"அறிவியல் நோக்கில்....பகுதி:27B --"பெளத்தம் ஒரு அலசல்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய  இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" [In Tamil & English] 



பகுதி: 27 B / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'மூன்று கேள்விகள்?' [தமிழ் விரிவாக்கம் தொடர்கிறது



பண்டித ஹிஸ்ஸெல்லே தம்மரத்தன மகா தேரர் [Pandit Hisselle Dharmaratana mahathera], தனது 'தென் இந்தியாவில் புத்தமதம்' [Buddhism in South India], என்ற புத்தகத்தில், புத்த மதகுரு மகிந்தன் அல்லது மகிந்தர் அல்லது மஹிந்த (Mahinda, சமக்கிருதம்: महेन्द्र; மகேந்திரா, பிறப்பு: கிமு 3ம் நூற்றாண்டு), அவர்களே தமிழ் நாட்டிலும் புத்த மதம் பரப்பியதற்கு சான்றுகள் உள்ளதாக குறிப்பிடுகிறார். மகாவம்சம், அவர் இயற்கையை கடந்த சக்தி மூலம் [supernatural powers] இலங்கையை அடைந்தார் என புராணக் கதைகள் போல் குறிப்பிட்டாலும், உண்மையில் அவர் கடல் மூலம் பயணித்ததாகவும், அப்படி இலங்கைக்கு போகும் வழியில், காவேரி பட்டணம் வந்து அங்கு முதலில் புத்த மதம் பரப்பியதாகவும் அறிஞர்கள் கருதுவதாக கூறுகிறார் [The Mahathera states "although the chronicles say he arrived through his supernatural powers, scholars are of the opinion that he travelled by sea and called at Kaveripattinam on the east coast of Tamil Nadu on his way to Sri Lanka"]. டாக்டர் ஷூ ஹிகோசகே [Dr Shu Hikosake Director Professor of Buddhism, Institute of Asian Studies in Madras] தனது 'தமிழ் நாட்டில் புத்தமதம்' [Buddhism in Tamil Nadu] என்ற புத்தகத்திலும் இந்த கருத்தையே கூறுகிறார். கி.பி ஏழாம் நூற்றாண்டில் ஹியுங் சாங் (Hiuen Tsang) எனும் நாடுகண் சீன பிக்கு [the Chinese 7th Century, Buddhist monk, scholar traveller], பாண்டிய அரசனின் மதுரைக்கு அண்மையில், மஹிந்தரால் ஒரு மடாலயம் கடப்பட்டதாக குறிப்பிடுகிறார் [a monastery built by Mahinda thera]. அவர் மேலும் காஞ்சிபுரத்தில் ஒரு தூபி [stupa] அசோகனால் கடப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார். மேலும் காஞசிபுரம் ஒரு செழிப்பான நகரம் என்றும், அங்கு வாழும் மக்களில் பெரும்பாலோர் புத்த மதத்தை தழுவியவர்கள் என்றும் குறிப்பிடுகிறார் [Kanchipuram as a flourishing city and states that most of its population was Buddhist].

 


அசோகனின் உற்ற நண்பனான தேவநம்பிய தீசன் அல்லது தீசன்  இலங்கையை ஆளும் காலத்தில், புத்த  சமயப்பரப்பாளர் குழுவொன்றை [Buddhist monk missionary] தன் மகனின் தலைமையில் அங்கு அனுப்பினான் என்கிறது மகாவம்சம். இந்த தீசன் பட்டாபிஷேகம் செய்து கொண்ட போது பல அற்புதங்கள் நிகழ்ந்தன என்றும், இவையனைத்தும் தீசனின் பெருமையால் நிகழ்ந்தவை என்றும், இவ்வற்றை கண்ட மன்னன் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து. ‘என்னுடைய நண்பனான தர்ம அசோகனைத் தவிர வேறு யாரும் இவ் விலை மதிப்பற்ற பொருள்களைப் பெறத் தகுதியுள்ளவர்கள் அல்ல. எனவே இவற்றைப் பரிசாக அவருக்கு அனுப்புவேன்' என்றான் என்றும் பதினோராம்  அத்தியாயம், 'தேவநம்பிய தீசன் பட்டாபிஷேகம்' [ Chapter XI / The Consecrating Of Devanampiyatissa] கூறுகிறது. மேலும் பதின்மூன்றாவது  அத்தியாயம் 'மஹிந்தர் வருகையில்' [Chapter XIII / The Coming Of Mahinda], இந்திரன், மிகச் சிறந்தவரான மஹிந்த தேரரிடம் வந்து இலங்கையை மாற்றப் புறப்படுங்கள். சம்புத்தராலும் இது ஏற்கனவே உங்களுக்கு சொல்லப்பட்டிருக்கும் என்கிறான். அதைத் தொடர்ந்து, பதிநான்காவது அத்தியாயம் 'தலைநகர் புகுதலில்' [Chapter XIV / The Entry Into The Capital], அரசனை [தீசனை] சோதிப்பதற்காக மஹிந்த தேரர் அவனை சூட்சுமமான கேள்வி கேட்டார். கேட்கக் கேட்க பல கேள்விகளுக்கும் அவன் பதிலளித்தான் என்கிறது.

