திருக்குறள் தொடர்கிறது…
99.
சான்றாண்மை
👉குறள் 981:
கடனென்ப நல்லவை யெல்லாம்
கடனறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.
மு.வ உரை:
கடமை இவை என்று அறிந்து சான்றான்மை மேற்கொண்டு
நடப்பவர்க்கு நல்லவை எல்லாம் இயல்பான கடமை என்று கூறுவர்.
சாலமன் பாப்பையா உரை:
நாம் செய்யத்தக்க கடமை இது என்று சான்றாண்மையை
மேற்கொண்டு வாழ்பவர்க்கு, நல்ல குணங்கள் எல்லாம் இயல்பாக இருக்கும் என்று கூறுவர்.
கலைஞர் உரை:
ஆற்ற வேண்டிய கடமைகளை உணர்ந்து, அவற்றைப்
பண்பார்ந்த முறையில் நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அனைத்தும் நல்ல கடமைகள்
என்றே கொள்ளப்படும்.
English Explanation:
It is said that those who are
conscious of their duty and behave with a perfect goodness will regard as
natural all that is good.
👉குறள் 982:
குணநலஞ் சான்றோர் நலனே
பிறநலம்
எந்நலத் துள்ளதூஉ மன்று.
மு.வ உரை:
சான்றோரின் நலம் என்று கூறப்படுவது அவறுடைய
பண்புகளின் நலமே, மற்ற நலம் வேறு எந்த நலத்திலும் சேர்ந்துள்ளதும் அன்று.
சாலமன் பாப்பையா உரை:
சான்றோர் என்பவர்க்கு அழகு, குறங்களால்
ஆகிய அழகே; பிற புற அழகெல்லாம் எந்த அழகிலும் சேரா.
கலைஞர் உரை:
நற்பண்பு ஒன்றே சான்றோர்க்கான அழகாகும்
வேறு எந்த அழகும் அழகல்ல.
English Explanation:
The only delight of the perfect is
that of their goodness; all other (sensual) delights are not to be included
among any (true) delights.
👉குறள் 983:
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம்
வாய்மையொடைந்துசால் பூன்றிய தூண்.
மு.வ உரை:
அன்பு, நாணம்,ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை,
என்னும் ஐந்து பண்புகளும், சால்பு என்பதைத் தாங்கியுள்ள தூண்களாகும்.
சாலமன் பாப்பையா உரை:
மற்றவரிடம் அன்பு, பழி பாவங்களுக்கு நாணுதல்,
சேர்த்ததைப் பிறர்க்கும் வழங்கும் ஒப்புரவு, நெடுங்காலப் பழக்கத்தாரிடம் முக தாட்சண்யம்,
உண்மை பேசுதல் என்னும் ஐந்தும் சான்றாண்மை என்னும் மாளிகையைத் தாங்கும் தூண்கள்.
கலைஞர் உரை:
அன்பு கொள்ளுதல், பழிபுரிந்திட நாணுதல்,
உலக ஒழுக்கம் போற்றுதல், இரக்கச் செயலாற்றுதல், வாய்மை கடைப்பிடித்தல் ஆகிய ஐந்தும்
சான்றாண்மையைத் தாங்கும் தூண்களாகும்.
English Explanation:
Affection, fear (of sin),
benevolence, favour and truthfulness; these are the five pillars on which perfect
goodness rests.
👉குறள் 984:
கொல்லா நலத்தது நோன்மை
பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.
மு.வ உரை:
தவம் ஓர் உயிரையும் கொல்லாத அறத்தை அடிப்படையாகக்
கொண்டது, சால்பு பிறருடையத் தீமையை எடுத்துச் சொல்லாத நற்பண்பை அடிப்படையாகக் கொண்டது.
சாலமன் பாப்பையா உரை:
பிற உயிர்களைக் கொல்லாதிருப்பது தனத்திற்கு
அழகு; பிறர் குறைகளைப் பேசாதிருப்பது சான்றாண்மைக்கு அழகு.
கலைஞர் உரை:
உயிரைக் கொல்லாத அறத்தை அடிப்படையாகக்
கொண்டது நோன்பு பிறர் செய்யும் தீமையைச் சுட்டிக் சொல்லாத பண்பைக் குறிப்பது சால்பு.
English Explanation:
Penance consists in the goodness
that kills not , and perfection in the goodness that tells not others' faults.
👉குறள் 985:
ஆற்றுவார் ஆற்றல் பணிதல்
அதுசான்றோர்மாற்றாரை மாற்றும் படை.
மு.வ உரை:
ஆற்றலுடையவரின் ஆற்றலாவது பணிவுடன் நடத்தலாகும்,
அது சான்றோர் தம் பகைவரைப் பகைமையிலிருந்து மாற்றுகின்ற கருவியாகும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலைச் செய்து முடிப்பவர் திறமை,
தம்முடன் பணி ஆற்றுபவரிடம் பணிந்து வேலை வாங்குதலே; சான்றாண்மை தம் பகைவரையும் நண்பராக்கப்
பயன்படுத்தும் ஆயுதமும் அதுவே.
கலைஞர் உரை:
ஆணவமின்றிப் பணிவுடன் நடத்தலே, ஆற்றலாளரின்
ஆற்றல் என்பதால் அதுவே பகைமையை மாற்றுகின்ற படையாகச் சான்றோர்க்கு அமைவதாகும்.
