திருக்குறள்... -/78/- படைச் செருக்கு


திருக்குறள் தொடர்கிறது




78. படைச் செருக்கு

குறள் 771:

என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னைமுன்னின்று கல்நின் றவர்.

மு.வ உரை:

பகைவரே! என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நிற்காதீர்கள், என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நின்று கல்வடிவாய் நின்றவர் பலர்.

சாலமன் பாப்பையா உரை:

பகைவர்கேள! என் அரசின் முன்னே போரிட நிற்காதீர்; உங்களைப் போலவே இதற்கு முன்பு பலர் நின்றனர்; எல்லாம் மறைந்து இப்போது நடுகல்லில் சிலையாக நிற்கின்றனர்.

கலைஞர் உரை:

போர்களத்து வீரன் ஒருவன், ``பகைவயர்களே என் தலைவனை எதிர்த்து நிற்காதீர்; அவனை எதிர்த்து நடுகல்லாய்ப் போனவர்கள் பலர்'' என முழங்குகிறான்.

English Explanation:

O my foes, stand not before my leader; (for) many are those who did so but afterwards stood (in the shape of) statues.

 

குறள் 772:

கான முயலெய்த அம்பினில் யானை

பிழைத்தவேல் ஏந்தல் இனிது.

மு.வ உரை:

காட்டில் ஓடுகின்ற முயலை நோக்கி குறிதவறாமல் எய்த அம்பை ஏந்துதலைவிட, வெட்ட வெளியில் நின்ற யானை மேல் எறிந்து தவறிய வேலை ஏந்துதல் சிறந்தது.

சாலமன் பாப்பையா உரை:

காட்டில் அஞ்சி ஓடும் முயலைக் கொன்ற அம்பைப் பிடித்திருப்பதை விட, எதிர்த்து வரும் யானையின் மீது பட்டும், அதை வீழ்த்தாத வேலைப் பிடித்திருப்பது நல்லது.

கலைஞர் உரை:

வலிவு மிகுந்த யானைக்குக் குறிவைத்து, அந்தக் குறிதப்பினாலும்கூட அது, வலிவற்ற முயலுக்குக் குறிவைத்து அதனை வீழ்த்துவதைக் காட்டிலும் சிறப்புடையது.

English Explanation:

It is more pleasant to hold the dart that has missed an elephant than that which has hit hare in the forest.

 

குறள் 773:

பேராண்மை என்ப தறுகனொன் றுற்றக்கால்ஊராண்மை மற்றதன் எஃகு.

மு.வ உரை:

பகைவரை எதிர்த்து நிற்க்கும் வீரத்தை மிக்க ஆண்மை என்று கூறுவர், ஒரு துன்பம் வந்த போது பகைவர்க்கும் உதவிச் செய்தலை அந்த ஆண்மையின் கூர்மை என்று கூறுவர்.

சாலமன் பாப்பையா உரை:

பகைவர் மீது இரக்கம் காட்டாமல் இருப்பதை மிகுந்த ஆண்மை என்பர்; ஆனால், அந்தப் பகைவர்க்கு ஒரு தாழ்வு வரும்போது அவர் மீது இரக்கம் கொண்டு, அவர் தாழ்ச்சியைப் போக்க உதவுவது ஆளுமையை மேலும் சிறப்பிக்கும்.

கலைஞர் உரை:

பகைவர்க்கு அஞ்சாத வீரம் பெரும் ஆண்மை என்று போற்றப்படும் அந்தப் பகைவர்க்கு ஒரு துன்பம் வரும்போது அதைத் தீர்க்க உதவிடுவது ஆண்மையின் உச்சம் எனப் புகழப்படும்.

English Explanation:

The learned say that fierceness (incontest with a foe) is indeed great valour; but to become a benefactor in case of accident (to a foe) is the extreme (limit) of that valour.

 

குறள் 774:

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்

மெய்வேல் பறியா நகும்.

மு.வ உரை:

கையில் ஏந்திய வேலை ஒரு யானையின் மேல் எறிந்து துரத்திவிட்டு, வேறு வேல் தேடி வருகின்றவன் தன் மார்பில் பட்டிருந்த வேலைக் கண்டு பறித்து மகிழ்கின்றான்.