 


இப்ப நான் உங்களைக் கேட்க விரும்புவது, புத்தரால் தேர்ந்து எடுக்கப்பட்ட, விஜயன் வரும் பொழுது, அங்கு ஒரு அதிசயமும் நடைபெறவில்லை, மாறாக உயர்குலம் அற்ற இயக்கர் பெண்ணை மணக்கும் சூழ்நிலைக்கு தள்ளப் படுகிறான். பின் அவன் தன் மனைவியையும் பிள்ளைகளையும், துரத்திவிட்டு, உயர் குல பாண்டிய தமிழ் இளவரசியை இரண்டாம் தாரமாக மணக்கிறான், என்றாலும் பிள்ளைகள் இல்லாமல் அவன் சந்ததி இலங்கையை ஆளாமல், முற்றுப் பெறுகிறது. அப்படி என்றால் ஏன் அவனை புத்தர் தேர்ந்தெடுத்தார் ? இரண்டாவதாக, இந்திரன், மிகச் சிறந்தவரான மஹிந்த தேரரிடம் வந்து இலங்கையை மாற்றப் புறப்படுங்கள். சம்புத்தராலும் இது ஏற்கனவே உங்களுக்கு சொல்லப்பட்டிருக்கும் என்கிறான். அப்படி என்றால் புத்தர் தன் முதல் தெரிவான விஜயனில் தடுமாறி, இரண்டாவது தெரிவை இருநூறுக்கு சற்று மேற்பட்ட ஆண்டுகளின் பின் காலம் தாழ்த்தி செய்தாரா ? மூன்றாவதாக, அசோகன் தீசனின் நட்ப்பிலும், அவன் ஆளும் இலங்கையிலும் மிகவும் அக்கறை கொண்டு மஹிந்த தேரரை அனுப்பினார் என்கிறது, அப்படி என்றால், எதற்காக, மஹிந்தர் வந்து இலங்கையில் இறங்கும் பொழுது, தீசன் சோதிக்கப் பட்டான்? எவராவது இதை வாசிக்கும் பொழுது, அவர்களின் மனதில் கட்டாயம் அசோகன், தீசனின் நட்பிலும், மற்றும் ஒருவரை ஒருவர் எவ்வளவுதூரம் புரிந்து வைத்து இருந்தார்கள் என்பதிலும் ஒரு ஐயப்பாடு ஏற்படும் என்றும் தோன்றுகிறது? [When one reads this portion of the Mahavamsa, the question arises how far Asoka and Tissa could be friends and how much Asoka knew of Tissa]

 

நன்றி  / Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna]

பகுதி / Part: 27 C தொடரும் / Will follow

ஆல்கஹால் அருந்தாதவர்களுக்கும் மௌனமாக தாக்கும் (MASLD) கொழுப்பு கல்லீரல் நோய்

கல்லீரல்: 500 வேலைகள் செய்யும் அமைதியான தொழிலாளர்



நமது உடலில் உள்ள உறுப்புகளில் கல்லீரல் மிகச் சிறப்புபெற்றது. இதயம் இரத்தத்தை மட்டும் பம்ப் செய்தால், நுரையீரல் ஆக்சிஜனை மட்டும் பரிமாறினால், கல்லீரல் 500க்கும் மேற்பட்ட முக்கிய வேலைகளை செய்துகொண்டே நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது என்று மருத்துவ ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. உணவு ஜீரணமாவதிலிருந்து நச்சுகளை நீக்குவது வரை, ஆற்றலை சேமிப்பது முதல் ஹார்மோன் சமநிலையை கட்டுப்படுத்துவது வரை ஒவ்வொரு நொடியும் அது அயராது உழைக்கிறது.

