"அறிவியல் நோக்கில்....பகுதி-34A -"பெளத்தம் ஒரு அலசல்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய  இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" [In Tamil & English]

 


This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

 

பகுதி: 34 A / முடிவுரை / 'முதன்மை இலங்கை நாளாகமம், மகாவம்சம் எப்போது ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது?'

 


பல்வேறு புத்த மடங்களில் [monasteries] மகாவம்சத்தின் பல பதிப்புகள் இருந்தன. ‘The Mahavansi, The Raja-Ratnacari and The Rajavali” Edited by Edward Upham, M. R. A. S., F. S. A., February 16, 1833.' என்ற தலைப்பில் ஒரு வெளியீடு இருந்தது. இந்த புத்தகம் அவரது அனுமதியுடன் அரசரின் சிறந்த மாட்சிமைக்கு அர்ப்பணிக்கப்பட்டது [This book is dedicated to the King’s Excellent Majesty with his permission.]. ஆனால், அந்த புத்தகத்தின்  மொழிபெயர்ப்பு மற்றும் அதன் விளக்கத்தில் பல பிழைகள் காணப்பட்டது. அவற்றில், முக்கியமாக, புத்தர் இலங்கையில் பிறந்தார் மற்றும் சிவனொளிபாதம் அல்லது பாவா ஆதம் மலை [Adam's Peak] சிகரத்தில் ஒரு மடாலயத்தை கட்டினார் என்று பதியப்பட்டு இருப்பதைக் சுட்டிக்காட்டலாம். முதல் அச்சிடப்பட்ட பதிப்பு மற்றும் பரவலாக வாசிக்கப்பட்ட ஆங்கில மொழிபெயர்ப்பு, 1837 இல் 38 அத்தியாயங்களை மொழிபெயர்த்த இலங்கை நிர்வாக சேவையின்  வரலாற்றாசிரியரும் அதிகாரியுமான ஜோர்ஜ் டேனர் அல்லது ஜோர்ஜ் டர்னரின் [George Turnour / (1799–1843)] புத்தகமாகும்.


வில்ஹெம் லுட்விக் கெய்கர் அல்லது வில்லெம் கெய்கர் (Wilhelm Ludwig Geiger) (1856-1943) மகாவம்ச மொழிபெயர்ப்பானது, துட்டைகைமுனு அல்லது துட்டகாமினியின் மகன் சாலிய அல்லது சாலிராஜகுமாரனப் [Saliya or Salirajakumara ] பற்றி சுருக்கமாகக் குறிப்பிடுகிறது. 33 - 1 முதல் 3 வரையிலான மூன்று வசனங்களில், ஒரு அசாதாரண அழகான சண்டாளர் அல்லது வெட்டியான் குடும்பத்தை சேர்ந்த பெண்ணைக் காதலித்து, அவளுக்கு முன்னுரிமை அளித்து, தனது  அரச பதவியைத் துறந்தார் என்று கூறுகிறது. இருப்பினும், உபாம் [Edward Upham (1776–1834)] திருத்திய பதிப்பில், கதை 207 முதல் 216 வரை ஒன்பது பக்கங்களில் கூறப்பட்டிருக்கிறது. அதுமட்டும் அல்ல, மேலும் அவரின், திருத்திய பதிப்பில் [‘The Mahavansi, The Raja-Ratnacari and The Rajavali'], மகாவன்சியில், மன்னன் மகாசேனனுடன் நின்றுவிடவில்லை. இப்பதிப்பின்படி ,கஜபாகு மன்னன் சோழ நாட்டிற்கு தனியச் சென்று, முன்பு கைதுசெய்து கொண்டு செல்லப்பட்ட  தனது மக்களை மீண்டும் அழைத்து வந்தார் என்றும், அதைவிட கூடுதலாக எவரையும் கொண்டு வந்ததாக எதுவும் சொல்லவில்லை. அது மட்டும் அல்ல, 12,000 என்ற ஒரு எண்ணிக்கை ஒன்றையும் குறிப்பிடப்படவில்லை. அவர் நினைவுச் சின்னங்களையும் புத்தரின் பிச்சை பாத்திரத்தையும் [relics and the Buddha’s begging dish] கொண்டு வந்தார் என்று கூறுகிறது. அது மட்டும் அல்ல, இந்நூலில் மகாசேனனைப் பற்றிய விளக்கம் அல்லது கதை வேறாக உள்ளது. விவசாயத்தைப் பெருக்க அவர் நிறையச் செய்திருப்பதாகத் இங்கு சொல்லப்பட்டுள்ளது. மகாவம்சத்தின் பல பதிப்புகள் இருந்தன, ஒன்று மற்றொன்றிலிருந்து சிறிது அல்லது கணிசமாக வேறுபடுகிறது என்பதை இந்த கூற்று வலியுறுத்துகிறது. சர் அலெக்சாண்டர் ஜான்ஸ்டன் [ Sir Alexander Johnston] இலங்கைத் தீவு முழுவதும் தேடலில் இருந்து அசல் அல்லது மூல கையெழுத்துப் பிரதிகளைப் பெற தன்னால் முடிந்தவரை முயற்சி செய்தார். இருப்பினும், ஜோர்ஜ் டர்னர் [George Turnour] ஒரு மடாலயத்திலிருந்துகாலி [‘Galle’] என்ற புத்தர் பிக்கு  மூலம் ஒரு பிரதியைப் பெற்று அதில் பணியாற்றினார். காலனித்துவ அரசாங்கம் மேலும் சிறந்த தரமான மொழிபெயர்ப்புக்கு ஏற்பாடு செய்ய விரும்பி, அதைச் செய்யுமாறு T. W. Rhys Davids ஐக் கேட்டுக் கொண்டது. அதன் விளைவாக, டாக்டர் வில்லெம் கெய்கர் [Dr. Wilhelm Geiger] மொழிபெயர்த்தார். இலங்கை அரசாங்கம்  அதை 1912 இல் வெளியிட்டது.