சாலமன் பாப்பையா உரை:

தன்னை எதிர்த்து வந்த யானையின் மீது தன் கையிலிருந்த வேலை எறிந்து விட்டவன், அடுத்து வருகி்ன்ற யானை மீது எறிவதற்காகத் தன் மார்பில் பதிந்து நின்ற வேலைப் பறித்துக் கொண்டே மகிழ்வான்.

கலைஞர் உரை:

கையிலிருந்த வேலினை யானையின் மீது வீசி விட்டதால் களத்தில் போரினைத் தொடர வேறு வேல் தேடுகிற வீரன், தன் மார்பின்மீதே ஒரு வேல் பாயந்திருப்பது கண்டு மகிழ்ந்து அதனைப் பறித்துப் பகையை எதிர்த்திடுகின்றான்.

English Explanation:

The hero who after casting the lance in his hand on an elephant, comes (in search of another) will pluck the one (that sticks) in his body and laugh (exultingly).

 

குறள் 775:

விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின்ஓட்டன்றோ வன்க ணவர்க்கு.

மு.வ உரை:

பகைவரை சினந்து நோக்கியக் கண், அவர் வேலைக் கொண்டு எறிந்த போது மூடி இமைக்குமானால், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ.

சாலமன் பாப்பையா உரை:

பகைவரைச் சினந்து பார்க்கும் கண், அவர்கள் எறியும் வேலைப் பார்த்து மூடித் திறந்தாலும், சிறந்த வீரர்க்கு அதுவே புறங் கொடுத்தலாகும்.

கலைஞர் உரை:

களத்தில் பகைவர் வீசிடும் வேல் பாயும்போது விழிகளை இமைத்து விட்டால்கூட அது புறமுதுகுகாட்டி ஓடுவதற்குஒப்பாகும்.

English Explanation:

The hero who after casting the lance in his hand on an elephant, comes (in search of another) will pluck the one (that sticks) in his body and laugh (exultingly).

 

குறள் 776:

விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்வைக்குந்தன் நாளை எடுத்து.

மு.வ உரை:

வீரன் தன் கழிந்த நாட்களைக் கணக்கிட்டு, விழுப்புண் படாத நாட்களை எல்லாம் பயன் படாமல் தவறிய நாட்களுள் சேர்ப்பான்.

சாலமன் பாப்பையா உரை:

ஒரு வீரன் தன் கடந்த நாள்களை எண்ணி எடுத்து, அவற்றுள் முகத்திலும் மார்பிலும் போரின்போது புண்படாத நாள்களைப் பயனில்லாமல் கழிந்த நாள்களாகக் கருதுவான்

கலைஞர் உரை:

ஒரு வீரன், தான் வாழ்ந்த நாட்களைக் கணக்குப் பார்த்து அந்த நாட்களில் தன்னுடலில் விழுப்புண்படாத நாட்களையெல்லாம் வீணான நாட்கள் என்று வெறுத்து ஒதுக்குவான்.

English Explanation:

The hero will reckon among wasted days all those on which he had not received severe wounds.

 

குறள் 777:

சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்

கழல்யாப்புக் காரிகை நீர்த்து.

மு.வ உரை:

பரந்து நிற்க்கும் புகழை விரும்பி, உயிர்வாழ்வையும் விரும்பாத வீரர், வீரக் கழலை காலில் கட்டிக்கொள்ளுதல் அழகு செய்யும் தன்மையுடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை:

தம்முடன் சொர்க்கத்திற்கு வராது பூமியில் மட்டு் நிலைத்து நிற்கும் புகழை விரும்பி, உயிரையும் விரும்பாத வீரர், தம் கால்களில் வீரக்கழலைக் கட்டுவது அவர்க்கு அழகே.

கலைஞர் உரை:

சூழ்ந்து பரவிடும் புகழை மட்டுமே விரும்பி உயிரைப் பற்றிக் கவலைப்படாத வீரர்களின் காலில் கட்டப்படும் வீரக்கழல் தனிப் பெருமை உடையதாகும்.

English Explanation:

The fastening of ankle-ring by those who disire a world-wide renown and not (the safety of) their lives is like adorning (themselves).

 

குறள் 778:

உறினுயிர் அஞ்சா மறவர் இறைவன்

செறினுஞ்சீர் குன்றல் இலர்.

மு.வ உரை:

போர்வந்தால் உயிரின் பொருட்டு அஞ்சாமல் போர் செய்யத் துணியும் வீரர், அரசன் சினந்தாலும் தம்முடைய சிறப்புக் குன்றாதவர் ஆவர்.

