நகைச்சுவை= ஜோக்ஸ்
-01-
காதலி: நான் பேசாம இருந்தா எப்பிடி இருக்கும்?
காதலன்: உலகமே அமைதியாகிவிடும்!
காதலி:(ஆத்திரத்துடன்) என்ன சொல்கிறீர்கள்?
காதலன்:(சமாளிக்க)என் உலகமே நீதான் என்று சொல்ல வந்தேன்.
-02-
செந்தில்: நான் பயப்பட மாட்டேன்!
கவுண்டர்: ஆமா… மூளை இல்லாம நிலைமையை புரிஞ்சுக்காதவங்க பயப்பட மாட்டாங்க! 😂
-03-
நோயாளி: எனக்கு இரவுகளில்லை
தூக்கம் வருகுது இல்லை. டாக்டர்!
டாக்டர்: அப்போ பகலிலை
தூங்கிங்க! 😄
-04-
நோயாளி: டாக்டர், என் இடது கால் ரொம்ப வலிக்குது.
டாக்டர்: இது வயசான காலத்துல வர்ற வலிதான்.
நோயாளி: அப்படின்னா என் வலது காலுக்கும் அதே வயசுதானே ஆகுது, அது ஏன் வலிக்கல?
-05-
நோயாளி: டாக்டர், நான் உங்ககிட்ட சிகிச்சைக்கு வந்தப்ப என் எடை 100 கிலோ. இப்போ 50 கிலோதான் இருக்கேன்.
டாக்டர்: வெரி குட்... நான் கொடுத்த மருந்து நல்லா வேலை செஞ்சிருக்கு.
நோயாளி: மருந்து இல்ல டாக்டர்... உங்க பில்லைக் கட்டியே பாதியா இளைச்சுட்டேன்!
-06-
நோயாளி: டாக்டர், எனக்கு ஞாபக மறதி அதிகமா இருக்கு. என்ன பண்ணலாம்?
டாக்டர்: முதல்ல என் கன்சல்டேஷன் பீஸைக் குடுங்க, அப்புறம் சொல்றேன்.
-07-
மனைவி: டாக்டர், என் கணவர் தூக்கத்துலயே பேசுறாரு. அதுக்கு ஏதாவது மருந்து கொடுங்க.
டாக்டர்: அவர் முழிச்சுட்டு இருக்கும்போது அவரைப் பேச விடுங்க... தானா சரியாயிடும்.
-08-
😄டாக்டர்: ஆப்ரேஷன் முடிஞ்சுடுச்சு... ஆனா இந்த நோயாளி தப்பிக்கல.
உதவியாளர்: ஏன் டாக்டர்?
டாக்டர்: தப்பிச்சு ஓடி இருந்தா பீஸ் தராம போயிருப்பார்ல, அதான் பெட்லயே கட்டிப் போட்டுட்டேன்!
-09-
நண்பன் 1: அந்த டாக்டர் ஒரு மந்திரவாதி மாதிரி.
நண்பன் 2: ஏன் அப்படி சொல்ற?
நண்பன் 1: நோயாளிக்கு என்ன நோய்னு தெரியலனாலும், அவருக்குத் தேவையான பணத்தை மட்டும் சரியா எடுத்துடுறார்!
-10-
டாக்டர்: உங்களுக்கு இரத்த அழுத்தம் ரொம்ப அதிகமா இருக்கு.
நோயாளி: என் மனைவி கிட்ட 5 நிமிஷம் பேசிப் பாருங்க டாக்டர்... உங்களுக்கு 'ஹார்ட் அட்டாக்கே' வந்துடும்!
-11-
நோயாளி: டாக்டர், என்னால 100 வரை எண்ண முடியல.
டாக்டர்: ஏன்?
நோயாளி: 100 ரூபா வந்த உடனே உங்க பீஸ்னு ஞாபகம் வந்துடுது, அதுக்கப்புறம் எண்ண முடியல!