ஆனால் இவ்வளவு வேலை செய்திடும் இந்த அமைதியான தொழிலாளரை உலகம் முழுவதும்மெட்டபாலிக் செயலிழப்பு தொடர்புடைய கொழுப்பு கல்லீரல் நோய் (MASLD) மெல்ல மெல்ல தாக்கி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (NAFLD)” என்று அழைக்கப்பட்ட இந்த நோய் பெயர் இன்று மாற்றப்பட்டாலும், அதன் அபாயம் மட்டும் குறைந்ததில்லை.

 

மது அருந்தாதவர்களும் ஏன் கொழுப்பு கல்லீரலுக்கு ஆளாகிறார்கள்?

இன்று MASLD ஒருவளர்சிதைமாற்ற (மெட்டபாலிக்) நோய்க்குழுமம்என்று உலக சுகாதார ஆய்வுகள் வகைப்படுத்துகின்றன. அதாவது இது ஒரே ஒரு காரணத்தால் உருவாகும் நோயல்ல;

✻உடல் பருமன், இடுப்பில் அதிக கொழுப்பு (visceral fat),

✻வகை 2 நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு அதிகம் கொண்ட இரத்தம்,

✻உடல் இயக்கமின்மை, இரவு நேர தூக்கமின்மை, மன அழுத்தம்,

✻அதிக கலோரி, ஃபாஸ்ட் ஃபுட், இனிப்பு, சர்க்கரைப் பானங்கள் போன்ற உணவுகள்

இவை அனைத்தும் சேர்ந்து கல்லீரலில் தேவையற்ற கொழுப்பு படிய வழிவகுக்கின்றன என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

குறிப்பாக நீரிழிவு, பருமன், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களிடம் MASLD ஒரு பொதுவான இணை நோயாகவே இன்று பதிவு செய்யப்படுகிறது. “மதுவைத் தொடாதவர்கள் எனவே கல்லீரல் நோய் வராதுஎன்ற நம்பிக்கை மருத்துவ உண்மைகளுக்கு முற்றிலும் எதிரானது என்பதை சமீபத்திய ஆராய்ச்சிகள் வலியுறுத்துகின்றன.

 

அறிகுறிகள் இல்லாத ஆபத்து: அமைதியாகக் கடிந்துகொள்ளும் நோய்

கொழுப்பு கல்லீரலின் மிகப் பெரிய சிக்கல்இது பெரும்பாலும் எந்தத் தெளிவான அறிகுறிகளும் தராது.

சோர்வு, மன உற்சாகக் குறைவு போன்ற பொதுவான அறிகுறிகள் சிலருக்கு இருக்கலாம்;

ஆனால் இவை தைராய்டு, இரத்தக்குறை போன்ற பல வேறு நோய்களிலும் தோன்றுவதால்அறிகுறியைக் கொண்டுமட்டும் கண்டறிவது சாத்தியமில்லை.

இத்தகைய காரணமாக, அதிக ஆபத்து உள்ள குழுக்கள் கட்டாயம் ஒழுங்கையான பரிசோதனை செய்ய வேண்டும் என்று மருத்துவ வழிகாட்டுதல்கள் கூறுகின்றன. பொதுவாக:

🔺10 ஆண்டுகளுக்கு மேல் நீரிழிவு இருக்கும் நபர்கள்,

🔺BMI 23க்கு (ஆசியர்களில் 23 மேல்) மேல் உள்ளவர்கள்,

🔺வயிற்றில் அதிக கொழுப்பு சேர்ந்து இருக்கும்விசரல் ஃபாட்உடையவர்கள்,

🔺மதுவை அடிக்கடி அருந்துபவர்கள்

இவர்கள் வருடத்திற்கு ஒருமுறை அல்ட்ராசவுண்ட், ஃபைப்ரோஸ்கேன் போன்ற பரிசோதனைகளை செய்ய வேண்டுமென ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன.

 

கொழுப்பு கல்லீரல் ஆபத்தான நிலைக்கு சென்றால்?

கல்லீரலில் கொழுப்பு சேரும் ஆரம்ப நிலை (steatosis) கட்டத்தில் அதைப் பேணி திருப்பி மாற்ற முடியும். ஆனால் கவனிக்காமல் விட்டால்,

↮ முதலில் நார்த்திசு மாற்றம் (fibrosis),

↮ பின்னர் சிரோசிஸ் (cirrhosis),

இறுதியில் கல்லீரல் செயலிழப்பு அல்லது கல்லீரல் புற்றுநோய் வரை செல்லக்கூடும் என்று உலகளாவிய தரவுகள் எச்சரிக்கின்றன.