சாலமன் பாப்பையா உரை:

போர் வந்தால் தம் உயிர்க்கு அஞ்சாது செல்லும் வீரர், அப்போரை வேண்டா என்று அரசு சினந்து தடுத்தாலும், தம் வீரத்தில் குறைய மாட்டார்.

கலைஞர் உரை:

தலைவன் சினந்தாலும் சிறப்புக் குறையாமல் கடமை ஆற்றுபவர்கள்தான், போர்களத்தில் உயிரைப் பற்றிக் கலங்காத வீர மறவர்கள் எனப் போற்றப்படுவர்.

English Explanation:

The heroes who are not afraid of losing their life in a contest will not cool their ardour, even if the king prohibits (their fighting).

 

குறள் 779:

இழைத்த திகவாமைச் சாவாரை யாரே

பிழைத்த தொறுக்கிற் பவர்.

மு.வ உரை:

தாம் உரைத்த சூள் தவராத படி போர் செய்து சாக வல்லவரை, அவர் செய்தப் பிழைக்காக தண்டிக்க வல்லவர் யார்.

சாலமன் பாப்பையா உரை:

தாம் சொன்ன சபதம் நிறைவேறாமல் போனாலும், அதற்காகவே போர்க் களத்தில் தோற்றவர் என்று எவர் இகழ்ந்து பேசுவார்?

கலைஞர் உரை:

சபதம் செய்தவாறு களத்தில் சாவதற்குத் துணிந்த வீரனை யாராவது இழித்துப் பேச முடியுமா? முடியாது.

English Explanation:

Who would reproach with failure those who seal their oath with their death?

 

குறள் 780:

புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்கா

டிரந்துகோட் டக்க துடைத்து.

மு.வ உரை:

தம்மைக் காத்த தலைவருடைய கண்கள் நீர் பெருக்குமாறு சாகப் பெற்றால், சாவு இரந்தாவது பெற்றுக் கொள்ளத் தக்க பெருமை உடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை:

வீரர்களின் வீரச்செயலை எல்லாம் எண்ணிப் பார்க்கும் கண்களோடு ஆட்சியாளர் நிற்க, அந்தப்போரில் சாகும் வாய்ப்பைப் பெற்றவரின் சாவு, பிறரிடம் கேட்டுப் பெறத்தக்க சிறப்பினை உடையது.

கலைஞர் உரை:

தன்னைக் காத்த தலைவனுடைய கண்களில் நீர் பெருகுமாறு வீரமரணம் அடைந்தால், அத்தகைய மரணத்தை யாசித்தாவது பெற்றுக் கொள்வதில் பெருமை உண்டு.

English Explanation:

If (heroes) can so die as to fill with tears the eyes of their rulers, such a death deserves to be obtained even by begging.

திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்….

✬✬அடுத்த பகுதியை வாசிக்க ... அழுத்துக...

 

✬✬ஆரம்பத்திலிருந்து வாசிக்க...அழுத்துக

 Theebam.com: திருக்குறள்/01/ : கடவுள் வாழ்த்து


குரலோன் பாரதி...+ செழிப்பில்லை...-கவி

 

"அடிமை ஒழிக்கும் குரலோன் பாரதி"

 

"அடிமை ஒழிக்கும் குரலோன் பாரதி

விடிவை நோக்கி வரிகள் முழங்கும்!

இடித்து உரைப்பான் காரணம் சொல்வான்

அடித்துப் பொய்யை தூர விரட்டுவான்!!"

 

"தமிழின் அரவணைப்பில் வரிகள் மலரும்

பூமி எங்கும் பரந்து விரியும்!

திமிர் பிடித்த கொள்கை வெறியன்

அமிர்தம் தோற்கும் கவிதை தருவான்!!"

 ⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

 

"உழைப்பின்றிச் செழிப்பில்லை....!"

 

"வியர்வை மற்றும் உழைப்பின் பயனில்

செழிப்பின் விதை மனிதத்தை வளமாக்கும்!

உழைக்கும் கை இல்லை என்றால்

செல்வம் பூக்காது வறுமை தாண்டவமாடும்!"

 

"கடினமான வயல்களின் வழியாக நடந்து

முயற்சியின் பலன்களை அறுவடை செய்!

