*அடுத்த பகுதியை வாசிக்க அழுத்துக...
*ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக...
*அடுத்த பகுதியை வாசிக்க அழுத்துக...
*ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக...
-உடல்நலம்
பச்சைக் கோழி இறைச்சியை சமைக்கும் முன் கழுவுவது ஆபத்தானது, ஏனெனில் அது கேம்பிலோபாக்டர் மற்றும் சால்மோனெல்லா போன்ற பாக்டீரியாக்களை சமையலறையில் பரவச் செய்யும்.
கோழியைக் கழுவும்போது தண்ணீர் தெறித்து சிங்க், சமையல் மேடை, அருகிலுள்ள பச்சை காய்கறிகள் போன்றவற்றில் பாக்டீரியாக்கள் பரவுகின்றன. பிரிட்டனின் ரீடிங் பல்கலைக்கழகத்தின் உணவு நுண்ணுயிரியல் இணைப் பேராசிரியர் கிமோன்-ஆண்ட்ரியாஸ் கராட்சாஸ் நடத்திய பரிசோதனையில், புற ஊதா ஒளியால் காட்டப்பட்டபடி, 10 வினாடிகள் கழுவியதோடு கோழியின் சாறு மற்றும் நீர் மேடை, ஆடை, லெட்டூஸ், கேரட் ஆகியவற்றில் படிந்தது. இது குறுக்கு-மாசுபாட்டை (cross-contamination) ஏற்படுத்தி, நன்கு சமைக்கப்பட்ட கோழியை உண்டாலும் நோய் வர வைக்கும்.
பச்சை கோழியில் கேம்பிலோபாக்டர் மற்றும் சால்மோனெல்லா இயற்கையாகவே குடலில் இருக்கும், வெட்டும் போது இறைச்சியில் பரவும். உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுகிறது, கேம்பிலோபாக்டர் வயிற்றுப்போக்கு நோய்களின் உலகளாவிய நான்கு முக்கிய காரணங்களில் ஒன்று; சிறு குழந்தைகளுக்கும் ஆபத்தானது. சால்மோனெல்லாவுக்கு தடுப்பூசிகள் உள்ளன, ஆனால் கேம்பிலோபாக்டருக்கு இல்லை – ஒரு சொட்டு நீரில் 10 டிரில்லியன் பாக்டீரியாக்கள் இருக்கலாம், இது தொற்றுக்கு போதும்.
பாதிப்பு 2-5 நாட்களுக்குப் பின் தோன்றும்: ரத்தத்துடன் வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி. பிரிட்டனில் ஆண்டுதோறும் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர்; குழந்தைகள், முதியோருக்கு கடுமையானது – சிலருக்கு ஆண்டிபயாடிக் தேவை, அரிதாக கய்லன்-பார் சிண்ட்ரோம் போன்ற பக்கவாதம் வரலாம். உண்மையான பாதிப்புகள் அறிக்கையிடப்படாதவை 10 மடங்கு அதிகமாக இருக்கலாம்.
2024 'ஃபுட் கன்ட்ரோல்' இதழ் ஆய்வின்படி, தென்கிழக்கு ஆசியாவில் 96% பேர் கழுவுகின்றனர்; மேற்கத்திய நாடுகளில் 39-70%. ஆசியா, ஆப்பிரிக்கா போன்ற இடங்களில் உள்ளூர் சந்தைகளில் சுத்தம் குறைவு என்பதால் பழக்கம்; மேலும் கலாச்சார அடையாளமாக உள்ளது. இருப்பினும், நவீன பதப்படுத்தப்பட்ட கோழி ஏற்கனவே சுத்தம் செய்யப்பட்டது.
கோழியை ஒருபோதும் கழுவாதீர்கள்; நன்கு சமைக்கவும் (உள்ளே 75°C).
தனி அலமாரி பயன்படுத்தி, பச்சை-சமைக்கப்பட்ட உணவுகளை பிரிக்கவும்.