-12-
நோயாளி: டாக்டர், எனக்கு தூக்கத்துல ஆந்தை அலறுற மாதிரி சத்தம் கேக்குது.
டாக்டர்: அது உங்க மனைவி குறட்டை விடுற சத்தமா இருக்கும், செக் பண்ணுங்க!
-13-
நோயாளி: டாக்டர், ஆபரேஷன் பண்ணா நான் பிழைப்பேனா?
டாக்டர்: கவலைப்படாதீங்க, இது நூறாவது ஆபரேஷன்.
நோயாளி: அப்போ நான் பிழைச்சிடுவேன்ல?
டாக்டர்: தெரியல... ஆனா இதுவரைக்கும் பண்ண 99 தடவையும் தோத்துட்டேன், இந்தத் தடவையாவது ஜெயிக்கணும்னு வேண்டிக்கோங்க!
-14-
நோயாளி: டாக்டர், ஒரு மாசம் முன்னாடி உங்ககிட்ட வந்தப்ப, இனிமே முட்டை சாப்பிடாதீங்கன்னு சொன்னீங்க. இப்போ சாப்பிடுங்கன்னு சொல்றீங்க. ஏன்?
டாக்டர்: அப்போ என்கிட்ட கோழி வளர்ப்புப் பண்ணை இல்ல, இப்போ ஆரம்பிச்சுட்டேன்!
-15-
மகள்: அம்மா, நீங்க ஏன் அப்பாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க?
அம்மா: அதானே... நானும் இன்னும் அந்தத் தப்புக்குக் காரணம் என்னன்னு யோசிச்சுக்கிட்டே தான் இருக்கேன்!
கணவன்: (மெதுவாக மக்களிடம் ) நல்லவேளை, நான் மட்டும் தான் அந்த யோசனையில இருக்கேன்னு நினைச்சேன்!
-16-
மகள்: அப்பா, ஸ்கூல்ல 'மூளை இல்லாத மனிதன்' பற்றி கட்டுரை எழுதச் சொன்னாங்க.
கணவன்: அப்படியா? நீ யாரை பத்தி எழுதின?
மகள்: நான் ஏன் வெளியில தேடணும்? அம்மாவைத் தானே அதிகமாப் பார்த்திருக்கேன்!
-17-
மகன் : அம்மா, எனக்கு ஒரு தங்கைச்சிப்
பாப்பா வேணும்.
அம்மா: உங்க அப்பா கிட்ட கேளுமா.
கணவன்: ஒருத்தி பண்ணுற அட்டகாசத்தையே தாங்க முடியல, இதுல 'பார்ட் 2' வேறயா?
-18-
மகள்: அம்மா, கல்யாணம்னா என்ன?
அம்மா: ஒருத்தரை மட்டும் ஆயுள் முழுக்கத் திட்ட நமக்குக் கிடைக்கிற லைசென்ஸ் தான் கல்யாணம்!
கணவன்: (பெருமூச்சுடன்) அந்த லைசென்ஸை வச்சு என்னைத் தான் ஓட்டிக்கிட்டு இருக்காங்க!
-19-
மகள்: அம்மா, நீங்க ஏன் அடிக்கடி அப்பாவோட சண்டை போடுறீங்க?
அம்மா: அப்போதான்
வீட்டில இருக்கிறதை
விட ஆபீஸ் வேலை எவ்வளவோ பரவாயில்லை எண்டு ஒழுங்கா வேலைக்குப் போவாரு!
-20-
மனைவி: ஏங்க, நாம ஏன் ஒரு கார் வாங்கக் கூடாது?
கணவன்: காசு இல்லையே!
மகள்: கவலைப்படாதீங்கப்பா... அம்மாவோட நகையை வித்தா ரெண்டு கார் வாங்கலாம்! (அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் வராத குறை!)
-செ-மனுவேந்தன்