தீபவம்சம் & மகாவம்சம் இரண்டும் முதலில் பண்டைய இந்திய மொழியான பாளி மொழியில் எழுதப்பட்டது.

மகாவம்சம் ஆங்கிலேயர் காலனித்துவ காலத்தில் 1877 ஆம் ஆண்டு சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டது, சிங்கள மொழிக்கு ஏற்றவாறு உரையில் புதுப்பிப்புகள் [Update] செய்யப்பட்டன; இந்த சிங்கள பதிப்பு பெரும்பாலும் "சூழவம்சம்" என்று குறிப்பிடப்படுகிறது. சிங்கள பௌத்த அடையாளத்தை வடிவமைப்பதில் சிங்கள மொழியாக்கம் கணிசமான பங்கைக் கொண்டிருந்தது. இந்த கதை பின்னர் 1935 மற்றும் 1978 இல் புதுப்பிக்கப்பட்டது.

தமிழ் மொழிபெயர்ப்புகளைப் பொறுத்தவரை, மகாவம்சத்தை நேரடியாக தமிழில் மொழிபெயர்த்தது ஒன்றும் அறியப்படவில்லை, ஏனெனில் சிங்கள சமூகத்திற்குள் அதன் வரலாற்று முக்கியத்துவம் காரணமாக சிங்கள பதிப்பில் முதன்மைக் கவனம் செலுத்தப்பட்டது போலத் தோன்றுகிறது.

மகாவம்சத்தின் மூல நூலாகக் தீபவம்சம் கருதப்படுகிறது. என்றாலும் மகாவம்சம்  அதிலிருந்து மிகவும் வளர்ந்த மற்றும் விரிவான வரலாற்று நூலாக உள்ளது.

*அடுத்த பகுதியை வாசிக்க அழுத்துக...


*ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக...

 

Part: 34 / Conclusion / 'When prime Lanka chronicle, Mahavamsa, translated in English & Sinhala?'