சிரோசிஸ்க்குப் பிறகு பெரும்பாலான நோயாளிகளுக்கு வாழ்க்கையை காப்பாற்றும் ஒரே வழி கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தான். இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றத்தால் அறுவை சிகிச்சை நேரடி தோல்வி விகிதம் குறைந்தாலும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு தொற்றுநோய் அபாயம், நீண்டகால மருந்து பயன்பாடு போன்ற சவால்கள் இருந்து வருவதாக மருத்துவ மையங்கள் அறிவிக்கின்றன. அதனால்சிகிச்சையை நம்புவதுவிடகல்லீரலை காக்காமல் இருக்காமல் இருப்பதுபாதுகாப்பான தேர்வு.

 

கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?

கல்லீரல் ஆரோக்கியத்தின் மையத்தில் சரியான உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறை தான் இருக்கிறது என்று அனைத்துலக வழிகாட்டுதல்கள் வலியுறுத்துகின்றன.

வயதுக்கு ஏற்ற கலோரித் தேவையை மதிக்க வேண்டும்: உடலுக்கு 1,500 கலோரி போதுமான நிலையில் 3,000 கலோரி சாப்பிட்டால், அந்த மிகுதியான ஆற்றல் கொழுப்பாக மாறி முதலில் கல்லீரல், பின்னர் வயிற்று மற்றும் உள் உறுப்புகளில் படிகிறது.

இனிப்பு, ஃபாஸ்ட் ஃபுட், அதிக எண்ணெய் உணவுகளை குறைக்க வேண்டும்: சாலையோரம் எடுத்தசின்ன இனிப்புகூட சுமார் 100 கலோரி கொண்டிருக்க முடியும்; அதைக் எரிப்பதற்காக ஜிம்மில் நாம் செலவிட வேண்டிய உழைப்பை கற்பனை செய்து பார்க்கும்போது உணவு விழிப்புணர்வு எவ்வளவு அவசியமோ புரியும்.

வெள்ளை சர்க்கரை, மைதா போன்ற எளிய கார்போஹைட்ரேட்களை விட கைக்குத்தல் அரிசி, முழு கோதுமை, கேழ்வரகு, கம்பு போன்ற சிக்கலான கார்போஹைட்ரேட்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

காய்கறிகள், பழங்கள், விதைகள், பச்சை இலைகள் போன்ற ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்த உணவுகளை நாள்தோறும் சேர்த்துக்கொள்வது கல்லீரலை ஆக்ஸிடேட்டிவ் ஸ்டிரஸ்ஸிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி, தினசரி போதிய உறக்கம், புகைப்பிடித்தலைத் தவிர்த்தல், மதுவை மிகக் குறைவு அளவிலும் அல்லது முழுமையாக நிறுத்துதல் போன்றவை MASLD அபாயத்தை குறைக்கும் என்று மருத்துவ வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.

40 வயதை நெருங்கும்போது எடை மேலும் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வது, உணவை உணர்ச்சியுடன் (mindful eating) சாப்பிடும் பழக்கத்தை வளர்த்துக்கொள்வது நீண்ட கால கல்லீரல் ஆரோக்கியத்திற்கு முக்கிய முதலீடாகும்.

 

 👉நம்மை காப்பாற்றும் கல்லீரலை நாமே காப்போம்

உலகளவில் கோடிக்கணக்கான மக்களை பாதித்து வரும் MASLD, “அறிகுறிகள் இல்லாத அமைதியான அலைபோல நம் சமுதாயத்தைத் துரத்தி வருகிறது. ஆனாலும் நல்ல செய்தி என்னவென்றால், இந்த நோய் ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் வாழ்க்கைமுறை மாற்றங்கள் மூலம் பலருக்கு முற்றிலும் திரும்பி நல்ல நிலைக்கு கொண்டு செல்ல முடியும் என்று ஆய்வுகள் நம்பிக்கையளிக்கின்றன.

 

கல்லீரல் என்ன செய்கிறது?” என்ற ஒரு எளிய கேள்விக்கு பதில் தேடிக் கொண்டே இருந்தால், “நான் என் கல்லீரலுக்காக என்ன செய்கிறேன்?” என்ற கேள்வியும் நம் மனதில் எழ வேண்டும். இந்த இரண்டு கேள்விகளுக்கும் பொறுப்புடனான பதில் அளிக்கும் நாளே கல்லீரல் மீதான நம் நன்றியுடைய தினமாக மாறும்.

 

தீபம் உடல்நலம்