திருக்குறள் தொடர்கிறது…
98.
பெருமை
👉குறள் 971:
ஒளியொருவற்குள்ள வெறுக்கை
இளியொருவற்கஃதிறந்து வாழ்தும் எனல்.
மு.வ உரை:
ஒருவனுக்கு ஒளி ஊக்கமிகுதியே ஆகும், ஒருவனுக்கு
இழிவு அந்த ஊக்கம் இல்லாமலேயே உயிர்வாழலாம் என்று எண்ணுதலாம்.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவனுக்குப் பெருமை, பிறர் செய்ய முடியாத
நல்ல செய்வேன் என்று எண்ணும் மன ஊக்கமே; அவ்வூக்கம் இல்லாமல் வாழ்வேன் என்று எண்ணுவது
கேவலமே.
கலைஞர் உரை:
ஒருவரின் வாழ்க்கைக்கு ஒளிதருவது ஊக்கமேயாகும்
ஊக்கமின்றி உயிர்வாழ்வது இழிவு தருவதாகும்.
English Explanation:
One's light is the abundance of one's
courage; one's darkness is the desire to live destitute of such (a state of
mind.).
👉குறள் 972:
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்.
மு.வ உரை:
எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே,
ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.
சாலமன் பாப்பையா உரை:
எல்லா மக்களும் பிறப்பால் சமமே; அவரவர்
செய்யும் செயல் வேறுபாடுகளால் மட்டுமே பெருமை வரும்.
கலைஞர் உரை:
பிறப்பினால் அனைவரும் சமம் செய்யும் தொழிலில்
காட்டுகிற திறமையில் மட்டுமே வேறுபாடு காண முடியும்.
English Explanation:
All human beings agree as regards
their birth but differ as regards their characteristics, because of the
different qualities of their actions.
👉குறள் 973:
மேலிருந்துத் மேலல்லார்
மேலல்லர் கீழிருந்தும்கீழல்லார் கீழல் லவர்.
மு.வ உரை:
மேல்நிலையில் இருந்தாலும் மேன்மைப் பண்பு
இல்லாதவர் மேலானவர் அல்லர், கீழ் நிலையில் இருந்தாலும் இழிகுணம் இல்லாதவர் கீழ் மக்கள்
அல்லர்.
சாலமன் பாப்பையா உரை:
நல்ல பண்புகள் ( பெருமைகள்) இல்லாதவர்
உயர்ந்த பதவியில் இருந்தாலும் பெருமைக்கு உரியவர் அல்லர்; சிறிய பதவியில் இருந்தாலும்
உயர்வான பண்புகளை உடையவர் பெருமை குறைந்தவர் அல்லர்.
கலைஞர் உரை:
பண்பு இல்லாதவர்கள் உயர்ந்த பதவியில்
இருந்தாலும் உயர்ந்தோர் அல்லர்; இழிவான காரியங்களில் ஈடுபடாதவர்கள் தாழ்ந்த நிலையில்
இருந்தாலும் உயர்ந்தோரேயாவார்கள்.
English Explanation:
Though (raised) above, the base
cannot become great; though (brought) low, the great cannot become base.
👉குறள் 974:
ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின்
உண்டு.
மு.வ உரை:
ஒரு தன்மையான கற்புடைய மகளிரைப்போல் பெருமைப்
பண்பும் ஒருவன் தன்னைத் தான் காத்துக் கொண்டு நடந்தால் உளதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
தன் கணவனை அன்றிப் பிறரிடம் மனத்தாலும்
உறவு கொள்ளாத பெண்களின் சிறப்பைப் போல,சிறந்து நெறிகளிலிருந்து தவறி விடாமல் தன்னைக்
காத்துக்கொண்டு வாழ்பவனுக்கே பெருமை உண்டு.
கலைஞர் உரை:
தன்னிலை தவறாமல் ஒருவன் தன்னைத் தானே
காத்துக்கொண்டு வாழ்வானேயானால், கற்புக்கரசிகளுக்குக் கிடைக்கும் புகழும் பெருமையும்
அவனுக்குக் கிடைக்கும்.
English Explanation:
Exists while to itself is true.
👉குறள் 975:
பெருமை யுடையவர் ஆற்றுவார்
ஆற்றின்
அருமை யுடைய செயல்.
மு.வ உரை:
பெருமைப் பண்பு உடையவர் செய்வதற்கு அருமையானச்
செயலைச் செய்வதற்க்கு உரிய நெறியில் செய்து முடிக்க வல்லவர் ஆவர்.
சாலமன் பாப்பையா உரை:
எத்தனை நெருக்கடி வந்தாலும் பிறர் செய்வதற்கு
அரிய செயல்களை உரிய வழிகளில் செய்து முடிப்பவர் பெருமை உடையவர்.
கலைஞர் உரை:
அரிய செயல்களை அவற்றுக்கு உரிய முறையான
வழியில் செய்து முடிக்கும் திறமையுடையவர்கள் பெருமைக்குரியவராவார்கள்.
English Explanation:
(Though reduced) the great will be
able to perform, in the proper way, deeds difficult (for others to do).