There were many versions of Mahavamsa in various monasteries. There was one publication in 1833 with the title ‘The Mahavansi, The Raja-Ratnacari and The Rajavali” Edited by Edward Upham, M. R. A. S., F. S. A., February 16, 1833. This book is dedicated to the King’s Excellent Majesty with his permission.  but it was marked by several errors in translation and interpretation, among them suggesting that the Buddha was born in Sri Lanka and built a monastery atop Adam's Peak. The first printed edition and widely read English translation was published in 1837 by George Turnour, a historian and officer of the Ceylon Civil Service who translated 38 chapters. The Mahavamsa translation by  Wilhelm Geiger  briefly mentions about the son of Dutthagamani, Salirajakumara, in three verses, 33 – 1 to 3, fell in love with an extraordinary beautiful Candala woman and forsook the kingship in preference to her. However, in the version edited by Upham, the story runs into nine pages, from the page 207 to 216. Furthermore, the Mahavansi does not stop with the king Mahasena. The King Gajabahu went to the Solly country as per this edition but he went alone. He brought back his people, but does not say about the additional people. Even the number 12,000 is not mentioned. He brought the relics and the Buddha’s begging dish. The description of Mahasena is different in this book. He seemed to have done quite a lot to increase the agriculture. This is to emphasize that there were many versions of Mahavamsa, one differing from the other slightly or considerably. Sir Alexander Johnston tried his best to get the original manuscripts from an island wide search. However, George Turnour obtained a copy from one monastery through a priest called ‘Galle’ and worked on it. The colonial government found it wanting, and requested T. W. Rhys Davids to arrange for a better quality translation. Dr. Wilhelm Geiger translated it. The Ceylon Government published it in 1912. 

 

 

Beginning with Part 35, we will present, as an appendix, further detailed discussions for your perusal on topics including the Deepavamsa, Mahavamsa, Rajavaliya, the Buddha, his Great Parinirvana and noble qualities, Silappadhikaram, Manimekalai, Emperor Ashoka, the Buddha’s teachings, and the question — “Was the Buddha betrayed?”

 

நன்றி 

Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna]

பகுதி / Part: 34 B தொடரும் / Will follow

நலம் வாழ்க: கருப்பு அரிசி - ஆரோக்கியத்தின் கருஞ்சாவி!


நவீன உணவுக் கலாச்சாரத்தில் நாம் மறந்துபோன, ஆனால் உடலுக்குப் புத்துயிர் ஊட்டும் உன்னத உணவுப் பொருட்களில் முதன்மையானது கருப்பு அரிசி (Black Rice). சீனாவில் ஒரு காலத்தில் அரச குடும்பத்தினர் மட்டுமே உண்ண வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டு, சாமானியர்களுக்குத் தடை செய்யப்பட்டதால் இதற்குவிலக்கப்பட்ட அரிசி’ (Forbidden Rice) என்ற பெயரும் உண்டு.

 

இன்று உலகளவில் பேசப்படும் இந்த அதிசய அரிசியின் நன்மைகள், வகைகள் மற்றும் சமையல் முறைகள் குறித்து மருத்துவ ஆதாரங்களுடன் விரிவாகக் காண்போம்.

 

1. கருப்பு அரிசியின் வியப்பூட்டும் மருத்துவ நன்மைகள்

கருப்பு அரிசியின் அடர் நிறத்திற்கு அதன் தவிட்டிலுள்ள 'ஆந்தோசயனின்' (Anthocyanin) என்ற சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்தான் காரணம். புளுபெர்ரி (Blueberries) பழங்களை விட இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன.

இதய ஆரோக்கியம்: இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் (LDL) குறைத்து, மாரடைப்பு அபாயத்தைத் தடுக்கிறது.

சர்க்கரை நோய் கட்டுப்பாடு: இதன் கிளைசெமிக் குறியீடு (Glycemic Index) மிகக் குறைவு. இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு சட்டென்று உயரSearchாமல் சீராக வைத்திருக்க உதவுகிறது.

புற்றுநோய் எதிர்ப்பு காரணி: ஆந்தோசயனின் உடலில் உள்ள நச்சுக்களை (Free Radicals) வெளியேற்றி, புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கிறது என அமெரிக்க வேதியியல் கழகத்தின் (ACS) ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

உடல் எடை குறைப்பு & செரிமானம்: இதில் நார்ச்சத்து (Fiber) மிக அதிகம். இது பசியைக் கட்டுப்படுத்தி, மலச்சிக்கலை நீக்கி, உடல் எடையைக் குறைக்கப் பெரிதும் உதவுகிறது.