கும்பிட்டு பூசை செய்வதால் ஒன்றுமில்லை

குனித்து நிமிர்ந்து வாழ்வை செழிப்பாக்கு!"

 

"இதயங்கள் சேராத உழைப்பு ஒன்றில் 

அரண்மனை உயராது கோபுரங்கள் ஏறாது!

செழிப்பின் அறுவடையே நமக்குச் சொந்தம்

மனிதா கடும் உழைப்பின்றிச் செழிப்பில்லை!"

 ⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]  

தாயும் தாரமும் -குறும்படம்

ஆண்களின் அவஸ்தை. ஆண்களின் அவஸ்தை இருந்தாலும் இப்படி இருந்தால் எப்படி இருக்கும்!



Balu Mahendta Directed this small story  movie Thaayum Thaaramum, Cinema leading actors doing lead role.

பகிர்வு:தீபம்  மின்னிதழ் 

IC வாகனம் முதல் EV வாகனம் வரை:


IC வாகன ஆரம்பம்;

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் கார்ல் பென்ஸ் மற்றும் ஹென்றி ஃபோர்டு போன்ற நபர்களால் உள் எரிப்பு இயந்திரம் (ICE) முக்கியத்துவம் பெற்றது. முந்தைய நீராவி மற்றும் மின்சார வாகனங்களுடன் ஒப்பிடும்போது ICE கார்கள் அவற்றின் சக்தி மற்றும் வசதியின் காரணமாக விரைவாக பிரபலமடைந்தன.

 

 IC வாகன வளர்ச்சி மற்றும் ஆதிக்கம்:

ஹென்றி ஃபோர்டு மற்றும் பிறரால் அறிமுகப்படுத்தப்பட்ட நுட்பங்கள் IC கார்களை மலிவு மற்றும் அணுகக்கூடியதாக மாற்றியது. 20 ஆம் நூற்றாண்டில், என்ஜின் தொழில்நுட்பம், எரிபொருள் திறன் மற்றும் உற்பத்தியில் ஏற்பட்ட மேம்பாடுகள் IC வாகனங்களை பரவலாக ஏற்றுக்கொள்ள வழிவகுத்தது.

 

EV களின் தளர்வு:

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து மின்சார வாகனங்கள் வரத்

தொடங்கின. இருப்பினும், அவற்றின் குறைவான ஆற்றல் மற்றும் அதிக விலை காரணமாக அவை IC வாகனங்களால் மறைக்கப்பட்டன.

 

20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், IC இன்ஜின்களின் முன்னேற்றங்கள் காரணமாக EVகள் முக்கிய நீரோட்டத்தில் இருந்து மங்கிவிட்டன.

 

EV களின் மீள் வரவு:

1990 களில் நிக்கல்-மெட்டல் ஹைட்ரைடு (NiMH) பேட்டரிகளின் மேம்பாடு போன்ற  முன்னேற்றங்கள்  EV களில் ஆர்வத்தை புதுப்பித்தது.

 

காற்று மாசுபாடு மற்றும் காலநிலை மாற்றம் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து, தூய்மையான மாற்றுகளை நோக்கி மக்களும், அரசாங்கங்களும் மாறத் தொடங்கியதால் உமிழ்வு மற்றும் எரிபொருள் செயல்திறன் மீதான ஒழுங்குமுறை அழுத்தத்தை அதிகரித்தது.

 

லித்தியம்-அயன் பேட்டரிகளின் வளர்ச்சி அதிக ஆற்றல் அடர்த்தி, நீண்ட தூரம் மற்றும் குறைந்த விலையை வழங்குவதன் மூலம் EV களுக்கு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளித்தது. இந்த காலகட்டத்தில் வணிக ரீதியாக மிகவும் சாத்தியமான EVகள் அதிக செயல்திறன் மற்றும் நீண்ட தூரத்தை வழங்க முடியும் என்பதை நிரூபித்தது.

 

பல அரசாங்கங்கள் EVகளை ஏற்றுக்கொள்வதை ஊக்குவிக்க வரிச் சலுகைகள் வழங்கின.

 

2020களில் முக்கிய வாகன உற்பத்தியாளர்கள் தங்கள் வாகன வரிசைகளில் கணிசமான பகுதியை மின்சார மயமாக்க மாற்ற உறுதிபூண்டுள்ளனர். தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்கள் EV செயல்திறன், கூடிய தூர பயணம். மலிவு விலை என்ற இலக்கை நோக்கிப் போய்க்கொண்டு இருக்கிறது.

