"அறிவியல் நோக்கில் '
இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" /
"A look at 'Lanka
chronicles' from a scientific perspective"
[In Tamil & English]
[This detailed Tamil article is based on the unfinished
historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran,
a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]
பகுதி: 43 / பின் இணைப்பு - தீபவம்சம் / 'தேவி அரண்மனையில் வசிக்கத் தகுதியற்றவள் என்றால், அவளுடைய குழந்தைகள் அங்கே தங்குவதற்கு எப்படித் தகுதியானவர்கள்?'
உச்சைன் (உஜ்ஜைன் / Ujjain) மத்திய இந்தியாவின் மால்வாப் பகுதியில் அமைந்துள்ள பழைய நகரமாகும். இதனை உஞ்சேனை என்று திருநாவுக்கரசர் தேவாரத்திலும் உஞ்சை எனத் தமிழ்ப்படுத்திப் பெருங்கதை என்னும் நூல் வழங்குகிறது.
'உஞ்சேனை மாகாளம், ஊறல், ஓத்தூர்,
உருத்திரகோடி, மறைக்காட்டுள்ளும்,
மஞ்சு ஆர் பொதியில் மலை, தஞ்சை,
வழுவூர்-வீரட்டம், மாதானம், கேதாரத்தும்,'
[திருநாவுக்கரசர் தேவாரம்]
இன்றைய மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள இது சிப்ரா ஆற்றின் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது. உஜ்ஜையினி என்னும் பெயரில் இந்நகரம் பற்றிய குறிப்பு புத்தர் காலத்திலிருந்தே கிடைக்கிறது. அக்காலத்தில் இது அவந்தி நாட்டின் தலைநகரமாக இருந்தது. பிற்காலத்தில் மௌரியப் பேரரசனான அசோகர் மௌரியப் பேரரசின் மேற்கு மாகாண இராஜப்பிரதிநிதியாக [viceroy] இருந்தபோது உஜ்ஜயினியிலேயே வாழ்ந்தான். அப்பொழுது உஜ்ஜேனியில் வசூல் செய்யும் பொறுப்பு இளவரசர் அசோகரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் அங்கு, தேவி என்ற ஒரு சேத்தி [Setthi [wealthy merchant] / பண்டைய படிநிலை இயல்பு கொண்ட நான்கு சமூகப் பிரிவுகளுள் ஒன்றான, வைசியர் பிரிவில் வணிக சமூகத்தை சேர்ந்தவள் இவள்] பெண்ணைச் சந்தித்தார். அவர்கள் ஒன்றாக அங்கு வாழ்ந்தனர். இவர்களுக்கு மகிந்த என்ற மகனும், சங்கமித்தா என்ற மகளும் பிறந்தனர். மகிந்தவும் சங்கமித்தாவும் தங்கள் தந்தையுடன் பாடலிபுத்திரத்தில் உள்ள அரண்மனைக்கு சென்றனர், என்றாலும் தாய் தேவி அங்கு போக முடியவில்லை. தேவி வணிக சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும், எனவே, அரண்மனையில் வசிக்கத் தகுதி அற்றவர் என்றும் கருதப் பட்டது
என்று கூறப்படுகிறது. அது ஒரு சரியான காரணம் என்றால், கட்டாயம் மகிந்தவும் சங்கமித்தாவும் கூட
அரண்மனையில் இருக்க தகுதியற்றவர்கள் ஆகும். மகிந்தவின் பிறந்த ஆண்டு புத்தர் இறந்து இருநூற்று நான்கு ஆண்டுகள் எனவும், [6-20. Two hundred years and four
years more had elapsed: just at that time Mahinda, the son of Asoka, was born.]
மற்றும் சங்கமித்தா இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு என்றும்
கூறப்படுகிறது. சில மூலங்களின்படி சங்கமித்தை மற்றும் மகிந்த,
இரட்டைப் பிள்ளைகள் ஆவார்கள். சுமார் இரண்டாயிரத்து இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குழந்தை பிறந்த ஆண்டை துல்லியமாக சுட்டிக்காட்டுவது கட்டாயம் சாத்தியமில்லை. சங்கமித்தா விடயத்திலும் அப்படித்தான். அறிஞர் சமூகத்தைச் சேர்ந்த சிலர் மகிந்தவையும் சங்கமித்தாவையும் கற்பனையான நபர்களாகக் கருதுகின்றனர். மகிந்த மற்றும் சங்கமித்தா, அசோக மன்னனின் மகன் மற்றும் மகள் என்று எந்த இந்திய ஆதாரங்களிலும் குறிப்புகள் இல்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.