கல்லீரல் பாதுகாப்பு: கல்லீரலில் கொழுப்பு படிவதைத் (Fatty Liver) தடுத்து, அதனைச் சுத்திகரிக்கிறது.

2. மேலை நாட்டு கருப்பு அரிசி Vs இந்திய கருப்பு அரிசி: என்ன வேறுபாடு?

உலகில் பல வகையான கருப்பு அரிசிகள் இருந்தாலும், மேலை நாடுகளில் (முக்கியமாக அமெரிக்கா, சீனா, தாய்லாந்து) புழக்கத்தில் உள்ளதற்கும், இந்தியாவில் விளையும் பாரம்பரிய அரிசிக்கும் சில முக்கிய வேறுபாடுகள் உள்ளன.

 

பண்புகள்  மேலை நாட்டு கருப்பு அரிசி (Wild Rice / Forbidden Rice)   இந்திய கருப்பு அரிசி (கருப்புக் கவுனி / சாகாவோ)

முக்கிய வகைகள் Zizania (அமெரிக்க காட்டு அரிசி), Oryza sativa japonica (சீன அரிசி).        கருப்புக் கவுனி (தமிழ்நாடு), சாகாவோ (Chak-hao - மணிப்பூர்).

தன்மை & வடிவம்  அமெரிக்க காட்டு அரிசி என்பது உண்மையில் புல் வகையைச் சேர்ந்தது, நீளமாக இருக்கும். சீன அரிசி சற்று ஒட்டும் தன்மை (Sticky) கொண்டது.        முழுமையான நெல் வகையைச் சேர்ந்தது. நடுத்தர வடிவம் மற்றும் சமைத்தபின் தனித்தனியாகவும், மென்மையாகவும் இருக்கும்.

சுவை & மணம்       லேசான நட்ஸ் (Nuttiness) சுவையும், மூலிகை மணமும் கொண்டது.        தனித்துவமான நறுமணமும் (Aroma), லேசான இனிப்புச் சுவையும் கொண்டது.

மருத்துவக் குணம் நார்ச்சத்து மற்றும் புரதச் சத்து அதிகம்.   ஆந்தோசயனின் அளவு மிக அதிகம். பாரம்பரிய ஆயுர்வேத/சித்த மருத்துவத்தில் உடலை வழுவூட்டப் பயன்படுவது.

குறிப்பு: மணிப்பூரின் 'சாகாவோ' கருப்பு அரிசிக்கு அதன் தனித்துவமான தரம் மற்றும் மருத்துவக் குணத்திற்காக புவிசார் குறியீடு (GI Tag) வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்கள் மேல்நாடுகளின்   கடைகளில் வாங்கும் கருப்பு அரிசி மற்றும் இந்தியக் கவுனி அரிசி ஆகிய இரண்டுமே உடலுக்கு மிகச் சிறந்தவைதான்; ஆனால், உங்கள் குறிப்பிட்ட ஆரோக்கியத் தேவை மற்றும் சமையல் முறைக்கு ஏற்பவே எது சிறந்தது என்பதை முடிவு செய்ய வேண்டும்.

அரிசிகளின் நிற வேறுபாட்டிற்கான காரணங்கள் மற்றும் ஒப்பீடு கீழே விளக்கப்பட்டுள்ளது:

நிற வேறுபாட்டிற்கான காரணம்

  • மேல்நாடுகளின் கருப்பு அரிசி: இது பெரும்பாலும் வட அமெரிக்கா அல்லது ஆசிய நாடுகளில் இயந்திரங்கள் மூலம் தரம் பிரிக்கப்பட்டு (Color Sorted) விற்பனைக்கு வருகிறது. ஒரே மாதிரியான ரகம் என்பதால் அனைத்து அரிசி மணிகளும் ஒரே சீரான அடர் கருப்பு நிறத்தில் காட்சியளிக்கின்றன.
  •  