கைகள், மேடைகளை சோப்பு நீரால் கழுவவும்.
வாங்கிய கோழியை கழிவுகள் இருந்தால் மட்டும் துடைக்கவும், சமைக்கவும்.
இந்த வழிகாட்டுதல்கள் CDC ( the national public health agency of the United States,) , FDA (U.S. Food and Drug Administration) , UK Food Standards Agency போன்றவற்றின் அதிகாரப்பூர்வ ஆலோசனைகளை அடிப்படையாகக் கொண்டவை.
🐤🐤🐤🐤🐤தீபம் உடல்நலம்
வாழ்க்கை ஒரு பயணம் என்றால், ஒப்பீடு அதில் உள்ள ஒரு சாலைச் சின்னம். அது திசை காட்டலாம். ஆனால் அந்தச் சின்னத்தையே இலக்காகக் கொண்டால், பயணம் குழப்பமாகிவிடும்.
இதனை உளவியலில் “Social Comparison” என்று அழைக்கின்றனர்.
ஆனால் இங்கு ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது:
ஊக்கமூட்டும் ஒப்பீடு – வளர்ச்சியைத் தூண்டும்.
அழுத்தம் தரும் ஒப்பீடு – தாழ்வு உணர்வை உருவாக்கும்.
இன்றைய சமூகம் பெரும்பாலும் இரண்டாவது வகையை அதிகப்படுத்தி வருகிறது.
பல வளர்ந்த நாடுகளில் கல்வி உளவியல் ஆய்வுகள் கூறுவது:
“ஒரு குழந்தையை மற்றொரு குழந்தையுடன் தொடர்ந்து ஒப்பிடுவது, அதன் தன்னம்பிக்கையை பாதிக்கும்.”
உளவியல் ரீதியாக இதன் விளைவுகள்:
தன்னம்பிக்கை குறைவு
தோல்வி பயம்
பெற்றோரிடம் உணர்ச்சி தூரம்
முயற்சியை விட முடிவை மட்டுமே கவனிக்கும் மனநிலை
வளர்ந்த கல்வி முறைகள் இன்று ஒரு குழந்தையை அடுத்தவருடன் அல்ல, அதன் நேற்றைய நிலையுடன் ஒப்பிட வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.
“நேற்று விட இன்று சிறிது முன்னேற்றமா?” — இதுவே ஆரோக்கியமான கேள்வி.
குழந்தைப் பருவத்தில் தொடங்கும் ஒப்பீடு, பெரியவராகும் வரை மனதில் பதிந்திருக்கும்.
சிறுவயதில்:
“நீ அவனைப் போல இருக்கணும்.”
இளமையில்:
“அவள் மாதிரி சாதிக்கணும்.”
பெரியவனாகி:
“அவர் அளவுக்கு சம்பாதிக்கணும்.”
புலம்பெயர் நாடுகளில் வாழும் குடும்பங்களுக்கு இந்த ஒப்பீடு இரட்டிப்பு.
இங்கு வெற்றியே அடையாளமாக மாறுகிறது.
தாயகத்தில் வாழ்பவர்களும் விடுபடவில்லை:
“வெளிநாட்டுப் போனவன் இவ்வளவு சாதித்திருக்கிறான்.”
எவ்வளவு அடைந்தாலும், இன்னொருவர் மேலே இருப்பார்.
நாம் முயற்சிக்கிறோம் — ஆனால் அது மகிழ்ச்சிக்காக அல்ல; ஒப்பீட்டை சமாளிக்க.
பெற்றோருக்காக:
குழந்தையின் முயற்சியை பாராட்டு.
அதன் தனித்திறனை அறிந்து ஊக்குவி.
மதிப்பெண் அல்ல, முன்னேற்றத்தை பேசு.
“அடுத்தவன்” என்ற சொல்லை குறை.
பெரியவர்களுக்காக:
சமூக ஊடக நேரத்தை கட்டுப்படுத்து.
நன்றி உணர்வை வளர்த்து.