👉குறள் 976:
சிறியார் உணர்ச்சியுள்
இல்லை பெரியாரைப்பேணிக்கொள் வேமென்னும் நோக்கு.
மு.வ உரை:
பெரியாரை விரும்பிப் போற்றுவோம் எண்ணும்
உயர்ந்த நோக்கம், அவருடைய சிறப்பை உணராத சிறியோரின் உணர்ச்சியில் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
பெருமைக்கு உரியவர்களைப் பின்பற்றி அவர்
மரபைக் காப்போம் என்னும் நல்லெண்ணம் சிறியவர் மனத்துள் இராது.
கலைஞர் உரை:
பெரியோரைப் போற்றி ஏற்றுக்கொள்ளும் நோக்கம்,
அறிவிற் சிறியோரின் உணர்ச்சியில் ஒன்றியிருப்பதில்லை.
English Explanation:
It is never in the nature of the
base to seek the society of the great and partake of their nature.
👉குறள் 977:
இறப்பே புரிந்த தொழிற்றாம்
சிறப்புதான்
சீரல் லவர்கண் படின்.
மு.வ உரை:
சிறப்பு நிலையும் தனக்கு பொருந்தாத சீரற்ற
கீழ் மக்களிடம் ஏற்பட்டால், வரம்பு மீறிய செயலை உடையதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
பணம், படிப்பு, பதவி ஆகிய சிறப்புகள்
சிறுமைக்குணம் உடையவரிடம் சேர்ந்தால், அவர்களின் செயல்கள் அகங்காரத்தோடு வருவனவாம்.
கலைஞர் உரை:
சிறப்பான நிலையுங்கூட அதற்குப் பொருந்தாத
கீழ் மக்களுக்குக் கிட்டுமானால், அவர்கள் வரம்புமீறிச் செயல்படுவது இயற்கை.
English Explanation:
Even nobility of birth, wealth and
learning, if in (the possession of) the base, will (only) produce
everincreasing pride.
👉குறள் 978:
பணியுமாம் என்றும் பெருமை
சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.
மு.வ உரை:
பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து
நடக்கும், ஆனால் சிறுமையோ தன்னைத் தானே வியந்துப் பாராட்டிக் கொள்ளும்.
சாலமன் பாப்பையா உரை:
பெருமை உடையவர் செருக்கு இல்லாமல் பணிவுடன்
இருப்பர்; சிறுமை உடையவரோ செருக்குடன் தம்மைத் தாமே வியந்து பாராட்டுவர்.
கலைஞர் உரை:
பண்புடைய பெரியோர் எல்லோரிடமும் எப்பொழுதும்
பணிவுடன் பழகுவார்கள்; பண்பு இல்லாத சிறியோர், தம்மைத் தாமே புகழ்ந்து கொண்டு இறுமாந்து
கிடப்பார்கள்.
English Explanation:
The great will always humble
himself; but the mean will exalt himself in self-admiration.
👉குறள் 979:
பெருமை பெருமிதம் இன்மை
சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்.
மு.வ உரை:
பெருமை பண்பு செருக்கு இல்லாமல் வாழ்தல்,
சிறுமையோ செருக்கே மிகுந்து அதன் எல்லையில் நின்று விடுவதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
பெருமைப்பட்டுக் கொள்ளக் காரணங்கள் இருந்தும்
செருக்கு இல்லாமல் இருப்பது பெருமை; காரணம் இல்லாமலேயே பெருமைப்பட்டுக் கொள்வது சிறுமை.
கலைஞர் உரை:
ஆணவமின்றி அடக்கமாக இருப்பது பெருமை எனப்படும்
ஆணவத்தின் எல்லைக்கே சென்று விடுவது சிறுமை எனப்படும்.
English Explanation:
Freedom from conceit is (the nature
of true) greatness; (while) obstinacy therein is (that of) meanness.
👉குறள் 980:
அற்றம் மறைக்கும் பெருமை
சிறுமைதான்
குற்றமே கூறி விடும்.
மு.வ உரை:
பெருமைப் பண்பு பிறருடைய குறைப்பாட்டை
மறைக்கும், சிறுமையோ பிறருடைய குற்றத்தையே எடுத்துச் சொல்லிவிடும்
சாலமன் பாப்பையா உரை:
பெருமைக்குரியவர் பிறர் பெருமைகளைச் சொல்லி
அவர் குறைகளைக் கூறாமல் மறைத்து விடுவர்; சிறுமைக்கு உரியவர்களோ பிறர் பெருமைகளை மறைத்துக்
குறைகளை மட்டுமே கூறிவிடுவர்.
கலைஞர் உரை:
பிறருடைய குறைகளை மறைப்பது பெருமைப் பண்பாகும்
பிறருடைய குற்றங்களையே கூறிக்கொண்டிருப்பது சிறுமைக் குணமாகும்.
English Explanation:
The great hide the faults of
others; the base only divulge them.
திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்….
✬✬✬அடுத்த பகுதியை வாசிக்க
... அழுத்துக...
✬✬✬ஆரம்பத்திலிருந்து வாசிக்க...அழுத்துக
0 comments:
Post a Comment