·        இந்தியக் கவுனி அரிசி: இது இந்தியாவில் பாரம்பரிய முறையில், இயற்கையான முறையில் விளைவிக்கப்படும் நாட்டு அரிசி ரகமாகும். பாரம்பரிய அரிசிகளில் அறுவடையின் போது சில அரிசி மணிகள் முழுமையாக முதிர்ச்சி அடையாமல் இருக்கலாம் அல்லது தீட்டப்படாத (Unpolished) தன்மையால் சில இடங்களில் நிறம் குறைந்தும், பழுப்பு/ஊதா நிறத்திலும் கலந்து காணப்படும். இது அரிசி கலப்படம் இல்லாத இயற்கை ரகம் என்பதற்கான சான்றாகும்.

· 

மேற்கண்ட ஒப்பீட்டின் அடிப்படையில், மேலைநாட்டு கருப்பு அரிசி மற்றும் இந்தியக் கவுனி அரிசி ஆகிய இரண்டுமே அவற்றின் தனித்துவமான பண்புகளால் வெவ்வேறு தேவைகளுக்கு மிகச் சிறந்தவையாக விளங்குகின்றன.

மேலைநாட்டு கருப்பு அரிசி என்பது உடல் எடையைக் குறை த்து இன்சுலின் சுரப்பைச் சீராக்கி, சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்கிறது.

நவீன உணவுகளான சலாட் (Salad), சூப், புலாவு, கஞ்சி மற்றும் ரைஸ் பவுல் (Rice Bowls) போன்றவற்றைச் சமைக்க நினைப்போருக்கும் ஏற்றது. ஏனெனில், இதில் இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சீரான அளவில் நிறைந்துள்ளன; மேலும், இதனைச் சமைத்த பின்பு அரிசி மணிகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் உதிரி உதிரியாக இருக்கும் தன்மை கொண்டவை.

மறுபுறம், இந்தியக் கவுனி அரிசி என்பது சர்க்கரையைக் கட்டுப்படுத்துவதுடன், நீரிழிவு நோயால் வரும் இதர உடல் சோர்வையும் போக்கும் மருத்துவக் குணம் கொண்டது.

உடல் எடையை குறைப்பது என்று பார்த்தால், இந்தியக் கவுனி அரிசி, மேனாட்டு அரிசியை விட மிகச் சிறந்த பலன்களைத் தரும்.

நீரிழிவு (சர்க்கரை நோய்) உள்ளவர்களுக்கும், பாரம்பரிய உணவுகளை விரும்பி உண்பவர்களுக்கும் மிகச் சிறந்த தேர்வாகும். இந்தியாவின் வளமான மண் வளம் காரணமாக, இந்த அரிசியில் மருத்துவக் குணங்களும், உடலைத் தூய்மைப்படுத்தும் சுய நச்சுநீக்கி (Detox) தன்மைகளும் சற்று அதிகமாகவே காணப்படுகின்றன. சமையல் தன்மையைப் பொறுத்தவரை, இது சமைத்த பின் சற்று வழுவழுப்பாகவும், ஒட்டும் தன்மையுடனும் (Glutinous) மாறுவதால், நம் ஊர் பாரம்பரிய உணவுகளான புட்டு, கவுனி அரிசி இனிப்பு பாயசம், கஞ்சி மற்றும் இட்லி போன்றவற்றைச் செய்வதற்கு மிகவும் ஏதுவாகவும் சுவையாகவும் அமைகிறது.

·        நீங்கள் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தவும், பாரம்பரிய உணவுகளின் சுவையைப் பெறவும் விரும்பினால், நிறம் மாறி மாறி இருந்தாலும் இந்தியக் கவுனி அரிசியே மிகச் சிறந்தது.

  • நீங்கள் அன்றாட உணவில் எளிதாகச் சேர்க்க, உதிரியான சாதமாகச் சாப்பிட விரும்பினால், மேலைநாட்டு கருப்பு அரிசி சிறந்த தேர்வாகும்

3. சமைக்கும் முறைகள்: எந்த வகையில் உண்ணலாம்?