தன்னிடம் கருணையுடன் இரு (Self-Compassion).
உன் பாதையை உன் அளவுகோலால் அளவிடு.
வாழ்க்கையின் உண்மையான கேள்வி:
“நான் என்னுடைய பாதையில் முன்னேறுகிறேனா?”
ஆன்மிகம்
(சிவவாக்கியம் – 027 )
ஓடம் உள்ள போதலோ ஓடியே உலாவலாம்
ஓடம உள்ள போதலோ உறுதி பண்ணிக் கொள்ளலாம்
ஓடமும் உடைந்த போது ஒப்பிலாத வெளியிலே
ஆடுமில்லை கோலுமில்லை யாருமில்லையானதே
“ஓடம் உள்ள போதலோ ஓடியே உலாவலாம்…” — சிவவாக்கியரின் இந்த உவமை இன்றும் நம்மை உலுக்கும். மனித உடல் ஒரு ஓடம். பிறவிக் கடலைக் கடக்க இந்த ஓடமே கருவி. ஓடம் நன்றாக இருந்தால் பயணம் சாத்தியம்; உடைந்தால் கடல் நம்மை விழுங்கும்.
இன்றைய மனிதன் வேகத்தில் வாழ்கிறான். தொழில்நுட்பம், பதவி, புகழ்—அனைத்தும் தேடி ஓடுகிறோம். ஆனால் ஓடும் ஓடத்தின் நிலைமை பற்றி யோசிக்கிறோமா? உடல் சோர்ந்திருக்க, மனம் சிதறியிருக்க, உள்ளம் அமைதியின்றி இருக்க—கரை எப்படிச் சேர்வது?
ஆகவே உடலை அலட்சியப்படுத்துவது ஆன்மிகம் அல்ல. அதே நேரத்தில் உடலையே எல்லாம் என நினைப்பதும் முழுமை அல்ல. சமநிலையே சாவி.
இன்றைய மனஅழுத்த உலகில் இவை சுகவாழ்க்கை சாதனைகள் அல்ல; உயிர் காக்கும் அவசியங்கள்.
பதில் எளிதானது அல்ல; ஆனால் தெளிவானது.
ஆனால் ஆசைகளை கட்டுப்படுத்த, உணவில் ஒழுக்கம் கொண்டு வர, உடலுக்கு ஓய்வு அளிக்கச் செய்யும் மிதமான விரதம் வேறுபட்டது.
தினமும் சில நிமிடம் சுவாசத்தை கவனியுங்கள்.
வாரத்தில் ஒரு நாள் லேசான விரதம் இருந்தாலும், உடல் நிலைக்கு ஏற்ப செய்க.
போதிய உறக்கம், இயற்கை உணவு, நடைப்பயிற்சி—இவை ஆன்மிகத்தின் அடித்தளம்.
கோபம், பொறாமை, அளவுக்கு மீறிய ஆசை—இவை ஓடத்தில் துளை போடும்.
அன்பு, கருணை, பகிர்வு—இவை ஓடத்தை நிலைநிறுத்தும்.
ஓடத்தை அழிக்காமல், ஓடத்தைப் பேணிக் கொண்டு, ஓடத்தைப் பயன்படுத்தி கரை சேர வேண்டும்.
"பெண் வலியின் நீண்ட குரல்"
நெருப்பின் நிழலும் சந்தேக வாளும்
சீதையின் கண்ணீர் தீயில் உருகுது,
ராமனின் சந்தேகம் வாளாய் வீசுது.
கர்ப்பிணி உடல் காட்டில் தள்ளப்படுது,
இன்று பெண்கள் தெருக்களில் தள்ளப்படுது.
"தர்மம்" என்ற பெயரில் அநீதி நிறைந்ததை இறைசாயமிட்டு இனிதே வளர்த்தோம்,
பாவையர்மேல் கொடுமைக்கு வழியிட்டோம்
வஞ்சனை வலியின் பழைய பாடம்
ஆயர் பெண்கள் குளிக்கும் யமுனைத் தீரம்,
கண்ணன் ஆடைகளை மறைத்து சிரிக்கும் மரம்.