புத்தர் இறந்து இருநூற்று பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அசோகரின் முடிசூட்டு விழா நடந்தது என்ற கூற்று இலங்கை வரலாற்றில் மட்டும் காணப்படுகிறது. இதை பொதுவாக
நீண்ட பாரம்பரியம் அல்லது தெற்கு பாரம்பரியம் [Long Tradition or Southern
Tradition] என்று அழைக்கப்படுகிறது. என்றாலும் புத்தர் இறந்து நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இது நடந்ததாக, புத்தர் பிறந்து, வளர்ந்து இறந்த
இந்தியாவின் ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன. இது வடக்கு பாரம்பரியம் அல்லது குறுகிய பாரம்பரியம் [Northern Tradition or Short
Tradition] என்று அழைக்கப்படுகிறது. ஆங்கிலேய அரசு ஊழியர் ஜோர்ஜ் டேனர் அல்லது ஜோர்ஜ் டர்னர் [George Turnour] கி பி 1837 இல் மகாவம்சத்தை மொழிபெயர்த்தார். மேலும் அவரது செல்வாக்கு, அன்று
இலங்கையின் இருநூற்று பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னுரிமை அளித்து, நூறு ஆண்டுகள் என்ற இந்தியர்களின் வரலாற்றுக் குறிப்பை பின் தள்ளியது. புத்தரின் மரணம் ஜோர்ஜ் டர்னரால் முதலில் கிமு 543 என்று ஊகிக்கப்பட்டது. என்றாலும் இந்திய பாரம்பரியத்தைப் பின்பற்றினால், புத்தரின் மரணம் கிமு 369 இல் நிகழ்ந்திருக்க வேண்டும். மேலும் இந்த அத்தியாயமும் இலங்கையில் நடந்த எந்த மனித வரலாற்று நிகழ்வுகளையும் பற்றியது அல்ல.
*அடுத்த பகுதியை வாசிக்க அழுத்துக...
*ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக..
Part: 43 / Appendix – Dipavamsa / 'If
Devi ls unfit to reside in the palace,
How her children fit to stay there?'
Prince Asoka was entrusted with the collection of revenue in
Ujjeni. He met a Setthi (Vaisya- trading community) lady named Devi, and, they
cohabited. A son, Mahinda, and a daughter, sanghamitta, were born to them.
Mahinda and sanghamitta moved with their
father to the palace in Pataliputra, but not the mother, Devi. It is cited that
Devi belonged to trading community and, therefore, not considered fit to reside
in the palace. If that is a sound reason
then Mahinda and sanghamitta too unfit
to be in the palace. Mahinda’s year of birth is given as two hundred and four
years after the death of the Buddha, 6-20, and sanghamitta two years later. This exact pinpointing of the year of birth
of a child about two thousand two hundred and fifty years ago is not possible.
Same is the case with sanghamitta. Some members of the scholarly community
consider Mahinda and sanghamitta as
fictitious persons. There are no references to Mahinda and sanghamitta as the
son and the daughter of the King Asoka in any Indian sources.
The statement that Asoka’s coronation took place two hundred
and eighteen years after the Buddha’s death is from the Ceylonese chronicles
only. This is the Long Tradition or Southern Tradition. The Indian sources
indicate that it took place one hundred years after the Buddha’s death. This is
the Northern Tradition or Short Tradition. The English civil servant George
Turnour translated the Mahavamsa in 1837 A. D. and his influence overshadowed
the Indian one hundred years in preference to the Ceylonese two hundred and
eighteen years. The Buddha attained Nirvana in 543 B. C. based on this
Ceylonese tradition. As per Indian tradition, the Buddha’s death would have
occurred about 369 B. C. See the Appendix-Mahaparinirvana of the Buddha for
more information. This chapter 6 is also not about any human historical events
that took place in Lanka.
நன்றி
Thanks
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
பகுதி / Part: 44 A தொடரும் / Will follow