கருப்பு அரிசி தீட்டப்படாத முழு தானியம் என்பதால், சமைப்பதற்கு முன்னால் 6 முதல் 8 மணி நேரம் தண்ணீரில் ஊற வைப்பது அவசியம். (ஊற வைத்த தண்ணீரை வீணாக்காமல் சமைக்கப் பயன்படுத்த வேண்டும், ஏனெனில் சத்துக்கள் அதில் கலந்திருக்கும்).

அன்றாட சாதம்: 1 கப் அரிசிக்கு 3 கப் தண்ணீர் வைத்து குக்கரில் 4-5 விசில்கள் விட்டு சாதாரண சாதம் போல உண்ணலாம். சாம்பார், ரசம், குழம்புடன் சாப்பிடலாம்.

கவுனி அரிசி இனிப்புப் பொங்கல்/புட்டு: பாரம்பரியமாகத் தமிழ்நாட்டில் கருப்புக் கவுனி அரிசியை வேகவைத்து, தேங்காய்த் துருவல் மற்றும் நாட்டுச்சர்க்கரை/வெல்லம் சேர்த்துப் புட்டு அல்லது இனிப்புச் சாதமாகச் சாப்பிடும் வழக்கம் உள்ளது.

காலை உணவு வகைகள்: ஊற வைத்த கருப்பு அரிசியுடன் உளுந்து சேர்த்து அரைத்து ஆரோக்கியமான இட்லி, தோசை, ஆப்பம் செய்து சாப்பிடலாம்.

கருப்பு அரிசிக் கஞ்சி: உடலுக்கு உடனடி ஆற்றல் தர, இந்த அரிசியைக் கஞ்சியாகச் சமைத்து வெங்காயம்,மிளகாய் அல்லது மோர் அல்லது பால் சேர்த்துப் பருகலாம்.

4. குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் உண்ணலாமா?

தாராளமாக உண்ணலாம், உண்ண வேண்டும்!

குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான இரும்புச்சத்து (Iron), துத்தநாகம் (Zinc) மற்றும் புரதச்சத்து (Protein) இதில் நிறைந்துள்ளன.

வழங்கும் முறை: குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் செரிமானம் எளிதாக இருக்க, கருப்பு அரிசியை நன்றாக வறுத்துப் பொடி செய்து, சத்துமாவு கஞ்சியாகவோ அல்லது மென்மையாக வேகவைத்த பாயாசமாகவோ கொடுக்கலாம். சிறுவர்களுக்கு தோசை, இட்லி அல்லது இனிப்புப் புட்டு வடிவில் தரலாம்.

மேல்நாடுகளின் கருப்பு  அரிசி உதிரியாக இருக்கும் என்பதால், குழந்தைகள் அதை மென்று விழுங்க சிரமப்படலாம். இந்தியக் கவுனி அரிசியின் மென்மையான ஒட்டும் தன்மை (Glutinous texture) குழந்தைகளுக்குச் சாப்பிட எளிதாக இருக்கும்.

நன்மை: இது குழந்தைகளின் நோய் எதிர்ப்புச் சக்தியை (Immunity) அதிகரிப்பதுடன், அவர்களின் ஞாபகச் சக்தியையும், எலும்பு வளர்ச்சியையும் மேம்படுத்துகிறது.

👉

உணவே மருந்து என்ற கோட்பாட்டை முழுமையாகக் கொண்ட நாடு நமது இந்தியா. மேலைநாட்டினர் இன்று 'Super Food' என்று கொண்டாடும் கருப்பு அரிசி, நம் முன்னோர்கள் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்த பொக்கிஷமாகும்.

 வாரம் இரண்டு முறையாவது நம் உணவுப் பட்டியலில் கருப்பு அரிசியைச் சேர்த்துக் கொள்வது, நம் குடும்பத்தை நவீனக் கால நோய்களிலிருந்து பாதுகாக்கும் ஒரு கேடயமாக அமையும். ஆரோக்கியம் என்பது சந்தையில் வாங்குவதல்ல, சமையலறையில் சமைப்பது!

தீபம் உடல்நலம்