 

எதிர் காலம் .....? தொடரும்.

-சந்திரகாசன்-செ

தமிழ் இலக்கியங்களில் வாழ்வியல் சிந்தனைகள்- 01


முன்னுரை

     இலக்கியம் என்பது வாழ்க்கையை வழிமொழிந்து சொல்வது தான் இலக்கியம். வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கண்ணாடி இலக்கியம் என்பா். தமிழ் இலக்கியங்கள் தனிமனிதனை   சுத்திகரிக்கும் ஆக்கப்பணியை செய்து வருகிறது. இவ்வகையில் தமிழ் இலக்கியங்களை வாழ்வில் இலக்கியங்கள் என்றும் கூறலாம். மனிதனின் சமுத்திரம் உணா்ச்சிகளைச் சின்னச் சின்ன சிப்பிகளில் வைத்துக் காட்டுகிறது. இலக்கியங்களின் கருத்துக்குவியல்கள் வாழ்வை உயா்த்தும் வாழ்வியல் கருத்துக்களைக் கூறி அவனை வாழ்வாங்கு வாழச் செய்கிறது.

     மனிதப் பண்புகளும் வாழ்வியல் அறங்களும் மதிப்பிழந்து கொண்டிருக்கும் வேகம் நிறைந்த வாழ்க்கைச் சூழல் இன்றைய சமூகத்தை பெரிதும் பாதித்துள்ளது. மனிதப் பண்புகளைத் திரும்பிப் பார்க்கக்கூட நேரமற்ற நிகழ்வுகளால் மட்டுமே நகா்ந்து கொண்டிருக்கிறது இன்றைய சமூகம் இதனை நெறிப்படுத்த மேம்பாடடையச் செய்ய தமிழ் இலக்கியங்களின் பங்கு இன்றியமையாததாகும். தமிழ் இலக்கியங்களில் காணப்படும் வாழ்வியல் சிந்தனைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

 

தனிமனிதஒழுக்கம்

     வாழ்வியல் ஒழுக்கம் என்பது நற்பண்பாகும். நன்நெறிகளை பின்பற்றி வாழ்ந்தால் வாழ்வில் மேம்பட்ட மனிதராக வாழ முடியும். தனிமனித ஒழுக்கமே சமூகம் மேம்பட அடிப்படை காரணமாக இருக்கும். தனிமனித வாழ்வியல் ஒழுக்கத்தை அனைத்து அற இலக்கியங்களும் முதன்மைப்படுத்துகின்றன. பழமொழி நானூறு ஒழுக்கத்தை விட உயா்ந்தது ஒன்றுமில்லை என்பதை

     கல்லாதவரிடைக் கட்டுரையின் மிக்கது ஓா்

     பொல்லாதது இல்லை ஒருவருக்குநல்லாய்

     ஒழுக்கத்தின் மிக்க இழவு இல்லை இல்லை

     ஒழுக்கத்தின் மிக்க உயா்வு     (64-பழமொழி நானூறு)

எனக்கூறும் நல்லொழுக்கமே செல்வம் என்கிறது நான்மணிக்கடிகை. அதே வேளையில் ஒழுக்கம் தவறியவா்களிடத்துச் செல்வம் தங்காது என்று

     திருவும் திணை வகையான நில்லார் பெருவலிக்

     கூற்றமும் கூறுவசெய்து உண்ணாது ஆற்ற

     மறைக்க மறையாதாம் காமம் முறையும்

     இறை வகையான் நின்றுவிடும்” (39 – நான்மணிக்கடிகை)

எனப் பகா்கிறது. கல்வி கற்றால் ஒழுக்கம் வரும் என்று அனைத்து இலக்கியங்களும் கூறுகிறபோது முதுமொழிக்காஞ்சி ஒழுக்கம் கல்வியை விட சிறந்தது என்கிறது.

     ஆா்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்

     ஓதலின் சிறந்தன்று. ஒழுக்கம் உடைமை    (1-முதுமொழிக்காஞ்சி)

 👉அடுத்த பகுதி தொடரும் ...


கட்டுரையாளர்:ஆ. அந்தோணிசாமி/ பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர் /அரசு கலைக்கல்லூரி/சேலம் – 07