுகிறது. அதற்கு முன் ஒன்றுமே இன்னும் அறியப்படவில்லை என்பதே உண்மை. ஆகவே, மகாவம்சத்தின், சிங்கள இனத்தின் தோற்றத்துக்கும், அறிவியல் ரீதியான மொழியின் தோற்றத்துக்கும் இடையில் பாரிய இடைவெளிகளுண்டு.
ஆகவே, கி பி 9 ஆம் நூற்றாண்டு, பிராகிருதத்திலிருந்து உருவான எலு மொழியில் இருந்து சிங்களம் ஓரளவு முழுமையாக உருவானது. இந்த எலு மொழியின் வடிவம் கி.பி 200 வரை இருந்தது. அதன் பின், 3 ஆம் நூற்றாண்டு முதல் 7 ஆம் நூற்றாண்டு வரை, இந்த மொழி தொல் - சிங்களம் [Proto-Sinhalese] என்று அறியப்பட்டது. எனவே, சிங்களத்தின் ஆரம்ப வடிவம், இந்த காலத்தில், பிராமி எழுத்துக்களில் எழுதப்பட்டது. இன்று நாம் காணும் சிங்கள வடிவத்தை, இந்த வடிவம் நாளடைவில் திடப்படுத்தியன என்று கூறலாம். 4 மற்றும் 8 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் தொல் - சிங்கள எழுத்து வடிவம் கணிசமாக மாறியது. 7 முதல் 12 ஆம் நூற்றாண்டு வரை, இடைக்கால கட்டத்தில் சிங்கள மொழி மேலும் திடப்படுத்தப்பட்டது . நவீன சிங்கள மொழி 12 ஆம் நூற்றாண்டில் தொடங்கியதாக பல மொழியியலாளர்களால் கருதுகிறார்கள்.
சிங்களம் இன்று தமிழ் உட்பட பல மொழிகளிலிருந்து வார்த்தைகளை கடன் வாங்கியுள்ளது. இதன் விளைவு என்னவென்றால், சிங்களம் இந்தோ-ஐரோப்பிய வம்சாவளியைச் சேர்ந்தது என்பதான ஒரு விவாதத்தின் முடிவுக்கு வழிவகுத்தது எனலாம். அது நீண்ட காலமாகத் தமிழின் தாக்கத்தில் இருந்து வந்திருக்கிறது. மொழியியல் ஆய்வுகளின்படி, சிங்கள சொற்களஞ்சியத்தின் கணிசமான பகுதியானது தமிழில் இருந்து பெறப்பட்டது. குறைந்தது 10% சிங்கள சொற்கள் தமிழ் தோற்றம் கொண்டவை என்று மதிப்பிடுகிறது. இது இலங்கையில் உள்ள சிங்கள மற்றும் தமிழ் மக்களிடையே உள்ள நெருக்கமான வரலாற்று தொடர்புகளை பிரதிபலிக்கிறது; இருப்பினும், பகுப்பாய்வு முறை மற்றும் மூலத்தைப் பொறுத்து சரியான சதவீதம் மாறுபடலாம்.
தமிழ் மொழியுடனான நெருங்கிய ஆரம்ப தொடர்பும் மற்றும் சிங்கள சமூகத்தில் தமிழர்களை சிங்களமயமாக்கியது [இணைத்துக் கொண்டது] பல தமிழ் மூலச் சொற்களை சிங்கள மொழியில் ஏற்றுக்கொள்ள உதவியது என்று எண்ணுகிறேன். இரண்டு இன அயல் மக்கள், அன்றாடம் பொருள் பண்டங்களை பரிமாறிக்கொள்ளும் சூழ்நிலையில், மொழிச் சொற்களில் கடன் வாங்குவது இயல்பாக எதிர்பார்க்கப்படுகிறது. முதலாவது உறவுச் சொற்கள், உடல் உறுப்புச் சொற்கள், மற்றும் சாதாரண நடவடிக்கைச் சொற்கள் போன்றவை கடன் வாங்கப்படுகின்றன. அப்படியே, இரண்டாவதாக, சொற்களஞ்சியம் சார்ந்த சொற்களுடன் [பெயர்ச்சொற்கள், உரிச்சொற்கள் மற்றும் வினைச்சொற்கள்], இடைச்சொற்களும் கடன் வாங்கப்பட்டுள்ளன.
சிங்கள சொற்றொடரியல் அல்லது சொல்வரிசை மீது தமிழ் ஏற்படுத்திய தாக்கம் நெருங்கிய தொடர்பை மட்டுமல்ல, அதிக எண்ணிக்கையிலான இருமொழி பேசுபவர்களின் இருப்பையும் மற்றும் அதிக அளவு இனக்களுக்கிடையான கலப்பையும் மற்றும் கலப்பு திருமணத்தையும் உண்டாக்கியிருக்கிறது எனலாம்.
முப்பத்தைந்தாம் பகுதியில் தொடங்கி, தீபவம்சம், மகாவம்சம், இராசவலிய, புத்தர், அவரது மகா பரிநிர்வாணம் மற்றும் பண்புகள், சிலப்பதிகாரம், மணிமேகலை, அசோகர், புத்தரின் போதனைகள் மற்றும் “புத்தர் ஏமாற்றப்பட்டாரா?” என்ற கேள்வி உள்ளிட்ட தலைப்புகள் பற்றிய விரிவான தகவல்கள் இணைப்புக் குறிப்பாக உங்கள் பார்வைக்காக வழங்கப்படுகின்றன. / Beginning with Part 35, we will present, as an appendix, further detailed discussions for your perusal on topics including the Deepavamsa, Mahavamsa, Rajavaliya, the Buddha, his Great Parinirvana and noble qualities, Silappadhikaram, Manimekalai, Emperor Ashoka, the Buddha’s teachings, and the question — “Was the Buddha betrayed?”
*அடுத்த பகுதியை வாசிக்க அழுத்துக...
*ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக..
நன்றி
Thanks
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
பகுதி / Part: 35
தொடரும் / Will
follow