English Explanation:
Stooping (to inferiors) is the
strength of those who can accomplish (an undertaking); and that is the weapon
with which the great avert their foes.
👉குறள் 986:
சால்பிற்குக் கட்டளை யாதெனின்
தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்.
மு.வ உரை:
சால்புக்கு உரைகல் போல் மதிப்பிடும் கருவி
எது என்றால் தமக்கு ஒப்பில்லாத தாழ்ந்தோரிடத்திலும்தோல்வியை ஏற்றுக் கொள்ளும் பண்பாகும்.
சாலமன் பாப்பையா உரை:
சான்றாண்மையை உரைத்துப் பார்த்துக் கண்டு
அறியப்படும் உரைகல் எதுவென்றால், சிறியவர்களிடம் கூடத் தன் தோல்வியை ஒத்துக் கொள்வதே
ஆகும்.
கலைஞர் உரை:
சமநிலையில் இல்லாதவர்களால் தனக்கு ஏற்படும்
தோல்வியைக்கூட ஒப்புக் கொள்ளும் மனப்பக்குவம்தான் ஒருவரின் மேன்மைக்கு உரைகல்லாகும்.
English Explanation:
The touch-stone of perfection is to
receive a defeat even at the hands of one's inferiors.
👉குறள் 987:
இன்னாசெய் தார்க்கும் இனியவே
செய்யாக்கால்என்ன பயத்ததோ சால்பு.
மு.வ உரை:
துன்பமானவற்றைச் செய்தவர்க்கும் இனிய
உதவிகளைச் செய்யா விட்டால், சான்றோரின் சால்பு என்ன பயன் உடையதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
தமக்குத் தீமை செய்தவர்க்கும் நன்மையே
செய்யா விட்டால் சான்றான்மையினால் பயன்தான் என்ன?
கலைஞர் உரை:
தமக்குத் தீமை செய்வதற்கும் திரும்ப நன்மை
செய்யாமல் விட்டுவிட்டால் சான்றாண்மை எனும் நல்ல பண்பு இருந்தும் அதனால் என்ன பயன்?
English Explanation:
Of what avail is perfect goodness
if it cannot do pleasing things even to those who have pained (it) ?
👉குறள் 988:
இன்மை ஒருவற் கிளிவன்று
சால்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின்.
மு.வ உரை:
சால்பு என்னும் வலிமை உண்டாகப் பெற்றால்
ஒருவனுக்குப் பொருள் இல்லாத குறையாகிய வறுமை இழிவானது அன்று.
சாலமன் பாப்பையா உரை:
சான்றாண்மை எனப்படும் மன ஆற்றல் மட்டும்
ஒருவனிடம் இருந்து விடுமானால், வறுமை அவனுக்கு இழிவு ஆகாது.
கலைஞர் உரை:
சால்பு என்கிற உறுதியைச் செல்வமெனக் கொண்டவருக்கு
வறுமை என்பது இழிவு தரக் கூடியதல்ல.
English Explanation:
Poverty is no disgrace to one who
abounds in good qualities.
👉குறள் 989:
ஊழி பெயரினும் தாம்பெயரார்
சான்றாண்மைக்காழி யெனப்படு வார்.
மு.வ உரை:
சால்பு என்னும் தன்மைக்குக் கடல் என்று
புகழப்படுகின்றவர், ஊழிக்காலத்தின் வேறுபாடுகளே நேர்ந்தாலும் தாம் வேறுபடாமல் இருப்பர்.
சாலமன் பாப்பையா உரை:
சான்றாண்மை எனப்படும் கடலுக்குக் கரை
எனப்படும் சான்றோர், காலம் மாறினாலும் தாம் மாறமாட்டார்.
கலைஞர் உரை:
தமக்குரிய கடமைகளைக் கண்ணியத்துடன் ஆற்றுகின்ற
சான்றோர் எல்லாக் கடல்களும் தடம் புரண்டு மாறுகின்ற ஊழிக்காலம் ஏற்பட்டாலும்கூடத்,
தம்நிலை மாறாத கடலாகத் திகழ்வார்கள்.
English Explanation:
Those who are said to be the shore
of the sea of perfection will never change, though ages may change.
👉குறள் 990:
சான்றவர் சான்றாண்மை குன்றின்
இருநிலத்தான்தாங்காது மன்னோ பொறை.
மு.வ உரை:
சான்றோரின் சால்பு நிறைந்த பண்பு குறைபடுமானால்
இந்தப் பெரிய நிலவுலகமும் தன் பாரத்தைத் தாங்க முடியாமற் போய் விடும்.
சாலமன் பாப்பையா உரை:
சான்றோர் தம் சான்றாண்மைப் பண்பிலிருந்து
விலகிக் குறைவுபடுவார் என்றால், இப்பூவுலகம் தன் பாரம் தாங்காமல் அழியும்.
கலைஞர் உரை:
சான்றோரின் நற்பண்பே குறையத்தொடங்கினால்
அதனை இந்த உலகம் பொறுமையுடன் தாங்கிக் கொள்ளாது.
English Explanation:
If there is a defect in the
character of the perfect, (even) the great world cannot bear (its) burden.
திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்….
✬✬✬அடுத்த பகுதியை வாசிக்க
... அழுத்துக...
✬✬✬ஆரம்பத்திலிருந்து வாசிக்க...அழுத்துக
0 comments:
Post a Comment