அவமானம் அவளுக்கு, வெட்கம் உடலெல்லாம்,
இன்று பெண்ணுடையுரிய உயர்ந்திடும் கையெல்லாம் கண்ணனின் அவதாரங்களா?
அல்லது கடவுள் கதையென்று கட்டிவிட்ட
ஆரிய அதிகார சூழ்ச்சியின் விளைவா?
கொடுமையின் சங்கீதம் இன்றும் ஒலிக்குது
திரௌபதி அரங்கில் உருகும் வஸ்திரம்,
இன்று பெண் குரல் மூழ்கும் சமூக அரங்கம்.
கற்புக்காக தீக்குளிர், காட்டுக்குத் தள்ளல்,
இன்று வீடுகளில் வன்முறை, தெருக்களில் தள்ளல்.
நூல்கள் நியாயப்படுத்தும் அந்தப் பழைய தர்மம்,
பெண் இரத்தம் சிந்தும் போது மௌனமான தர்மம்.
அநீதி நூல்களின் நிழல் இன்று
புராணங்கள் பேசும் "போகப் பொருள்" பெண்,
இன்று வன்முறைக்கு வழிவகுக்கும் பெண்.
சங்கக் கதைகள் சொல்லும் வஞ்சம், துரோகம்,
இன்றைய பாலியல் வேதனைக்கு அடிப்படை யோகம்.
அதிகாரம் செலுத்தும் ஆண் மனம் இன்னும்,
பெண் உரிமைக்கு எதிராய் நிற்கும்.
எழுச்சியின் ஒளி – இனி மௌனம் இல்லை!
இனி இல்லை அந்த நெருப்பு, இருள், சந்தேகம்!
பெண் குரல் உயரும், உடல் உயரும், உரிமை உயரும்!
வன்முறை துண்டிக்கும் வாள் நாம் கையில்,
நியாயத்தின் நதி பொழியும் தமிழ் நெஞ்சில்.
பழைய நூல்களை விமர்சித்து எழுவோம்,
பெண் விடுதலைக்காக போராடுவோம்!
-செ.மனுவேந்தன்
ፌፌፌፌፌፌፌፌፌፌ
"பாலியல் வன்கொடுமை"
பாலியல் வன்கொடுமை பெண்களுக்கு வஞ்சகமே
பாவச் செயல்களின் பிறப்பிடமும் அதுவே!
பாவை பிருந்தாவின் கற்பழிப்புத் தெரியுமா
பாதக நடத்தையை திருவிளையாடல் என்கிறதே!
விண்ணில் இருப்பவன் உதாரணம் தரவேண்டாமா
மண்ணில் இருப்பவன் அதைத் தொடர!
எண்ணத்தில் அதை நன்கு பதித்தவன்
கண்ணை மூடி வல்லுறவு செய்கிறானே!
காமம் கூத்தாடும் கதைகளைத் தவிர்த்து
காதல் பேசும் புராணம் பரவட்டும்!
காலம் அறிந்து பழையதை எறியுங்கள்
காந்தையை மதித்து அவளை வாழவிடுங்கள்!
-[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
ፌፌፌፌፌፌፌፌፌፌ
ஆரம்பம் : ஐப்பசி ,2010
நோக்கம் :இணைந்த வளர்ச்சி
தேடல் : வளரும் வாசகர்கள்
போடல் : பயனுள்ள தகவல்கள்
நாடல்: நல்லதோர் சமுதாயம்
ஆக்குவோர்:
தில்லை விநாயக லிங்கம்[u.k]
செல்வதுரை சந்திரகாசன்[aus.]
செல்லத்துரை மனுவேந்தன்[can.]
காலையடி அகிலன் [can.]
அகிலா, பரந்தாமன்[S.L]
தொடர்பு:
s.manuventhan@hotmail.com